புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_m10ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்


   
   
jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sat Aug 15, 2009 10:48 pm

ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்

ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 5uoi8z
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 2ufa68m
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 207xg85
ஊரெல்லை  -  சில ஞாபகமீட்புக்கள் 6quxwn


படங்களில் நீங்கள் காண்பது தம்பலகாமத்தின் (திருகோணமலை , இலங்கை) எல்லைப்பிரதேசம். திடல்களாகக் காணப்பட்ட ஊர்மனைகள் முடிவடைந்து, ஒருசில தனித்த வீடுகளுடன், பசுமைநிறைந்த வயல்வெளிகளும் மறைந்துபோக சதுப்பு நிலவெளிகளாகக் காணப்படுகிறது எங்கள் ஊரெல்லை.



நன்றாக ஞாபகம் இருக்கிறது 1990ம் ஆண்டு வைகாசிப் பொங்கலுக்கு அடுத்த நாள் நள்ளிரவு முதன்முதலாக இந்த எல்லையைத் தாண்டி அகதிகளானோம்.


1985 முதல் பலமுறை உயிர்காக்க பாதுகாப்பான இடமாக நாங்கள் கருதிய ஐயனார் கோயில்த் தீவிற்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடுவதும், சிலநாட்களின் பின் மீளத்திரும்பி வருவதுமாக இருந்து வந்தோம்.


ஆனால் இது அவ்வாறிருக்கவில்லை. வழக்கம் போலில்லாமல் உயிர்குடிக்கும் வேட்டுச் சத்தங்களும், எறிகணைவீச்சுக்களும் ஆரம்பித்தபோதே மிகச் செறிவாக இருந்தமையால் நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ஊர்விட்டகலுவதாக முடிவெடுக்கப் பட்டது.


அப்போது எனக்கு 12 வயது. இருந்தும் பயம்எதுவும் இருக்கவில்லை. மூட்டைமுடிச்சுக்களுடன் அடிக்கடி ஓடுவது பழக்கமாகிப்போயிருந்தது.


நள்ளிரவில் ஆரம்பித்த அந்த மிகக் கடுமையான நடைப்பயணம் அதிகாலை 4 மணிக்கு சூரங்கல் எனும் இடத்துக்குச் சென்றடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது.


அதிகளவில் சிறுவர்களைக் கொண்டிருந்த குடும்பங்களே முதலில் இடம் பெயர்ந்தன. அதனால் ஊரில் நிறையப்பேர் எஞ்சியிருந்தார்கள். அன்றைய ஊரின் நாட்குறிப்பு உதிரத்தால் எழுதப்பட்டதை பின்னர் அறிந்து கொண்டோம்.


படமெடுப்பதற்காக தரித்துநின்ற சில நிமிடங்களில் அனைத்து ஞாபகங்களும் அலையலையாய் வந்துபோனது.


சூரங்கல் பிரதேசத்தில் நாங்களாகவே களிமண்ணில் கல்லறுத்து, தென்னோலை வேய்ந்த குடிசை அமைத்திருந்தோம். மழைநிறைந்த ஒருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈரமூறிய பாயில் காய்ச்சலில் கிடக்க, குடிசைக்குள் மழைவெள்ளம் வராமல் விடியவிடிய மண்ணணை கட்டிய காட்சிகள் மனதில் படமாக வந்து போகிறது. ம்.. ம் ..இன்னும் இப்படி நிறைய...


மீண்டும் ஊர்திரும்பியபோது, சொந்த ஊரில் 6000 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட அகதிமுகாமாக எமது பாடசாலை மாறியது வாழ்வில் மறக்கமுடியாத கொடுமை. சொந்த ஊரில் படித்த பாடசாலையில் பொலித்தீன் பைகளுடன் சீனி, அரிசி, பருப்புக்காக வரிசையில் நின்ற ஞாபகங்கள் வந்து போகிறது. வாழ்வின் மிகமோசமான காலப்பகுதி அது. அப்போது தற்காலிகமாக ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலுள்ள வாகைமரத்தின் கீழ் எங்கள் படிப்புக்கள் தொடர்ந்தது. இரண்டு வருடங்கள் அந்த முகாம் இயங்கியது அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை.


நீண்ட நேரம் புகைப்படக்கருவியுடன் அந்த இடத்தில் நிற்பதை உணர்ந்து திடுக்கிட்டு பழைய நினைவுகளில் இருந்து சுதாகரித்துக் கொண்டு வீடுதிரும்பினேன்.


என் அன்றைய பொழுதினை நிறைத்திருந்தது பழைய ஞாபகங்கள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 10:57 pm

படித்து முடித்ததும் பாராட்டக்கூட மனமில்லை! மனத்தில் இனம்புரியா தாக்கத்தை ஏற்படுத்தி, மூளைச் செல்களை சுக்குநூறாக உடைத்தெரிந்துவிட்டது தங்களின் கட்டுரை!

அழுகை நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 11:01 pm

முதல் பதிவிலேயே எங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட என் இனிய நண்பர் ஜீவராஜ் அவர்களை ஈகரை நண்பர்கள் சார்பில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sat Aug 15, 2009 11:05 pm

நன்றி நண்பரே
பகிர்கையில் குறைகிறது துன்பம்
உங்கள் அன்பிற்கும் ,ஆதரவிர்க்கும் நன்றி சிவா

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Thu Aug 20, 2009 4:14 pm

இடப்பெயர்வு


அவசரத்தில் அவிழ்க்காமல்
விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்
கோழியும் , குஞ்சும்

உலையில் புட்டு
வரும்போது அரையவியல்
எரிந்துபோயிருக்கும் இப்போது

யார் சோறுவைக்கப்போகிறார்கள்
பூனைக்கும் , நாய்க்கும்

வெட்டி அடுக்கியமாதிரி
வேலிக்கான கதிகால்கள்

வாஞ்சையுடன் வளர்த்த பயிர்கள்
வாடிப்போய்விடும் பராமரிப்பில்லாமல்

பாழாய்ப்போன யுத்தம்
வீடுகூடப் பூட்டவில்லை

வாழ்ந்தவரெல்லாம் மாண்டுவிட
மிஞ்சி இருப்பது நான்மட்டும்தானே

உயிர் பிழைக்க நானும்
ஊர் பெயர்ந்தால்
வீடென்ன செய்யும்.


மீள்குடியமர்வு



சொல்லிலடங்காத
சோகங்களின்
தொகுப்பு

பட்டவர் அன்றி
மற்றவர் புரிந்திடா
உணர்ச்சிகளின் குவியல்


கூரைபிளந்து
வானம் பார்த்திருக்கும்
வீடு


செடிகொடி வளர்ந்து
காடாய்க் கிடக்கும்
வளவு


குதுகலத்தோடு வாழ்ந்த
குடிதனின் நிலைகண்டு
குளமாகும் கண்கள்


அடியெடுத்துவைக்கையில்
அன்னியப்படும்
பயிர் நிலங்கள்


சிறப்பாய் வாழ்ந்த நாட்கள்
சிந்தையில்
வட்டமிட்டிட


சின்னதில் செய்திட்ட
குறும்பினைச் சொல்லிடும்
சுவர்கள்


இருப்புக்கும்
இழப்புக்குமிடையில்
அல்லல்ப்படும் மனம்


சிரிப்பும், அழுகையும்
சேர்ந்தேவரும் - ஆம்
மீள்குடியமர்வென்பது எங்களுக்கு


மரணிப்புக்கு
முன்னால் கிடைக்கும்
மறுபிறப்பு.

ஊரெல்லையில் நின்று ஞாபகங்களை இரைமீட்டுக்கொண்டிருந்தபோது கட்டுக்கடங்காமல் மனதில் வந்துவிழுகின்றன வேதனை நிறைந்த வார்த்தைகள். வாழ்க்கை மட்டும் தொலைந்துபோயிருக்கிறது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 4:28 pm

jeevaraj wrote:இடப்பெயர்வு




சிரிப்பும், அழுகையும்
சேர்ந்தேவரும் - ஆம்
மீள்குடியமர்வென்பது எங்களுக்கு


மரணிப்புக்கு
முன்னால் கிடைக்கும்
மறுபிறப்பு.

ஊரெல்லையில் நின்று ஞாபகங்களை இரைமீட்டுக்கொண்டிருந்தபோது கட்டுக்கடங்காமல் மனதில் வந்துவிழுகின்றன வேதனை நிறைந்த வார்த்தைகள். வாழ்க்கை மட்டும் தொலைந்துபோயிருக்கிறது.



அருமயாக உள்ளது அண்ணா

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Sun Nov 22, 2009 6:30 am

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக