புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 14 of 34 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 24, 2016 2:24 am

அப்படிச் சொல்லவில்லை ஐயா. பித்தலாட்டம் அதாவது அறிவற்று மாற்றிச் செய்யும் என்ற பொருளுடன் பித்தர்-பித்தன்-பித்தல் என்ற சொற்கள் சங்க நூல்களில் பாவிக்கப்பட்டுள்ளன.அகம்,குறுந்தொகை,நாலடியார் போன்ற நூல்களிலும் காணலாம்.

சிவனை பித்தா-பித்தா பிறைசூடி- என்றுதான் பாடினாரே தவிர பித்தலாட்டக்காரன் என்று சொல்லவில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 24, 2016 2:29 am

பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 6:31 am

பித்தலாட்டம் என்ற சொல்லுக்கு கூகுளில் தேடியபோது கிடைத்த விளக்கத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .


Deception, fraud, as in passing brass for gold

Tamil-lexicon
ஒன்றை மற்றொன்றாகக் காட்டி வஞ்சிக்கை



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 6:48 am

கண்றாவியா ? கண்ணராவியா ? - எது சரி ?


பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது "கண்" என்பது. இது தெளிவு.

அடுத்து வருவது அராவி. இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.

அராவு ‍ ஆங்கிலத்தில் ஃபைலிங் (filing) என்பர். அரத்தினால் தேய்த்தல்.


கண்ணராவி எனின் கண்ணை அரம்போட்டுத் தேய்த்தல் போன்ற துன்பத்தினைத் தரும் காட்சி என்று பொருள்.

கண்ணை வருத்தும் காட்சி.

கண்ணராவி > கண்றாவி.

எனவே கண்ணராவி என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 9:00 am

திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?

திருக்கடவூர் என்பதே சரி .



"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழு பிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 24, 2016 2:40 pm

M.Jagadeesan wrote:திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?

திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழு பிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
மேற்கோள் செய்த பதிவு: 1212412



இதேபாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் குரலில் கேட்டு இன்புறுங்கள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri Jun 24, 2016 3:57 pm

யினியவன் wrote:பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1212405
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 3838410834
நன்றாக "மாற்றி யோசிக்கிறீர்கள்"!

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri Jun 24, 2016 4:05 pm

பித்தலாட்டம்

2005தில் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - A Comprehensive Etymological Dictionary of the Tamil Language” இல் இருந்து.

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 14 Piththalaatam

அதில் குறிப்பிடப்படும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் இருந்து.

பித்தலாட்டம் pittal-āṭṭam
n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.]
Deception, fraud, as in passing brass for gold;
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை.

(இது உறுதியாகக் கூறவில்லை. இருக்கலாம் (probably) என்றுதான் கூறுகிறது).

சமஸ்கிரததில் “பித்தல” என்றால் பித்தளை / பித்தமுள்ள என்றும், “ஹாடக” என்றால் பொன் என்றும் சமஸ்கிரத அகராதி கூறுகிறது.

Sanskrit word Transliteration Grammar English word

पित्तल pittala n. brass
पित्तल pittala adj. bilious
पित्तल pittala adj. secreting bile
पित्तला pittalA f. Water primrose  [ Ludwigia hexapetala - Bot. ]
पित्तल pittala n. Himalayan birch  [ Bhojpatra, Betula - Bot. ]
पित्तल pittala n. gunmetal
पित्तल pittala n. bell-metal
पित्तल - भाण्ड pittala - bhANDa n. brassware

Sanskrit word Transliteration Grammar English word
हाटक        hATaka           n. gold

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 24, 2016 4:14 pm

யினியவன் wrote:பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1212405


சிவனைப் பித்தன் என்று சுந்தரர் தவிர மற்றவர்கள் அழைத்ததாக நினைவில்லை . அதுவும் தன்னிடம் வழக்காட வந்திருப்பவர் இறைவன் என்று அறியாமல்தான் " பித்தன் " என்று சொல்கிறார்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடலைப் பாருங்கள் .


மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்


ஆகவே இறைவனைப் பித்தலாட்டக்காரன் என்று அழைப்பது தவறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 9:00 am

முட்டாளா ? முற்றாளா ? - எது சரி ?

சிந்திக்காமல் செயல்படுபவனை " முட்டாள் " என்கிறோம் . இதை ஆங்கிலத்தில் Fool , Idiot , Stupid என்ற வார்த்தைகளால்  குறிப்பிடுகிறோம் .

ஆனால் " முட்டாள் " என்பது தமிழ் வார்த்தையா ? அகராதியில் தேடிப் பார்த்தபோது , அப்படி ஒரு வார்த்தை கிடைக்கவில்லை . நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் " முட்டாள் " என்ற வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை . திருக்குறளில் அறிவிலியைப் " பேதை " என்று குறிப்பிடுகிறார் .

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை .

" நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க !
நானொரு முட்டாளுங்க ! "

என்று நடிகர் சந்திரபாபு , ஒரு திரைப்படத்தில் பாடியிருப்பார் .

"முட்டாள் " என்ற வார்த்தை தமிழ்மொழியில் எப்படி வந்தது ?

இலக்கியச்சாரல் என்ற தமிழ் சஞ்சிகையில் இதற்கு விடை கிடைத்தது .

முற்றாள் என்ற சொல்லின் திரிபே " முட்டாள் " என்ற வார்த்தையாகும் .அதாவது முற்றாள் என்றால் முழுவதும் ஆளாக இருப்பவன் . எலும்பும் , தோலும் சேர்ந்த சதைப் பிண்டமாக இருப்பவன் ; ஆனால் மூளை மட்டும் இல்லாதவன்  என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள் .

இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே எனக்குப் பட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 14 of 34 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக