ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by ayyasamy ram Mon Jul 04, 2016 9:13 am



சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம்

24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரிடம் சிக்கினார். அப்போது அவர் தனக்குத்தானே கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துக் கொண்டதால், அவருக்கு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படையினர் சென்னையில் இருந்து வந்து ராம்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மயக்க நிலையில் இருந்த ராம்குமார், சனிக்கிழமை இரவு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேளையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மயிலேறும்பெருமாள், பாளையஞ்செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

திரவ உணவு: ஞாயிற்றுக்கிழமை காலையில் ராம்குமாரின் தாய் புஷ்பம் உடனிருந்து கவனித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் திரவ உணவு சாப்பிட்டார் ராம்குமார். மருத்துவர்கள் கூறுகையில், "ராம்குமாரின் உடல் நலம் குறித்து ஏற்கெனவே போலீஸாருக்கும், சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சேருபவர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஆணை மிகவும் அவசியம். அந்த ஆணை கிடைத்தால்தான் அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியும்' என்றனர்.

அதன்பின்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். முதலில் நீதிபதியின் வீட்டுக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ஆஜர்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த ஆலோசனை மாற்றப்பட்டது.

நீதிபதி முன்பு ஆஜர்: மருத்துவமனையிலேயே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.53 மணிக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமதாஸ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். ராம்குமார் சிகிச்சை பெற்ற அறைக்கு நீதித்துறை நடுவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்தினர். மேலும், சென்னைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் போலீஸார் தெரிவித்தனர். ராம்குமாரின் மருத்துவப் பரிசோதனை குறிப்புகள், போலீஸாரின் ஆவணங்களை சரிபார்த்த நீதித்துறை நடுவர், அவரை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-14 இல் திங்கள்கிழமை (ஜூலை 4) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரு மருத்துவர்கள், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே போலீஸ் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by ayyasamy ram Mon Jul 04, 2016 11:20 am

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by T.N.Balasubramanian Mon Jul 04, 2016 2:59 pm

அதுதான் நடைமுறை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by பாலாஜி Mon Jul 04, 2016 6:21 pm

ayyasamy ram wrote:கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1214013

இதே எண்ணம் எனக்கும் உண்டு ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by M.Jagadeesan Tue Jul 05, 2016 7:03 am

தலைப்பே தவறானது.

கொலையாளி ராம்குமார் என்று சொல்லக்கூடாது.

கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ( Ramkumaar , Swathi murder suspect ) என்றுதான் இந்து பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் .

விசாரணைக்குப் பிறகுதான் , இந்தக் கொலையை ஒருவரே செய்தாரா ? அல்லது பலபேர் சேர்ந்து செய்தார்களா என்ற விவரம் தெரியும் . அம்பு அகப்பட்டுக் கொண்டது ; வில் எங்கே ? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 8:31 am

'ராம்குமார் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது எப்படி...?'- நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
-
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் புகைப்படங்கள், வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். கொலையாளி என கருதப்படும் ராம்குமார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பிடிபட்டார். தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ராம்குமார்தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, ராம்குமாரின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டது குறித்தும், வாக்குமூலம் வெளியானதும் குறித்தும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல். விசாரணையின் போக்கை இது பாதிக்காதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 2:08 pm

சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை
செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது
செய்துள்ளனர்.
-
சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே
என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு
2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.
-
--------
-
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by ராஜா Tue Jul 05, 2016 4:21 pm

T.N.Balasubramanian wrote:அதுதான் நடைமுறை

ரமணியன்
நேற்று நானும் செந்திலும் பேசும்போது எங்களுக்கும் இந்த சந்தேகம் வந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by krishnaamma Tue Jul 05, 2016 10:36 pm

ayyasamy ram wrote:கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  TU0cyCSoSBOntISYLx9u+index.jpg99
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1214013

இதுதான் தமிழகத்தின் இன்றய நிலை ராம் அண்ணா சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்  Empty Re: கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்
» அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
» மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum