ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters

Page 12 of 34 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 23 ... 34  Next

Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Thu Jun 23, 2016 12:46 am

மிக்க நன்றி ஐயா, நிறைய அறிந்து கொள்கிறோம் புன்னகை................... நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 3838410834 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 103459460 நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Thu Jun 23, 2016 12:46 am

மூர்த்தி wrote:Blog-வலைப்பூ என்பது சரியா?
வலைப்பூ வாடி பல வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் சிலர் இன்னமும் வலைப்பூ எனவே பயன்படுத்தி வருவதைக் காணமுடிகிறது. வலைப்பூவா வலைப்பதிவா?

முதல் தமிழ் வலைப்பதிவு (வலைபூ) கார்த்திகேயன் இராமசுவாமி என்பவரால் தை 1 2003 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவர் பல இடங்களில் வலைப்பதிவு என பயன்படுத்தி வந்தாலும், வலைப்பூவே அவராலும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பின்னர் மொழிச்சிக்கல் வரவே வலைப்பதிவு என்பதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
weblog – வலைப்பதிவு ; blogger – வலைப்பதிவர் ; blogging – வலைப்பதிதல் ஆனால் …..
weblog – வலைப்பூ ;blogger – வலைப்பூக்காரர் ;blogging – வலைப்பூத்தல்

இந்த மொழிச்சிக்கலை தொடர்ந்து  உலக தமிழ்  இணைய மாநாட்டிலும் வலைப்பதிவு  ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வலைப்பதிவு என்பதே சரியான வார்த்தையாகும்.

நன்றி மூர்த்தி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 10:02 am

காப்பி சாப்பிடுங்கள் , காப்பி குடியுங்கள் - எது சரி ?

காப்பி குடிக்கிறீர்களா ? என்று கேட்பதே சரி என்றாலும் , " காப்பி சாப்பிடுங்கள் " என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகளாகும் .

வள்ளுவர் கூட , " கள்ளைக் குடிக்காதே " என்று சொல்லாமல் " உண்ணற்க கள்ளை " என்று சொல்கிறார் .
இதை நாம் தவறு என்று சொல்லமுடியாது . செய்யுளில் தளை தட்டக்கூடாது என்பதற்காக , இலக்கண மீறல்களும், மரபு மீறல்களும் புலவனுக்காக அனுமதிக்கப் படுகின்றன.

" செவிநுகர் கனிகள் " என்று கம்பன் சொன்னதும் , " இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாரதி பாடியதும் , மரபு மீறல் என்றாலும் , அதிலுள்ள கவி நயத்திற்காக , நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by T.N.Balasubramanian Thu Jun 23, 2016 10:55 am

murthy wrote:பின்னர் மொழிச்சிக்கல் வரவே வலைப்பதிவு என்பதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
weblog – வலைப்பதிவு ; blogger – வலைப்பதிவர் ; blogging – வலைப்பதிதல் ஆனால் …..
weblog – வலைப்பூ ;blogger – வலைப்பூக்காரர் ;blogging – வலைப்பூத்தல்

இந்த மொழிச்சிக்கலை தொடர்ந்து  உலக தமிழ்  இணைய மாநாட்டிலும் வலைப்பதிவு  ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வலைப்பதிவு என்பதே சரியான வார்த்தையாகும்.

வலைப்பதிவு ,வலைப்பதிவர் ,வலைப்பதித்தல் என்றே கூறலாமே .

வலைப்பூ ,வலைப்பூக்காரர்  நாளடைவில் திரிதல் காரணமாக
வாழைப்பூ ,வாழைப்பூக்காரர் ஆக கூடாது .
தமிழர்கள் பலர் இன்றும் 'ழ' "ல / ள" கூறுவதில் தடுமாறுகின்றனர் .

Hamilton Bridge ,அம்பட்டன் வாராவதி என்று தமிழாக்கப்பட்டு ,
பின்பு Barbar 'bridge என பஸ்களில் வழித்தடமாக வெளிவந்தது ,தான்
நினைவுக்கு வருகிறது .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 23, 2016 11:04 am; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Thu Jun 23, 2016 11:10 am

M.Jagadeesan wrote:காப்பி சாப்பிடுங்கள் , காப்பி குடியுங்கள் - எது சரி ?

காப்பி குடிக்கிறீர்களா ? என்று கேட்பதே சரி என்றாலும் , " காப்பி சாப்பிடுங்கள் " என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகளாகும் .

மேற்கோள் செய்த பதிவு: 1212292

எங்க பாட்டி சொல்வார்கள் , 'குடி' என்று சொல்வது, குடிப்பது, என்பது கள்ளை மட்டுமே, அதனால் காப்பி சாப்பிட றீங்களா , தண்ணி சாப்பிடறீங்களா என்று தான் கேட்கணும் என்று சொல்வார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 11:57 am

" பால்குடி மாறா பச்சிளங் குழந்தை "

" குழந்தை பால் குடித்தது "

என்றுதானே சொல்கிறோம் . "குழந்தை பால் சாப்பிட்டது " என்று சொல்வதில்லையே ! காலப்போக்கில்
" குடி " என்ற சொல் மதுவைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது . " குடி குடியைக் கெடுக்கும் " என்று அறிவிப்பும் செய்கிறார்கள் .

ஆங்கிலத்தில் " Would you mind drinking Coffee ? " என்றுதான் சொல்கிறோம்.
" Would you mind eating Coffee ? " என்று சொல்வதில்லையே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by யினியவன் Thu Jun 23, 2016 12:16 pm

T.N.Balasubramanian wrote:
Hamilton Bridge ,அம்பட்டன் வாராவதி என்று தமிழாக்கப்பட்டு ,
பின்பு Barbar 'bridge என பஸ்களில் வழித்தடமாக வெளிவந்தது ,தான்
நினைவுக்கு வருகிறது .

ரமணியன்

சென்னை ஸ்லாங்கில் "அமிட்டாவரை" என்றே அழைக்கப்பட்டது, படுகிறது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 12:27 pm

மயிலாப்பூரில் உள்ள " முண்டகக் கண்ணி அம்மன் " கோயிலை " முண்டக் கண்ணி அம்மன் " என்று மாற்றிவிட்டார்கள் . பாவம் ! அந்த அம்மனும் அதை ஏற்றுக்கொண்டு விட்டாள் .

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள் . தாமரை போன்ற அழகான கண்களையுடைய அம்மன் என்ற பொருளில் " முண்டகக் கண்ணி அம்மன் " என்று அழைத்தார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Thu Jun 23, 2016 12:34 pm

M.Jagadeesan wrote:மயிலாப்பூரில் உள்ள " முண்டகக் கண்ணி அம்மன் " கோயிலை " முண்டக் கண்ணி அம்மன் " என்று மாற்றிவிட்டார்கள் . பாவம் ! அந்த அம்மனும் அதை ஏற்றுக்கொண்டு விட்டாள் .

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள் . தாமரை போன்ற அழகான கண்களையுடைய அம்மன் என்ற பொருளில் " முண்டகக் கண்ணி அம்மன் " என்று அழைத்தார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1212329

அடாடா.... பாவம் அந்த அம்பாள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by யினியவன் Thu Jun 23, 2016 12:49 pm

ஆயிரம் கண்ணுடையாள் ஆச்சே, அம்மன் கோச்சுக்க மாட்டாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 12 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 34 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 23 ... 34  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum