Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
+3
கார்த்திக் செயராம்
T.N.Balasubramanian
krishnaamma
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய பாணி. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடி பேர் வழிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக்கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக்கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்..
* பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வரும். அதில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு எண், வங்கி அட்டையின் சி.வி.வி. எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பார் கள். அடுத்தடுத்த மின்னஞ்சல் தொடர்புகளில் அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி, வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை வாங்கிவிடுவார்கள். பிறகென்ன மொத்தமாக உங்கள் பணம் மாயம்.
* சமீபத்தில் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் ‘உங்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கிறது. நாளை எங்கள் பணியாளர் உங்கள் வீட்டில் அதனை டெலிவரி செய்வார்’ என்று தகவல் வரும். அதேபோல மறுநாள் அழகாக பேக்கிங் செய் யப்பட்ட பெட்டியோடு வரும் டெலிவரி நபர், பேக்கிங் சார்ஜ் மற்றும் தபால் சேவை கட்டணம் என்று ரூ.500 வசூலிப்பார். இன்னும் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்பார்கள். கொடுத்தால் அவர்கள் கொடுத்த காலிப் பெட்டியைப் போலவே மொத்தப் பணமும் காலி.
* கொங்கு மண்டல பகுதிகளில் பெரிய மாடி வீடாக குறிவைப்பார் கள். பிரபல அலைபேசி நிறுவனத்தி லிருந்து பேசுவதுபோல அந்த வீட்டின் உரிமையாளரிடம் வீட்டு மாடியில் அலைபேசி டவர் வைக்க விரும்புவதாகவும் மாத வாடகை யாக பெரும்தொகை தருவதாகவும் பத்திரத்தில் எழுதி ஒப்பந்தம் போடு வார்கள். பத்திரப் பதிவு அலுவலகம் வரை உங்களை அழைத்துச் செல்வார்கள். கடைசி நேரத்தில் எங்கள் மேலதிகாரி பத்திரத்தில் கையெழுத்துப்போட ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கிறார். கொடுத்துத் தொலையுங்கள். நாளையே உங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்சம் வாடகை வரப்போகிறதுதானே என் பார்கள். கொடுத்தால் முடிந்தது, நொடியில் ‘எஸ்கேப்’.
* தென் மாவட்டங்களில் காற் றாலை அமைப்பதில் பங்குதாரராக சேருங்கள்; லாபத்தில் பங்கு கிடைக் கும் என்று அழைப்பு வரும். ரூ.1000 தொடங்கி 10,000 வரை இவர்களின் இலக்கு. பணம் சேர்ந்ததும் காற்று போல கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.
* ஷாப்பிங் செய்வதற்காக பெரிய மால்களின் படியேறினால் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு கூப்பன்களை கையில் திணிப்பார்கள். அடுத்த நாளே குடும்பத்துடன் இலவச உல்லாச சுற்றுலாவுக்கோ அல்லது சொகுசு தங்கும் விடுதிக்கோ அழைப்பார் கள். குடும்பத்துடன் அங்கு சென்ற வுடன் உணவுக்கு, தங்கும் அறைக்கு, பராமரிப்புக்கு என கணிச மான தொகையை கறந்து விடுவார்கள்.
* ரயில்களில் பேருந்துகளில் பகுதி நேர வேலை; வீட்டிலிருந்த படி சம்பாதிக்கலாம் என்று அலை பேசி எண்களுடன் போஸ்டர் ஒட்டி யிருப்பார்கள். இது பெரும்பாலும் டேட்டா என்ட்ரி பணி தான். பி.டி.எஃப். பைலை வேர்டு’ பைலாக மாற்றி செம்மைப்படுத்தித் தரவேண்டும். நீங்கள் வேலையை முடித்து கொடுத்தப் பின்பு வேலையில் திருப்தியில்லை என்றுச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் அல்லது தலைமறைவாகிவிடு வார்கள். இது உங்கள் உழைப்பில் குளிர் காயும் மோசடி.
* அடுத்ததாக உங்கள் உணர்வை குறி வைத்து ஏவப்படும் சென்டிமென்ட் மோசடிகளும் இருக் கின்றன. முகநூலில் அறிமுகமாகும் அழகான இளம் பெண் சில நாட்கள் பழக்கத்துக்கு பின்பு தனக்கு பெற்றோர் இல்லை என்றும் தாய் மாமன் தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார் என்றும் அலறு வார். பெரும்பாலும் இவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற தொலைதூர நகரங்களில் தான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்ந்தாலும் உங்களோடுதான் வாழ்க்கை என்கிற ரீதியில் நீளும் உணர்ச்சி மிகுந்த வசனங்களில் எதிராளி விழுந்துவிட்டது தெரிந்தால் அவரது வசதியைப் பொறுத்து விமான டிக்கெட்டுக்கான பணம் முதல் சொத்தை மீட்பதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துவிடுவார்கள்.
* மேற்கண்டதில் இன்னொரு வகை ஆதரவற்றோர் இல்லங்கள். உங்கள் சம்பளத்தில் மாதம் ரூ.1,000 கொடுத்தால் போதும் என்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் புகைப்படங் கள், இல்லத்தின் விவரங்கள் ஆகிய வற்றை அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தான் வரும். நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.
தி ஹிந்து
ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய பாணி. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடி பேர் வழிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக்கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக்கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்..
* பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வரும். அதில் நீங்கள் வாங்கிய பொருளுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு எண், வங்கி அட்டையின் சி.வி.வி. எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பார் கள். அடுத்தடுத்த மின்னஞ்சல் தொடர்புகளில் அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி, வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை வாங்கிவிடுவார்கள். பிறகென்ன மொத்தமாக உங்கள் பணம் மாயம்.
* சமீபத்தில் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் ‘உங்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கிறது. நாளை எங்கள் பணியாளர் உங்கள் வீட்டில் அதனை டெலிவரி செய்வார்’ என்று தகவல் வரும். அதேபோல மறுநாள் அழகாக பேக்கிங் செய் யப்பட்ட பெட்டியோடு வரும் டெலிவரி நபர், பேக்கிங் சார்ஜ் மற்றும் தபால் சேவை கட்டணம் என்று ரூ.500 வசூலிப்பார். இன்னும் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்பார்கள். கொடுத்தால் அவர்கள் கொடுத்த காலிப் பெட்டியைப் போலவே மொத்தப் பணமும் காலி.
* கொங்கு மண்டல பகுதிகளில் பெரிய மாடி வீடாக குறிவைப்பார் கள். பிரபல அலைபேசி நிறுவனத்தி லிருந்து பேசுவதுபோல அந்த வீட்டின் உரிமையாளரிடம் வீட்டு மாடியில் அலைபேசி டவர் வைக்க விரும்புவதாகவும் மாத வாடகை யாக பெரும்தொகை தருவதாகவும் பத்திரத்தில் எழுதி ஒப்பந்தம் போடு வார்கள். பத்திரப் பதிவு அலுவலகம் வரை உங்களை அழைத்துச் செல்வார்கள். கடைசி நேரத்தில் எங்கள் மேலதிகாரி பத்திரத்தில் கையெழுத்துப்போட ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்கிறார். கொடுத்துத் தொலையுங்கள். நாளையே உங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்சம் வாடகை வரப்போகிறதுதானே என் பார்கள். கொடுத்தால் முடிந்தது, நொடியில் ‘எஸ்கேப்’.
* தென் மாவட்டங்களில் காற் றாலை அமைப்பதில் பங்குதாரராக சேருங்கள்; லாபத்தில் பங்கு கிடைக் கும் என்று அழைப்பு வரும். ரூ.1000 தொடங்கி 10,000 வரை இவர்களின் இலக்கு. பணம் சேர்ந்ததும் காற்று போல கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.
* ஷாப்பிங் செய்வதற்காக பெரிய மால்களின் படியேறினால் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு கூப்பன்களை கையில் திணிப்பார்கள். அடுத்த நாளே குடும்பத்துடன் இலவச உல்லாச சுற்றுலாவுக்கோ அல்லது சொகுசு தங்கும் விடுதிக்கோ அழைப்பார் கள். குடும்பத்துடன் அங்கு சென்ற வுடன் உணவுக்கு, தங்கும் அறைக்கு, பராமரிப்புக்கு என கணிச மான தொகையை கறந்து விடுவார்கள்.
* ரயில்களில் பேருந்துகளில் பகுதி நேர வேலை; வீட்டிலிருந்த படி சம்பாதிக்கலாம் என்று அலை பேசி எண்களுடன் போஸ்டர் ஒட்டி யிருப்பார்கள். இது பெரும்பாலும் டேட்டா என்ட்ரி பணி தான். பி.டி.எஃப். பைலை வேர்டு’ பைலாக மாற்றி செம்மைப்படுத்தித் தரவேண்டும். நீங்கள் வேலையை முடித்து கொடுத்தப் பின்பு வேலையில் திருப்தியில்லை என்றுச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் அல்லது தலைமறைவாகிவிடு வார்கள். இது உங்கள் உழைப்பில் குளிர் காயும் மோசடி.
* அடுத்ததாக உங்கள் உணர்வை குறி வைத்து ஏவப்படும் சென்டிமென்ட் மோசடிகளும் இருக் கின்றன. முகநூலில் அறிமுகமாகும் அழகான இளம் பெண் சில நாட்கள் பழக்கத்துக்கு பின்பு தனக்கு பெற்றோர் இல்லை என்றும் தாய் மாமன் தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார் என்றும் அலறு வார். பெரும்பாலும் இவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற தொலைதூர நகரங்களில் தான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்ந்தாலும் உங்களோடுதான் வாழ்க்கை என்கிற ரீதியில் நீளும் உணர்ச்சி மிகுந்த வசனங்களில் எதிராளி விழுந்துவிட்டது தெரிந்தால் அவரது வசதியைப் பொறுத்து விமான டிக்கெட்டுக்கான பணம் முதல் சொத்தை மீட்பதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துவிடுவார்கள்.
* மேற்கண்டதில் இன்னொரு வகை ஆதரவற்றோர் இல்லங்கள். உங்கள் சம்பளத்தில் மாதம் ரூ.1,000 கொடுத்தால் போதும் என்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் புகைப்படங் கள், இல்லத்தின் விவரங்கள் ஆகிய வற்றை அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து தான் வரும். நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.
தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
எனக்கு ஒன்று புரியலை . எதுக்கு பாஸ்வர்ட் எல்லாம் தரணும், படம் போடணும் என்றால் வங்கி கணக்கு என் போறாதா?............குடுத்தால் அவன் எடுத்துக்கறான்........
.
.
அதேபோலத்தான், இந்த ஸ்வாதி கொலைக்கு முன்பாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளே, அவ தன் facebook பாஸ்வர்ட் ஐ காதலனிடம் (?) கொடுத்திருக்கா.............அவன் படம் போட்டுவிட்டான் உள்ளே போய்....எதுக்கு தரணும்?.......தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம்.........கொடுத்ததன் கதி தான் இப்போ தற்கொலை இல் முடிந்து இருக்கு.........
.
.
.
இனியாவது, எக்காரணம் கொண்டும் ,யாருடனும் பாஸ்வர்ட்க்ளை பகிராமல் இருக்க பழகணும்...........
.
.
அதேபோலத்தான், இந்த ஸ்வாதி கொலைக்கு முன்பாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளே, அவ தன் facebook பாஸ்வர்ட் ஐ காதலனிடம் (?) கொடுத்திருக்கா.............அவன் படம் போட்டுவிட்டான் உள்ளே போய்....எதுக்கு தரணும்?.......தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம்.........கொடுத்ததன் கதி தான் இப்போ தற்கொலை இல் முடிந்து இருக்கு.........
.
.
.
இனியாவது, எக்காரணம் கொண்டும் ,யாருடனும் பாஸ்வர்ட்க்ளை பகிராமல் இருக்க பழகணும்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
கடந்த சில தினங்களில் SBI Bank மனேஜர் எனக் கூறி இந்த இலக்கங்களில் இருந்து 8298918512 , +918051339413 அழைப்பை ஏற்படுத்தி ,ATM Card மோசடி நடந்ததாகப் புகார் கொடுத்துள்ளனர்.(இன்றைய செய்தி படித்தேன்.) ஏமாறுபவர்கள் அனேகமாக படித்தவர்களும் இணையம் மோபைல் திருட்டு பற்றி தெரிந்தவர்களுமாக இருக்கிறார்களே!
இல்லையேல் கிருஷ்ணாஅம்மா சொல்வது போல்,
//தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம். //
ஏமாறுகிறார்கள்.சில இணையத்தளங்கள்,முக்கியமாக சமூகதளங்களில் வரும் பலவும் போலியாக ஏமாற்றாகவே இருப்பதைக் காண முடிகிறது.
இல்லையேல் கிருஷ்ணாஅம்மா சொல்வது போல்,
//தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம். //
ஏமாறுகிறார்கள்.சில இணையத்தளங்கள்,முக்கியமாக சமூகதளங்களில் வரும் பலவும் போலியாக ஏமாற்றாகவே இருப்பதைக் காண முடிகிறது.
Guest- Guest
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
நான் இதற்கெல்லாம் கவலை படுவது இல்லைங்க !!
எந்தன் பாஸ்வேர்ட் ****
யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
மேற்கோள் செய்த பதிவு: 1213438krishnaamma wrote:எனக்கு ஒன்று புரியலை . எதுக்கு பாஸ்வர்ட் எல்லாம் தரணும், படம் போடணும் என்றால் வங்கி கணக்கு என் போறாதா?............குடுத்தால் அவன் எடுத்துக்கறான்........
.
.
அதேபோலத்தான், இந்த ஸ்வாதி கொலைக்கு முன்பாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளே, அவ தன் facebook பாஸ்வர்ட் ஐ காதலனிடம் (?) கொடுத்திருக்கா.............அவன் படம் போட்டுவிட்டான் உள்ளே போய்....எதுக்கு தரணும்?.......தாலி கட்டின கணவனிடம் தரமாட்டாளுங்க, அவனுக்குத் தெரியாம facebook அக்கவுண்ட் வெப்பாளுங்க, ஆனால் 4 மாசம் பழகின எவனிடமோ பாஸ்வர்ட் தருவாளுங்களாம்.........கொடுத்ததன் கதி தான் இப்போ தற்கொலை இல் முடிந்து இருக்கு.........
.
.
.
இனியாவது, எக்காரணம் கொண்டும் ,யாருடனும் பாஸ்வர்ட்க்ளை பகிராமல் இருக்க பழகணும்...........
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
உஷார் ...
விழிப்புணர்வு தரும் பதிவு.....
விழிப்புணர்வு தரும் பதிவு.....
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
ஐயா இதுவா உங்கள் பாஸ்வேர்ட்? மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டேன். உடனே மாற்றி விடுங்கள்.
Guest- Guest
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
என்னதான் சொன்னாலும் மக்கள் ஏற்றகொள்வதாக இல்லை. ஆசை காட்டி மோசம் செய்ய நினைக்கும் சீட்டு கம்பெனி பேராசை விடல. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி ஓட்டுநர் பணிக்கான உத்தரவு ஆணை வழங்கியுள்ள
னர்.!!!!!!!!!!!!!!!!!!
னர்.!!!!!!!!!!!!!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
மேற்கோள் செய்த பதிவு: 1213512மூர்த்தி wrote:ஐயா இதுவா உங்கள் பாஸ்வேர்ட்? மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டேன். உடனே மாற்றி விடுங்கள்.
ஹஹஹஹஹஹ .
மாற்றிவிட்டேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருட்டுகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...திருட்டு பைக்கை நிறுத்திவிட்டு விலை உயர்ந்த பைக் அபேஸ்
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
» பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...
» கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
» பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|