Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters
Page 14 of 34
Page 14 of 34 • 1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34
நம் தமிழை முறையாக அறிவோமே !
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
அப்படிச் சொல்லவில்லை ஐயா. பித்தலாட்டம் அதாவது அறிவற்று மாற்றிச் செய்யும் என்ற பொருளுடன் பித்தர்-பித்தன்-பித்தல் என்ற சொற்கள் சங்க நூல்களில் பாவிக்கப்பட்டுள்ளன.அகம்,குறுந்தொகை,நாலடியார் போன்ற நூல்களிலும் காணலாம்.
சிவனை பித்தா-பித்தா பிறைசூடி- என்றுதான் பாடினாரே தவிர பித்தலாட்டக்காரன் என்று சொல்லவில்லை.
சிவனை பித்தா-பித்தா பிறைசூடி- என்றுதான் பாடினாரே தவிர பித்தலாட்டக்காரன் என்று சொல்லவில்லை.
Guest- Guest
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
பித்தலாட்டம் என்ற சொல்லுக்கு கூகுளில் தேடியபோது கிடைத்த விளக்கத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
Deception, fraud, as in passing brass for gold
Tamil-lexicon
ஒன்றை மற்றொன்றாகக் காட்டி வஞ்சிக்கை
Deception, fraud, as in passing brass for gold
Tamil-lexicon
ஒன்றை மற்றொன்றாகக் காட்டி வஞ்சிக்கை
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கண்றாவியா ? கண்ணராவியா ? - எது சரி ?
பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது "கண்" என்பது. இது தெளிவு.
அடுத்து வருவது அராவி. இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.
அராவு ஆங்கிலத்தில் ஃபைலிங் (filing) என்பர். அரத்தினால் தேய்த்தல்.
கண்ணராவி எனின் கண்ணை அரம்போட்டுத் தேய்த்தல் போன்ற துன்பத்தினைத் தரும் காட்சி என்று பொருள்.
கண்ணை வருத்தும் காட்சி.
கண்ணராவி > கண்றாவி.
எனவே கண்ணராவி என்பதே சரி .
பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது "கண்" என்பது. இது தெளிவு.
அடுத்து வருவது அராவி. இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.
அராவு ஆங்கிலத்தில் ஃபைலிங் (filing) என்பர். அரத்தினால் தேய்த்தல்.
கண்ணராவி எனின் கண்ணை அரம்போட்டுத் தேய்த்தல் போன்ற துன்பத்தினைத் தரும் காட்சி என்று பொருள்.
கண்ணை வருத்தும் காட்சி.
கண்ணராவி > கண்றாவி.
எனவே கண்ணராவி என்பதே சரி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?
திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1212412M.Jagadeesan wrote:திருக்கடையூரா ? திருக்கடவூரா ? - எது சரி ?
திருக்கடவூர் என்பதே சரி .
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழு பிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே." (அபிராமியம்மைப்பதிகம்)
இதேபாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் குரலில் கேட்டு இன்புறுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1212405யினியவன் wrote:பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
நன்றாக "மாற்றி யோசிக்கிறீர்கள்"!
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
பித்தலாட்டம்
2005தில் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - A Comprehensive Etymological Dictionary of the Tamil Language” இல் இருந்து.
அதில் குறிப்பிடப்படும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் இருந்து.
பித்தலாட்டம் pittal-āṭṭam
n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.]
Deception, fraud, as in passing brass for gold;
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை.
(இது உறுதியாகக் கூறவில்லை. இருக்கலாம் (probably) என்றுதான் கூறுகிறது).
சமஸ்கிரததில் “பித்தல” என்றால் பித்தளை / பித்தமுள்ள என்றும், “ஹாடக” என்றால் பொன் என்றும் சமஸ்கிரத அகராதி கூறுகிறது.
Sanskrit word Transliteration Grammar English word
पित्तल pittala n. brass
पित्तल pittala adj. bilious
पित्तल pittala adj. secreting bile
पित्तला pittalA f. Water primrose [ Ludwigia hexapetala - Bot. ]
पित्तल pittala n. Himalayan birch [ Bhojpatra, Betula - Bot. ]
पित्तल pittala n. gunmetal
पित्तल pittala n. bell-metal
पित्तल - भाण्ड pittala - bhANDa n. brassware
Sanskrit word Transliteration Grammar English word
हाटक hATaka n. gold
2005தில் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - A Comprehensive Etymological Dictionary of the Tamil Language” இல் இருந்து.
அதில் குறிப்பிடப்படும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் இருந்து.
பித்தலாட்டம் pittal-āṭṭam
n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.]
Deception, fraud, as in passing brass for gold;
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை.
(இது உறுதியாகக் கூறவில்லை. இருக்கலாம் (probably) என்றுதான் கூறுகிறது).
சமஸ்கிரததில் “பித்தல” என்றால் பித்தளை / பித்தமுள்ள என்றும், “ஹாடக” என்றால் பொன் என்றும் சமஸ்கிரத அகராதி கூறுகிறது.
Sanskrit word Transliteration Grammar English word
पित्तल pittala n. brass
पित्तल pittala adj. bilious
पित्तल pittala adj. secreting bile
पित्तला pittalA f. Water primrose [ Ludwigia hexapetala - Bot. ]
पित्तल pittala n. Himalayan birch [ Bhojpatra, Betula - Bot. ]
पित्तल pittala n. gunmetal
पित्तल pittala n. bell-metal
पित्तल - भाण्ड pittala - bhANDa n. brassware
Sanskrit word Transliteration Grammar English word
हाटक hATaka n. gold
prajai- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1212405யினியவன் wrote:பித்தன் என்று அழைப்பதாலும், தாண்டவம் ஆடுவதாலும், பித்தலாட்டக்காரன் என்றும் சொல்லலாமோ?
சிவனைப் பித்தன் என்று சுந்தரர் தவிர மற்றவர்கள் அழைத்ததாக நினைவில்லை . அதுவும் தன்னிடம் வழக்காட வந்திருப்பவர் இறைவன் என்று அறியாமல்தான் " பித்தன் " என்று சொல்கிறார்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடலைப் பாருங்கள் .
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்
ஆகவே இறைவனைப் பித்தலாட்டக்காரன் என்று அழைப்பது தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
முட்டாளா ? முற்றாளா ? - எது சரி ?
சிந்திக்காமல் செயல்படுபவனை " முட்டாள் " என்கிறோம் . இதை ஆங்கிலத்தில் Fool , Idiot , Stupid என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம் .
ஆனால் " முட்டாள் " என்பது தமிழ் வார்த்தையா ? அகராதியில் தேடிப் பார்த்தபோது , அப்படி ஒரு வார்த்தை கிடைக்கவில்லை . நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் " முட்டாள் " என்ற வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை . திருக்குறளில் அறிவிலியைப் " பேதை " என்று குறிப்பிடுகிறார் .
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை .
" நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க !
நானொரு முட்டாளுங்க ! "
என்று நடிகர் சந்திரபாபு , ஒரு திரைப்படத்தில் பாடியிருப்பார் .
"முட்டாள் " என்ற வார்த்தை தமிழ்மொழியில் எப்படி வந்தது ?
இலக்கியச்சாரல் என்ற தமிழ் சஞ்சிகையில் இதற்கு விடை கிடைத்தது .
முற்றாள் என்ற சொல்லின் திரிபே " முட்டாள் " என்ற வார்த்தையாகும் .அதாவது முற்றாள் என்றால் முழுவதும் ஆளாக இருப்பவன் . எலும்பும் , தோலும் சேர்ந்த சதைப் பிண்டமாக இருப்பவன் ; ஆனால் மூளை மட்டும் இல்லாதவன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள் .
இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே எனக்குப் பட்டது .
சிந்திக்காமல் செயல்படுபவனை " முட்டாள் " என்கிறோம் . இதை ஆங்கிலத்தில் Fool , Idiot , Stupid என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறோம் .
ஆனால் " முட்டாள் " என்பது தமிழ் வார்த்தையா ? அகராதியில் தேடிப் பார்த்தபோது , அப்படி ஒரு வார்த்தை கிடைக்கவில்லை . நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் " முட்டாள் " என்ற வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை . திருக்குறளில் அறிவிலியைப் " பேதை " என்று குறிப்பிடுகிறார் .
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை .
" நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லா படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க !
நானொரு முட்டாளுங்க ! "
என்று நடிகர் சந்திரபாபு , ஒரு திரைப்படத்தில் பாடியிருப்பார் .
"முட்டாள் " என்ற வார்த்தை தமிழ்மொழியில் எப்படி வந்தது ?
இலக்கியச்சாரல் என்ற தமிழ் சஞ்சிகையில் இதற்கு விடை கிடைத்தது .
முற்றாள் என்ற சொல்லின் திரிபே " முட்டாள் " என்ற வார்த்தையாகும் .அதாவது முற்றாள் என்றால் முழுவதும் ஆளாக இருப்பவன் . எலும்பும் , தோலும் சேர்ந்த சதைப் பிண்டமாக இருப்பவன் ; ஆனால் மூளை மட்டும் இல்லாதவன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள் .
இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே எனக்குப் பட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 14 of 34 • 1 ... 8 ... 13, 14, 15 ... 24 ... 34
Similar topics
» தமிழை வளர்ப்பது யார்?
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
» தமிழை வாழ விடுவோம்!-- சந்திரமெளலி
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை கொலை செய்யாதீர்?
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
Page 14 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|