ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

+3
ராஜா
M.Jagadeesan
பாலாஜி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by பாலாஜி Sat Jul 02, 2016 12:38 pm

சென்னை இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை போலீஸ் தனிப்படை நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Ramkumar_2917293a



போலீஸ் தகவல்:

கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த ராம்குமார் மறுநாளே சொந்த ஊருக்குச் திரும்பியிருக்கிறார்.

சுவாதியின் செல்போன் சிக்னல் செங்கோட்டை அருகே இருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சுவாதி கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து ராம்குமாரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆழமாக இல்லை என கூறிய மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். ராம்குமார் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது அவர் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது As_mansion_2917299a

குற்றவாளி ஒப்புதல்:

சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பை போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாதி வீட்டருகேயே தங்கியிருந்த ராம்குமார்:

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்திருக்கிறார்.

சுவாதி கொலை வழக்கு இதுவரை:

கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளி யார் எனத் தெரியாமல் ரயில்வே போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவில் அதே நபர் ரயில் நிலையத்தின் நடை மேடையில் கொலை நடந்த சில விநாடிகளில் வேகமாக ஓடும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதைவைத்து போலீஸார் கொலையாளியை உறுதி செய்தனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் விவரம் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் ஏன் தொய்வு ஏற்படுகிறது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து வழக்கு ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் சுவாதி கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்தார். சுவாதியின் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் பணி செய்த அலுவலகம் பெங்களூரூ, மைசூரூவில் அவர் பயிற்சி பெற்ற அலுவலகங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
--தி இந்து


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty காதலிக்க மறுத்ததால் சுவாதியை கொன்றேன்: கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

Post by பாலாஜி Sat Jul 02, 2016 12:41 pm

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது 1467441869-6374

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இவர் காவல் துறை கைது செய்ய வருவதை அறிந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

ராம்குமாருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்ததாகவும், காவல் துறை அவரிடம் பேச்சு கொடுத்து வாக்குமூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் தனது வாக்குமூலத்தில், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போதுதான் சுவாதியுடன் அறிமுகம் கிடைத்து கடந்த 4 மாதமாக பழகி வந்ததாக கூறினார்.

மேலும், தான் வேலைக்கு நடந்து செல்லும் போது சுவாதியுடன் பேச ஆரம்பித்ததாகவும், தன்னை பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்துகொண்ட ராம்குமார் நாளடவில் சுவாதியை காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.

நான், பொறியியல் படிப்பை முடிக்காததும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்த சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் என்னுடைய காதலை சுவாதியிடம் கூறினேன். சுவாதி என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை சந்திப்பதையும் தவிர்த்தார்.

பின்னர் வேலைக்கு ரயில் நிலையத்துக்கு வரும்போது அவரது தந்தையுடன் வர ஆரம்பித்தார். இதனால் சுவாதியை சந்திக்க என்னால் முடியவில்லை. பின்னர் 2 முறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி அவரிடம் கெஞ்சினேன்.

ஆனால் எனது காதலை ஏற்றுக்கொள்ளாத சுவாதி, உனக்கும் எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை என திட்டி எனது காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொல்ல திட்டமிட்டு இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தேன்.

இறுதியாக கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அவள் அப்பொழுதும் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனல் அவர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 12:55 pm

பாவம் ! இனி அவன் வாழ்க்கை நரகம்தான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by ராஜா Sat Jul 02, 2016 5:18 pm

இதற்கெல்லாம் ஒரே காரணம் சினிமா தான்.

வேலைவெட்டிக்கு போகாத / படிக்காத எந்த பொறுக்கியும் பணக்காரன் அல்லது படித்த மேற்பதவியில் உள்ள பெண்ணை காதலிக்கலாம்!! கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திரைப்படங்களில் காட்டப்படும் போது அதையே இவனை போன்றவர்கள் நடைமுறையில் செயல்படுத்த பார்க்கிறார்கள்.


பொறியியல் படித்து உலகளவில் முன்னணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளிக்கடையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கி தனது தராதரம்தெரியாமல் காதல் என்ற போர்வையில் சுற்றி வந்து இப்ப அந்த பெண்ணின் உயிரை எடுத்துருக்கிறான்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 6:08 pm

இது ஒருதலைக் காதல் . அந்தப் பெண் காதலிக்கவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் இடையில் மலைக்கும் , மடுவுக்கும் உள்ள வேறுபாடு . ஆனாலும் காமம் அவனை விடவில்லை . காமம் இல்லாத அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியும் ,பழித்துப் பேசியும் இன்புற்றிருக்கிறான் .ஆனால் இவனுக்குச் சாதகமாக அந்தப் பெண் எதையும் செய்யவில்லை . அதுவே அவனைக் கொலைசெய்யத் தூண்டியது .

ஒருதலைக்காதல் கைக்கிளை எனப்படும் . அதன் இலக்கணம் ,

காமஞ்சாலா இளமை யோள்வயின்
ஏமஞ்சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறான் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே .

- தொல்காப்பியம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by யினியவன் Sat Jul 02, 2016 6:49 pm

மூன்றாம் தர அப்படங்கள் தான் சூப்பர் ஹிட் படங்கள். நடித்தவர்களுக்கு அவார்ட். வாழ்க வாழ்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by M.M.SENTHIL Sat Jul 02, 2016 7:16 pm

அவன் கொன்றது, அவனை பிடித்தது, நாளை அவனை என்கவுண்டர் செய்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தப் பொறுக்கி பொறம்போக்கு கொலை பண்ணியது போலவே, அம்மா மற்றும் 3 பெண் குழந்தைகளை கொன்றவனின் வழக்கு என்னாச்சு.

விஷ்ணுப்பிரியா தற்கொலை(?????) வழக்கின் நிலை என்ன?

இதுபோன்ற கேள்விகள் எழுகிறது மனதில்.

இவ்வளவு துரிதமாய் செயல்பட்டது போலவே, மற்ற வழக்கினையும் முடிக்கலாம்தானே, ஏன் இயலவில்லை.

இன்னும் பல என் மனதில், பதிவிட தோன்றவில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by சிவனாசான் Sat Jul 02, 2016 8:36 pm

யாரிடமும் விதி விளையாடாமல் விட்டு விடுவதில்லை. எல்லாம் வல்ல அவனின் திருவிளையாடல்களே>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by யினியவன் Sat Jul 02, 2016 10:57 pm

வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by ராஜா Sun Jul 03, 2016 12:27 am

யினியவன் wrote:வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.
உடனே கொல்லக்கூடாது அண்ணா ,

ஒரு படத்தில் (நடிகர் கரண் படமென்று நினைக்கிறேன் ) கதாநாயகனுக்கு கொடுமையான தண்டனை கொடுப்பார்கள் , உடம்பில் உயிரை மட்டும் வச்சுட்டு நடைபிணமாக ஆக்கியிருப்பார்கள் . எனக்கு இந்தப்படமும் அதன் கதையும் நினைவில்லை , ஆனால் அந்த தண்டனைக்கு பிறகு அந்த கதாநாயகன் தன் உயிரை போக்கிக்கொள்ள கூட இயலாதவனாக இருப்பான். அது போல இவனுங்களை செய்யவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Empty Re: சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.
» நெல்லையில் பள்ளி மாணவி "பலாத்காரம்' - பெரியப்பா கைது
» நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum