Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
5 posters
Page 1 of 1
வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்
உள்ளனர்.
இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த
பிஎஸ்என்எல் வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை மண்டல உயர் அதிகாரிஒருவர் கூறியதாவது:
நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை
சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பிஎஸ்என்எல்
இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.
3 மாவட்டங்களில்...: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து
ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.
வீடு தேடி குறை கேட்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,
வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல்
சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து
வருகிறோம்.
அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க
உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு
மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
6 மாதக் கட்டண ரசீது ஆய்வு:
வாடிக்கையாளரின் கடந்த 6 மாதக் கட்டண ரசீதை ஆய்வு செய்து,
அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளருக்கு புதிய
திட்டத்தை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப்
பொறியாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரந்தோறும் குறைந்தது 2-3 முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நிறை, குறைகள்
தொடர்பான கருத்துகளை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்
கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்றார் அவர்.
125 முகாம்களில்..
3 மாவட்டங்களில் 25 கோட்டப் பொறியாளர்கள் மூலம் தலா 5 வீதம்
125 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முகாம்களுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளின் அடிப்படையில்
உடனடியாகப் பழுதுநீக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முக்கிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து,
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஊழியர்கள் களமிறங்கி
உள்ளனர்.
-
----------------------------------------
தினமணி
பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்
உள்ளனர்.
இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த
பிஎஸ்என்எல் வியூகம் வகுத்துள்ளது.
இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை மண்டல உயர் அதிகாரிஒருவர் கூறியதாவது:
நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை
சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பிஎஸ்என்எல்
இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.
3 மாவட்டங்களில்...: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து
ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.
வீடு தேடி குறை கேட்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,
வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல்
சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து
வருகிறோம்.
அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க
உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு
மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
6 மாதக் கட்டண ரசீது ஆய்வு:
வாடிக்கையாளரின் கடந்த 6 மாதக் கட்டண ரசீதை ஆய்வு செய்து,
அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளருக்கு புதிய
திட்டத்தை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப்
பொறியாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரந்தோறும் குறைந்தது 2-3 முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நிறை, குறைகள்
தொடர்பான கருத்துகளை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்
கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்றார் அவர்.
125 முகாம்களில்..
3 மாவட்டங்களில் 25 கோட்டப் பொறியாளர்கள் மூலம் தலா 5 வீதம்
125 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முகாம்களுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளின் அடிப்படையில்
உடனடியாகப் பழுதுநீக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் முக்கிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து,
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஊழியர்கள் களமிறங்கி
உள்ளனர்.
-
----------------------------------------
தினமணி
Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
anikuttan wrote:இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்
உள்ளூரிலேயே நெட்வொர்க் இல்லை. அப்புறம் எங்கே வெளியூர்..? பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு சென்ற மாதம் தான் airtel நெட்வொர்க்-கு மாறினேன். அதிலும் கடந்த ஒரு வாரமாக போனில் சிக்னலே சரிவர கிடைப்பதேயில்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
நான் BSNL landline phone மற்றும் Broadband Internet வைத்திருந்தேன் . இரண்டு மாதங்களுக்கு முன்புதான் Surrender செய்தேன். பழுது ஏற்பட்டால் உடனடியாக வந்து சரிசெய்வதில்லை . ஒரு மாதமாக ஆட்கள் வந்து சரிசெய்யாத காரணத்தினால் Surrender செய்துவிட்டேன் . இப்போது TIKKONA BROADBAND SERVICE என்ற தனியார் சேவையைப் பயன்படுத்துகிறேன் . ஒன்றும் பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்
எங்க ஊரிலும் பிராட்பேண்ட் சேவை ரொம்ம்ப மோசம்தாங்க...
Similar topics
» வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை
» ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் -நீதிமன்றத்தில் மனு அளித்தார் டிரம்ப்
» வாடிக்கையாளர்
» தில்லியில் சைக்கிள் ரிக்ஷா எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
» உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்
» ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் -நீதிமன்றத்தில் மனு அளித்தார் டிரம்ப்
» வாடிக்கையாளர்
» தில்லியில் சைக்கிள் ரிக்ஷா எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
» உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|