Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
2 posters
Page 1 of 1
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
-
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.
——————————
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “”உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியும், உலக வங்கித் தலைவரும் பல்வேறு விவகாரங்களையும், ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்புள்ள துறைகள் பற்றியும் விவாதித்தனர்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தச் செயல்திட்டத்துக்கு உலக வங்கி முழு ஆதரவளிக்கும் என்று கிம் உறுதியளித்தார்.
சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பொலிவுறு நகரங்கள், கங்கை நதி தூய்மையாக்கும், திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவளித்து வருவதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.6,750 கோடி நிதியுதவி: அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மாற்று எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து ஜிம் யாங் கிம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கி சார்பில் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், ஜிம் யாங் கிம்மும் கையெழுத்திட்டனர். இதில், மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்துவதற்காக ரூ.4,218.75 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.
அரசு-தனியார் கூட்டாண்மையில் சூரிய மின்சக்தி பூங்காக்களை உருவாக்கும் திட்டத்துக்காக, ரூ.1,350 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று உலக வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி தொடர்பான திட்டங்களுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இந்தியா தலைமையில் 121 நாடுகள் இடம்பெற்றுள்ள சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்புடனான (ஐ.எஸ்.ஏ) ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டது.
அதையடுத்து, செய்தியாளர்களிடம் ஜிம் யாங் கிம் கூறியதாவது: ஆறு முக்கியத் துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கடினமான, முக்கியமான இலக்குகளை வைத்துள்ளனர். அதிக வளர்ச்சியை எட்டியுள்ளதைக் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது, உண்மையில் பிரகாசமான அறிகுறியாகும். உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஒளிவீசும் இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இந்தியா பாடமாகத் திகழ்கிறது என்றார் ஜிம் யாங் கிம்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி அளிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு நிதியுதவி அளிப்பதில் உலக வங்கி முன்னணியில் உள்ளது என்றார் அருண் ஜேட்லி.
“நான் மோடியின் ரசிகன்!’
உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். இதற்குக் காரணம், அனைத்து பெரிய தலைவர்களும் செய்ய வேண்டியவற்றை அவர் செய்கிறார் என்பதுதான்.
இலக்குகளை நிர்ணயிப்பது, அவற்றுக்கான காலக்கெடுவை ஏற்படுத்துவது, அதன் பின் அந்த இலக்குகளுக்கு அதிகாரிகளையும் பணியாளர்களையும் பொறுப்புடையவர்களாக்குவது ஆகியவையே அவரது வழிமுறையாக உள்ளது. இலக்குகளை எட்டுவதற்கு இதுவே சோதித்துப் பார்த்து, நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும். மோடியின் பெருமுயற்சிகளுக்குப் பலன்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன” என்றார்.
ரகுராம் ராஜனுக்குப் பாராட்டு: இதனிடையே, அவர், என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:
பிரதமர் மோடியிடமும், அவரது குழுவினரிடமும் பேசியதில், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றம் நிகழப் போவதில்லை என்று அறிந்தேன். சுதந்திர சிந்தனை படைத்தவராக ரிசர்வ் வங்கி ஆளுநர் நீடிப்பார் என்றும், நல்ல பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் திட்டங்களும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ரகுராம் ராஜன் மிகச் சிறந்த மத்திய வங்கி ஆளுநராகத் திகழ்ந்தார். ஒரு சிறந்த கல்வியாளராக அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன் என்றார் ஜிம் யாங் கிம்.
–
தினமணி
Re: சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
நம் நாட்டில் இதை ஒழுங்காக பயன் படுத்தினால் நிறைய பலன் உண்டு..வருடம் 365 நாளும் காயும் வெயிலை நன்கு உபயோகப்படுத்தலாம் நாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மேற்கூரை சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு மானியத்தை பாதியாகக் குறைக்க முடிவு
» தமிழகத்தில் சுகாதாரம்-சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.1,903 கோடி நிதியுதவி
» இலங்கை தமிழ்மக்களின் நிவாரணத்திற்கு 100 கோடி நிதியுதவி : இந்திய பிரதமர்
» ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» தமிழகத்தில் சுகாதாரம்-சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.1,903 கோடி நிதியுதவி
» இலங்கை தமிழ்மக்களின் நிவாரணத்திற்கு 100 கோடி நிதியுதவி : இந்திய பிரதமர்
» ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|