ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters

Page 22 of 34 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28 ... 34  Next

Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 8:38 am

'அருந்துதல் , பருகுதல் , குடித்தல் ஆகிய சொற்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை .

அருந்துதல் - உண்டல் , கவ்வி விழுங்குதல்

பருகுதல் - குடித்தல் , உண்ணுதல்

குடித்தல் -  பருகுதல்

இந்தத் திரியில் இதுபற்றி ஏற்கனவே விவாதித்துள்ளோம் .

பால் சாப்பிட்டான் என்று சொல்லாமல் பால் குடித்தான் என்றே சொல்லவேண்டும் .

அசோக  வனத்தில் இருந்த சீதை இராமனை எண்ணி வருந்துகிறாள் . " மெல்லிய வெற்றிலையை இராமன் அருந்துவானே ! இனிமேல் அதை யார் கொடுக்க அருந்துவானோ ? " என்று எண்ணி வருந்துகிறாளாம் . இதைக் கம்பன் சொல்லுவதைக் கவனியுங்கள் .

அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் ?' என்று
                                அழுங்கும்;
'விருந்து கண்டபோது என்  உறுமோ ?' என்று
                                விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு ?'
                             என்று மயங்கும் -
இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு
                             எழாதாள்.

" அடகு " என்றால் வெற்றிலை .

அனுபவித்துக் குடித்தலை " பருகுதல் " என்று சொல்லலாம் .

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது .

என்ற குறளை நோக்குக .

" ஆற்று நீரை அள்ளி அள்ளிப் பருகினான் ." என்று சொல்கிறோம் .

" அவள் அழகைக் கண்களால் பருகினான் . " என்றும் சொல்கிறோம்


வள்ளுவர்  " உண்ணற்க கள்ளை " என்றே குறிப்பிடுகிறார் . ஆனால் இக்காலத்தில் " குடிகாரன் " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம் .

" அவன் குடித்திருக்கிறான் " என்று சொல்கிறோம் .


ஆகவே இடம் நோக்கி இச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதே நமது கருத்து .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by கார்த்திக் செயராம் Sat Jul 02, 2016 8:49 am

நன்றி அய்யா... பூஞ்சியம் என்ற சொல் வடமொழி சொல் என்று கூறு கின்றனர.

சுழியம் என்பது தமிழ் சொல்லா??
ஹிந்தியில் சூன்ய என்று கூறுகிறார் கள்??

ஆனால் மலேசிய வாழ் தமிழர்கள் பூஞ்சியத்தை "கோசம்" என்று அழைக்கிறார்கள் "கோசம்" சரியான தமிழ் சொல்லா???


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 10:25 am

பூஜ்ஜியம் என்பது வடமொழிச் சொல்லாகும்.

சிறப்பு " ழ " வந்திருப்பதால் " சுழியம் " தமிழ்ச் சொல்லே .

" சூன்யம் " என்ற சொல்லுக்கு " வெற்றிடம் " என்ற பொருளும் , உண்டு .

கோசம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். கோசம் என்றால் உறை/கூடு, புதையல் என்று பொருள்.

0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என்றும் , அதை அரேபியர்கள் கற்று , அவர்கள்மூலமாக உலகம் முழுமைக்கும் பரவியது என்றும் , அதனால் இவ்வெண்கள் " அராபிய எண்கள் " என்று அழைக்கப்படுகின்றன என்பார் கணித அறிஞர்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Sat Jul 02, 2016 12:23 pm

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 3838410834 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 12:51 pm

நன்றி கிருஷ்ணம்மா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by கார்த்திக் செயராம் Sat Jul 02, 2016 12:58 pm

வைப்பகம்/ஈடகம் விளக்கம் வேண்டும் அய்யா

வைப்பகம் என்றால் வங்கி என்றுதானே பொருள் ..???


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Sat Jul 02, 2016 2:40 pm

வைப்பகம் என்றால் வங்கிதான்.

அய்யன் வள்ளுவர் " வைப்புழி " என்பார் . புழி என்றால் இடம் .

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி .

பொருள் :
========

ஏழைகளின் பசியை நீக்குக . அவ்வாறு நீக்குதலே ஒருவன் தன் பொருளைப் பாதுகாப்பாக சேர்த்து வைக்கத்தக்க இடமாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Mon Jul 04, 2016 8:52 am

மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் - எது சரி ?

மகரத்தை இறுதியில் கொண்ட சொல்லின் முன்பாக வேற்றுமை உருபு வந்தால் " அத்துச் " சாரியை பெற்றுவரும் .

மரத்தை வெட்டினான் என்று வரும் .

"வாழ்க வளமுடன் "என்று எழுதுவதைவிட "வாழ்க வளத்துடன் " என்று எழுதுவது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by கார்த்திக் செயராம் Mon Jul 04, 2016 9:32 am

சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Mon Jul 04, 2016 9:52 am

கார்த்திக் செயராம் wrote:சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1213994

ஜன்னல் என்பது போர்த்துக்கீசிய சொல்லாகும் .

சாளரம் ,பலகணி ,காலதர் ஆகிய சொற்கள் ஜன்னலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 22 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 34 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28 ... 34  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum