ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்

Go down

தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின் Empty தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்

Post by ayyasamy ram Fri Jul 01, 2016 7:43 am


-----------------------------
தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
-
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19,157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில்
ஆங்காங்கு நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால்
அனைத்துத் தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில்வே நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையம்
இருக்கும் இடங்கள் என்று எந்த இடமும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத
இடங்களாக மாறி வருவது வேதனைக்குரியது. குறிப்பாக சுவாதியின்
படுகொலையில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல்
சென்னை மாநகரக் காவல்துறை திணறிக் கொண்டிருப்பது தமிழக காவல்
துறையின் திறமைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறை
திணறிக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகளிலும் உரிய காலத்தில்
விசாரணையை முடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் தவித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த
மென் பொறியாளர் சுவாதியின் படுகொலையும், தன்னைப் பற்றி இணைய
தளத்தில் மார்பிங் செய்து வெளிவந்த படத்தை நீக்கக் கோரி கொடுத்த
மனுமீது காவல்துறை அலட்சியம் காட்டியதால் சேலத்தில் இளம் பெண்
வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதும் அடுத்தடுத்து அதிர்ச்சிச்
சம்பவங்களாக மாறி, தமிழக காவல்துறை எந்த அளவிற்கு தவித்துக்
கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.


தமிழகத்தில் உள்ள 1808க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் மட்டுமின்றி
சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த ஆள்
பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வீடுகளை பூட்டி
விட்டு வெளியில் கூட போய் வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே
ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கிறது. கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம்
அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும் அனைத்து
நிகழ்வுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் தமிழக காவல்
துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையால்
சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றால்,
காவல்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்
அதிமுக ஆட்சியில் வெகு காலமாக நிரப்பப்படாமல் இருப்பதும் இன்னொரு
முக்கியக் காரணம் ஆகும்.

தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்
பட்ட பலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் மட்டுமே! அதிலும் 19 ஆயிரத்து
157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திருச்சி தங்கவேலு என்பவர் தொடர்ந்த
வழக்கில் தமிழக காவல்துறையில் காலியாகக் கிடக்கும்
இந்த 19 ஆயிரத்து 157க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை
நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வே தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன என்றாலும்,
இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் ஆளுநர் உரையில் கூட
காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு
வெளியிடப்படவில்லை. காவல்துறையில் இயற்கையாக இப்படி ஆயிரக்
கணக்கில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும், போலீஸ் பணி இல்லாத வேறு
பணிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழக
காவல்துறையில் செயற்கையான ஆள் பற்றாக்குறையும் ஏற்படுத்தப்
பட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் தலைமை காவலர்கள்,
உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள்
தொடர்ந்து ஓய்வு பெற்று வருகிறார்கள். ஆனால் அதற்குரிய புதிய நியமனமும்
இல்லை. தலைமை காவலர் முதல் கூடுதல் டி.ஜி.பி. வரை உள்ள பல்வேறு
பதவிகளில் இருப்போருக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய பதவி
உயர்வுகளும் இல்லை.

இப்படி அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறையின் செயல்பாடு அனைத்து
விதத்திலும் முடங்கிப் போயிருக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு
இது வழிவிடுவது மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மிகவும் மோசமாக
சீர்கெட வைத்துள்ளது. மக்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வில் வாழும் ஆபத்தான
சூழலை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19, 157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், காவல்துறையில் நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும்
உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக காவல்துறையில் திறமையான காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சமில்லை.
அப்படி திறமைமிக்க அதிகாரிகளை முக்கியப் பணிகளில் நியமிப்பதிலும் அரசியல்
செய்யாமல், அவர்களிடம் பொறுப்புக்களை அளித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டிட அதிமுக அரசு முன் வர வேண்டும்.

காவல்துறைக்கு ஆள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை போன்றவற்றை
உடனடியாக நீக்கி, தமிழகத்தில் வேகமாக பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று
ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலை வாய்ப்பு செய்திகள்- தமிழக காவல்துறையில்…
» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum