Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters
Page 20 of 34
Page 20 of 34 • 1 ... 11 ... 19, 20, 21 ... 27 ... 34
நம் தமிழை முறையாக அறிவோமே !
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1213448மூர்த்தி wrote:உலகமயமாக்கல் சினிமா போன்ற சில காரணங்களா,ல் முற்றாக தமிழ் இலக்கண மரபுப்படி எழுத முடிவதில்லை. ஆதார்,பான் இலக்கம் போன்றவற்றில் சிலர் சிரமப்பட்டதை பத்திரிகையில் படித்திருக்கிறேன். பெயர் அளவில் சில சிரமம் வரவே செய்கிறது. இரமணியன்,செகதீசன் எழுதலாம்,ஆனாலும் ஜெகதீசன்,ரமணியன் என்று இருக்கட்டுமே!
நல்ல தமிழ் சொற்களை கெட்ட சொல் ஆக்கி விட்ட நிலையில்,இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
கூந்தலுக்கு முடி என்ற சொல்லை எந்த இலக்கியத்திலும் பாவிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தலைமயிர்,கூந்தல் என்பதுதான் தமிழ் சொல் என்பதும்,முடி என்பது கூந்தலை அள்ளி தலைமேல் முடிந்தால் மட்டுமே முடி என்றும் காரணப் பெயராகி நிற்கிறது.
மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்,நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்.........
சினிமாவும் நடிகர்களும் சொல்வதே வேதவாக்காகி விட்டது.
முடி என்ற சொல்லுக்குப் முடிச்சு ,குடுமி ,உச்சி , கிரீடம் என்றுதான் பொருள் .
கவரிமான் என்று ஒரு மான் கிடையாது . அதன் ஒரு உரோமம் விழுந்தால் இறந்துவிடும் என்பதெல்லாம் உண்மையல்ல . கவரிமா என்றுதான் பரிமேலழகர் பதிப்பில் போடப்பட்டுள்ளது .
துருவ கரடி ,யாக் எருமை போன்ற மிருகங்கள் மிகுந்த மயிர்த் திரளுடன் பனிப் பிரதேசங்களில் வாழ்கின்றன. இதன் உரோமங்கள் போர்வைபோல இருந்து , இம்மிருகங்களைக் காப்பாற்றுகின்றன .
உரோமங்கள் இல்லையென்றால் , குளிர் தாங்காது இறந்துவிடும் . அதுபோல " கவரிமா " என்பது பனிப் பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு விலங்காக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
தீயணைப்பு நிலையம்/தீ அவிப்பு நிலையம் எது சரியான பெயர்?
அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
"எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா" ஏற்புடையவைதாமா என்பதே சரி
"உருபு தொகை" த் காணோம்
"தொகையாகும் " தொகை என்றல் போதும்; "ஆகும்" வேண்டாம்.ஆங்கிலத்தில் இல்லாத பெயர்ப் பயனிலை தமிழில் உண்டு.
'உடன்தொக்கத் தொகையாகும்.' இதுவுமது.
இக்கட்டுரையில் இன்னும் வேண்டா மரபு மீறல் உள.
--- is என்பது சில இடங்களில் stative verb; "அவன் தமபி கந்தன் ஆவான்" என்றால் இப்போது அவன் நந்தனா? அவன் கணியன் என்பது தமிழ்; He is Kaniyan ஆங்கிலம். is என்ன செய்கிறது?
தமிழை விட்டுவிடுங்கள்;அது நன்றாகவே இருக்கிறது.
Something is better than nothing;nothing is better than nonsense.
தோன்றில் புகழொடு.....
அஃதிலார் -----!!
"உருபு தொகை" த் காணோம்
"தொகையாகும் " தொகை என்றல் போதும்; "ஆகும்" வேண்டாம்.ஆங்கிலத்தில் இல்லாத பெயர்ப் பயனிலை தமிழில் உண்டு.
'உடன்தொக்கத் தொகையாகும்.' இதுவுமது.
இக்கட்டுரையில் இன்னும் வேண்டா மரபு மீறல் உள.
--- is என்பது சில இடங்களில் stative verb; "அவன் தமபி கந்தன் ஆவான்" என்றால் இப்போது அவன் நந்தனா? அவன் கணியன் என்பது தமிழ்; He is Kaniyan ஆங்கிலம். is என்ன செய்கிறது?
தமிழை விட்டுவிடுங்கள்;அது நன்றாகவே இருக்கிறது.
Something is better than nothing;nothing is better than nonsense.
தோன்றில் புகழொடு.....
அஃதிலார் -----!!
Rathinavelu- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 25/06/2016
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
எனக்குத் தெரிந்தவரையில் மேலே சொல்லப்பட்ட ஆங்கில உச்சரிப்பு சரியாகத் தெரியவில்லை.hour,honest ,historical என்பவை தனியாகவும் வாக்கியத்தில் வரும் போதும் மாறுவதில்லை. இரண்டு இடங்களிலும் historical இல் h ற்கு ஒலி உண்டு. ஹிஸ் என வருமே தவிர இஸ் என வாக்கியத்தில் உச்சரிப்பதும் தவறாகும்.. hour,honest என்பவற்றில் h என்ற எழுத்திற்கு ஒலி இல்லாது அமைதியாக இருக்கும்.
இதற்குக் காரணம் இப்படியான சில சொற்கள் பிரான்ஸ் லத்தீனிய மொழிச் சொற்களில் இருந்து வந்ததாகும். ஆங்கில சொற்கள் பல, சேர்மானிய குடும்பச் சொற்களில் இருந்தும் லத்தீன்,பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய மொழிகளில் இருந்தும் வந்தவையாகும். இதே போல் know,knee,knock ,knight போன்றவற்றில் -K – என்ற எழுத்திற்கு சொற்கள்,வாக்கியம் இரண்டிலும் ஒலி இல்லை.
சில ஆங்கிலச் சொற்களுக்கு இரு ஒலி உண்டு, the, live, progress, read போன்றவை.
இதற்குக் காரணம் இப்படியான சில சொற்கள் பிரான்ஸ் லத்தீனிய மொழிச் சொற்களில் இருந்து வந்ததாகும். ஆங்கில சொற்கள் பல, சேர்மானிய குடும்பச் சொற்களில் இருந்தும் லத்தீன்,பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய மொழிகளில் இருந்தும் வந்தவையாகும். இதே போல் know,knee,knock ,knight போன்றவற்றில் -K – என்ற எழுத்திற்கு சொற்கள்,வாக்கியம் இரண்டிலும் ஒலி இல்லை.
சில ஆங்கிலச் சொற்களுக்கு இரு ஒலி உண்டு, the, live, progress, read போன்றவை.
Guest- Guest
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கவரிமா -Yak- கவரி-உரோமம்+மா-விலங்கு, இது மான் இனமல்ல. வள்ளுவன் கவரிமா - அன்னார் எனக் கூறியது கவரிமான் என மாறி இருக்கிறது. அந்த விலங்கின் உடலில் உள்ள மயிர் நீங்கினால் கவரிமா குளிரினால் இறந்து விடும் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும். கவரிமா உவமையாக கூறப்பட்டது.மனிதன் உட்பட எல்லா உயிரினங்களின் மயிரும் தினமும் 50-100 வரை உதிரும். அதனால் ஒரு மயிர் என்று பொருள் கொள்ளாது உடலில் உள்ள மொத்தமும் உதிர்ந்து விட்டால் குளிரினால் இறந்து விடும் எனக் கொள்ளலாம்.
குளிர் தாங்காது கவரிமா இறக்கும் என்பது உண்மையே.ஆனால் இந்தக் காலத்துக் குளிரல்ல. வள்ளுவன் காலத்து குளிர். இன்று துருவங்களே பனி உருக ஆரம்பித்து விட்டன.
மயிர்தான் கவரிமாவிற்கு கூற்றம் என்கிறது சிலப்பதிகாரம்.
குளிர் தாங்காது கவரிமா இறக்கும் என்பது உண்மையே.ஆனால் இந்தக் காலத்துக் குளிரல்ல. வள்ளுவன் காலத்து குளிர். இன்று துருவங்களே பனி உருக ஆரம்பித்து விட்டன.
மயிர்தான் கவரிமாவிற்கு கூற்றம் என்கிறது சிலப்பதிகாரம்.
Guest- Guest
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கார்த்திக் செயராம் wrote:தீயணைப்பு நிலையம்/தீ அவிப்பு நிலையம் எது சரியான பெயர்?
அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
என்னவோ போங்க நமக்கு தெரியல கார்த்திக்.
ஆனால் தீயை அணைப்பது நீர் - கட்டித் தழுவி அணைத்து/அனைத்துவிடுகிறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
அணை-அணைத்தல் - தழுவுதல்,அவித்தல்,பாலம்,(விளக்கு) அணைத்தல்-அவித்தல் எனவும் பொருள் படுவதால், தீயணைப்பு சரியானதே, என்பது எனக்குத் தெரிந்தவரை.அவித்தல் என்றாலும் அதே பொருள்தான்.
Guest- Guest
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1213619யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:தீயணைப்பு நிலையம்/தீ அவிப்பு நிலையம் எது சரியான பெயர்?
அணைத்தல் என்றால் கட்டித்தழுவுதல் என்றல்லவா பொருள்??
என்னவோ போங்க நமக்கு தெரியல கார்த்திக்.
ஆனால் தீயை அணைப்பது நீர் - கட்டித் தழுவி அணைத்து/அனைத்துவிடுகிறது
இந்த குசும்புதானே உங்க கிட்ட பிடிச்சது...அது எப்படி பாக்யராஜ் மாதிரி டையம் பத்து அடிக்கிரீங்க,???
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1213615மூர்த்தி wrote:எனக்குத் தெரிந்தவரையில் மேலே சொல்லப்பட்ட ஆங்கில உச்சரிப்பு சரியாகத் தெரியவில்லை.hour,honest ,historical என்பவை தனியாகவும் வாக்கியத்தில் வரும் போதும் மாறுவதில்லை. இரண்டு இடங்களிலும் historical இல் h ற்கு ஒலி உண்டு. ஹிஸ் என வருமே தவிர இஸ் என வாக்கியத்தில் உச்சரிப்பதும் தவறாகும்.. hour,honest என்பவற்றில் h என்ற எழுத்திற்கு ஒலி இல்லாது அமைதியாக இருக்கும்.
இதற்குக் காரணம் இப்படியான சில சொற்கள் பிரான்ஸ் லத்தீனிய மொழிச் சொற்களில் இருந்து வந்ததாகும். ஆங்கில சொற்கள் பல, சேர்மானிய குடும்பச் சொற்களில் இருந்தும் லத்தீன்,பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய மொழிகளில் இருந்தும் வந்தவையாகும். இதே போல் know,knee,knock ,knight போன்றவற்றில் -K – என்ற எழுத்திற்கு சொற்கள்,வாக்கியம் இரண்டிலும் ஒலி இல்லை.
சில ஆங்கிலச் சொற்களுக்கு இரு ஒலி உண்டு, the, live, progress, read போன்றவை.
Though a noun is beginning with a consonant letter but with a vowel sound , We place the article " an " before it .
என்பது விதி .
அதாவது உயிர்மெய் எழுத்தில் தொடங்கினாலும் , உயிர் எழுத்து ஒலி இருக்குமானால் " an " இடுக.
an hour , an honest man , an heir , an historical novel இங்கெல்லாம் முதல் எழுத்தை உச்சரிக்காமல் இரண்டாவது எழுத்தையே உச்சரிக்கவேண்டும் .
அதாவது ஆர் , ஆனஸ்ட் மேன் , ஏர் , இஸ்டாரிக்கல் நாவல் என்று உச்சரிக்கவும் .
ஆதாரம் :LIFCO 'S Grammar Refresher
Last edited by M.Jagadeesan on Fri Jul 01, 2016 4:41 pm; edited 3 times in total
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
அருமையான விளக்கம். சந்தேகம் தீர்ந்தது. நன்றி.மூர்த்தி wrote:ஒரு புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள்-உவமேயம், அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள் -உவமானம் (உபமானம்- ஒப்புமை, உபமேயம் -விளக்கப் படும் பொருள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகர முதல எழுத்தெல்லாம் -உவமானம்,
ஆதி பகவன் முதற்றே உலகு - உவமேயம்
நானும் இதனை அனுமானித்தேன். உறுதிபடுத்தியதற்கு மீண்டும் நன்றி.சம்ஸ்கிருத இலக்கியங்களில் உபமானம் உபமேயம் என பாவிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.
தமிழில் உவமானம்-உவமேயம் ,அதனால் இரண்டுமே சரியானவை எனக் கருத முடியும் என்பது என் கருத்தாகும். சரியா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 20 of 34 • 1 ... 11 ... 19, 20, 21 ... 27 ... 34
Similar topics
» தமிழை வளர்ப்பது யார்?
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
Page 20 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|