புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_m10ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:50 am

வித்துவான் தியாகராசச் செட்டியாரிடம் படித்த மாணாக்கர்களும், பழகியவர்களும் அவர் உறையூரில் இருந்தபோதும் அடிக்கடி வந்து பார்த்துப் பேசி மகிழ்ச்சியடைந்து செல்வார்கள். நூல்களை இயற்றுபவர்கள் இவர்பால் வந்து சிறப்புப் பாயிரம் பெற்றுச் செல்வார்கள். தமிழ் சம்பந்தமான விசேஷ நிகழ்ச்சி எதுவும் இவருக்குத் தெரியாமல் நடைபெறாது.

ஒருநாள் இவரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக் கொண்டு வந்து இறங்கினார். ""யாரோ வெள்ளைக்காரர் ஒருவர் செட்டியாரவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்'' என்ற செய்தி பரவவே அக்கம் பக்கத்திலிருந்து ஏராளமான பேர் அங்கு வந்து கூடிவிட்டனர்.

அப்பொழுதுதான் செட்டியார் சிவபூஜையை முடித்து உணவுண்டு கையில் ஒரு விசிறியுடன் வந்து புறத்திண்ணையில் அமர்ந்திருந்தார். முழங்கால் வரையிலுள்ள ஒரு துண்டு மாத்திரம் இவர் இடையில் இருந்தது.

வண்டியில் ஐரோப்பியக் கனவானுடன் வந்த ஒருவர் முதலில் இறங்கி வந்தார். செட்டியாரைக் கண்டவுடன் ""தியாகராச செட்டியாரவர்களென்பது நீங்களா?'' என்று கேட்டார். இவருடைய கோலத்தைக் கண்டபோது அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று போலும்!

""ஆம். நான்தான்; என்ன வேண்டும்?'' என்றார் செட்டியார். இவருக்குக் கண்ணொளி மங்கிக் கொண்டு வந்த காலம் அது.

வந்தவர், ""உங்களைத் தேடிக் கொண்டு துரையவர்கள் வந்திருக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்கின்றீர்களே! வேறு உடை உடுத்தி வந்து சீக்கிரம் அவரை வரவேற்க வேண்டுமே. இங்கே நாற்காலி ஒன்றும் இல்லையா?'' என்று சற்று அதிகாரத் தொனியோடு கேட்டார்.

செட்டியார் சிரம பரிகாரம் செய்து கொள்ளும் பொருட்டு வந்து அமர்ந்தவர். ஏதோ பெரிய கௌரவம் செட்டியாருடைய வாயிலில் காத்து நிற்பது போல அந்த மனிதர் பேசியதைக் கேட்டபோது இவருக்குக் கோபந்தான் வந்தது.

""துரையா! வரட்டுமே. இப்படியே பார்க்கக்

கூடாதோ! இந்தத் திண்ணையில் வந்து உட்காரச் சொல்லுங்கள்'' என்று அமைதியாக இவர் சொன்னார்.

அவர் என்ன செய்வார்! துரை அவசரப்படுவாரென்று அறிந்து அவரை அழைத்து வந்து திண்ணையின் மேல் இருக்கச் செய்தார். செட்டியார் அவரை வரவேற்றார்.

""தங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையே. காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து துரையை யாரேனும் அனுப்பினார்களோ?'' என்று கேட்டார் செட்டியார்.

""இல்லை; நானேதான் தங்களைத் தேடி வந்தேன். மதுரையிலிருந்து வருகிறேன். தமிழ் படித்து வருகிறேன்''.

அந்தத் துரை குழறிக் குழறித் தமிழிலே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே அவர் ஒரு பாதிரியாராக இருக்க வேண்டுமென்பதைச் செட்டியார் ஊகித்துக் கொண்டார்.

""சந்தோஷம். படிக்கப் படிக்க இனிமை தரும் பாஷை தமிழ்'' என்றார் இவர்.

"நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறள் படித்தேன். அந்த இலக்கணத்தின்படி குறளைச் சில இடங்களில் திருத்தியிருக்கிறேன். தங்களிடம் காட்ட வந்தேன்''.

இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் திடுக்கிட்டார்.

""என்ன, குறளையா திருத்தினீர்கள்?'' என்று படபடப்போடு கேட்டார்.

""ஆமாம். எதுகை, மோனை சில இடங்களில் சரியாக அமையவில்லை...''

செட்டியாருக்குக் கோபம் மூண்டது.

""தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றிருக்கிறதே; இதில் எதுகை நன்றாக அமையவில்லையே. இரண்டாவது அடியை மக்களாற் காணப்படுமென்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?''

அவரை மேலே பேசவொட்டாமல் செய்தது செட்டியாரின் செய்கை. எழுந்து நின்றார். தலையிலே அடித்துக் கொண்டார். காதைப் பொத்திக் கொண்டார். துரை ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ""திருவள்ளுவரை

விடப் புத்திசாலியாகி விட்டீரோ? குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்பதும் மக்கள் என்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையாலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்!'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் இவர் கதவை அடைத்துக்கொண்டு விட்டார்!

துணையுடன் வந்தவர் செட்டியாரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார். பலனில்லை. திருவள்ளுவருக்கு இப்படி அவமதிப்பு ஏற்படுத்திய அவர் சக்ரவர்த்தியாக இருந்தாலும் மீண்டும் அவர் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று செட்டியார் கடைசிவரை கதவைத் திறக்கவேயில்லை! துரை வேறு வழியொன்றும் காணாராய் வந்த வழியே திரும்பிச் சென்றார்.
-
---------------------
"வித்துவான் தியாகராச செட்டியார்' என்ற நூலில் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா.
தினமணி கதிர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 19, 2016 6:27 am

திருக்குறளில் சில திருத்தங்களை தமிழ் அறிஞர்கள் கி.ஆ.பெ .விசுவநாதம் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்றவர்கள் கூறியிருந்தாலும் , தமிழ் உலகம் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது .

உரைஞாயிறு பரிமேலழகர் கூட திருக்குறளில் எந்த திருத்தத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 11:35 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா............அவ்வளவு உயர்ந்த திருவள்ளுவரை வடக்கே அலட்சியம் செய்கிறார்கள்..........நாம் தான் தவறான இடத்த்துக்கு போய்விட்டோமோ என்று தோன்றுகிறது எனக்கு...........நம்மை  மதிக்காதவர் வீட்டு வாசல் படியைக் கூட மிதிக்கக் கூடாதே..........நம் பெருமை தெரியாத மக்களிடையே அவர் சிலையை வைப்பது தேவை இல்லாத ஒன்று, அதனால் அதை மஹானுக்கு பெருமை கிடைக்கப்போவது இல்லை...........ஏதோ ஒரு பார்க்கில் கீழே  கிடத்தப்பட்டு கிடக்கிறார் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக