ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

+4
யினியவன்
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 5:57 am

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... KpHHJS2eRy2FFGT4LFIs+sathguru
-
பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி
என்றும் பழமொழியும் உண்டு.

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில்
ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…

வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே
ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச்
சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு
நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான்.
விசாரித்தான்.

“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.

“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று
பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ
நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”

“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது.
பின்னால்தான் தொடர வேண்டும்”.

சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர்
வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே
வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு
மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.

“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
செய்தாய்?” என்று கேட்டான்.

அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது!
இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப்
புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்து
விட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 5:58 am

இதை ஜோக்காகக் கேட்டுவிட்டு சிரிக்கலாம். ஆனால், பெண்களுக்கு
எதிராக இதில் ஒளிந்திருக்கும் அநியாயத்தை நீங்கள் தவறவிட
மாட்டீர்கள். ஆண்கள் வகுத்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைக்
குருட்டுத்தனமாக நம்பி தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் எந்தப்
பெண்ணுக்கும் முழுமையான சுதந்திரம் என்பதன் ருசியே கிடைக்காது.

இன்னொரு பக்கம், ஆண்களைப் போல் உடுத்திக் கொள்வதாலோ,
அதிகாரம் செய்வதாலோ, முரட்டுக் காரியங்களில் ஈடுபடுவதாலோ,
சுதந்திரம் கிடைத்துவிடுவதாக சில பெண்கள் நினைத்துக் கொள்வதைப்
பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆண்களுடைய போலிகளாக, பிம்பங்களாக நடந்து கொள்வதில்
பெண்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? அவர்கள் தங்களைவிட
ஆண்களை உயர்வாக நினைத்து, அந்த உயரத்தை எட்டுப் பிடிக்கப்
பார்க்கிறார்கள் என்றல்லவா ஆகிவிடும்?

உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை
விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை
உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே
ஆழமானவை.

அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று. அதனால் ஒரு பெண்ணைத்
தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண்
புரிந்து கொண்டான். இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப்
பெண்கள் ரசித்தார்கள்.

பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை.
பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப்
பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.

கோயில்களுக்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்க தீட்டு என்று ஒரு
புதிய தந்திரத்தைக்கூட ஆண் பயன்படுத்துகிறான். உண்மையில்
இயற்கை தந்திருக்கும் சில உடல் மாற்றங்களை அசிங்கமாக
நினைப்பதுதான் கேவலம். பொதுவாக, வாழ்க்கையில் கிடைக்கும்
எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும்
நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள்.

ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண்
நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள்.

ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும்
பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல.
உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள்
கிடைக்கும். அற்புதங்கள் நேரும்!

அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது
தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக்
காரணம்.

ஒரு பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும்
சந்தோஷமாக இருக்க முடியும். அதேபோல் ஓர் ஆண் மகிழ்ச்சியாக
இல்லையென்றால், அவனைச் சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியும் போய்
விடும்.

இயற்கை, ஆணுக்கும், பெண்ணுக்கும் சில அடிப்படைக்
காரணங்களுக்காகவே வெவ்வேறு உடல் அமைப்புகளையும், வித்தியாசமான
உடல் உறுதிகளையும் வழங்கி இருக்கிறது.

இருவருக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு இன்பங்கள் இருக்கலாம்.
ஆனால், அமைதியும், முழுமையான ஆனந்தமும் உடல் தொடர்பானது
இல்லை. ஆணுக்கு வேறு ஆனந்தம், பெண்ணுக்கு வேறு ஆனந்தம் என்று
இயற்கை பாகுபாடு பார்க்கவில்லை.

ஆனந்தமாக இருப்பது என்பது மனித குலத்தின் அடிப்படை. இதைப்
புரிந்து நடந்து கொண்டால், சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த
ஏற்றத்தாழ்வும் இருக்காது!

——————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 6:06 am

வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 8:22 am

கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
மேற்கோள் செய்த பதிவு: 1215934
-
அறிவாளி திரைப்படத்தில் வரும் பாட்டு ஞாபகம் வருகிறது
-
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்

அறிவும் திறமையும் வேணும் எதுக்கும்
அறிவும் திறமையும் வேணும் ...

-
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by T.N.Balasubramanian Fri Jul 15, 2016 10:37 am

karthik seyaram wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்

மற்றவர்களுக்கு அக்காவாக அல்லது தங்கையாக தெரியுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 11:22 am

ayyasamy ram wrote:
பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை.
பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப்
பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.
——————————

கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????

இங்க தான் இருக்கேன் கார்த்திக் புன்னகை

வீட்ல வாங்குற அடியின் எண்ணிக்கை உயர உயர குடும்பம் உயரும் கார்த்திக் புன்னகை

நிஜம்: பெண்ணை மதிக்கலேன்னா கண்டிப்பா நமை மிதிப்பாங்க - உடனே இல்லேன்னாலும் உறுதியா ஒரு நாள் மிதிப்பாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by சசி Fri Jul 15, 2016 11:32 am

கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
மேற்கோள் செய்த பதிவு: 1215934

கார்த்திக் இது நாயமா??
காய்ச்சல் வந்த போது பதிவிட்ட கவிதை ஈகரையில் தான் இருக்கிறது. தேட முடியவில்லை. உருகினீங்க. இன்னொரு முறை காய்ச்சல் வந்தால் கஞ்சி கூட கிடைக்காது பா. இந்த பதிவை சகோதரி படிச்சா..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ராஜா Fri Jul 15, 2016 11:35 am

கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.

அதுக்கு தான் நம்ம  இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்


Last edited by ராஜா on Fri Jul 15, 2016 11:44 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ராஜா Fri Jul 15, 2016 11:36 am

சசி wrote:
கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
மேற்கோள் செய்த பதிவு: 1215934

கார்த்திக் இது நாயமா??
காய்ச்சல் வந்த போது பதிவிட்ட கவிதை ஈகரையில் தான் இருக்கிறது. தேட முடியவில்லை. உருகினீங்க. இன்னொரு முறை காய்ச்சல் வந்தால் கஞ்சி கூட கிடைக்காது பா. இந்த பதிவை சகோதரி படிச்சா..

அட போங்க .... கஞ்சி கூட கிடைக்கலேன்னு விரக்தில தான் கார்த்திக் இப்படி புலம்புறாரு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 11:37 am

சசி wrote:
கார்த்திக் இது நாயமா??
காய்ச்சல் வந்த போது பதிவிட்ட கவிதை ஈகரையில் தான் இருக்கிறது. தேட முடியவில்லை. உருகினீங்க. இன்னொரு முறை காய்ச்சல் வந்தால் கஞ்சி கூட கிடைக்காது பா. இந்த பதிவை சகோதரி படிச்சா..

அன்னிக்கு சொன்னது வேற வாயி, இது நாற வாயி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum