புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 8 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 8 of 34 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 21 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:43 am

அறியாமல் செய்வது தப்பு , அறிந்தே செய்வது தவறு .
தப்பு செய்யாத மனிதன் உலகில் எவரும் இல்லை. தப்பை திருத்திக் கொள்பவன் மனிதனாகிறான். திருத்தாதவன் மக்களில் மாக்கள் ஆகிறான்.
தவறு செய்பவன் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளலாமா?
மனம், மொழி, மெய்களால் தவறாது நடப்பவன் மனிதனாகிறான்.

உள்ளத்தில் இருப்பது உண்மை.
வாய்வழி வருவது வாய்மை.
மெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

அதனால் குழந்தைகளுடனும் நிதானத்துடன் பேசுவதே சிறப்பு..


kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jun 20, 2016 12:00 pm

மிக அருமையான விளக்கம்! நன்றி

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 3:24 pm

படைப்யெடுப்புகளாலும், சமயத்தாக்கங்களாலும், மக்களின் பேச்சுவழக்கில் ஏற்படும் மாற்றங்களாலும் ஊர் பெயர்கள் மாறிவிடும்.

பூந்தமல்லி என்று சொல்கிறோம்-தவறு
பூந்தண்மலி – பூக்களின் குளிர்ச்சி நிறைந்திருக்கும் ஊர் என்பதே சரியான பழைய பெயராகும்.

பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூர் இரண்டு ஓடை என்பது ஈரோடை ஆயிற்று.

சில சமயங்களில் ஊர் பெயர்களால் பிரச்சனைகள் உருவாவதுண்டு.
ஆதார் அட்டை பெற சென்றவரின் பரிதவிப்பு இது .ஒரு ஊருக்கு மூன்று பெயர். அந்த ஊர் மேல்வில்வராயநல்லூர் . பழைய ரேஷன் கார்டுகளிலும் தமிழக அரசு பதிவேட்டிலும் மேல்வில்வராயநல்லூர் , மத்திய அரசின் பதிவேட்டில் வில்வாரணி, புதிய ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் எம்.வி.நல்லூர் தவிப்பு வருமா வராதா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 20, 2016 5:18 pm

ஈரோடு பெயர்க்காரணம் அறிந்துகொண்டேன் . மூர்த்தி அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:27 pm

நல்லத் தகவல் , நன்றி
ஈரோடை ,தற்போதைய " e " உலகில் e road என்று திரிபு அடையாதவரையில் ஓகே தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 20, 2016 6:24 pm

புணர்ச்சி விதிப்படி

இரு என்ற நிலைமொழி முன் உயிரெழுத்தில் தொடங்கும் வருமொழி வருமானால் இரு , ஈர் என்று மாறும் .

இரு + ஓடை = ஈரோடை
இரு + உடல் = ஈருடல்
இரு + ஐந்து = ஈரைந்து
இரு + இலை = ஈரிலை

இரட்டை இலை என்பது தவறான புணர்ச்சி .

இரட்டை மாட்டுவண்டி , இரட்டைப் புலவர்கள் , ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் .

மாட்டுவண்டி , புலவர்கள் , தாழ்ப்பாள் ஆகிய சொற்களுக்கு முன்பாக இரட்டை என்ற சொல் வருவதில் தவறில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 20, 2016 9:56 pm

பேச்சு வழக்கில் அண்ணைக்கு அன்னைக்கு,இண்ணைக்கு, இன்னைக்கு எது சரி ஐயா?



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 20, 2016 11:52 pm

அம்மா மன்னித்தால் ஈரிலை சரியென்பேன். இல்லையேல் இரட்டை இலை என்பேன்.

கூர் உளிக் குயின்ற ஈரிலை இடை இடுபு- இது நக்கீரன் சொன்னது.

கோர்வை தவறு கோவை என்பதே சரி. மாலை கோர்த்தார் கைகோர்த்து ,கோர்வையாகப் பேசினார் என்பவை தவறாகும். ர் -தவிர்த்து கோவை என்பதையே பயன்படுத்த வேண்டும்.

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, எடுக்கவோ?
கோக்கவே? என்றான்; (ர்- தவிர்த்து எழுத வேண்டும்)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 9:11 am

சசி wrote:பேச்சு வழக்கில் அண்ணைக்கு அன்னைக்கு,இண்ணைக்கு, இன்னைக்கு எது சரி ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1211819

அன்றைக்கு , இன்றைக்கு என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 21, 2016 9:25 am

மூர்த்தி wrote:அம்மா மன்னித்தால் ஈரிலை சரியென்பேன். இல்லையேல் இரட்டை இலை என்பேன்.

கூர் உளிக் குயின்ற ஈரிலை இடை இடுபு- இது நக்கீரன் சொன்னது.

கோர்வை தவறு கோவை என்பதே சரி. மாலை கோர்த்தார் கைகோர்த்து ,கோர்வையாகப் பேசினார் என்பவை தவறாகும். ர் -தவிர்த்து கோவை என்பதையே பயன்படுத்த வேண்டும்.

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, எடுக்கவோ?
கோக்கவே? என்றான்; (ர்- தவிர்த்து எழுத வேண்டும்)
மேற்கோள் செய்த பதிவு: 1211823

அம்மா யாருமை மன்னிக்க !
...அவரென்ன தமிழ்ப் புலவரா ?
அம்மா படித்தது கான்வென்டில்
...ஆங்கில அறிவே மிகுந்திருக்கும் !

அன்னைத் தமிழுக்குக் கூடலிலே
...அழகுச் சிலையை வைத்தாரா ?
சொன்ன சொல்லைக் காத்தாரா ?
...சொல்லுவ தெல்லாம் பொய்யன்றோ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 8 of 34 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 21 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக