புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 02, 2016 12:33 pm

தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம் AszRXozJTZO744UJePcY+hell_2777914f
-
புஷ்பக விமானத்தில் ஏறி மனித உடலுடன் தருமன் சொர்க்கம் சென்றான். சொர்க்கத்தில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துரியோதனனும் மற்ற கெளரவர்களும் சொர்க்கத்தில் இருந்தார்கள். தன் தம்பிகள், திரௌபதி, அபிமன்யு ஆகியோரை அவன் கண்கள் தேடின. அவர்களைக் காணவில்லை. பாண்டவர்கள் இல்லாத அந்த சொர்க்கத்தில் கெளரவர்கள் சூரியனைப் போலப் பிரகாசித்துக்கொண்டு களங்கமற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை.

தன்னுடன் வந்த தேவதூதர்களைப் பார்த்து, “என்னுடைய தம்பிகள் எங்கே? அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போக விரும்புகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து திரும்பினான். “அவர்களிடம் போக நீங்கள் விரும்பினால் அழைத்துச் செல்கிறோம்” என்று சொன்ன தேவதூதர்கள், தருமனை வேறு இடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்.

தேவதூதர்கள் சென்ற வழி இருள் சூழ்ந்திருந்தது. தருமனின் கண்களில் பட்ட காட்சியெல்லாம் பயங்கரமாக இருந்தன. வழியெங்கும் ரத்தமும் மாமிசமும் கலந்த சேறு ஆறாக ஓடியது. பிணங்களும் எலும்புகளும் ரோமங்களும் நாலாபுறங்களிலும் கிடந்தன. எங்கும் புழுக்கள். சகிக்க முடியாத நாற்றம். வெட்டப்பட்ட கைகளும், கால்களும் தலைகளும் சிதறிக் கிடந்தன. துர்நாற்றத்தைச் சகிக்க முடியவில்லை. எங்கும் இருள். நாற்றம். அழுக்கு. கோரம். தருமனால் தாங்க முடியவில்லை. அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டுத் திரும்பிப் போக நினைத்தான். அவன் வேகமாகத் திரும்பும்போது ஒரு குரல் அவனை நிறுத்தியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 02, 2016 12:34 pm

நான் கர்ணன், நான் பீமசேனன்

“தருமபுத்திரரே! இங்கிருந்து போகாதீர்கள். கொஞ்ச நேரமாவது இங்கே நில்லுங்கள். நீங்கள் இங்கே வந்தபோது நல்ல மணம் நிறைந்த காற்று எங்கள் மீது வீசியது. எங்கள் வலியும் வேதனையும் குறைந்தன. இன்னும் சிறிது நேரம் நீங்கள் இங்கே நின்றால் எங்கள் வேதனை குறையும். கருணை காட்டுங்கள். போகாதீர்கள்” என்றது அந்தக் குரல். மிகவும் பரிதாபமாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்டு தருமன் ஸ்தம்பித்து நின்றான். மேலும் பல குரல்கள் அழுது புலம்பின. அந்தக் குரல்களைக் கேட்ட ஞாபகம் தருமனுக்கு இருந்தது. “நீங்கள் எல்லாம் யார்?”என்று கேட்டான்.

“நான் கர்ணன்” என்றது ஒரு குரல். “நான் பீமசேனன்” என்றது மற்றொரு குரல். “நான் அர்ச்சுனன்” என்று இன்னொரு குரல் ஒலித்தது. “நான்தான் உங்கள் மனைவி திரௌபதி” என்று வேதனையுடன் ஒலித்தது ஒரு பெண் குரல். தொடர்ந்து நகுலன், சகாதேவன் குரல்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டன. திரெளபதியின் புதல்வர்களின் குரல்களும் கேட்டன.

நாலாபுறங்களிலிருந்தும் எழுந்த அந்தத் தீனக் குரல்களைக் கேட்டுத் தாங்க முடியாத துயரத்தை அடைந்தான் தருமன். “ஐயோ இவர்கள் எல்லோரும் என்ன பாவம் செய்தார்கள்? கெளரவர்கள் எல்லோரும் சொர்க்கத்தில் இருக்க, இவர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்?” என்று புலம்பினான்.

தருமனுடன் வந்த தேவதூதர்கள், சொர்க்கத்துக்குத் திரும்ப வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள். அவர்களை நோக்கித் திரும்பிய தருமன், “நான் வரவில்லை. எனக்குப் பிரியமானவர்களுடன் நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் போகலாம்” என்றான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 02, 2016 12:34 pm

“உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கிறது. வாருங்கள்” என தூதர்கள் மீண்டும் அழைத்தார்கள். “என் மீது அன்பு கொண்டவர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். இவர்களை விட்டுவிட்டு சொர்க்கத்திற்கு வர நான் விரும்பவில்லை. இந்த நரகத்தையே விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டான் தருமன்.

ஒரு முகூர்த்த காலம் அப்படியே கழிந்தது. அதன் பிறகு அந்த இடத்தில் ஒளி மெல்ல ஊடுருவியது. ஒளிக்கற்றை வந்த திசையைப் பார்த்தான் தருமன். இந்திரனும் யமதேவனும் தருமன் இருந்த இடம் நோக்கி வந்தார்கள். அவர்கள் நெருங்க நெருங்க இருள் விலகியது. அவர்கள் வந்துசேர்ந்ததும் இருள் முற்றிலுமாக விலகிப் பொன்னிற ஒளி எங்கும் பரவியது. துர்நாற்றம் நீங்கியது. பிணங்கள், மாமிசக் குவியல்கள், வெட்டப்பட்ட கைகள், ரத்தச் சகதி மறைந்தது. நறுமணம் பரவியது. தருமன் வியப்புடன் அவர்களைப் பார்த்தான்.

தருமதேவதையாகிய யமதர்ம ராஜன், “மகனே, நீ கண்டது அனைத்தும் மாயை. எல்லாம் என்னால் உருவாக்கப்பட்டவை. உன்னுடைய உடன்பிறப்புகளுக்காக நீ நரகத்திலேயே இருக்க விரும்பினாய். இது நான் உனக்கு வைத்த இறுதிச் சோதனை. அதிலும் நீ தேறிவிட்டாய்” என்றான்.

தருமனுக்கு வந்த சோதனை


ஒரு முகூர்த்த காலத்துக்கு தருமன் நரக வேதனையை அனுபவித்தது அவனுடைய கர்ம வினைப் பயன் என்று இந்திரன் கூறினான். அரசர்கள் அனை வரும் நரகத்தைக் காண வேண்டும் என்பது விதி. தருமன் எவ்வளவுதான் தருமவானாக, புண்ணியம் செய்தவனாக இருந்தாலும் அவன் செய்த சிறிதளவு பாவங்களுக்காகவே ஒரு முகூர்த்த காலம் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது என்று இந்திரன் விளக்கினான்.

வனவாசத்தின்போதும், இறுதி யாத்திரையின்போதும் தருமனைச் சோதித்த அவன் தந்தை தருமராஜன், சொர்க்கத்திலும் அவனைச் சோதித்தான். தருமன் அந்த மூன்று சோதனைகளிலும் தேறித் தனது பெயருக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டினான்.

-சைதன்யா

தமிழ் தி இந்து காம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 9:14 pm

நல்ல பதிவுங்க அய்யா >

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2016 11:35 pm

தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம் 103459460 தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம் 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக