ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5

Go down

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5 Empty கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 07, 2016 6:52 pm



சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
தன்மைபெறு செல்வம்ந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
கருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
அழுதுண் டுவந்ததிருவாய்
அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
அணிந்தோங்கி வாழுந்தலை
மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்கஒளி மேவுகண்கள்
வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
விழாச்சுபம் கேட்கும்செவி
துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
சுகரூப மானநெஞ்சம்
தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
சுவர்ன்னமிடு கின்றகைகள்
சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

செல்வம் அதை  சேர்க்க அலைபவர்களுக்கு முகுந்த சஞ்சலத்தை கொடுக்கும் அப்படி சஞ்சலப்பட்டு சேர்க்கிரவர்களிடத்து ஜடமாக புதைக்கப்பட்டு கிடக்கும் கருப்புப்பணம் என ஸ்விஸ் பேங்கில் கிடக்கும் அதற்கு வட்டியும் கட்டுவார்கள் . ஆனால் அது எப்போதும் வீடு வந்து சேராது கணக்கில்  எழுதி எழுதி பார்த்துக்கொள்ளுவார்கள் அவ்வளவுதான் .

இன்னும் சில அமைச்சர் பெருமக்கள் அல்லக்கை பினாமிகளின் பேரால் சொத்தாக வாங்கிபோட்டு அவர்களை எப்போதும் கூட வைத்து சாப்பாடு சோறு போட்டுக்கொண்டிருப்பார்கள் ; ரெண்டு மூன்று தலைமுறைக்கு பின்பு அது கைவிட்டு போய்விடும்

பிறகெதுக்கு அளவுக்கு அதிகமாக காசாக சேர்க்கிறார்கள் .இருந்தால் சடமாக இருக்கும் போனால் ஆறாக போய்க்கொண்டிருக்கும் அந்த செல்வத்தை கருதாத வகை அருளுவாய்

இல்லை என்று ஏங்காத அளவு செல்வம் வந்துகொண்டிருந்தால் போதும் ; அருளை நாடுவோருக்கு பொருளை தேவைக்கு இறைவன் கொடுக்க அறிந்தவர் . இல்லை என ஏங்க விடமாட்டார் ரெம்பவும் வந்து இருப்பிலும் இருக்காது

7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

10. மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?

11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? -  சற்குரு இயேசு

இறைவன் நம் தேவையை இல்லை எனது சந்திப்பார் என்கிற நம்பிக்கை உள்ள மனிதனே பணத்தாசை என்னும் பேயிடமிருந்து தப்பமுடியும்

அடுத்த பாடல் பெண்ணாசை பற்றியது மனிதனுக்கு கவிதை எழுதி அதை நான்கு பேர் படித்து ஆகா ஓகோ என பாராட்டவேண்டும் என்றொரு நப்பாசை உள்ளது . ஆனா உணா என்றால் மானே தேனே குயிலே என்று கவிதைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள் . அதாகப்பட்டது என்னெவென்றால் எல்லா ஆணுக்குள்ளும் பெண்மை இருப்பதை அறியாமல் உணர்ந்து திருப்தியடையாமல் தன்னை விட்டுப்போன ஒன்றை தேடி அலையும் தாகம் இந்த மையல்

ஆதியில் சிவன் ஒருவரே படைக்கப்பட்டார் பின்பு அவரில் பாதி பார்வதியாக பெண்ணாக பிரிக்கப்பட்டார் . கருப்புசாமியால் ஏமாற்றப்பட்டு காமம் உண்டாகும்வரை நல்ல இணையாக அன்பும் ஆதரவுமாகவே இதமும் நேயமுமாகவே இருந்தார்கள் இன்றும் கூட பாருங்கள் ஆண்பெண் பேதமில்லாத சிறுவயதில் அனுபவங்கள் இதமாகவே இருக்கும் . வயது வந்தபிறகுதான் எல்லா பிரச்சினைகளும் . ஏக்கம் தாகம் மோகம் பித்து என்பதெல்லாம் எப்போதும் திருப்தி அடையாதது காரணம் தனுக்குள் மூழ்கி தன் முழுமையை உணராதவரை தனக்குள்ளேயே கரைந்துள்ள பெண்மையை உணராதவரை அதற்கு ஒருபோதும் ஈடாகாத பெண்களை நாடி நாடி திருப்தியில்லாமலேயே வாழ்வு ஓடிக்கொண்டிருக்கும்

உன் ஆத்மா முழுமையானது உனக்கு நல்ல இணை நீ மட்டுமே நல்ல நண்பன் நீ மட்டுமே உனக்குள்ளாகவே எல்லாமும் இருக்கிறது வெளியே கடவுளைத்தவிர யாரும் உனக்கு நிம்மதி கொடுக்கமாட்டார்கள் உதவியும் செய்யமாட்டார்கள் வீணாக ஏங்கி சுற்றி திரியாதே

உனக்குள்ளேயே மூழ்கி ஆனந்தத்தை உணர்க . இறைவனை உணர்ந்து அவனில் நிலைத்தால் தெய்வீக பேரானந்தம் ; என்றும் மங்காத என்றும் திகட்டாத பேரானந்தம் இறைவனின் சமூகம்

உன்னிடமிருந்து அரைகுறைகளுக்கு நிம்மதி பேரானந்தம் பாயவேண்டுமே தவிர அடுத்தவரிடம் யாசகம் கேட்காதே . இறைவனிடம் கையேந்து மனிதர்களிடம் எதையும் எதிர்பாராதே
பெண்மையை மதி போற்று எதையும் எதிர்பார்க்காதே

அடுத்த பாடலில் இறைவனை போற்றாத மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் கேவலமானது என்கிறார் வள்ளலார்

அடுத்த பாடலிலோ இறைவனை போற்றுகிற மனிதனின் உறுப்புகள் ஒவ்வொன்றும் போற்றுதலுக்குரியது என்கிறார்
இவைகள் நம்மை உணர்த்துவிக்கட்டும்

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்  

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி




கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum