புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திற்கே பாட்டி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:36 am

உலகத்திற்கே பாட்டி! RHd9l1nOQGSSDkDfR9Gu+E_1466146652

மாங்கனி திருவிழா !

நம் ஒவ்வொருவருக்கும் பாட்டி உண்டு; ஆனால், இந்த உலகத்திற்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவர் தான் காரைக்கால் அம்மையார். இந்த உலகிற்கு தந்தையான சிவபெருமான், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டதால், அவரது பிள்ளைகளான நம் எல்லாருக்கும் அவள் பாட்டியாகிறாள்.
இந்த பாட்டியின் வரலாறைக் கேளுங்கள்:

தும்புரு என்ற தேவலோக இசைக்கலைஞரின் மகள் சுமதி; மிகச் சிறந்த சிவபக்தையான இவளின் பக்தியை உலகமே அறிய வேண்டும் என்பதற்காக சிவன் ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒருநாள், சிவபூஜைக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சுமதி. அப்போது, அவளது வீட்டுக்கு வந்தார் துர்வாச முனிவர். அவரை கவனிக்கவில்லை, சுமதி.

'பெரியவர்களை வரவேற்க தெரியாதா...' என்று கோபித்த துர்வாசர், 'பூலோகத்தில் மானிட ஜென்மம் எடுப்பாய்...' என்று சபித்து விட்டார். இதனால், காரைவனம் என்று புராணப்பெயர் பெற்றிருந்த காரைக்காலில், தனதத்தன் - தர்மவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தாள், சுமதி. அவளுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர். பின், பரமதத்தன் என்ற வணிகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஒருநாள், கடையில் இருந்த பரமதத்தனுக்கு, வியாபாரி ஒருவர் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார். அதை பணியாள் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான், பரமதத்தன். அந்த நேரத்தில், அடியவர் வேடத்தில் அவள் வீட்டுக்கு வந்தார், சிவபெருமான். அவருக்கு உணவளித்த புனிதவதி, மாம்பழம் ஒன்றையும் அளித்தாள்.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த பரமதத்தனுக்கு மற்றொரு மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தாள். அது சுவையாக இருக்கவே, இன்னொன்றையும் கேட்டான்.

புனிதவதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிவனை வணங்கி மற்றொரு பழத்தை வரவழைத்தாள். அது, முன்பு கொடுத்த பழத்தை விட சுவையாக இருக்கவே, சந்தேகப்பட்ட பரமதத்தன் விளக்கம் கேட்டான். நடந்ததை புனிதவதி சொல்லவே, அதை நம்பாத பரமதத்தன், 'அப்படியென்றால் என் கண் முன் இன்னொரு மாம்பழத்தை வரவழை...' என்றான்.

புனிதவதியும் அவ்வாறே செய்ய, பரவசமடைந்த பரமதத்தன், அவளை தெய்வப்பிறவியாக கருதி, விலகி விட்டான். இன்னொரு பெண்ணை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு புனிதவதி என்று பெயரிட்டான்.

கணவன் பிரிந்து சென்றதால், தன்னை முதுமையாக்க வேண்டும் என்று சிவனிடம் கோரிக்கை வைத்தாள் புனிதவதி. அவ்வாறே சிவனும் அருள, அந்த உடலுடன் கைலாயம் புறப்பட்டாள். கைலாயம் புனிதமான இடம் என்பதால், காலால் நடக்காமல் தலையை ஊன்றி சென்றாள். அவளை சிவன், 'என் அம்மையே வருக...' என்று வரவேற்றார். சிவனுக்கே அம்மையான அந்த பக்தையை மக்கள், 'காரைக்கால் அம்மையார்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

காரைக்காலில் உள்ள அம்மையார் கோவிலில், ஆனி பவுர்ணமியன்று மாங்கனி விழா நடக்கும்.
அன்று இரவு பிச்சாண்டவர் வேடத்தில் எழுந்தருள்வார் சிவன். மக்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வழிபடுவர். அப்போது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இரண்டு தீப்பந்தம் ஏற்றப்படும். அம்மையாரின் பந்தம், சிவனின் பந்தத்துடன் ஐக்கியமாவது போல பாவனை செய்வர்.

இந்த நிகழ்வை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும். வீசப்படும் மாங்கனிகளை குழந்தை இல்லாத பெண்கள் முந்தானையில் பிடிப்பர். இதனால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கை இருந்தால், இறைவனையே மகனாகப் பெறலாம் என்பது அம்மையாரின் வாழ்க்கை சரித்திரம் நமக்கு உணர்த்தும் பாடம்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 11:37 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 11:45 pm

:வணக்கம்: :வணக்கம்: பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.



உலகத்திற்கே பாட்டி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலகத்திற்கே பாட்டி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலகத்திற்கே பாட்டி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 22, 2016 7:26 am

கோவில்களில்  நாயன்மார் சிலைகள் பார்த்து இருப்பீர்கள் .
63 நாயன்மார்கள் , நின்று கொண்டிருக்கும் நிலையில் ,
காரைக்கால் அம்மையார் மட்டும் உட்கார்ந்திருக்கும் நிலை
அவருக்கு சிறப்பு மரியாதை



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:16 am

பெண்களுக்கு எப்பவுமே மிகுந்த மரியாதை தருவது நம் வழக்கம் தானே ஐயா புன்னகை ...நல்ல பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 5:31 pm

krishnaamma wrote:பெண்களுக்கு எப்பவுமே மிகுந்த மரியாதை தருவது நம் வழக்கம் தானே ஐயா புன்னகை ...நல்ல பகிர்வு !
மேற்கோள் செய்த பதிவு: 1212244

ஆம் அம்மா . ஈகரையும் அதற்கு விதிவிலக்கல்ல !
ஈகரையில் மகளீர்களுக்கு தனி கவனிப்பு உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2016 9:35 pm

சமயங்கள் பற்றி அதிகம் தெரியாது. என் மனத்தில் பட்டதை சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
காரைக்கால் அம்மையார் சிலையை இருக்கும்படி வைத்திருப்பது பெண் என்பதால் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாயன்மார்களில் மூன்று பேர் பெண்கள்.அவர்களின் சிலைகளையும் இருக்க வைத்திருக்க வேண்டுமே,அப்படி இல்லையே!
அவர் காலத்தால் முந்தியவர் நாயன்மார் மூவருக்கும் முந்தையவர் என்பதால் அவருக்கு முதன்மை கொடுத்திருக்கலாம். அல்லது சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறதே,அதனாலாக இருக்கலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:08 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:பெண்களுக்கு எப்பவுமே மிகுந்த மரியாதை தருவது நம் வழக்கம் தானே ஐயா புன்னகை ...நல்ல பகிர்வு !
மேற்கோள் செய்த பதிவு: 1212244

ஆம் அம்மா . ஈகரையும் அதற்கு விதிவிலக்கல்ல !
ஈகரையில் மகளீர்களுக்கு தனி கவனிப்பு உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212363

நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:16 pm

மூர்த்தி wrote:சமயங்கள் பற்றி அதிகம் தெரியாது. என் மனத்தில் பட்டதை சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
காரைக்கால் அம்மையார் சிலையை இருக்கும்படி வைத்திருப்பது பெண் என்பதால் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாயன்மார்களில் மூன்று பேர் பெண்கள்.அவர்களின் சிலைகளையும் இருக்க வைத்திருக்க வேண்டுமே,அப்படி இல்லையே!
அவர் காலத்தால் முந்தியவர் நாயன்மார் மூவருக்கும் முந்தையவர் என்பதால் அவருக்கு முதன்மை கொடுத்திருக்கலாம். அல்லது சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறதே,அதனாலாக இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1212376

சிவபெருமானால் அம்மையே என்று அன்பாக அழைக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறதே,அதனாலாக இருக்கலாம்........மூர்த்தி, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........உங்கள் சந்தேகத்தை தானே கேட்டீர்கள், இதில் வருந்துவதற்கு எதுவும் இல்லை புன்னகை .....நாம் பதிலுக்காக காத்திருப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக