ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

5 posters

Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by ayyasamy ram Thu Jul 21, 2016 9:30 am

தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும்

உள்ளனர்.

இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் சேவையில் அதிருப்தி, முன்னணி போட்டி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு

காரணங்களால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

இதையடுத்து, சென்னை மண்டல கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த

பிஎஸ்என்எல் வியூகம் வகுத்துள்ளது.

இதற்காக, சென்னை மண்டலப் பகுதிகளில் தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விரைவான சேவையை வழங்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை

அதிகரிக்கவும் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை மண்டல உயர் அதிகாரிஒருவர் கூறியதாவது:

நாட்டின் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்ணனி நிறுவனமாக பிஎண்என்எல் திகழ்கிறது. தொலைபேசி பழுதுகள், செல்லிடப்பேசி, அகண்ட அலைவரிசை

சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். அதோடு, வாடிக்கையாளர்கள் சேவை எண்ணில் தொடர்பு கொண்டாலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் பிஎஸ்என்எல்

இணைப்பு வேண்டாம் எனப் பொதுமக்கள் திருப்பி அளித்து விடுகின்றனர்.

இத்தகைய பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தெருமுனை முகாம்கள் மூலம் வாடிக்கையாளர்களை நேரிடையாகச் சந்தித்து சேவையை வழங்கி வருகிறோம்.

3 மாவட்டங்களில்...: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களின்

எண்ணிக்கையை அதிகரிக்க தெருமுனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து பிஎஸ்என்எல் தொலைபேசித் திட்டங்கள், சேவைகள் குறித்து

ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.

வீடு தேடி குறை கேட்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை துண்டித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை ஊழியர்கள் கேட்டறிகின்றனர். இதன்மூலம்,

வாடிக்கையாளர் எந்தக் காரணத்துக்காக பிஎஸ்என்எல்
சேவையை திருப்பி அளித்தார் என்பதைக் கண்டறிந்து
வருகிறோம்.

அதன்பிறகு, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவையை அளிக்க
உறுதியளிக்கப்படுகிறது. பின்னர், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு
மீண்டும் புதிய இணைப்பை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

6 மாதக் கட்டண ரசீது ஆய்வு:
வாடிக்கையாளரின் கடந்த 6 மாதக் கட்டண ரசீதை ஆய்வு செய்து,
அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப அந்த வாடிக்கையாளருக்கு புதிய
திட்டத்தை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள பிஎஸ்என்எல் கோட்டப்
பொறியாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரந்தோறும் குறைந்தது 2-3 முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நிறை, குறைகள்
தொடர்பான கருத்துகளை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க ஞாயிற்றுக்
கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றயன என்றார் அவர்.

125 முகாம்களில்..

3 மாவட்டங்களில் 25 கோட்டப் பொறியாளர்கள் மூலம் தலா 5 வீதம்
125 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முகாம்களுக்கு
வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளின் அடிப்படையில்
உடனடியாகப் பழுதுநீக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, சென்னையில் முக்கிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து,
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஊழியர்கள் களமிறங்கி
உள்ளனர்.
-
----------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by anikuttan Fri Jul 22, 2016 9:52 pm

இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by விமந்தனி Sat Jul 23, 2016 12:44 am

anikuttan wrote:இந்தியா முழுவதும் இலவச ரோமிங் என்று அறிவித்துவிட்டு மாநிலத்தைவிட்டு வெளியேறி வேறுமாநிலத்திற்கு சென்றால் கால்வருவதும் இல்லை போவதும் இல்லை.சேவை ரொம்பவும் மோசமாக உள்ளது.மதிய அரசின் இந்த நிறுவனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல் போன் டவ்வர் எழுப்பி மக்களுக்கு நல்ல சேவையை குடுக்கலாம்.ஆனால் ஏனென்று தெரியவில்லை இவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறார்கள்.இவர்கள் மட்டும் நல்ல சேவையை குடுத்தால் யாரும் தனியார் சேவையை நாட மாட்டார்கள்

உள்ளூரிலேயே நெட்வொர்க் இல்லை. அப்புறம் எங்கே வெளியூர்..? பொறுத்து, பொறுத்து பார்த்துவிட்டு சென்ற மாதம் தான் airtel நெட்வொர்க்-கு மாறினேன். அதிலும் கடந்த ஒரு வாரமாக போனில் சிக்னலே சரிவர கிடைப்பதேயில்லை.


வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by M.Jagadeesan Sat Jul 23, 2016 11:53 am

நான் BSNL landline phone மற்றும் Broadband Internet வைத்திருந்தேன் . இரண்டு மாதங்களுக்கு முன்புதான் Surrender செய்தேன். பழுது ஏற்பட்டால் உடனடியாக வந்து சரிசெய்வதில்லை . ஒரு மாதமாக ஆட்கள் வந்து சரிசெய்யாத காரணத்தினால் Surrender செய்துவிட்டேன் . இப்போது TIKKONA BROADBAND SERVICE என்ற தனியார் சேவையைப் பயன்படுத்துகிறேன் . ஒன்றும் பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by ChitraGanesan Sat Jul 23, 2016 12:01 pm

எங்க ஊரிலும் பிராட்பேண்ட் சேவை ரொம்ம்ப மோசம்தாங்க... கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம் Empty Re: வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லியில் சைக்கிள் ரிக்ஷா எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
» ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் -நீதிமன்றத்தில் மனு அளித்தார் டிரம்ப்
» வாடிக்கையாளர்
» உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்
» வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum