ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

+4
T.N.Balasubramanian
தமிழ்நேயன் ஏழுமலை
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters

Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 8:41 am

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  HE8cHEKbSKWClIKvclWh+audi1
-
சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில்
காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா,
தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

' இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து
வருகிறது இறந்து போனவரின் குடும்பம்' என வேதனைப்படுகின்றனர்
திருவான்மியூர் பகுதி மக்கள்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை
அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார்
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின்
மகள் ஐஸ்வர்யா.
இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.
'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்திருக்கிறார்.
மறுநாள் அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை
ஓட்டிக் கொண்டு வந்தவர், முனுசாமி என்ற தொழிலாளி மீது காரை
மோதியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகி
விட்டார்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்
பட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில், முனுசாமியின் மரணத்தால் சோகத்தில்
மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி. அந்தக் குடும்பமே
முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி
கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார்.

முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே
கேள்விக்குறியாகிவிட்டது.
-
முனுசாமியின் நண்பர் நாராயணனிடம் பேசினோம்.
" முனுசாமி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம்
கிடைச்சாலும், ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருப்பார். கார்பெண்ட்டர்
வேலை, லோடு தூக்குவது என தினமும் 500 ரூபாய்க்கு மேல் வருமானத்தைப்
பார்த்துடுவார். தெருவுக்குள் அவர் இருக்கும் இடமே தெரியாது.
அவர் செத்துப் போனதுக்குப் பிறகுதான், ஊர்ல பல பேருக்கு அவரைத்
தெரியுது. இரண்டு குழந்தைகளை வச்சுட்டு முனுசாமி குடும்பமே கஷ்டப்படுது.
இதுவரைக்கும் யாரும் வந்து பாக்கலை. குடிச்சுட்டு வண்டி ஓட்டுன பொண்ணு
மேல, கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. அது ஒண்ணு மட்டும்தான் ஆறுதலா
இருக்கு.
-
இறந்துபோன அன்னைக்கு இறுதிக் காரியம் செய்வதற்குக்கூட
அந்தக் குடும்பத்திடம் பணம் இல்லை. சம்பவம் நடந்த அன்னைக்கு
140 கிலோமீட்டர் வேகத்துல அந்தப் பொண்ணு வண்டி ஓட்டிட்டு
வந்திருக்கு. இவர் பிளாட்பாரத்துலதான் நின்னுக்கிட்டு இருந்தார்.
இந்த மாதிரி பொண்ணுங்க, பையன்களுக்கு வாரக் கடைசின்னா
இதே வேலையா போயிடுச்சு.

அவர் இறந்துட்டதால, அவரோட மனைவி மூணு மாசத்துக்கு எங்கேயும்
வேலைக்குப் போக முடியாது. ஏதாவது இழப்பீடு கொடுத்தாதான்,
அந்தக் குடும்பம் கரை சேரும்" என்றார் வேதனையோடு.

கிண்டி போக்குவரத்துக் காவலர்களிடம் பேசியபோது,
" அன்றைக்கு ஐஸ்வர்யா, சுஷ்மா உள்ளிட்ட மூன்று பெண்கள் குடித்து
விட்டு வண்டி ஓட்டியுள்ளனர். இதில், தொழிலதிபரின் மகள்தான்
வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். வார இறுதியில் குடிப்பதும் சினிமாவுக்குப்
போவதும்தான் இவர்களுடைய பொழுதுபோக்கு. வாகனத்தை ஓட்டிய
ஐஸ்வர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.
விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடப்பது அப்பகுதி மக்களுக்கு
தினம்தினம் பெரும் துன்பமாகவே முடிகிறது. பணம் படைத்தவர்கள்
ஏற்படுத்தும் மரணம் என்பது, அந்த நேரத்தின் ஒரு செய்தியாக மட்டுமே
மாறிப் போவது வேதனையான விஷயம். ஐஸ்வர்யா போன்ற செல்வந்தர்
வீட்டுப் பெண்களின் வழக்குகள், சல்மான் கானின் வழக்கு போல மாறி
விடக் கூடாது என அச்சப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
-
---------------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by கார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 9:57 am



ஆடி தள்ளுபடியில் ஆடி காரை வாங்கி,
ஆட்டம் பாட்டம் ஆனவ போதை தாங்கி,
ஆடி அசைந்து காரை ஒட்டி,
ஆங்கே அற்பன் மேலே காரை ஒட்டி,
ஆங்கே பறித்தது உயிரை மதுவே.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by தமிழ்நேயன் ஏழுமலை Tue Jul 05, 2016 10:30 am

முதல் வகுப்பு சிறை என்ன கவலை. பாவம் அந்த ஏழை குடும்பம் அவர் பிள்ளைகள்


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:55 am

குடித்துவிட்டு ,கொடுக்கிற போஸைப் பாரு !
மனுநீதி சோழன் வழக்கப்படி ,
காலைகளையும் கைகளையும் எடுக்கவேண்டியதுதான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by பாலாஜி Tue Jul 05, 2016 11:31 am

சல்மான்கான் வழக்கு போல இல்லாமல் இருந்தால் சரி .. நீதி துறையே செய்வீர்களா ..நீங்க செய்வீர்களா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by anikuttan Tue Jul 05, 2016 1:58 pm

காப்பீட்டு தொகையும் இறந்தவரின் குடும்பத்திற்கு கிடைக்காது .ஏனேன்றால் குடித்துவிட்டு வாகனம் ஒட்டி விபத்திர்க்குளானால் காப்பீட்டு நிறுவனமும் காப்பீட்டு தொகையை குடுக்காது.தொழிலதிபர் கையிலிருந்து தான் நஷ்ட ஈடு குடுக்கவேண்டும்.அந்த நாள் வரை முனுசுவாமியின் குடும்பத்தின் கதை என்னவாகும்?
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by ராஜா Tue Jul 05, 2016 4:27 pm

மணிக்கு 140 கிமீ வேகம் அதிர்ச்சி என்றால் சுமாரா ஒரு வினாடிக்கு (கண்ணை மூடி திறக்கும் நேரத்தில்) 40 - 50 மீட்டர் கார் பயணிக்கும்.
நம்ம ஊர் சாலைகள் இந்த வேகத்தை தாங்குமா , இதற்கென்றே பிரத்யோக சாலை குறியீடுகள் இருக்குதா? இவ்வளவும் இருந்தாலும் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் வந்தால் எங்கேயிருந்து சாலையில் வரும் வாகனங்களையோ அல்லது பாதசாரிகளையோ பார்க்க முடியும் ?!

இந்த காட்டெருமைக்கு தண்டனை கொடுப்பதை விட இவ அப்பனை பிடித்து நாலு அறை கொடுத்து பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வாங்கி கொடுக்க வேண்டும்.

பாவம் 11 வகுப்பும் 6 ஆம் வகுப்பும் படிக்கும் அந்த பிள்ளைகள் , இனி எந்த mechanic கடையில் கிரீஸ் துடைக்க போறானோ , அவன் தங்கை எந்த பணக்காரன் வீட்டில் பாத்திரம் கழுவ போகிறாரோ தெரியவில்லை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by சிவனாசான் Tue Jul 05, 2016 9:56 pm

என்னங்க கொடுமை அய்யோ பாவம் >>>மனிதாப மானம் என்ன விலைனு கேட்கிற காலமாய் போச்சே????!!!!!!!சட்டத்திற்கு யாரும் பயப்பிடலனு தெரியுது?>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Empty Re: புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புழல் சிறையில் பழைய ரூபாய் நோட்டுகளை கூழாக்கி ‘கோப்பு அட்டைகள்’ தயாரிப்பு
» "லைட்"டாதான் மது அருந்தியிருந்தார் "ஆடி கார்" ஐஸ்வர்யா.. வக்கீல் வாதம்!
» கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
»  உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum