ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

3 posters

Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by krishnaamma Tue Jun 28, 2016 1:05 pm

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு !
----------------------------------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்,

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் .....................

காரணம்,

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட,

எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்

தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் ......

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு

ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்

எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் ,
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு யோசிங்க மக்களே !!!!

நன்றி : whatsup


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by ayyasamy ram Tue Jun 28, 2016 1:13 pm

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு
மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக
வேலை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை
ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும்
மக்கள்: பெலரஸ் நாட்டில் வினோதம்
கால வேகத்தின் போக்குக்கேற்பத் நாம்
மாறித்தான் ஆக வேண்டும்....
-
‘பழையன கழிதலும் புதியன புகவல கால வகையினானே’
என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் நினைவு
கூரத்தக்கது...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by Guest Tue Jun 28, 2016 3:25 pm

கிரிஷ்னாஅம்மா! சிந்திக்க வேண்டிய நல்ல பதிவுதான்.ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும் எனத் தெரிகிறது. உலகமயமாக்கலின்-Globalization -விளைவு இன்றைய நிலை- படித்து விட்டு மறுபக்கம் போட்டு விட்டு செல்வார்களே தவிர, செயலில் காட்ட எவரும் முன்வர மாட்டார்கள்.

வெள்ளைக்காரன் மாறினாலும் நாம் மாற மாட்டோம். அதற்கு மேலே ஐய்யாசாமி ராம் அவர்களின் கருத்தே சான்று. நீங்கள் எப்படி?
//கால வேகத்தின் போக்குக்கேற்பத் நாம் மாறித்தான் ஆக வேண்டும்.... //

எதில் மாற்றம் வேண்டுமோ அதை செய்யமாட்டோம்.மாற்றம் தேவயற்றவை எல்லாம் மாற்றம் பெற்றுவிடுகிறது.

சுவாதிக்காக கருத்துக் கந்தசாமியாக குரல் கொடுத்தோர்,கவிதை பாடியோர் ஒருவராவது நாளை செயலில் காட்டுவார்களா? உதவிக்கு முன்வருவார்களா? உலகம் இப்படித்தான் என சொல்லி, பழக்கத்தில் உள்ளது இப்படித்தான் என தங்கள் வேலையை கவனிக்க சென்று விடுவார்கள். (இதற்கு ஒரு சினிமாக் காட்சி இருக்கிறது.படிக்கிறீர்களா? )

சுவாதிக்கு நடந்தது போல் ஒரு சம்பவம் நடந்தால்,பொதுமகனுக்கு குற்றவாளியைக் கைது செய்யவும் சட்டத்தில் இடமுண்டு என்பதை காவல்துறை ஏற்றுக் கொண்டாலும், அதைச் செய்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களா காவல்துறையினர். ரமணியன் ஐயா சொல்வது போல் பொலீசாரின் நடவடிக்கை காரணமாக ஒதுங்கி விடுவார்கள்.

என் பெயரைச் சொல்லு, பாட்டி என அழைக்காதே என அவள் பாட்டி சொன்னதாக ஒரு குழந்தை சொல்லியது. ஆனாலும் உறவு முறையை சொல்லும் போது ஏதோ ஒரு இனம்தெரியா சுகம் கிடைக்கவே செய்கிறது. என் வீட்டுக்கு கீழே இருக்கும் வெள்ளைக்காரப் பாட்டி தினமும் வருவார்.இதுவரை பெயரைச் சொல்லி அழைத்ததில்லை.எப்போதும் -son - தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by Guest Tue Jun 28, 2016 3:27 pm

ஒரு சினிமாக் காட்சி. அந்நாளைய அமெரிக்கத் திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களை – லாரல், ஆர்டி (Laurel & Hardy) – அறிந்திருப்பீர்கள். முதல் உலகப் போரின் போது நடக்கும் கதை அது. அதில் இவ்விருவரையும் கட்டாயமாகப் படையில் சேர்த்து விடுவார்கள். வீரர்கள் நடைப் பயிற்சி செய்யும் நேரம் அது. இடக் கால், வலக் கால் (left, right) என மாற்றிப் போட்டு வீரர்கள் நடை பயிலுவார்கள். இடையில் வந்து நுழைந்த இந்த இரட்டையரில் ஆர்டி மற்றவர்களைப் போலவே இடக் கால், வலக் கால் போட்டு நடப்பார். 

லாரலோ வலக் கால், இடக் கால் எனத் தவறாகப் போடுவார். அது மட்டும் அல்ல, ஆர்டியைச் சைகையால் அழைத்துத் தன் கால்களைக் காட்டுவார். ஆர்டியோ குழம்பிப்போவார். லாரல் வற்புறுத்த ஆர்டியும் வலக் கால், இடக் கால் என மாற்றிப் போடத் தொடங்குவார். அவர்களைப் பார்த்து ஏனைய வீரர்களும் தாங்கள் தவறாக நடை போடுவதாக எண்ணி தமது நடையை மாற்றிக்கொள்ள இறுதியில் படை முழுவதும் தவறாகவே நடை போடும். இதனைக் காணும் அந்தப் படைப் பிரிவின் தலைவன் பிய்த்துக்கொண்டு நிற்பான்.

அந்தப் படைத் தலைவனின் நிலைதான் இன்று தமிழுக்கும்,மேலே சொல்லப்பட்ட நிலக்கும், நமக்கும் வந்த நிலை. எல்லாரும் இப்படித்தான் என ஊரோடு ஒத்துப் போக தொடங்கி விடுவார்கள். இன்று மம்மி,டாடி,ஆன்டி என அழைக்கும் நிலை அனேகமாக எங்கும் பரவி விட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by ராஜா Tue Jun 28, 2016 4:59 pm

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு !


யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கு யோசிங்க மக்களே !!!!
நீங்க யாரை யோசிக்க சொல்லுறீங்க ?! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய  one of the BEST பதிவு ! Empty Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum