Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 1
பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
![பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை. S4dLoE0sRoWZQVM0LCm7+e0c6d-brahmana](https://www.filepicker.io/api/file/S4dLoE0sRoWZQVM0LCm7+e0c6d-brahmana.jpg)
-
ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார்.
நாரதரை வணங்கிய அந்தணர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
-
அதற்க்கு, “நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார்.
“அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?”
“தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!”
-
“தாங்கள் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?”
“நிச்சயமாக” என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார். நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.
-
வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.
-
சற்று யோசித்த பெருமாள், “அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்” என்று இயம்பினார்.
-
இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!! பெருமாளை நோக்கி, “ஐயனே, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே ஏன் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?” என வினவினார்.
-
அதைக் கேட்டு புன்னகைத்த பெருமாள், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, “நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார்.
-
நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து, வழியில் சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “நாராயணரைச், சந்தித்தீர்களா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என வினவினார்.
-
நாரதர் பெருமாள் சொன்னபடி, ” ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார்.
அதற்க்கு அந்தணர், ” சுவாமி, தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? ” என்றார். புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.
-
Last edited by ayyasamy ram on Mon 4 Jul 2016 - 23:16; edited 1 time in total
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
அதைக் கேட்டதும், “ஆஹா, என் இறைவன் எல்லாம் வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்” என்று துள்ளிக் குதித்தார்.
இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம். “ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா? எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினார்.
-
அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார்.
மேலும் வியந்துபோன நாரதர் “எப்படி?” என வினவினார்.
-
கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி “இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?” என்று கேட்டார்.
-
இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!நன்றி
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
சமீப காலங்களில் நான் கேட்ட கதைகளிலே ,என்னை கவர்ந்த ஒன்று இது ,ayyasami ram .
பகிர்வுக்கு நன்றி .
ரமணியன்
பகிர்வுக்கு நன்றி .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
நல்ல கதை
இதே போல என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கதை , "வேடவன் ஒருவன் நரசிம்மத்தை" கண்ட கதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதே போல என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கதை , "வேடவன் ஒருவன் நரசிம்மத்தை" கண்ட கதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
(கா)கதை மிகவும் அருமை.
Last edited by T.N.Balasubramanian on Tue 5 Jul 2016 - 15:18; edited 1 time in total (Reason for editing : spelling correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
மேற்கோள் செய்த பதிவு: 1214127ராஜா wrote:நல்ல கதை![]()
இதே போல என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கதை , "வேடவன் ஒருவன் நரசிம்மத்தை" கண்ட கதை![]()
நான் படிக்கவில்லையே .
ஈகரையில் வந்துள்ளதா ?
படிக்க ஆவலாக உள்ளது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
எல்லாமேஅப்பரம் பொருளே. அவனின்றி எதுவும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அல்லவா!!!
அருமையான கதை அய்யா>
அருமையான கதை அய்யா>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
அருமையான கதை ராம் அண்ணா
...........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
மேற்கோள் செய்த பதிவு: 1214198T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214127ராஜா wrote:நல்ல கதை![]()
இதே போல என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு கதை , "வேடவன் ஒருவன் நரசிம்மத்தை" கண்ட கதை![]()
நான் படிக்கவில்லையே .
ஈகரையில் வந்துள்ளதா ?
படிக்க ஆவலாக உள்ளது .
ரமணியன்
வேடன் நரசிம்மத்தை கண்ட கதை... இதோ அந்த லிங்க் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.
அதைத்தான் 5 ம் தேதியே பார்த்துவிட்டேனே
நன்றி link கொடுத்ததில் . அதே லிங்கில் எந்தன் மறுமொழியும் உள்ளது .
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி link கொடுத்ததில் . அதே லிங்கில் எந்தன் மறுமொழியும் உள்ளது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆனந்த் மகிந்த்ரா கொடுத்த பணத்தை வாங்க மறுத்த தன்மானமிக்க செருப்பு தைக்கும் தொழிலாளி!
» செருப்பு தைக்கும் கலை !
» கடவுளை அடைய மூன்று வழிகள்
» சோவின் எங்கே பிராமணன்
» நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு
» செருப்பு தைக்கும் கலை !
» கடவுளை அடைய மூன்று வழிகள்
» சோவின் எங்கே பிராமணன்
» நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|