Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters
Page 6 of 34
Page 6 of 34 • 1 ... 5, 6, 7 ... 20 ... 34
நம் தமிழை முறையாக அறிவோமே !
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1211720Hari Prasath wrote:இந்த திரியின் தலைப்பை ஒரு பொதுவான தலைப்பாக மாற்றலாமே ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1211734M.Jagadeesan wrote:ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ! என்ன தலைப்பு வைப்பது ? நீங்களே சொல்லுங்களேன் !
நல்ல முயற்சி !
நம் தமிழை சரியாக அறிவோமே !
தலைப்பு எப்பிடி உள்ளது ?
சரி என்றால் மாற்றிவிடுவோம் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
நன்றி ஐயா! அப்படியே மாற்றிவிடுங்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
தலைப்பை மாற்றியமைக்கு மிக்க நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
பிரகாரம் , பிராகாரம் - எது சரி ?
இரண்டுமே சரிதான் .
பிரகாரம் = விதம் , ஒப்பு என்று பொருள்படும் .
பிராகாரம் = கோயில் சுற்று பகுதி .
கோயில் பிரகாரம் என்று சொல்லாமல் கோயில் பிராகாரம் என்று சொல்லவேண்டும் .
இரண்டுமே சரிதான் .
பிரகாரம் = விதம் , ஒப்பு என்று பொருள்படும் .
பிராகாரம் = கோயில் சுற்று பகுதி .
கோயில் பிரகாரம் என்று சொல்லாமல் கோயில் பிராகாரம் என்று சொல்லவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கொப்பளம் , கொப்புளம் - எது சரி ?
கொப்புளம் = குமிழி , பரு
கொப்பளம் என்ற சொல் கிடையாது.
அளம் என்றால் உப்பளம் என்று பொருள்படும் .
எனவே கொப்புளம் என்பதே சரி .
கொப்புளம் = குமிழி , பரு
கொப்பளம் என்ற சொல் கிடையாது.
அளம் என்றால் உப்பளம் என்று பொருள்படும் .
எனவே கொப்புளம் என்பதே சரி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1211748M.Jagadeesan wrote:பிரகாரம் , பிராகாரம் - எது சரி ?
இரண்டுமே சரிதான் .
பிரகாரம் = விதம் , ஒப்பு என்று பொருள்படும் .
பிராகாரம் = கோயில் சுற்று பகுதி .
கோயில் பிரகாரம் என்று சொல்லாமல் கோயில் பிராகாரம் என்று சொல்லவேண்டும் .
நீங்கள் கூறிய பிரகாரமே , பிராகாரம் என கோயில் சுற்றுப் பகுதியை கூறுவோம் .நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மூர்த்தி wrote:போதல்;செல்லுதல் இரண்டிற்கும் சிறிய வேறுபாடுண்டு.
போவது என்பது மீண்டும் வராமல் போகிறான்.வற்புறுத்தலுடனும் சந்தேகத்துடன் நிகழ்வது? இன்று போய் நாளை வாராய்,என் கண் முன் நிற்காதே போய்த் தொலை
செல்லுதல்-செல்கிறான் அப்படியல்ல. திரும்பி வருவான்.
காலம்பெற- காலம் பெற - மருவிய சொல் அல்ல. நல்ல தமிழ் சொல்லாகும்.காலையை பெறுதல் என்பது குறிப்புவினைஎச்சமாக வந்து காலம்பெற ஆயிற்று.பெறுதல் என்பது பெற்றுக் கொள்ளுதல் எனப் பொருள்படும். குழந்தை பெறுதல்,பரிசு பெறுதல்.காலம் என்பதற்கு காலை,பருவம் நேரம் எனப் பொருள்படுகிறது. ஏன் காலம் பெறுதல் என்றும் அது காலம்பெற என்றும் ஆயிற்று ?
இன்று சர்வதேச முறையில் நள்ளிரவில் இருந்து நள்ளிரவு வரை ஒரு நாளென கணக்கிடுகிறார்கள்.ஆனால் முன்பு உலகில் மூன்று முறையாக நாளை கணக்கிட்டார்கள். மேற்கத்தியர்கள் நள்ளிரவில் இருந்து மறுநாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகவும்,இஸ்லாமியர்கள் மாலை ஆறில் இருந்து மறுநாள் மாலை ஆறு வரை ( நோன்பு காலத்தைக் கவனிக்கலாம்-பிறையை வைத்து) ஆகவும், தமிழர்கள் காலையில் இருந்து மறுநாள் காலை வரை ஒரு நாளாகவும் நாளை கணக்கிட்டார்கள்.
இப்படி காலையை அதிகாலை பிறந்து வருவதால் காலையை பெறுதல் -காலம் பெறுதல் என்றும் -அது காலம்பெற என்ற குறிப்புவினை எச்சமாகியது.
அருமையான விளக்கம் மூர்த்தி !..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
M.Jagadeesan wrote:சிறப்புப் பேருந்துகள் , தனிப் பேருந்துகள் - எது சரி ?
மகாமகத்தையொட்டி சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் விடப்படும் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம்.
இது சரியா ?
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு வழக்கமாகச் செல்லும் பேருந்துகளைவிட , அதிக எண்ணிக்கையில் விடப்படும் பேருந்துகளை " சிறப்புப் பேருந்துகள் " என்று சொல்கிறார்கள் .
ஆனால் உண்மையில் " சிறப்புப் பேருந்துகள் " என்றால் என்ன ? சாதாரணப் பேருந்துகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பேருந்துகளையே , " சிறப்புப் பேருந்துகள் " என்று அழைக்கவேண்டும் .
ஆகவே
மகாமகத்தையொட்டி கும்பகோணத்திற்குத் " தனிப் பேருந்துகள் " விடப்படும் என்பதே சரி .
சாதா தோசையைக் காட்டிலும் அதிக சுவையாக இருப்பதையே நாம் Special Dosai என்கிறோம் .
எண்ணிக்கை இல் அதிகம் ஆவதால், கூடுதல் பேருந்துகள் என்று சொல்லலாமா ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கூடுதல் பேருந்துகள் என்று சொல்வதில் தவறில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
பிரகாரம்,பிராகாரம் இரண்டுமே தமிழ் சொல் அல்ல. திருச்சுற்று - திரு நடை -திரு நடைமாளிகை என்பது தமிழ்.
Guest- Guest
Page 6 of 34 • 1 ... 5, 6, 7 ... 20 ... 34
Similar topics
» தமிழை வளர்ப்பது யார்?
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
Page 6 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|