புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலியான சிம் கார்டுகள் உஷார் !!!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார்.
"தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "எனக்கே தெரியாமல் என் பெயரில் பல சிம்கார்டுகள் உலவுகின்றன " என்று கோவை மாநகர காவல் நிலையத்திலும், மத்திய தொலைத் தொடர்புத் துறையிலும் புகார் அளித்தார். இதுவும் கிருஷ்ணன் கொடுத்த புகார் போலவே அமுங்கிப் போய்க் கிடக்கிறது.
ஒரு வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாக நந்தினியின் ஆவணங்களை வைத்து 4 போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய மத்திய தொலைத் தொடர்புத் துறை, அவரது பெயரில் பெறப்பட்டுள்ள எண்கள் குறித்த பட்டியலையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. கூடுதல் நடவடிக்கை தேவை என்றால், உள்ளூர் காவல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தொலைத்தொடர்புத் துறை தெரிவிக்கவே, நாக நந்தினி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
"நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான போலி சிம்கார்டுகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்க தொலைத் தொடர்பு துறையினர் மறுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தின் மூலம் மட்டும் 15 லட்சம் பேரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, 42 லட்சம் நபர்களுக்கான சிம்கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கோவையில் மட்டுமே 3 லட்சம் போலி சிம் கார்டுகள் உள்ளன. இந்த போலி சிம்கார்டுகளை கொண்டு, பல்வேறு விதமான குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன.
கோவையில் பீளமேடு, பிஆர்பி காலனி பகுதியில் சிலரது ஆவணங்களை வைத்து நான்கே நாட்களில் 580 சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய அரசு அதிகாரிகளது ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம். சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் காட்டவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களே போலிகளை ஊக்குவிக்கின்றன என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனை முறையீடு.
இது குறித்து தொலைத்தொடர்புத் துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் நாளுக்குநாள் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரு நிறுவனம் தனது சிம்கார்டுகளை ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கூட ஏலமே இல்லாமல் பெற முடியும் " என்று அன்றே, கோவை கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
'போலி சிம்கார்டுகள் எப்படி உருவாக்கப் படுகின்றன. யார் யார் அதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்?' என கேள்வியுடன் சிலரைத் தேடினேன்.
'சிம் வாங்கிக்குங்க சார்' என்று கூவிக் கூவி அழைத்தபடி சாலையோரக் குடைகளின் கீழ் கடை விரித்திருக்கும் நபர்களிடம் இது தொடர்பாகப் பேசியதில்,
"பல இடங்களில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடங்களே உள்ளன. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் ஒரே நேரத்தில் 50 முகவரிகள் வரை உரிய போட்டோ ஆதாரங்களுடன் கைக்கு வந்து விடும். அதை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு விற்று விடுவோம். 3 மாதம் வரை அதை எங்கள் பொறுப்பில் வைத்திருந்து, அதன் பின்னர் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றி விற்பது என்றும் செய்வோம். தொலைத்தொடர்பு டிபார்ட் மென்ட்டிலேயே அப்படி பலர் எங்களின் நட்புறவில்(?!) உள்ளனர்.
வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்து பெயர், முகவரி, தேர்தல் ஆணைய அட்டையின் ஜெராக்ஸ் போன்றவற்றைக் காட்டி, தனி சிம்கார்டு ரெடி செய்து விடுவோம். எங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு சிம்கார்டு விற்பனை செய்யணும் என்கிற நெருக்கடி இருப்பதால், ஆர்.டி.ஓ. ஆபீஸ், ரேசன் கடைகள், ஆதார் உள்ளிட்ட முகாம்கள் நடத்தும் இடங்களைத் தேர்வு செய்து அங்கேயும் போய் விடுவோம். அங்கே குப்பைக்குப் போன விண்ணப்பங்களைக் கொஞ்சம் திருத்தங்கள் செய்து உயிர் கொடுத்து விடுவோம்.
அந்த சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நாங்கள் பெரிதாய் ஒன்றும் செய்து விடமுடியாது. எங்களுக்கு 'சிம்-கார்டு' விற்பனையை அதிகப்படுத்தும் ஒரு டார்கெட் மட்டும்தான்." என்கின்றனர்.
போலியான முகவரிகளில் பெறப்பட்டு இந்த வழியில் சுற்றும் சிம்-கார்டுகளை, கல்லூரி மாணவர்கள், கள்ளக் காதல் ஜோடிகள்தான் அதிகளவில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ச்சித் தகவல்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் இணைப்பு வாங்க வேண்டுமென்றால் அது மிகவும் சிரமமானது. தீவிரவாதிகள் கைகளில் அது போய் விட்டால் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப்படுகிறார்கள். இங்கேயோ, சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது சிம் கார்டு. சாலைகளில் குடைகள் அமைத்து, எக்ஸிகியூட்டிவ்கள் பிளாட் பாரத்தின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு, 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூவுடன், சிம் விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள்.
திருச்சி மத்திய சிறையில், நவம்பர் 2009-ல் 5 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. செல்போன் பயன்படுத்தி சிக்கிய கைதிகளிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் பதுக்கி வைத்த இடத்தை அவர்கள் தெரிவித்தனர். அந்த இடங்களில் தோண்டிய போது கார்பன் காகிதம் சுற்றப்பட்ட பொட்டலங்கள் சிக்கின.
அவற்றை பிரித்தபோது அதில் செல்போன்கள் இருந்தன. சோதனையில் 6 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 7 பேட்டரிகள் சிக்கின.
"கார்பன் காகிதத்தை மேலே சுற்றி செல்போன், சிம் கார்டுகளை மண்ணுக்குள் புதைத்து வைத்தால் செல்போன் டிடெக்டர் கருவியாலோ, மோப்பநாய் மூலமோ அங்கே செல்போன் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது" என்ற தொழில் நுட்பத்தை (?!) திருச்சி மத்திய சிறையில் நடந்த செல்போன் ரெய்டு மூலமாகத்தான் போலீசாரே தெரிந்து கொண்டனர். இந்த ரெய்டு முடிந்து ஏழாண்டுகள் (2009) கடந்துவிட்டன. சிறைவாசிகள், சிறைக்குள்ளே இருந்தபடியே இவ்வளவு விபரமாக அப்போதே இருந்தனர். இப்போது இன்னும் நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும். 'டெலிகாம் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆஃப் இண்டியா' (ட்ராய்) தன் பங்குக்கு அவ்வப்போது, "சிம்- கார்டு கொடுப்பதில் இன்னின்ன ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் " என்று பெரிதாய் கொடுக்கும் சுற்றறிக்கையை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மாணவர்கள், கள்ளக் காதலர்களோடு மட்டும் இந்த போலி சிம் கார்டுகள் சுற்றவில்லை. தமிழகத்தின் சிறைகள் தொடங்கி வடக்கில் திகார் சிறைச்சாலை வரையிலும், அதையும் தாண்டி, தீவிரவாதத்தின் பிடியிலும் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
ட்ராய், சிறைத்துறை, செல்போன் நிறுவனங்கள் மூன்றையும் ஒன்றிணைத்து அரசுகள் வேகமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.
நன்றி விகடன்.
"தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "எனக்கே தெரியாமல் என் பெயரில் பல சிம்கார்டுகள் உலவுகின்றன " என்று கோவை மாநகர காவல் நிலையத்திலும், மத்திய தொலைத் தொடர்புத் துறையிலும் புகார் அளித்தார். இதுவும் கிருஷ்ணன் கொடுத்த புகார் போலவே அமுங்கிப் போய்க் கிடக்கிறது.
ஒரு வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாக நந்தினியின் ஆவணங்களை வைத்து 4 போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய மத்திய தொலைத் தொடர்புத் துறை, அவரது பெயரில் பெறப்பட்டுள்ள எண்கள் குறித்த பட்டியலையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. கூடுதல் நடவடிக்கை தேவை என்றால், உள்ளூர் காவல் துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தொலைத்தொடர்புத் துறை தெரிவிக்கவே, நாக நந்தினி சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
"நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான போலி சிம்கார்டுகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்தும் நடவடிக்கை எடுக்க தொலைத் தொடர்பு துறையினர் மறுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தின் மூலம் மட்டும் 15 லட்சம் பேரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, 42 லட்சம் நபர்களுக்கான சிம்கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கோவையில் மட்டுமே 3 லட்சம் போலி சிம் கார்டுகள் உள்ளன. இந்த போலி சிம்கார்டுகளை கொண்டு, பல்வேறு விதமான குற்றச் செயல்கள் அரங்கேறுகின்றன.
கோவையில் பீளமேடு, பிஆர்பி காலனி பகுதியில் சிலரது ஆவணங்களை வைத்து நான்கே நாட்களில் 580 சிம் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய அரசு அதிகாரிகளது ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம். சந்தை மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் காட்டவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களே போலிகளை ஊக்குவிக்கின்றன என்பது பாதிக்கப்பட்டவர்களின் வேதனை முறையீடு.
இது குறித்து தொலைத்தொடர்புத் துறையில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் நாளுக்குநாள் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரு நிறுவனம் தனது சிம்கார்டுகளை ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து, அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கூட ஏலமே இல்லாமல் பெற முடியும் " என்று அன்றே, கோவை கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
'போலி சிம்கார்டுகள் எப்படி உருவாக்கப் படுகின்றன. யார் யார் அதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்?' என கேள்வியுடன் சிலரைத் தேடினேன்.
'சிம் வாங்கிக்குங்க சார்' என்று கூவிக் கூவி அழைத்தபடி சாலையோரக் குடைகளின் கீழ் கடை விரித்திருக்கும் நபர்களிடம் இது தொடர்பாகப் பேசியதில்,
"பல இடங்களில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடங்களே உள்ளன. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் ஒரே நேரத்தில் 50 முகவரிகள் வரை உரிய போட்டோ ஆதாரங்களுடன் கைக்கு வந்து விடும். அதை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு விற்று விடுவோம். 3 மாதம் வரை அதை எங்கள் பொறுப்பில் வைத்திருந்து, அதன் பின்னர் வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றி விற்பது என்றும் செய்வோம். தொலைத்தொடர்பு டிபார்ட் மென்ட்டிலேயே அப்படி பலர் எங்களின் நட்புறவில்(?!) உள்ளனர்.
வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு அதிலிருந்து பெயர், முகவரி, தேர்தல் ஆணைய அட்டையின் ஜெராக்ஸ் போன்றவற்றைக் காட்டி, தனி சிம்கார்டு ரெடி செய்து விடுவோம். எங்களுக்கு மாதத்துக்கு இவ்வளவு சிம்கார்டு விற்பனை செய்யணும் என்கிற நெருக்கடி இருப்பதால், ஆர்.டி.ஓ. ஆபீஸ், ரேசன் கடைகள், ஆதார் உள்ளிட்ட முகாம்கள் நடத்தும் இடங்களைத் தேர்வு செய்து அங்கேயும் போய் விடுவோம். அங்கே குப்பைக்குப் போன விண்ணப்பங்களைக் கொஞ்சம் திருத்தங்கள் செய்து உயிர் கொடுத்து விடுவோம்.
அந்த சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நாங்கள் பெரிதாய் ஒன்றும் செய்து விடமுடியாது. எங்களுக்கு 'சிம்-கார்டு' விற்பனையை அதிகப்படுத்தும் ஒரு டார்கெட் மட்டும்தான்." என்கின்றனர்.
போலியான முகவரிகளில் பெறப்பட்டு இந்த வழியில் சுற்றும் சிம்-கார்டுகளை, கல்லூரி மாணவர்கள், கள்ளக் காதல் ஜோடிகள்தான் அதிகளவில் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ச்சித் தகவல்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் இணைப்பு வாங்க வேண்டுமென்றால் அது மிகவும் சிரமமானது. தீவிரவாதிகள் கைகளில் அது போய் விட்டால் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப்படுகிறார்கள். இங்கேயோ, சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது சிம் கார்டு. சாலைகளில் குடைகள் அமைத்து, எக்ஸிகியூட்டிவ்கள் பிளாட் பாரத்தின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு, 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூவுடன், சிம் விநியோகம் செய்து கொண்டிருப்பார்கள்.
திருச்சி மத்திய சிறையில், நவம்பர் 2009-ல் 5 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. செல்போன் பயன்படுத்தி சிக்கிய கைதிகளிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் பதுக்கி வைத்த இடத்தை அவர்கள் தெரிவித்தனர். அந்த இடங்களில் தோண்டிய போது கார்பன் காகிதம் சுற்றப்பட்ட பொட்டலங்கள் சிக்கின.
அவற்றை பிரித்தபோது அதில் செல்போன்கள் இருந்தன. சோதனையில் 6 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 7 பேட்டரிகள் சிக்கின.
"கார்பன் காகிதத்தை மேலே சுற்றி செல்போன், சிம் கார்டுகளை மண்ணுக்குள் புதைத்து வைத்தால் செல்போன் டிடெக்டர் கருவியாலோ, மோப்பநாய் மூலமோ அங்கே செல்போன் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது" என்ற தொழில் நுட்பத்தை (?!) திருச்சி மத்திய சிறையில் நடந்த செல்போன் ரெய்டு மூலமாகத்தான் போலீசாரே தெரிந்து கொண்டனர். இந்த ரெய்டு முடிந்து ஏழாண்டுகள் (2009) கடந்துவிட்டன. சிறைவாசிகள், சிறைக்குள்ளே இருந்தபடியே இவ்வளவு விபரமாக அப்போதே இருந்தனர். இப்போது இன்னும் நுட்ப வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும். 'டெலிகாம் ரெகுலாரிட்டி அத்தாரிட்டி ஆஃப் இண்டியா' (ட்ராய்) தன் பங்குக்கு அவ்வப்போது, "சிம்- கார்டு கொடுப்பதில் இன்னின்ன ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் " என்று பெரிதாய் கொடுக்கும் சுற்றறிக்கையை யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மாணவர்கள், கள்ளக் காதலர்களோடு மட்டும் இந்த போலி சிம் கார்டுகள் சுற்றவில்லை. தமிழகத்தின் சிறைகள் தொடங்கி வடக்கில் திகார் சிறைச்சாலை வரையிலும், அதையும் தாண்டி, தீவிரவாதத்தின் பிடியிலும் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
ட்ராய், சிறைத்துறை, செல்போன் நிறுவனங்கள் மூன்றையும் ஒன்றிணைத்து அரசுகள் வேகமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.
நன்றி விகடன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது உள்ளது.
இங்கு கத்தாரில் , Qatar ID card இல்லாமல் எதுவும் பண்ண முடியாது. அனைத்து சேவைகளுக்கும் இது ரொம்ப அவசியம். ஏதாவது ஒரு தொலைத்தொடர்பு அலுவலக கிளையில் சென்று நமது ID கார்டை காமித்து இதில் எத்தனை sim card உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் , பயன்படுத்தாமல் உள்ளவைகளை எளிதாக நீக்கிவிடலாம்.
இதே போல் , நாம ஊரிலும் அனைத்துவித சேவைகளுக்கும் ஆதார் கார்டையே அடிப்படியாக கொண்டு இருக்க வேண்டும் , அப்ப தான் இவற்றை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்
இங்கு கத்தாரில் , Qatar ID card இல்லாமல் எதுவும் பண்ண முடியாது. அனைத்து சேவைகளுக்கும் இது ரொம்ப அவசியம். ஏதாவது ஒரு தொலைத்தொடர்பு அலுவலக கிளையில் சென்று நமது ID கார்டை காமித்து இதில் எத்தனை sim card உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் , பயன்படுத்தாமல் உள்ளவைகளை எளிதாக நீக்கிவிடலாம்.
இதே போல் , நாம ஊரிலும் அனைத்துவித சேவைகளுக்கும் ஆதார் கார்டையே அடிப்படியாக கொண்டு இருக்க வேண்டும் , அப்ப தான் இவற்றை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு கார்த்தி, இங்கு சௌதியை பொறுத்த வரை, இக்காமா (Iquma ) என்கிற ID கார்டைத்தவிர, நாம் நம் கட்டைவிரல் ரேகையும் பதிவு செய்ய வேண்டும் அப்போது தான் சிம், நெட் connection அல்லது டெலிபோன் இணைப்பு பெறமுடியும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல தகவல் நன்று. நன்றி.
- Sponsored content
Similar topics
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|