Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
2 posters
Page 1 of 1
வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
![வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்! UcMEzFeRTZSq8ALR3Gsq+E_1465467066](https://www.filepicker.io/api/file/UcMEzFeRTZSq8ALR3Gsq+E_1465467066.jpeg)
-
அந்தப் பெண் பள்ளிப் படிப்பில் படுசுட்டி.
ததும்பி வழியும் அழகு. தகதகக்கும் அறிவு. தகுதியின்
அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக்
கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து ஹவுஸ் சர்ஜனாக
தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
–
மனம் முழுக்க வருங்காலம் பற்றிய வண்ணக் கனவுகள்.
வாழ்க்கைத் துணை எப்படி அமைவாரோ என்ற வெட்கம்
கலந்த எதிர்பார்ப்பு, அப்போதுதான் விதி சூழ்ந்த அந்த
நாள் வந்தது.
–
சின்னஞ்சிறிய குழந்தை ஒன்றை மேசையில் இருத்தி,
தனது காதில் ஸ்டெதாஸ்கோப்பைப் பொருத்திப் பரிசோதித்துக்
கொண்டிருந்தார். பிறகு குறிப்பேட்டில் பதிவு மேற்கொண்டார்.
காதில் பொருந்திய ஸ்டெத், மாலை போலக் கழுத்தின் கீழே
ஊசலாடிக் கொண்டிருந்தது.
–
அந்தப் பிஞ்சுக் குழந்தை அதைப் பிடித்து அசைத்தபடி சிரித்து
விளையாடிக் கொண்டிருந்தது. திடீரெனத் தனது சக்தி
முழுவதையும் திரட்டி, ஸ்டெத் கருவியின் டயஃப்ரம் எனப்படும்
கேட்கும் பகுதியை மேசைமீது ஓங்கி அடித்தது.
–
ஆயிரம் பேரிடிகள் காதில் நேரடியாக மோதியதைப் போன்ற
உணர்வு அந்த ஹவுஸ் சர்ஜன் பெண்ணுக்கு. கண்ணை இருட்டிக்
கொண்டு வர, மயங்கி சரிந்தார். கண்ணை விழித்துப் பார்க்கும்
போது மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தார்.
–
‘எப்படி இருக்கீங்க?’ என மருத்துவர் கேட்கிறார். ‘அவரது உதடு
அசைவது மட்டுமே தெரிகிறது. ஒலி எதுவும் கேட்கவில்லை.
காதில் ஒலிகளை உணரும் நரம்புகளின் செல்கள், பேரொலியின்
அதிர்ச்சியால் முழுவதும் செயலிழந்து போய்விட்டன.
–
ஆம்! அவரது கேட்கும்திறன் முற்றாக ஒரு செவியில் போய்
விட்டிருந்தது. இன்னொரு செவியிலோ மிகக் குறைந்த அளவிலேயே –
மெலிதாக – மிக மெலிதாக – கேட்கும் அளவிலேயே இருந்தது.
–
வருங்காலத்தில் மருத்துவராகி சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன்
இருந்த அந்த இளம் குருத்துக்கு எப்படி இருந்திருக்கும்?’
–
அது விபத்துக்குள்ளானவர் தான் டாக்டர் தேன்மொழி
-!
இன்றைக்குக் கோயமுத்தூர் ஆவாரம்பாளையத்தில்
‘ஸ்ரீ சிந்து மருத்துவமனை’ என்ற ஓங்கி உயர்ந்த மருத்துவமனையைத்
திறம்பட நிர்வகித்து, கடந்த 30 ஆண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான
பிரசவங்களைப் பார்த்த டாக்டர் தேன்மொழி!
அவரது மருத்துவமனையின் மாடியிலேயே இல்லமும் உள்ளது.
–
Re: வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
அவரது வீட்டுக்குள்ளே போனதும் ஏதோ தாவரவியல் பூங்காவுக்குள்
போவதுபோல ஒரு சிலிர்ப்பு. வகை வகையான வண்ண மலர்களும்
செடி கொடிகளும் அசைந்தாடுகின்றன. முறையாகப் பேணப் பட்ட
நந்தவனம்தான் அவரது வீடு!
ஒரு பக்கம் கீச்கீச்சென வண்ணப் பறவைகள் கூண்டிலிருந்து
அழைக்கின்றன. வீட்டில் வளையவரும் நாய்கள்… ஒவ்வொன்றிலும்
தேன்மொழியின் கரிசனம் ஜொலிக்கிறது!
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த சோக நாளின்
தொடர்ச்சியை விவரிக்கிறார்.
‘என்ன செய்யறதுன்னே தெரியலை. மிகவும் மனசொடிஞ்ச நிலையில்
இருந்தேன். என் பெற்றோருக்கும் வேதனை. எப்படித் தொழிலைக்
கவனிப்பேன் என்பதை விட, யாரு கல்யாணம் செஞ்சுக்குவாங்க
இந்த பொண்ணை?’னு வேதனைப்பட்டாங்க.
ஆனா அப்பாவுக்கு மன தைரியம் அதிகம். எனக்குப் பலவகையிலும்
ஆறுதல் சொன்னார். எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார்.
முதல் முதலாக என்னைப் பெண் பார்க்க வந்தவர் இதோ இந்த
ராஜ்தான்! என்னை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டார் நாணத்தோடு அவர்
சுட்டுவிரல் நீட்டிய ராஜ் என்கிற ராஜேந்திரன் மிக மென்மையாகப்
புன்னகைப் பூக்கிறார்.
இவர் ஒரு பொறியாளர். கோவையில் சொந்தமாகப் பிளாஸ்டிக்
தொழிற்சாலை ஒன்றை நிர்வகித்துவருகிறார்.
கேட்பதில் குறைபாடு இருப்பவரைத் திருமணம் செய்தது மிகவும்
பாராட்டவேண்டியதுதான். இருந்தாலும் எப்படி இந்த நல்ல
முடிவெடுத்தீர்கள்? இந்த கேள்விக்கு மிக அமைதியாகப் பதில்
சொல்கிறார் ராஜேந்திரன். கண்ணுல குறைபாடு இருக்கிறவர்கள்
கண்ணாடி அணிவதில்லையா?
அதைப்போல இது கேட்பதில் குறைபாடு. இது பெரிய விஷயமே இல்லை.
மேலும் கல்யாணத்துக்குப் பிறகு இப்படி ஆகியிருந்தா விட்டுவிட்டா
போயிருப்பேன்? இல்லையல்லவா! மீண்டும் லேசாகச் சிரித்துவிட்டு
மனைவியைப் பாசத்தோடு பார்க்கிறார்.
போவதுபோல ஒரு சிலிர்ப்பு. வகை வகையான வண்ண மலர்களும்
செடி கொடிகளும் அசைந்தாடுகின்றன. முறையாகப் பேணப் பட்ட
நந்தவனம்தான் அவரது வீடு!
ஒரு பக்கம் கீச்கீச்சென வண்ணப் பறவைகள் கூண்டிலிருந்து
அழைக்கின்றன. வீட்டில் வளையவரும் நாய்கள்… ஒவ்வொன்றிலும்
தேன்மொழியின் கரிசனம் ஜொலிக்கிறது!
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த சோக நாளின்
தொடர்ச்சியை விவரிக்கிறார்.
‘என்ன செய்யறதுன்னே தெரியலை. மிகவும் மனசொடிஞ்ச நிலையில்
இருந்தேன். என் பெற்றோருக்கும் வேதனை. எப்படித் தொழிலைக்
கவனிப்பேன் என்பதை விட, யாரு கல்யாணம் செஞ்சுக்குவாங்க
இந்த பொண்ணை?’னு வேதனைப்பட்டாங்க.
ஆனா அப்பாவுக்கு மன தைரியம் அதிகம். எனக்குப் பலவகையிலும்
ஆறுதல் சொன்னார். எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார்.
முதல் முதலாக என்னைப் பெண் பார்க்க வந்தவர் இதோ இந்த
ராஜ்தான்! என்னை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டார் நாணத்தோடு அவர்
சுட்டுவிரல் நீட்டிய ராஜ் என்கிற ராஜேந்திரன் மிக மென்மையாகப்
புன்னகைப் பூக்கிறார்.
இவர் ஒரு பொறியாளர். கோவையில் சொந்தமாகப் பிளாஸ்டிக்
தொழிற்சாலை ஒன்றை நிர்வகித்துவருகிறார்.
கேட்பதில் குறைபாடு இருப்பவரைத் திருமணம் செய்தது மிகவும்
பாராட்டவேண்டியதுதான். இருந்தாலும் எப்படி இந்த நல்ல
முடிவெடுத்தீர்கள்? இந்த கேள்விக்கு மிக அமைதியாகப் பதில்
சொல்கிறார் ராஜேந்திரன். கண்ணுல குறைபாடு இருக்கிறவர்கள்
கண்ணாடி அணிவதில்லையா?
அதைப்போல இது கேட்பதில் குறைபாடு. இது பெரிய விஷயமே இல்லை.
மேலும் கல்யாணத்துக்குப் பிறகு இப்படி ஆகியிருந்தா விட்டுவிட்டா
போயிருப்பேன்? இல்லையல்லவா! மீண்டும் லேசாகச் சிரித்துவிட்டு
மனைவியைப் பாசத்தோடு பார்க்கிறார்.
Re: வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
சரி! அதன் பிறகு ஆனது? தேன்மொழி கம்பீரமாகத் தொடர்கிறார்.
கோயமுத்தூரில் 4 இடங்களில் கிளினிக் திறந்தேன். இரு சக்கர
வாகனத்தில் தான் பயணம். காலை ஆறு மணிக்குப் புறப்பட்டால்
இரவு பதினோரு மணி வரைக்கும் மாறி மாறி கிளினிக்குகளுக்குப்
போய் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவேன்.
நோயாளிகள் பேசுவதைக் கேட்பது ரொம்ப முக்கியம் ஆச்சே…
எப்படி இந்தப் பிரச்னையை சமாளித்தாராம்?
லிப் மூவ்மென்ட் மூலம் அவர்கள் பேசவதை அப்படியே புரிந்து கொள்ளும்
ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். எப்போதும் ஓர் உதவியாளர் என்னுடனே
இருப்பார். தேவைப்பட்டால் அவரும் உதவுவார்.
நோயாளிகள் என் மீது பரிபூரணமாக நம்பிக்கை வைத்தனர்.
அத்துடன் இரவு பகல் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனடியாக போய்
சிகிச்சை அளிப்பேன். மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிப்பேன்.
இப்படி ஓரளவு உடற்குறையை மறந்து வெற்றிகரமாகப் பிராக்டீஸ் செய்து
கொண்டிருந்தபோது விதி மீண்டும் விளையாடியது.
நான்கு கிளினிக்குகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்தாரல்லவா?
ஒருநாள் பின்னால் வந்த வாகனம் ஒன்றால் மோதித் தூக்கி வீசப்பட்டார்
தேன்மொழி. விளைவு… இடுப்பெலும்புகளில் பாதிப்பு; கழுத்து மேஜர் சர்ஜரி;
தோள்பட்டையில் முறிவு; ஒரு கை தற்காலிகமாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்
பட்டு படுத்த படுக்கையானார். அப்புறம்?
–
விடாமுயற்சியோடு ஃபிசியோதெரபி எடுத்துக் கொஞ்ச காலத்திலேயே
படுக்கையில் இருந்து எழுந்து நடமாட ஆரம்பித்தேன். ஓரளவு குணமானதும் இந்த
மருத்துவமனையை முழுமூச்சாகக் கட்டி முடித்தேன்.
ஞாயிறு கூட லீவு எடுக்காமல் தினசரி இப்ப பிராக்டீஸ்!
–
இவர்களின் புதல்வி சிந்துவும் ஒரு டாக்டர்தான். எம்.டி. முடித்திருக்கிறார்.
ஓவியம், விளையாட்டு, நடனம் என எல்லாத் துறையிலும் கில்லி!
எப்படியோ சோதனைகளை எல்லாம் தாண்டிட்டீங்க..
சிரித்துக்கொண்டே இல்லை என்கிறார் தேன்மொழி.
ஏன் என்னாச்சு?
–
தேன்மொழிக்கு இரண்டு மார்பகங்களிலும் கட்டிகள் தோன்றியிருக்கின்றன.
புற்றுநோய்க்கு முந்திய நிலை! அறுவைச் சிகிச்சை மூலம் கட்டிகள் அப்புறப்படுத்தப்
பட்டிருக்கின்றன. இருந்தாலும் ஆபத்து முற்றாக நீங்கியதாக எடுத்தக் கொள்ள
முடியாதாம். மறுபடியும் டெஸ்ட் பண்ணணும். என்னாகும்னு பார்ப்போம் என்கிறார்
தன்னம்பிக்கையோடு!
வாழ்த்தி விடைபெற்று வந்தோம். வாசல் வரை தம்பதி வந்து வழியனுப்பி
வைத்தார்கள். ஹேட்ஸ் ஆஃப் டாக்டர் தேன்மொழி!
–
—————————————————
– லதானந்த்
மங்கையர் மலர்
கோயமுத்தூரில் 4 இடங்களில் கிளினிக் திறந்தேன். இரு சக்கர
வாகனத்தில் தான் பயணம். காலை ஆறு மணிக்குப் புறப்பட்டால்
இரவு பதினோரு மணி வரைக்கும் மாறி மாறி கிளினிக்குகளுக்குப்
போய் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவேன்.
நோயாளிகள் பேசுவதைக் கேட்பது ரொம்ப முக்கியம் ஆச்சே…
எப்படி இந்தப் பிரச்னையை சமாளித்தாராம்?
லிப் மூவ்மென்ட் மூலம் அவர்கள் பேசவதை அப்படியே புரிந்து கொள்ளும்
ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். எப்போதும் ஓர் உதவியாளர் என்னுடனே
இருப்பார். தேவைப்பட்டால் அவரும் உதவுவார்.
நோயாளிகள் என் மீது பரிபூரணமாக நம்பிக்கை வைத்தனர்.
அத்துடன் இரவு பகல் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனடியாக போய்
சிகிச்சை அளிப்பேன். மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிப்பேன்.
இப்படி ஓரளவு உடற்குறையை மறந்து வெற்றிகரமாகப் பிராக்டீஸ் செய்து
கொண்டிருந்தபோது விதி மீண்டும் விளையாடியது.
நான்கு கிளினிக்குகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்தாரல்லவா?
ஒருநாள் பின்னால் வந்த வாகனம் ஒன்றால் மோதித் தூக்கி வீசப்பட்டார்
தேன்மொழி. விளைவு… இடுப்பெலும்புகளில் பாதிப்பு; கழுத்து மேஜர் சர்ஜரி;
தோள்பட்டையில் முறிவு; ஒரு கை தற்காலிகமாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்
பட்டு படுத்த படுக்கையானார். அப்புறம்?
–
விடாமுயற்சியோடு ஃபிசியோதெரபி எடுத்துக் கொஞ்ச காலத்திலேயே
படுக்கையில் இருந்து எழுந்து நடமாட ஆரம்பித்தேன். ஓரளவு குணமானதும் இந்த
மருத்துவமனையை முழுமூச்சாகக் கட்டி முடித்தேன்.
ஞாயிறு கூட லீவு எடுக்காமல் தினசரி இப்ப பிராக்டீஸ்!
–
இவர்களின் புதல்வி சிந்துவும் ஒரு டாக்டர்தான். எம்.டி. முடித்திருக்கிறார்.
ஓவியம், விளையாட்டு, நடனம் என எல்லாத் துறையிலும் கில்லி!
எப்படியோ சோதனைகளை எல்லாம் தாண்டிட்டீங்க..
சிரித்துக்கொண்டே இல்லை என்கிறார் தேன்மொழி.
ஏன் என்னாச்சு?
–
தேன்மொழிக்கு இரண்டு மார்பகங்களிலும் கட்டிகள் தோன்றியிருக்கின்றன.
புற்றுநோய்க்கு முந்திய நிலை! அறுவைச் சிகிச்சை மூலம் கட்டிகள் அப்புறப்படுத்தப்
பட்டிருக்கின்றன. இருந்தாலும் ஆபத்து முற்றாக நீங்கியதாக எடுத்தக் கொள்ள
முடியாதாம். மறுபடியும் டெஸ்ட் பண்ணணும். என்னாகும்னு பார்ப்போம் என்கிறார்
தன்னம்பிக்கையோடு!
வாழ்த்தி விடைபெற்று வந்தோம். வாசல் வரை தம்பதி வந்து வழியனுப்பி
வைத்தார்கள். ஹேட்ஸ் ஆஃப் டாக்டர் தேன்மொழி!
–
—————————————————
– லதானந்த்
மங்கையர் மலர்
Re: வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
நல்ல பதிவு>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணக்கு - ஓதி உணர்ந்தால் தேனாகும்...!
» சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!
» சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|