புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_lcapமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_voting_barமனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 12:08 pm

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  201606210834239163_thiruvidaimarudur-mahalingaswamy-temple_SECVPF

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.

மருதவனம் :

காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.

பிரம்மஹத்தி தோஷம் :

வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.

மனநோய்க்கு மருந்து :

இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.

எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

பழிபாவம் நீக்கும் பரமன் :

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.

“பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து

பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்

மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்

கருதிடத்தான் நில்லா கரந்து”.

இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.

ஆலய அமைப்பு :

கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.

தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.

வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

மூகாம்பிகை :

சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.

அமைவிடம் :

கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
-maalaimalar

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 22, 2016 1:44 pm

சோழர் காலத்தில் தான் எத்தனை எத்தனை கோவில்கள்.. இன்று பல கோவில்கள் சேதமடைந்து விட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 2:16 pm

சரவணன் wrote:சோழர் காலத்தில் தான் எத்தனை எத்தனை கோவில்கள்.. இன்று பல கோவில்கள் சேதமடைந்து விட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!


நம் (பழைய ஒருங்கிணைந்த தஞ்சை) மாவட்டமே ஒரு பெரிய சிவன் கோவில் என்று சொல்லுவார்கள் , அதில் மூலவர் தான் மஹாலிங்கம். அற்புதமான கோவில் இது.

காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி மனமுருகி மகாலிங்கத்தை வேண்டினால் மறுபிறவி எடுக்காமலேயே நம் பாவங்கள் அகலும் இது என் வரைக்கும் நான் கண்ட உண்மை.






சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 22, 2016 3:36 pm

இங்கேயும் ஒரு எட்டு போயிட்டு வரணும் .......... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 22, 2016 3:45 pm

சரவணன் wrote:இங்கேயும் ஒரு எட்டு போயிட்டு வரணும் .......... அய்யோ, நான் இல்லை
அவசியம் போயிட்டு வா சரவணா , இங்கு மூகாம்பிகை அம்மனுக்கும் தனி சன்னதி உண்டு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 22, 2016 4:26 pm

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
ராஜா wrote:காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்  201606210834239163_thiruvidaimarudur-mahalingaswamy-temple_SECVPF

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவலஞ்சுழி – விநாயகர் சுவாமிமலை – முருகன், பட்டீசுரம் – துர்க்கை, ஆலங்குடி – தட்சிணாமூர்த்தி போன்றவை பரிவார தெய்வங்களின் கோவில்களாகும். திரு விடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப் படுத்தப்படு கிறார்.

மருதவனம் :

காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று, என்ற சிறப்பினைப் பெற்றதாக திருவிடைமருதூர் ஆலயம் விளங்குகிறது. இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.

சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் தாலாட்டும் தலம் இதுவாகும்.

பிரம்மஹத்தி தோஷம் :

வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக் கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்து திரிந்தான். இதை யடுத்து அந்த மன்னன் தனது குல தெய்வமான மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.

இதையடுத்து வரகுண பாண்டிய மன்னன் திரு விடைமருதூர் திருத்தலம் வந்தான். மகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக்கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக் கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்து மன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணிய பிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.

கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலை ஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.

வரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று மனம் உருகி வழிபட்டபோது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரனின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்தவழியே மீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.

மனநோய்க்கு மருந்து :

இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப் பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும். தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள்.

எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

பழிபாவம் நீக்கும் பரமன் :

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.

“பழிபாவங்கள் நீங்க மருதீசர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பட்டினத்தாரின் பாட்டு இதோ.

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து

பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்

மருதிடத்தான் என்றுஒருகால் வாயாரச் சொன்னால்

கருதிடத்தான் நில்லா கரந்து”.

இந்த ஆலயத்தில் தான் மன்னனாக இருந்து துறவியான பத்திரகிரியார், சிவ ஜோதியில் கலந்தார் என்று தல புராணம் எடுத்துரைக்கிறது. பட்டினத்து அடிகள் பேய்க் கரும்பினைப் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயர், அர்த்த நாரீசுவராக சிவனின் அருட்காட்சி கண்ட தலமும் இதுவே.

ஆலய அமைப்பு :

கிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.

தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.

வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார். எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

மூகாம்பிகை :

சுவாமிக்கு வலதுபுறம் தல நாயகியாக தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி நின்றருளும் ‘பெருநலமுலை அம்மை’ காட்சி தருகிறார். அவருக்கு பின்னே பிரகாரத்தில் இருக்கும் அன்பிற் பிரியாள் அம்மையும், அம்பாள் சன்னிதிக்கு அருகே மூகாம்பிகை அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது பெரும் சிறப்பு. கர்நாடகாவில் உள்ள கொல்லூருக்கு அடுத்தபடியாக மூகாம்பிகை இத்தலத்தில் பூஜிக்கப்படுகிறார். பக்கத்தில் மகாசக்கரமேரு உள்ளது.

அமைவிடம் :

கும்பகோணம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் கிழக்கில், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கிறது மத்தியார்ஜீனம் (அர்ஜீனம் – மருதமரம்) எனப்படும் திருவிடைமருதூர். ஆந்திர ஸ்ரீசைலம் – தலைமருது, நெல்லை திருப்புடை மருதூர் – கடைமருது. இவை இரண்டுக்கும் இடையே உள்ளதால் இந்தத்தலம் திருஇடைமருதூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவிடைமருதூர் என்றானதாக கூறுகிறார்கள்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1212146

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:29 am

நல்ல பகிர்வு ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக