ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by ayyasamy ram Fri Jun 17, 2016 5:02 pm



அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கி துணை தாசில்தாருக்கு
6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

2006-ல் ஜாதி சான்றிதழ் வாங்க ரூ.100 லஞ்சம் வாங்கியதாக
ஜெயலட்சுமி மீது ஊழல் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இந்த விசாரனையில்,
துணை தாசில்தார் லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனது.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு
6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்புமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
-
----------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by ayyasamy ram Fri Jun 17, 2016 5:05 pm

-
இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் சாட்சிகள்
தெளிவான ஞாபகத்தோடுதான் சாட்சி சொன்னார்களா..?
-
ரூ 100 லஞ்சத்துக்கு ஆறு ஆண்டு சீறைத்தண்டனை
என்பது அதிகப்படியாக தோன்றுகிறது...
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 5:20 pm

பாவம் ! அவருக்கு ஒரு குமாரசாமி கிடைக்கவில்லை போலும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:09 am

ayyasamy ram wrote:-
இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் சாட்சிகள்
தெளிவான ஞாபகத்தோடுதான் சாட்சி சொன்னார்களா..?
-
ரூ 100 லஞ்சத்துக்கு ஆறு ஆண்டு சீறைத்தண்டனை
என்பது அதிகப்படியாக தோன்றுகிறது...
-

மேற்கோள் செய்த பதிவு: 1211471

டீ கடை இல் பன்னைத் திருடு பவனத்தானே நாம் துரத்தி துரத்தி பிடித்து அடிக்கிறோம் ?சோகம்சோகம்சோகம் ............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by சிவனாசான் Sun Jun 19, 2016 7:14 am

மேல் முறையீடுன்னு ஒன்று உள்ளதே ....வாதாடுநர் வருவார் அவரை பார்க்க வழி வகை ஆலோசனை கூறுவார் அவரின் ( வக்கீல்) தொழில் அதுதானே (பிழைப்பு).. ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சியர் சொல்லவில்லை > ஊலற்ற ஆட்சி நிர்வாகத்தை கொட்டு வருவேன் என்று சொல்லாத தால் இதெல்லாம்
நடந்தேறுகிறது. தலைக்குமேல் தகவல் மைஜைக்கு கீழ் லஞ்சம். இதுதாங்க >>>>>சட்டம் யாருக்கு துணை நிர்கிறது என்றால்>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by M.Jagadeesan Sun Jun 19, 2016 8:09 am

66 கோடிகளை ஏப்பம் விட்டவருக்கு அரியணை !

சில்லரையைப் பொறுக்கியவனுக்கு சிறை !

வாழ்க இந்திய நீதி ! வாழ்க இந்திய நீதிபதிகள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by krishnaamma Sun Jun 19, 2016 10:12 am

M.Jagadeesan wrote:66 கோடிகளை ஏப்பம் விட்டவருக்கு அரியணை !

சில்லரையைப் பொறுக்கியவனுக்கு சிறை !

வாழ்க இந்திய நீதி ! வாழ்க இந்திய நீதிபதிகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1211630

ஆமாம் ஐயா, மிகவும் வருத்தமாய் இருக்கு.........ஆனால் என்ன செய்ய ? சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by ayyasamy ram Sun Jun 19, 2016 5:59 pm

மேல்முறையீடு என்று ஒன்று இருப்பினும்
அதுவும் காலதாமதத்திற்குத்தான் வழி வகுக்கும்...
-
இது குறித்து நகைச்சுவை கதை ஒன்று உள்ளது...!
-
காட்டில் எருமைகளை பிடிக்க அரசு உத்தரவு போட்டதாம்...
-
எருமைகளோடு சேர்ந்து ஒரு பசுவும் ஓட ஆரம்பித்தது....
-
நீ ஏன் ஓடுகிறாய் என்று கேட்டதற்கு,
அவர்கள் என்னையும் பிடித்து விட்டால்,
நான் எருமை இல்லை, பசு என்று நிரூபணம் செய்வதற்கு
இருபது ஆண்டுகளாகி விடுமே....என்றதாம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்!

Post by பாலாஜி Mon Jun 20, 2016 4:51 pm

இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம்.

மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனைக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது. வழக்கு விசாரணையின் போது பதினெட்டு மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்திருந்தார் சஞ்சய் தத். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் எரவாடா சிறையில், 2013-ம் ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை அவர் பரோலில் வெளிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, அவர் கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்பாக, தண்டனைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் இருந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர், ' தன்னுடைய அதிகாரத்தின்கீழ் விடுவிப்பதாக' அறிவித்திருந்தார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிவாளன், மிகுந்த அதிர்ச்சியோடு சில விஷயங்களை தனது வழக்கறிஞர்களிடம் குறிப்பிட்டார். அவர் கூறும்போது, ' உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2015 டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ' குற்றவியல் பிரிவு 435(1) கீழ் வரும் எந்த வழக்கிலும் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது' எனக் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பில், ' பிரிவு 432(7)(A) பிரிவின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் தண்டனைக் குறைப்பு வழங்க மத்திய அரசால் மட்டுமே முடியும்' என வரையறை செய்துள்ளது. இதில், மத்திய அரசைக் கலந்தாலோசித்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டாரா? என்பது இந்த வழக்கின் மிகப் பெரிய கேள்வி. இதையொட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்ய இருக்கிறேன்' எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் எரவாடா சிறை நிர்வாகத்திடம் சில கேள்விளை முன்வைத்திருந்தார் பேரறிவாளன். அதில், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்; எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இதுதொடர்பாக, மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசைக் கலந்து ஆலோசித்ததா?; அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால் அது தொடர்பாக சான்றிளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.

தகவல்களைக் கேட்டு முப்பது நாட்களாகியும் எரவாடா சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 4-ம் தேதி மேல்முறையீடு செய்தார். அதற்குப் பதிலளித்த சிறை அதிகாரி, ' ஒரு மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது' என அலட்சியமாக பதில் கூறியிருந்தார். அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த பேரறிவாளன், கடந்த 2-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ' ஓர் அரசாங்கமோ, அரசு அதிகாரியோ தன்னுடைய அதிகார வரம்பைப் பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்கள். மூன்றாவது நபர் என்பன போன்ற காரணங்களைக் கூறி மறைக்க அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கவில்லை' என்ற நியதியை விளக்கியிருந்தார்.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள், ' வருகிற 28-ம் தேதி உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு' பதில் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து, சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதற்காக பேரறிவாளன் தரப்பின் பிரதிநிதி ஒருவர் எரவாடா சிறைக்குச் செல்ல இருக்கிறார்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர்.சிவகுமார், " சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணமும் மிக முக்கியமானது. பேரறிவாளன் வழக்கின் அடுத்தக்கட்ட சட்ட நகர்வுகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. மும்பையில் 257 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சஞ்சய் தத். அவரை விடுதலை செய்ததில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எங்களின் கேள்விகளுக்கு எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கப் போகும் விளக்கம் மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார் உறுதியாக.

' நீங்கள் கேட்கும் விவரங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்பதே தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது. இப்படியொரு பதிலை அளிக்கும் அதிகாரிகள், சஞ்சய் தத் விடுதலையில் உரிய விதிகளைப் பின்பற்றியிருப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.
நன்றி -விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:42 pm

நீதித் துறை சிலசமயம் பாமரனை வியக்க வைக்கிறது .
Bofors ஊழல் ,DA ஊழல் , மாட்டு தீவன ஊழல் , ஊழல் தொகைக்கு மேல் அதை விசாரிக்க செலவு செய்கிறோம் . 1 வருடத்தில் செய்கின்ற ஊழலை விசாரிக்க ஒரு மாமாங்கம் எடுத்துக் கொள்கிறோம் .
சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளால் ,அதை (interpret )விளக்கம் கூறும் வல்லுனர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை  Empty Re: ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum