ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

2 posters

Go down

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி Empty வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Post by கார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 12:55 am



வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி QR6Q5vERGKqea4Sf7Knq+3

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)
லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர்.
பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். 1939 இல் சைக்கோனில் நடைபெற்ற தமிழர் மாநாடு வெற்றியாக நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர். அந்த மாநாட்டில் தமிழருக்கு ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறிவரும் என்று இவர் பேசிய பேச்சு சைக்கோனில் தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளது. தமிழர்கள் அனைவரும் உடையில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுத், தமிழர்கள் வேட்டி, கைலி அணிவதை நிறுத்தி, பேண்டு, சட்டை அணிய வலியுறுத்தினார். அதுபோல் குடுமி நீக்கி, கிராப் வெட்ட வேண்டும் என்றார். 1930 ஆம் ஆண்டளவில் உடைச்சீர்திருத்தத்தை வலியுறுத்தி, மகாத்மா காந்தியடிகளுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் மடல் விடுத்துள்ளார்.
1939 ஆம் ஆண்டளவில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. பிரான்சு நாட்டைச் செர்மானியப் படைகள் கைப்பற்றின. செர்மானியரின் சொற்படி பிரெஞ்சு தேசம் ஆளப்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தோ சீனத்தில் சப்பானியரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
பிரெஞ்சு ஆதிக்கம் வீழ்ந்தாலும் சைக்கோனில் உள்ள புதுச்சேரித் தமிழர்கள் சப்பானியருக்கு ஒத்துழைப்புத் தரத் தயங்கினர். நேதாஜி அவர்கள் சப்பானியரின் துணையுடன் இந்திய விடுதலை பெற்றுத் தருவார் என்று நம்பிய லெயோன் புருஷாந்தி அவர்கள் நேதாஜியின் படைக்குப் பலவகையில் ஆதரவு திரட்டினார். நேதாஜி அவர்கள் சைக்கோன் தெருக்களில் காரில் ஊர்வலமாக வந்தபொழுது காசு மாலைகளை அணிவித்துப் பெருமை செய்தார்.
நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் அலுவலகத்திற்குச் சைக்கோனில் தாம் வாழ்ந்த வளமனையை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்து உதவினார். சைக்கோனில் Rue Paul Blanchy தெருவில் உள்ள 76 ஆம் எண்ணுள்ள வீட்டில்தான் இந்திய தேசிய இராணுவத்தின் அலுவலகம் செயல்பட்டுள்ளது. படைக்கு ஆள் சேர்ப்பது, இரகசியக் கூட்டங்கள் நடத்துவது இவர் வீட்டில்தான் நடந்துள்ளது. இங்கு இந்துத்தானி மொழியும் இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு) கற்பிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் சைக்கோனிலிருந்து வெளியான ஆசாத் ஹிந்த்(Azad Hind)(சூலை 1945) இதழில் உள்ளன.
அமெரிக்காவின் அணுக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு சப்பான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இதனால் பிரெஞ்சுப் படையினர் சைக்கோன் வந்திறங்கினர். பிரெஞ்சுநாட்டுக்கு எதிராக லெயோன் புருஷாந்தி செயல்பட்டார் என்று இராசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். மூன்றுமாதம் கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு லெயோன் புருஷாந்தி மனநோயாளியாக வெளிவந்தார். சிறைதண்டனைக்குப் பிறகு பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் இருந்தார். தம் செல்வநிலை, நிலபுலங்கள் பற்றிய எந்த நினைவும் இல்லாதபடி இருந்தார். அந்த அளவு சிறையில் மின்சாரம் பாய்ச்சப்பெற்றுச் சித்திரவதைக்கு ஆளானார்.
சைக்கோனில் இருந்த Dr. Le Villain என்ற ஆங்கில மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டார். ஆனால் மருத்துவம் பயனளிக்கவில்லை. இந்தோ சீனத்தில் இருந்த சொத்துகள் எதனையும் விற்பனை செய்யாமல் லெயோன் புருஷாந்தி குடும்பத்தினர் 1946 ஆம் ஆண்டில் புதுச்சேரி வந்துவிட்டனர். இவர்தம் வீடுகளும், சொத்துகளும் வியட்நாமியர் வாழும் இடமாக மாறிப்போனது. சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெயோன் புருஷாந்தி அவர்கள் ஓரளவு நலம் பெற்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். லெயோன் புருஷாந்தி அவர்கள் தம் 65 ஆம் அகவையில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
குதிரையேற்ற வீரராகவும், இந்திய விடுதலைக்கு உழைத்தவராகவும், தம் பொருள் செல்வங்களை வழங்கியவராகவும் விளங்கிய லெயோன் புருஷாந்தி அவர்களின் வாழ்வு முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் 1940 முதல் 1945 வரை இந்தோ சீனத்தில் நடைபெற்ற நேதாஜி அவர்களின் செயல்பாடுகளும் எழுதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி முனைவர். மு.இளங்கோவன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி Empty Re: வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Post by Dr.S.Soundarapandian Sat Jul 23, 2016 1:05 pm

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum