புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை ஔவையார் ? Poll_c10எத்தனை ஔவையார் ? Poll_m10எத்தனை ஔவையார் ? Poll_c10 
7 Posts - 64%
heezulia
எத்தனை ஔவையார் ? Poll_c10எத்தனை ஔவையார் ? Poll_m10எத்தனை ஔவையார் ? Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
எத்தனை ஔவையார் ? Poll_c10எத்தனை ஔவையார் ? Poll_m10எத்தனை ஔவையார் ? Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை ஔவையார் ?


   
   
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 03, 2013 4:41 pm

ஒளவையார் என்றாலே, தி ஒன் அண்ட் ஒன்லி …. கே.பி.சுந்தராம்பாள் முகம் தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றைக் கேள்வியாகக் கேட்டால், ‘பழம் நீயப்பா…’ எனத் தேர்வில் எழுதி வைக்கும் அளவுக்கு அந்த ஒளவையார் நமக்கு பசுமரத்து ஆணி. ஆந்த ஆணியைத் தானட அசைத்துப் பார்த்திருப்பதாக சமீபத்தில் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆறர்ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றின் கீழ் ‘சங்க காலத்து ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒரே நபர் அல்ல’ என ஆசிரியர் குறிப்பு இருக்கிறது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பள்ளிக் கல்வித்துறையும் இதைப் பற்றி விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது. உண்மையில் ஒளவையார்கள் எத்தனை பேர்? சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் வீ.அரசுவிடம் விளக்கம் கேட்டோம்…

“ஒன்றல்ல… பல ஒளவைகளை தமிழ் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது” என்றவர், “அதிலும் குறிப்பாக ஐந்து ஒளவைகளை மிகத் தெளிவாகவே வேறுபடுத்திப் பார்க்க முடீயும்” என்று பட்டியலிடத் துவங்கினார்…..

“ முதல் ஒளவை என்று, சங்க கால ஒளவையைச் சொல்லலாம். சுங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பானது. இரண்டாவது ஒளவை, சங்க காலத்துக்குப் பிறது சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள புராண கட்டுக்கதைகளில் வரும் ஒளவை. இந்தக் கால கட்டத்தில்தான் திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் போன்றவர்களின் தங்கையாக சித்தரிக்கப்பட்ட கதைகள் உலாவின. மூன்றாவதாக 12 முதல் 14ம் நூற்றாண்டுகளில் எழுந்த நீதி இலக்கிய காலத்து ஒளவை. திருவிளையாடல் புராணத்தில் ‘சுட்ட பழம் வேண்டுமா’ என முருகன் கேட்பதாக இவர் சித்தரிக்கப்பட்டதைப் பார்க்க முடியும். நான்காவதாக 14-15ம் நூற்றாண்டு காலத்தில் ‘விநாயகர் அகவல்’, ‘ஒளவை குறள்’ போன்றவற்றை எழுதிய சமய இலக்கிய ஒளவை. குடைசியாக 17-18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஒளவையாரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இவர் பாடியதாக ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் உலவுகின்றன. ‘பந்தன் அந்தாதி’ எனும் நூலும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார் அவர். ஓளவையார் என்ற சொல் நம்மிடையே ஏற்படுத்தும் வழக்கமான பிம்பத்தைக் கட்டுடைப்பதாக அவரின் அடுத்தடுத்த கருத்துகள் விரிந்தன்.

“அன்றைய காலங்களில் ஒரே பெயரைப் பயன்படுத்தி பாடும் ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். உதாரணமாக புகழேந்திப் புலவரின் பெயரைப் பயன்படுத்தி பாடியவர்கள் பலபேர். அன்று பெயர் ஒரு சிக்கலாக இருக்கவில்லை. சங்க கால ஒளவை, அதியமான என்னும் மன்னனுடன் அதிகம் பழகியவர்களில் ஒருத்தியாக வருpறாள். நமது ‘ஒளவையார்’ சினிமாவில் காட்டப்பட்ட ஒளவைப் பாட்டியை விட இந்த ஒளவை மிகவும் இளமையானவள். சுமார் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும்.

அதோடு பேரழகும், பேரறிவும் மிக்கவள். இன்னும் சொல்லப் போனால் கள் குடித்து, கறி சாப்பிட்டு அதியமானோடு புரட்சிகரமான நெருக்கத்தோடு அவள் பழகியிருக்கிறாள். கவிஞர் இன்குலாப் இப்படிப்பட்ட ஒளவையை தனது ‘ஒளவை’ எனும் நாடகத்தில் சித்தரித்ததால், அந்தப் புத்தகத்தை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைப்பதற்குப்கூட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கெல்லாம் காரணம் நம் மனதில் ஆழப் பதிந்துவிட்ட ‘ஒளவையார்’ உருவம் தான் சென்னை கடற்கரையில் சிலை வடிக்கப்பட்டிருக்கும் கோல் ஊன்றிய மூதாட்டிதான் ஒளவை என நம் பொது புத்தி பிடிவாதம் பிடிக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்துகள் உண்மையாகவே இருந்தாலும், மனம் ஏற்க மறுக்கிறது. அந்தக் கால ‘ஒளவையார்’ திரைப்படம் பிரமாண்ட படைப்பு தான். ஆனால், அது ஒளவையாரின் வரலாறு பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஒளவையார் பற்றிய அனைத்து செய்திகளையும் ஒரே கதையாக்கித் தொகுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டது.

அந்த சினிமா ஒளவையையும், நீதிநெறி போதிக்கும் ஒளவையையும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் தமிழ்ச் சமூகம், காதல், அழகு, புத்திக்கூர்மை போன்ற எதிரும் புதிருமான குணாம்சங்களைக் கொண்டிருந்த சங்க கால ஒளவையை மறந்துவிட்டது துரதிஷ்டம் தான். ஓளவை என்ற சொல்லுக்கு ‘தாய்’ என்றுதான் அர்த்தம். ஆனால், இளம் வயதுக்குரிய பெயர் அது. முரியாதைக்காக ‘ஆர்’ விகுதி போட்டு அதை ஒளவையார் ஆக்கி, தமிழ்ச்சமூகம் பெருமை கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவை உண்டு என்ற அடிப்படை உண்மையைக் கூட அது ஏற்கத் தயங்குகிறது” என்று முடித்தார் அவர்.

நல்லவேளை இதில் ‘அவ்வை சண்முகி’யை சேர்க்கவி;ல்லை.!

கட்டுரை : டி.ரஞ்சித்
நன்றி : குங்குமம்





அன்புடன் அமிர்தா

எத்தனை ஔவையார் ? Aஎத்தனை ஔவையார் ? Mஎத்தனை ஔவையார் ? Iஎத்தனை ஔவையார் ? Rஎத்தனை ஔவையார் ? Tஎத்தனை ஔவையார் ? Hஎத்தனை ஔவையார் ? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 4:45 pm

என்ன அமிர்தா இது ?! புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 4:49 pm

பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 03, 2013 4:49 pm

இப்படி தான் அண்ணா இருந்தது என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, அதனால் தான் இங்கு பதிவிட்டேன்



அன்புடன் அமிர்தா

எத்தனை ஔவையார் ? Aஎத்தனை ஔவையார் ? Mஎத்தனை ஔவையார் ? Iஎத்தனை ஔவையார் ? Rஎத்தனை ஔவையார் ? Tஎத்தனை ஔவையார் ? Hஎத்தனை ஔவையார் ? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 03, 2013 4:52 pm

சிவா wrote:பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!
நன்றி அண்ணா  பாமினி எழுத்துரு என்றால் எனக்கு எளிதாக இருக்கும். அதனால் தான் அதில் தட்டச்சு செய்தேன்



அன்புடன் அமிர்தா

எத்தனை ஔவையார் ? Aஎத்தனை ஔவையார் ? Mஎத்தனை ஔவையார் ? Iஎத்தனை ஔவையார் ? Rஎத்தனை ஔவையார் ? Tஎத்தனை ஔவையார் ? Hஎத்தனை ஔவையார் ? A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 4:55 pm

amirmaran wrote:
சிவா wrote:பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!
நன்றி அண்ணா  பாமினி எழுத்துரு என்றால் எனக்கு எளிதாக இருக்கும். அதனால் தான் அதில் தட்டச்சு செய்தேன்
பாமினியில் தட்டச்சு செய்த எழுத்துருவை கீழே உள்ள சுட்டியைத் திறந்து மேலே உள்ள பகுதியில் ஒட்டி பாமினி என்ற இடத்தில் அழுத்தினால் கீழே யுனிகோட் எழுத்துருவாக மாற்றப்படும்! அதை ஈகரையில் பதிவிடுங்கள் அமிர்தா!

http://eegarai.com/font

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 03, 2013 4:59 pm

சிவா wrote:
amirmaran wrote:
சிவா wrote:பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!
நன்றி அண்ணா  பாமினி எழுத்துரு என்றால் எனக்கு எளிதாக இருக்கும். அதனால் தான் அதில் தட்டச்சு செய்தேன்
பாமினியில் தட்டச்சு செய்த எழுத்துருவை கீழே உள்ள சுட்டியைத் திறந்து மேலே உள்ள பகுதியில் ஒட்டி பாமினி என்ற இடத்தில் அழுத்தினால் கீழே யுனிகோட் எழுத்துருவாக மாற்றப்படும்! அதை ஈகரையில் பதிவிடுங்கள் அமிர்தா!

http://eegarai.com/font




அன்புடன் அமிர்தா

எத்தனை ஔவையார் ? Aஎத்தனை ஔவையார் ? Mஎத்தனை ஔவையார் ? Iஎத்தனை ஔவையார் ? Rஎத்தனை ஔவையார் ? Tஎத்தனை ஔவையார் ? Hஎத்தனை ஔவையார் ? A
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Dec 03, 2013 5:27 pm

இது உண்மைதான் பல வேறுபட்ட காலங்களில் அவ்வைகள்? பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து இவ்வாறு இனம் காணமுடிகிறது (பிரிக்கலாம்)
இது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை இருக்கிறது நேரமின்மையால் பகிரமுடியவில்லை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 27, 2016 5:46 am

நல்ல பதிவுகள்>>>>>>

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 9:40 am

நல்ல பதிவு எத்தனை ஔவையார் ? 103459460 எத்தனை ஔவையார் ? 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக