புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 21 of 34 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 17 Jun 2016 - 10:23

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 1 Jul 2016 - 17:53

M.Jagadeesan wrote:
விமந்தனி wrote:உவமானம் - உவமேயம்
உபமானம் - உபமேயம்
- இவற்றில் எது சரி...?
இரண்டுமே சரிதான் .
நன்றி ஐயா.




நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 1 Jul 2016 - 19:28

விளக்கங்கள் ஆங்கிலத்தில் , ஆர்வம் காரணமாக , அதிகம் தென்படுகின்றன.
நானும் ஒரு காரணம் .
குறைத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 1 Jul 2016 - 19:44

கார்த்திக் செயராம் wrote:தீயணைப்பு நிலையம்/தீ அவிப்பு நிலையம் எது சரியான பெயர்?

அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
மேற்கோள் செய்த பதிவு: 1213596

அவி என்ற சொல்லுக்கு சோறு , தேவருணவு , வேள்விப்பொருள் , நெய் , ஆடு என்று பல பொருள் உண்டு .

அவிதல் என்ற சொல்லுக்கு பாகமாதல் , புழுங்குதல் , குறைதல் ,ஓய்தல் ,ஒடுங்குதல் ,அழிதல் , அணைந்துபோதல் என்று பல பொருள் உண்டு .

அவித்தல் என்ற சொல்லுக்கு அடித்தல் , மாற்றுதல் , வேகவைத்தல் என்று பல பொருள் உண்டு .

அவியல் என்றால் வேகவைத்த கறி , புழுக்கம் என்றும் பொருள் உண்டு

அணைதல் என்றால் சேர்தல் ,புணர்தல் ,அவிதல் என்று பொருள் உண்டு .

அவி என்ற சொல் பரந்த பொருளை உடையது . ஆதலால் , தீ அவிப்பு நிலையம் என்பதைவிட

தீ யணைப்பு நிலையம் என்று அழைப்பதே பொருத்தமாகும் என்பது என் கருத்து .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 1 Jul 2016 - 19:47

T.N.Balasubramanian wrote: விளக்கங்கள் ஆங்கிலத்தில் , ஆர்வம் காரணமாக , அதிகம் தென்படுகின்றன.
நானும் ஒரு காரணம் .
குறைத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213677

அப்படியே ஆகட்டும் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 1 Jul 2016 - 20:23

M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:தீயணைப்பு நிலையம்/தீ அவிப்பு நிலையம் எது சரியான பெயர்?

அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
மேற்கோள் செய்த பதிவு: 1213596

அவி என்ற சொல்லுக்கு சோறு , தேவருணவு , வேள்விப்பொருள் , நெய் , ஆடு என்று பல பொருள் உண்டு .

அவிதல் என்ற சொல்லுக்கு பாகமாதல் , புழுங்குதல் , குறைதல் ,ஓய்தல் ,ஒடுங்குதல் ,அழிதல் , அணைந்துபோதல் என்று பல பொருள் உண்டு .

அவித்தல் என்ற சொல்லுக்கு அடித்தல் , மாற்றுதல் , வேகவைத்தல் என்று பல பொருள் உண்டு .

அவியல் என்றால் வேகவைத்த கறி , புழுக்கம் என்றும் பொருள் உண்டு

அணைதல் என்றால் சேர்தல் ,புணர்தல் ,அவிதல் என்று பொருள் உண்டு .

அவி என்ற சொல் பரந்த பொருளை உடையது . ஆதலால் , தீ அவிப்பு நிலையம் என்பதைவிட

தீ யணைப்பு நிலையம் என்று அழைப்பதே பொருத்தமாகும் என்பது என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213681

நல்ல விளக்கம் , நன்றி ஐயா.............உங்களிடமிருந்து நிறைய தெரிந்து கொள்கிறேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 1 Jul 2016 - 22:53

காற்பந்தா அல்லது கால் பந்தா என்ற  பதிவில் இருந்து
நம் தமிழையை   முறையாக அறிவோம் என  ,தலைப்பு மாற்றப்பட்டு
இப்பதிவு பெறும் பின்னூட்டங்கள் , பகிர்ந்து கொள்ளும் அரிய பல செய்திகள்,
ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் உறவுகள் ,
மனதிற்கு மிக்க சந்தோஷத்தை கொடுக்கிறது .
எல்லோருக்கும் நன்றி , ஆர்வத்துடன் கலந்து மென்மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள் .
Jagadeesan ,மூர்த்தி அவர்களுக்கு சிறப்பு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri 1 Jul 2016 - 23:24

எனது சிறிய தந்தை ஒரு தமிழ் ஆர்வலர் எப்போதும் பைந்தமிழில் உரையாடுவார்..அவரிடம் நேற்று உரையாடும் போது தினகரன் நாளிதழை தின கதிர் என்றும் .கிருத்திகை தினத்தை திரு ஆடல் தினம் என்றும் திருமணம் நிகழ்வை திருபூட்டு என்றும் குறிப்பிட்டார்..இது சரியான தமிழ் சொல் லா??



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 2 Jul 2016 - 1:23

கார்த்திக் செயராம் wrote:எனது சிறிய தந்தை ஒரு தமிழ் ஆர்வலர் எப்போதும் பைந்தமிழில் உரையாடுவார்..அவரிடம் நேற்று உரையாடும் போது தினகரன் நாளிதழை தின கதிர் என்றும் .கிருத்திகை தினத்தை திரு ஆடல் தினம் என்றும் திருமணம் நிகழ்வை திருபூட்டு என்றும் குறிப்பிட்டார்..இது சரியான தமிழ் சொல் லா??
மேற்கோள் செய்த பதிவு: 1213726

கிருத்திகைக்கு "ஆரல் நாண்மீன்" என்று தமிழில் பெயர்.
திருமணம் தூய தமிழ்ச்சொல்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 2 Jul 2016 - 8:03

சூரியனுக்குப் பல பெயர்கள் உண்டு . தினகரன் , ஞாயிறு , பகலவன் , கதிரவன் , கதிரோன் என்று .
தினகரன் என்றாலும் தினகதிர் என்றாலும் கதிரவனைத்தான் குறிக்கும் .

கிருத்திகை தினத்தை திரு ஆடல் தினம் என்பது புதிய விளக்கமாக உள்ளது . 27 நட்சத்திரங்களில் மூன்றாவதாக வருவது . சாமி ஐயா " ஆரல் நாண்மீன் " என்று கூறியுள்ளார். வேறு விளக்கம் தெரியவில்லை .

" பூட்டு " என்றால் கட்டுதல் என்று ஒரு பொருள் . " வண்டியில் காளையைப் பூட்டு " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் . திருப்பூட்டு என்ற சொல்லுக்குத் " தாலி " என்ற பொருளும் உண்டு . இந்த " தாலி " என்ற சொல் மிகவும் பிற்பட்டது . சங்க இலக்கியங்களில் இல்லை . திருமணத்தை "திருப்பூட்டு " என்று அழைப்பதில் தவறில்லை . ஆனால் ஐயா அவர்கள் கூறியதுபோல " திருமணம் " என்ற சொல்லே தூய தமிழ்ச் சொல்தான் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat 2 Jul 2016 - 8:13

அய்யா..
அருந்துவது/பருகுவது/குடிப்பது பொருள் வேறுபாடு வேண்டும்??

தேநீர் அருந்தினேன்-பால் பருகினேன் இரண்டும் ஒன்றா???



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 21 of 34 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக