புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
21 Posts - 4%
prajai
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_m10கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jul 2016 - 11:53


கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது! FvPvnczxR7aLfxuIlCu6+Krish_1
-
2016 க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  
இதில் டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு
இந்தியர்கள் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே
நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள்,
3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
-
இந்தியர்களான கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மற்றும்
சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு இவ்விருது
வழங்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு
எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்
பெஸ்வாடா வில்சன்.
-
இதற்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும்
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளனர்.
விருது பெற்ற கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா 2015ம் ஆண்டு
ஆனந்தவிகடனுக்கு  'இசைக்கும் ரசிகனுக்குமான இடைவெளி குறையணும்!”
பேட்டியளித்துள்ளார்.
-
அவரின் இசைப்பேட்டி இங்கே...

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jul 2016 - 11:54


கிருஷ்ணா என்ன சொல்கிறார்?

-
''சபாக்கள்லயே பாட மாட்டேன்னு சொல்லலை. மார்கழி சீஸனில் மட்டும்
சபாக்களில் பாட மாட்டேன். சீஸனைத் தவிர மத்த 11 மாதங்களில், எப்ப
வேணும்னாலும் பாடுவேன். இந்த முடிவெடுக்க பல காரணங்கள் இருக்கு.
இருபது வருஷங்களுக்கு முன்னாடி வருஷத்துல எல்லா மாசத்துலயும்
கச்சேரிகள் நடக்கும். எப்பவும் கூட்டம் ஜேஜேனு இருக்கும்.
-
வருஷம் முழுசுக்குமான தொடர் கொண்டாட்டத்தின் உச்சக்கட்ட
அரங்கேற்றங்கள் டிசம்பர் மாசம் நடக்கும். ஆனா, இப்போ மத்த
11 மாசங்களும் கூட்டம் வர்றது இல்லைனு, கச்சேரிகளே நடக்கிறது இல்லை.
டிசம்பரில் மட்டும் நடக்கிறதால, ஸ்லாட் பிடிக்க அடிச்சுக்கிறாங்க.
எனக்கு இது சரியாப் படலை.
-
ஒரு சீஸன் முழுக்க நான் பாடலை. அப்போ எல்லா கச்சேரிக்கும்
போய் பாட்டு கேட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'அடுத்த
சீஸன்ல நான் பாடணும்னா, ரசிகர்களுக்கு சபாக்கள்ல இலவச
அனுமதி கொடுக்கணும்’னு சொன்னேன்.

ஏன்னா, சீஸன்ல டிக்கெட் வாங்கிறது அவ்ளோ கஷ்டம். அதுவும் நடுத்தர
வர்க்கத்துக்கு டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். என்னால
முடிஞ்சவரை அந்த கஷ்டத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம்னு
நினைச்சேன். அதான் அப்போ அந்த முடிவெடுத்தேன்.

இப்போ 'டிசம்பர் மாசச் சந்தைக் கடை டிராஃபிக்ல நானும் ஏன்
மாட்டிக்கணும்?’னு தோணுச்சு. பாட வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கேன்!''
-
''நீங்க ஒரு ஆள் மட்டும் முடிவெடுத்துட்டா, மொத்த சிஸ்டமும் மாறிடுமா?''

-
''மாற்றத்துக்கு ஒரு தொடக்கப்புள்ளியா இது இருக்கட்டும்.
இப்போ நிறையப் பேர் பணம் கொடுத்து, பாடுறதுக்கு வாய்ப்பு
வாங்கிடுறாங்க. 'ஆதாரம் இல்லாம இப்படிப் பேசக் கூடாது’னு
சொல்வாங்க. ஆனா, இதெல்லாம் நடக்குதுனு எல்லாருக்கும் தெரியும்.
பணம் கொடுத்து சிலர் வாய்ப்பு வாங்கிறதால, உள்ளார்ந்த
அர்ப்பணிப்போடு பாடுற சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கிறதுல ரொம்பச்
சிக்கலாகிடுது.

சபாக்களில் பணம் விளையாடுற சத்தம் என் நிம்மதியைக் குலைக்குது.
சபா மேடையில் எதை வித்தா விலை போகும்னு எனக்கும் தெரியும்.
நானும் அப்படி வித்திருக்கேன். ஆனா, கலையை விற்பனைப்பொருளா
மாத்துறது தப்புனு இப்போ தோணுது. அதான் என் தப்பை நான் திருத்திக்கிறேன்!''
-




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jul 2016 - 11:55


''சபாக்கள்ல மட்டும் சங்கீதம் இருக்கக் கூடாது’னு
குப்பத்துல இசை நிகழ்ச்சி நடத்தினீங்க... அதன் பலன் என்ன?''

-
''போன வருஷம் சென்னை பெசன்ட் நகர் பக்கத்துல
ஊரூர் ஆல்காட் குப்பத்தில் கச்சேரி பண்ணோம்.
எனக்கு அந்த மீனவ மக்களோட வாழ்க்கை, கலாசாரம் தெரியாது.
அதனால கர்னாடக இசை மட்டும் வேண்டாம்னு முடிவெடுத்து,
வில்லுப்பாட்டு, தப்பாட்டம், கூத்து, பரதநாட்டியம்னு மத்த
கலைகளையும் சேர்த்துக்கிட்டோம்.
-
குப்பத்து மக்கள் மட்டும் இல்லாம, பொதுவான பார்வையாளர்களும்
எங்க முயற்சியை ரசிச்சாங்க. சபாக்களுக்கு வர்றவங்களும்
வந்திருந்தாங்க. இப்படி எல்லா தரப்பு மக்களையும் அந்த முயற்சி
ஒருங்கிணைச்சது. அதை நான் ஒரு ஆரம்பமாத்தான் நினைக்கிறேன்.
-
அதே சமயம் ஏதோ இசைக்குப் பெரிய சேவை செய்துட்டதா நினைக்கலை.
அந்த நிகழ்ச்சி பாரம்பர்ய இசைக்கும் சாமான்ய ரசிகர்களுக்கும்
இடையிலான இடைவெளியைக் கொஞ்சம் குறைச்சிருக்கு.
அதான் முக்கியம்!''
-
''கர்னாடக இசையை மீனவ மக்கள் எந்த அளவுக்கு
உள்வாங்கிக்கிட்டாங்க?''

-
''ரசிச்சாங்க. அதை எந்த அளவுகோலால் கணக்கு பண்ணுவீங்க?
நான் கூத்துக் கலையை ரசிச்சுப் பார்ப்பேன். எனக்கு அது முழுசாப்
புரியாது. ஆனா, அவங்க பண்ற பாவனைகள் சுவாரஸ்யமா இருக்கும்.
-
நான் கூத்து பார்க்கிறப்போ எப்படி திருதிருனு முழிச்சுட்டும்
சமயங்கள்ல ரசிச்சும் பார்ப்பேனோ, அப்படித்தான் அவங்களும்
கர்னாடக சங்கீதத்தை ரசிக்கிறாங்க; புரிஞ்சுக்க முயற்சிக்கிறாங்க.
திரும்பத் திரும்ப அதைக் கேட்கிறப்போ, பார்க்கிறப்போ ரசிப்பாங்க;
புரியவும் செய்யும்.
-
அதுக்கு, சங்கீதத்தை சபாக்களில் முடக்காம மக்களிடம் கொண்டு
சேர்க்கும் முயற்சிகளை அதிகரிச்சாலே போதும்!''
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jul 2016 - 11:57


'' 'கம்யூனிஸம் பேசலைன்னா, எனக்குப் பிடித்த பாடகர்
டி.எம்.கிருஷ்ணா’னு ஒரு பிரிவினர் உங்களைப் பற்றி
சொல்றாங்களே?''

-
''நான் கம்யூனிஸ்ட் இல்லை. அதுலயும் எனக்கு நிறைய முரண்பாடுகள்
இருக்கு. ஆனா, என் குரலை நீங்க எப்படிப் புரிஞ்சுக்கிறீங்களோ,
அப்படியே புரிஞ்சுக்கங்க. அதுக்கு ஏற்ப நீங்க எப்படியும் என்னை
அடையாளப்படுத்திக்கலாம்!''

''இப்போ கர்னாடக சங்கீத அரங்கில் 'நம்பிக்கையளிக்கும் இளம்
பாடகர்’னு, நீங்க யாரைச் சொல்வீங்க?''


''ராமகிருஷ்ண மூர்த்தினு ஓர் இளம் பாடகர் என்னைக் கவர்ந்திருக்கார்.
பாடுறதைத் தவிர அவருக்கு வேற எதுலயும் கவனம் இல்லை. அவர், மிகப்
பெரிய கலைஞரா வர்றதுக்கான பிரகாசமான சாத்தியங்கள் இருக்கு!''

''கர்னாடக இசையை அனைத்துத் தரப்பினரும் முறையா கத்துக்க பாடத்
திட்டம் எதுவும் இல்லையே... அப்படி ஒன்றை உருவாக்க நீங்க ஏன்
முயற்சிக்கக் கூடாது?''


''ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்... இசையை அவ்வளவு சுலபமா கத்துக்க
முடியாது. இசையைக் கத்துக்கிறது மிகக் கடினம். ஆனால், இசையை
இப்போ கத்துக்கிட்டிருக்கும் வரிசைகளில் சில மாற்றங்களைக் கொண்டு
வந்து, இன்னும் கொஞ்சம் எளிமையா, முறையா கத்துக்கலாம்.
அதுக்காக சில வேலைகள் பார்த்துட்டிருக்கேன். கொஞ்சம் டைம் கொடுங்க!''
-
''சேனல்கள்ல நடக்கும் இசை சம்பந்தமான ரியாலிட்டி ஷோக்கள்
மூலம் நல்லது நடக்கும்னு நம்புறீங்களா?''

-
''குறுகிய காலத்தில் போட்டியாளர்களை, கமர்ஷியல் பாடல்களைப்
பாடுவதற்கு ஏற்ப உருவாக்கும் முயற்சியால் இசைக்கு எந்த நல்லதும் நடக்காது.
ரியாலிட்டி ஷோக்களால் ஆத்மார்த்தமான இசையைக் கத்துக் கொடுக்கவும்
முடியாது. அதுவும் போக, 15 வயசைத் தாண்டாத குழந்தைகள் மீது, சில மாசம்
மட்டும் புகழ் வெளிச்சம் காட்டிட்டு கைவிட்டுர்றாங்க.
-
இதனால டீனேஜ் பருவத்திலேயே பல உளவியல் சிக்கல்களை அவங்க
எதிர்கொள்றாங்க. எத்தனை பேர் அந்த ரியாலிட்டி ஷோ வெற்றி மூலமா
பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கிட்டிருக்காங்க?
-
இதை அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் யோசிக்கணும்.
அப்படியான ஷோக்களுக்கு குழந்தைகள் அடிமையாவதற்கு முதல் காரணம்
பெற்றோர்கள்தான்!''
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Jul 2016 - 11:58


''இத்தனை ஆண்டுகளில் உங்க சாதி அடையாளத்தை
மீற முடிஞ்சிருக்கா?''

-
'நான் பிராமணனா... இல்லையானு கேட்டால், 'இல்லை’னு
சொல்லத்தான் மனசு விரும்புது.

ஆனா, உண்மையில் 'நான் அப்படி இருக்கேனா?’னு எனக்குள்ளேயே
கேட்டுட்டிருக்கேன். சாதியை மீறிப் போகணும்னு யோசிக்கிறப்ப,
அது இன்னும் உக்கிரமா எழுந்து வருமோங்கிற சிந்தனையும் ஓடுது.

அதனால, 'சாதி இருக்கு’னு ஏத்துக்கிட்டு, ஒரு சூழல்ல
அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை நானே உருவாக்கிக்கணும்னு
நினைக்கிறேன்!''
-
---------------------------------------
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக