ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

3 posters

Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram Tue Jul 12, 2016 7:33 am

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... TGVShb0MTfGaZyoSrCB9+201607111359131179_ProvidedBoon-ReceivedCurse-_SECVPF
-
இமயமலைச் சாரலில் இருந்த காலவ முனிவருக்குக்
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று
முக்காலங்களையும் அறியும் சக்தி இருந்தது.
-
அவரிடம் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பார்கள்.
அப்படி கேட்பவர்களை தன் முன்பாக நிறுத்தி, அவர்களை
நன்றாக உற்றுப்பார்த்து விட்டு, கண்களை மூடித் தியானிப்பார்
காலவ முனிவர். பின்னர், அவர்களின் எதிர்காலத்தை
சுருக்கமாக சொல்லிவிடுவார். இதனால் காலவ முனிவர் பற்றிய
தகவல் பலருக்கும் தெரியவந்தது. அவரிடம் வரும் மக்கள் கூட்டமும்
அதிகரித்தது.
-
இந்த நிலையில் தங்களின் எதிர்காலம் பற்றி தெரிந்து
கொண்ட பலரும், ஒழுக்கமின்றி வாழத் தொடங்கினர்.
எப்படியிருந்தாலும் நமக்கு இதுதான் நடைபெறப் போகிறது. இனி
நாம் ஏன் இறைவனை வழிபட வேண்டும் என்ற எண்ணம்
அவர்களுக்குத் தோன்றி விட்டது. இதனால் கடவுள் வழிபாடு
செய்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பல்வேறு தவறுகளை அச்சமின்றி செய்யத் தொடங்கினர்.  
-
இந்தநிலையில் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரைத் தேடி
வந்தார். அவர் காலவ முனிவரிடம், தன்னுடைய எதிர்காலத்தைக்
கண்டறிந்து சொல்லும்படி வேண்டினார். காலவ முனிவரும்
கண்களை மூடித் தியானித்தார்.
-
ஆனால், அவருக்கு இளம் துறவியின் எதிர்காலத்தைக் கண்டறிய
முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் காலவ முனிவரால் அது
முடியாமல் போயிற்று.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram Tue Jul 12, 2016 7:50 am


அதிர்ச்சியடைந்த முனிவர் தன்னிடம் வந்தவரைப் பார்த்து,
‘இளம் துறவியே! நான் பலமுறை முயற்சித்தும், தங்களுடைய
எதிர்காலத்தை என்னால் கண்டறிய முடியவில்லை’ என்றார்.

அதைக் கேட்ட இளம் துறவி, ‘முனிவரே! என்னுடைய எதிர் காலம்
தங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை, இந்தப் பூலோகத்தில்
பலருடைய எதிர்காலத்தைக் கண்டு சொன்ன நீங்கள், உங்களுடைய
எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்ததுண்டா?’
என்றார்.

அப்போதுதான், ‘தன்னுடைய எதிர் காலத்தை இதுவரை பார்க்காமல்
இருந்து விட்டோமே’ என்ற எண்ணம் காலவ முனிவருக்கு ஏற்பட்டது.

கண்களை மூடிய காலவ முனிவர், ‘தன் முன்பாக நிற்கும் இளம்
துறவியாக வந்திருப்பவர் யார்? தனது எதிர்காலம் எப்படி இருக்கும்’
என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அப்போது தன்னிடம் இளம்
துறவியாக வந்திருப்பவர், எமதர்மன் என்பதும், தனக்கு
நவக்கிரகங்களின் இடமாற்றத்தினால் இன்னும் சில மாதங்களில்
தொழுநோய் பிடித்து துன்புறப்போகிறோம் என்பதும் தெரிய வந்தது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram Tue Jul 12, 2016 7:52 am


-
கண்களைத் திறந்தார் முனிவர். ஆனால் இப்போது இளம் துறவியைக்
காணவில்லை. தன்னுடைய எதிர்காலம் குறித்து வருத்தமடைந்த
காலவ முனிவர் யோசனையில் ஆழ்ந்தார்.
-
பின்னர், நவக்கிரகங்களின் மாற்றத்தால் ஏற்படப்போகும் நோயை
வராமல் தடுக்க, நவக்கிரகங்களையே வேண்டுவது என்று முடிவு
செய்தார். அதன்படி நவக்கிரகங்களை வேண்டி கடுமையான தவமிருந்தார்.
அவரது தவத்தில் மகிழ்ந்த நவக்கிரகங்கள் முனிவரின் முன்பாக தோன்றின.
-
அவர்களிடம் முனிவர், ‘நவக்கிரகங்களே! உங்கள் இடமாற்றங்களால்
எனக்கு வர விருக்கும் தொழுநோயை வராமல் செய்து, என்னை நல்ல
உடல்நலத்துடன் இருக்கச் செய்யும் வரத்தினைத் தந்தருள வேண்டும்’
என்று வேண்டினார். நவக்கிரகங்களும் அவர் வேண்டிய வரத்தைத் தந்தன.
-
சாபம்
-
முனிவருக்கு நவக்கிரகங்கள் வரமளித்த தகவல், படைப்புக் கடவுளான
பிரம்மாவுக்கு தெரியவந்தது. அவர், நவக்கிரகங்களை அழைத்து விசாரித்தார்.
‘நவக்கிரகங்களே! இறைவனை வேண்டாமல், உங்களிடம் மட்டும்
வேண்டுபவர்களுக்கு, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் அதிகாரம்
உங்களுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?’ என்றார்.
-
அதற்கு நவக்கிரகங்கள், ‘காலவ முனிவர் எங்களை நோக்கிக் கடுந்தவம்
செய்ததில் நாங்கள் மகிழ்ந்து போனோம். அந்த மகிழ்ச்சியில்தான் நாங்கள்
விதி முறைகளை மறந்து, அவருக்கு வரமளித்துத் தவறு செய்து விட்டோம்’
என்றன.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by ayyasamy ram Tue Jul 12, 2016 7:55 am

-
அதைக் கேட்டுக் கோப மடைந்த பிரம்மா, ‘தனிப்பட்ட முறையில் வ
ரமளிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், முனிவர்
கேட்ட வரத்தை அளித்து பெரும் தவறு செய்து விட்டீர்கள். இந்தத்
தவறுக்குத் தண்டனையாக, முனிவருக்கு வர வேண்டிய தொழுநோய்,
இனி உங்களை வந்து சேரும்’ என்று சாபமிட்டார்.
-
பிரம்மாவின் சாபத்தால் கவலையடைந்த நவக்கிரகங்கள், ‘சுவாமி!
நாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டோம், எங்களுக்கு இந்தச்
சாபத்திலிருந்து விடுபட உதவ வேண்டும்’ என்று வேண்டினர்.
அவர்களின் வேண்டுதலில் மனமிரங்கிய பிரம்மா, ‘நவக்கிரகங்களே!
நீங்கள் அனைவரும் பூலோகத்தில் உள்ள அர்க்கவனம் என்ற இடத்தில்
வீற்றிருக்கும் பிராணேசுவரர் எனும் சிவலிங்கத்திற்கு, கார்த்திகை
மாதம் தொடங்கி எழுபத்தெட்டு நாட்கள் வணங்கி வாருங்கள்.
அப்போது சாபம் நீங்கும்’ என்றார்.
-
விமோசனம்

-
பூலோகம் வந்த நவக்கிரகங்களுக்குப் பிரம்மாவின் சாபப்படி தொழு
நோய் ஏற்பட்டது. இதனால் நவக்கிரகங்கள் பெரும் துன்பமடைந்தன.
தங்களுக்குக் கிடைத்த கடுமையான தண்டனையை நினைத்து வருத்த
மடைந்த அவர்கள், சாப விமோசனம் பெறுவதற்காக அர்க்கவனம்
நோக்கிச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் அகத்திய முனிவரைச்
சந்தித்தனர். அவரிடம் தாங்கள் சாபம் பெற்றக் கதையைக் கூறி
வருந்தினர்.
-
அதைக் கேட்ட அகத்தியர், ‘நவக்கிரகங்களே! பிரம்மா சொன்னபடி
திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் நீங்கள்
தங்கியிருந்து, அங்கிருக்கும் சிவலிங்கத்திற்குத் தொடர்ந்து எழுபத்தெட்டு
நாட்கள் வழிபாடு செய்து வாருங்கள். அப்படி நீங்கள் வழிபாடு செய்யும்
நாட்களில், எருக்கு இலையில், தயிர் கலந்த உணவை வைத்து விடிவதற்கு
முன்பு சாப்பிட்டு விடுங்கள். மற்ற நேரங்களில் உணவு எதுவும் உண்ண
வேண்டாம். இப்படிச் செய்து வந்தால் விரைவில் நோய் விலகும்’ என்றார்.
-
அப்போது நவக்கிரகங்கள், ‘அகத்தியரே! எத்தனையோ இலைகள்
இருக்கும்போது, எருக்கு இலையில் வைத்து உணவு உண்ணச் சொல்வதற்கு
ஏதாவது சிறப்புக்காரணம் இருக்கிறதா?’ என்று கேட்டன. அதற்கு
அகத்தியர், ‘நீங்கள் நான் சொன்னபடி செய்து வாருங்கள். உங்களுக்கு
சாப– விமோசனம் கிடைக்கும் நாளில், அது எதற்கு என்பது உங்களுக்கே
தெரியவரும்’ என்று கூறினார்.

அகத்தியரிடம் விடைபெற்றுக்கொண்ட நவக்கிரகங்கள், அர்க்கவனம்
சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு அருகில் இருந்த குளத்தில் இருந்து நீர்
எடுத்து அபிஷேகம் செய்தனர். அந்த வனத்தில் அதிகமாக கிடைத்த
எருக்கு மலர்களைக் கொண்டு இறைவனை அலங்கரித்து வழிபட்டனர்.
பின்னர் ஒவ்வொரு நாளும் விடிவதற்கு சற்று முன்பாக, அகத்தியர் கூறியது
போல், எருக்கு இலையைப் பறித்து, அதில் தயிர் கலந்த உணவை வைத்து
சாப்பிட்டு வந்தனர்.

அவர்கள் அவ்வாறு வழிபடத் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும்,
அவர்கள் உடலிலிருந்த தொழுநோய் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது.
பிரம்மா சொன்னபடி எழுபத்தெட்டு நாட்கள் முடிவடைந்த போது, அவர்கள்
உடலிலிருந்த தொழுநோய் முற்றிலுமாக நீங்கி விட்டது.

அப்போது அவர்களுக்கு ஒரு உண்மை தெரியவந்தது. தாங்கள் இருந்த
பகுதி முழுவதும் இருந்த எருக்குச் செடிகளின் பூக்களில் இருந்து வரும்
நறுமணத்தை சுவாசித்ததாலும், எருக்கு இலையில் தயிர் கலந்த உணவை
வைத்து உண்ணும் போது, அந்த எருக்கு இலையிலிருந்து கிடைக்கும் மருந்துப்
பொருளையும் சேர்ந்து உண்டதால் விரைவில் தங்கள் நோய் நீங்கியிருக்கிறது
என்பதை உணர்ந்தனர்.

அதற்கு காரணமாக அகத்தியரை மனதார நினைத்து வணங்கினர்.
பின்னர் 28–ம் நாள் முடிவில் நோய் முற்றிலுமாக நீங்கி அனைவரும் தேவ
லோகம் சென்றனர்.

நமக்கு மேலானவர்கள் இருக்கும் போது, நாம் அவர்களின் வழிகாட்டுதலின்
படி செயல்படுவதே நல்லது. அதைத் தவிர்த்து, நாமாகத் தனித்துச் செயல்
பட்டால் நமக்குப் பெரும் துன்பங்களே வந்து சேரும் என்பதையே நவக்
கிரகங்கள் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

நோய் நீக்கும் எருக்கு இலைக் குளியல்


பிரம்மாவிடம் சாபம் பெற்ற நவக்கிரகங்களின் தொழுநோய் நீங்கிய நாள்,
தை மாதத்தில் வரும் ரத சப்தமி தினமாகும்.
அன்றைய தினத்தில் ஏழு எருக்கு இலைகள், எள், மஞ்சள் கலந்த அரிசி
ஆகியவற்றைத் தலையில் வைத்து, நீர் நிலைகளிலோ, வீட்டிலோ குளிக்க
வேண்டும். பின்னர் சூரிய வழிபாடு செய்து, அருகில் உள்ள கோவில்களுக்குச்
சென்று இறைவனை வழிபட்டால், நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள்
விலகும் என்பது ஐதீகம்.

அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். பத்ரம் என்றால் இலை என்று
பொருள்படும். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால், எருக்க இலைக்கு
‘அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே, பிறகு எருக்கு பத்ரம்,
எருக்கு இலை என்று ஆனது. நோய்களும், அதனால் ஏற்படும் துன்பங்களும்
சூரிய பகவானின் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று
‘அர்க்க பத்ர ஸ்நானம்’ எனப்படும் எருக்கு இலைக் குளியல் நடைமுறை
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by krishnaamma Tue Jul 12, 2016 12:19 pm

மிக நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by விமந்தனி Tue Jul 12, 2016 7:54 pm

நல்ல பகிர்வு. கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... 1571444738


கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Empty Re: கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum