புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_m10கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2016 9:13 am



சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம்

24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரிடம் சிக்கினார். அப்போது அவர் தனக்குத்தானே கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துக் கொண்டதால், அவருக்கு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படையினர் சென்னையில் இருந்து வந்து ராம்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மயக்க நிலையில் இருந்த ராம்குமார், சனிக்கிழமை இரவு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேளையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மயிலேறும்பெருமாள், பாளையஞ்செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

திரவ உணவு: ஞாயிற்றுக்கிழமை காலையில் ராம்குமாரின் தாய் புஷ்பம் உடனிருந்து கவனித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் திரவ உணவு சாப்பிட்டார் ராம்குமார். மருத்துவர்கள் கூறுகையில், "ராம்குமாரின் உடல் நலம் குறித்து ஏற்கெனவே போலீஸாருக்கும், சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சேருபவர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஆணை மிகவும் அவசியம். அந்த ஆணை கிடைத்தால்தான் அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியும்' என்றனர்.

அதன்பின்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். முதலில் நீதிபதியின் வீட்டுக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ஆஜர்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த ஆலோசனை மாற்றப்பட்டது.

நீதிபதி முன்பு ஆஜர்: மருத்துவமனையிலேயே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.53 மணிக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமதாஸ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். ராம்குமார் சிகிச்சை பெற்ற அறைக்கு நீதித்துறை நடுவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்தினர். மேலும், சென்னைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் போலீஸார் தெரிவித்தனர். ராம்குமாரின் மருத்துவப் பரிசோதனை குறிப்புகள், போலீஸாரின் ஆவணங்களை சரிபார்த்த நீதித்துறை நடுவர், அவரை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-14 இல் திங்கள்கிழமை (ஜூலை 4) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரு மருத்துவர்கள், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே போலீஸ் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 04, 2016 11:20 am

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 2:59 pm

அதுதான் நடைமுறை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 04, 2016 6:21 pm

ayyasamy ram wrote:கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1214013

இதே எண்ணம் எனக்கும் உண்டு ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 05, 2016 7:03 am

தலைப்பே தவறானது.

கொலையாளி ராம்குமார் என்று சொல்லக்கூடாது.

கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ( Ramkumaar , Swathi murder suspect ) என்றுதான் இந்து பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் .

விசாரணைக்குப் பிறகுதான் , இந்தக் கொலையை ஒருவரே செய்தாரா ? அல்லது பலபேர் சேர்ந்து செய்தார்களா என்ற விவரம் தெரியும் . அம்பு அகப்பட்டுக் கொண்டது ; வில் எங்கே ? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 05, 2016 8:31 am

'ராம்குமார் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது எப்படி...?'- நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
-
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் புகைப்படங்கள், வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். கொலையாளி என கருதப்படும் ராம்குமார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பிடிபட்டார். தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ராம்குமார்தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, ராம்குமாரின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டது குறித்தும், வாக்குமூலம் வெளியானதும் குறித்தும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல். விசாரணையின் போக்கை இது பாதிக்காதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
-
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 05, 2016 2:08 pm

சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை
செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது
செய்துள்ளனர்.
-
சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே
என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு
2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.
-
--------
-
தமிழ் ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 05, 2016 4:21 pm

T.N.Balasubramanian wrote:அதுதான் நடைமுறை

ரமணியன்
நேற்று நானும் செந்திலும் பேசும்போது எங்களுக்கும் இந்த சந்தேகம் வந்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 05, 2016 10:36 pm

ayyasamy ram wrote:கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1214013

இதுதான் தமிழகத்தின் இன்றய நிலை ராம் அண்ணா சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக