ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி

+5
யினியவன்
சசி
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty கொலையும் செய்வாள் பத்தினி

Post by T.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி


கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்


கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:23 pm

சசி wrote:ஒரு புதிய விவாதத்திற்கு உட்பட்டது ஆகி ஐயாவின் வரிகள்.. ஆரோக்கியமான விவாதம். தான்...

நீங்களும் உள்ளே வந்து கருத்துகள் சொல்லுங்கள் சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:26 pm

M.Jagadeesan wrote:

 " கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து


"  போற்றா ஒழுக்கம் புரிந்தீர் "  என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே  அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
மேற்கோள் செய்த பதிவு: 1210691

நன்றாக விளக்கி இருக்கீங்க ஐயா, நானும் சின்னவதில் முதன் முதலில் சிலப்பதிகாரம் படித்த போது, என்ன இவள் , கோவலன் திரும்பி வந்ததும் ஒருவழி பண்ண வேண்டாமா அவனை என்று கோபப்பட்டிருக்கேன், புன்னகை..............அப்போ என் அப்பா தான் 'அது அந்தக்காலம் என்று நினைவில் வைக்கணும்' என்று சொன்னார் ..நீங்க இப்ப அப்படியே சொல்லரீங்க  புன்னகை
.
.
.
மாதவி வீட்டுக்கு  போனது வந்தது என்பது கணவன் மனைவி பிரச்சனை. அது எங்க பாடு நாங்க பார்த்துப்போம் என்று சொல்வாளோ என்னவோ புன்னகை
.
.
ஆனால். அதற்காக, தன் கணவனை ஏதோ ஒரு ராஜா , திருடன் என்று சொன்னதும் ,விட்டுக்கொடுக்க முடியுமா?...............எனவே, 'நீ யார் அவரை அப்படி சொல்ல?' என்று வெகுண்டு எழுந்து , கொளுத்திவிட்டாள் எல்லாவற்றையும்...........அதத்தான்   'கொலையும் செய்வாள் பத்தினி' என்று சொல்கிறார்கள்.............தன் காதல் கணவனுக்காக ஊரையே எரித்துவிட்டாள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by krishnaamma Sat Jun 11, 2016 10:34 pm

யினியவன் wrote:உங்கள் கருத்து சரி அய்யா

இன்று அதை மேற்கோள் காட்டி
பெண்களை அடிமைப்படுத்த
நினைப்பது தவறு தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1210693

நீங்க வேற, இன்று யார் யாரை அடிமைப் படுத்தி இருக்கா என்று தெரியாதா இனியவன்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by சசி Sat Jun 11, 2016 11:02 pm

பெண் என்பவள் அன்றும் என்றும் புரியாத புதிர் தான்!
தன் கணவனை தான் என்னவேண்டுமானாலும்
செய்து கொள்ள உரிமை உண்டு என்று நினைப்பவள். ஆனால் அடுத்தவர்கள் முன் விட்டு கொடுக்க மாட்டாள்.

அதையே தான் அன்றும் செய்தாள் கண்ணகி. தன் கணவனுக்காக
நியாயம் கேட்ட புரட்சிப் பெண். ஆனால்
இன்று நிலைமை தலைகீழ்..

காவியங்களை காலத்திற்கு தகுந்தவாறு உள்வாங்கி கொள்ளவேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by Guest Sat Jun 11, 2016 11:30 pm

அனைவருக்கும் முதலில் நன்றி பலவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்,கேள்விகளை தொடுத்துக் கொண்டே இரு.அவை அறிவினாவாக இருந்தாலும் அறியாவினாவாக இருந்தாலும் கூட. அப்போதுதான் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள முடியும் என்பார்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள் கொலை-படுகொலை செய்தாள் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணால் அப்படி எல்லாம் செய்ய முடியாது.தீக்கடவுள் வந்தார் என்பதெல்லாம் புனைவு.இடமுலை திருகி எறிந்தாள் என்பது எப்படிப் பொருந்தும். யாராலும் செய்ய முடியாத ஒன்று.இப்படிப் பல , கருவை மெருகூட்ட எழுதுப்பட்டுள்ளது.அன்று வாழ்ந்த மற்றக் கண்ணகியின் கதையும் மெருகேற்ற புகுத்தப்பட்டிருக்கலாமே?

திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 அகவை.இந்த வயதில் கோவலனால் சுகத்தைப் பெற முடியாதிருந்திருக்கலாம்.(இன்றைய காலத்துடன் அன்றைய காலத்தை ஒப்பிடலாகாது)

ஞானி சொல்வது ஏற்புடையதாகாது. ஓராண்டிலோ ஓரிரு ஆண்டிலோ மாதவி குழந்தை பெறுகிறாள்.அதன் பின் மாதவி துறவு வாழ்க்கை வாழ்கிறாள்.கோவலன் பிரிகிறான். இப்போது கண்ணகிக்கு வேறு வைக்கும் சடங்கு நடக்கிறது.அவள் அழகு அவனை ஈர்க்க மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் வந்திருக்கலாம். ஆக ஒன்று முதல் ஓரிரு ஆண்டுகள் தான் மாதவியுடன் கோவலன் வாழ்ந்திருக்க முடியும்.

என் பார்வையில் கண்ணகியின் ஒரு சிலம்பு போனபின் இருந்த மற்றொரு இடது கால் சிலம்பை அவள் விட்டெறிந்திருக்கலாம்.அவள் கோபம் கண்ட மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதிருக்கலாம்.அதனால் மதுரை அழிந்திருக்கலாம்.இன்றைய போராட்டங்களில் சில சமயம் வன்முறை வெடித்து பொதுச் சொத்துகள் அழிக்கப்படுவதைப் போல.

ஆக இலக்கியத்தை விவாதிக்கலாமே தவிர நம் வாழ்க்கை-சமூகவியலுடன் ஒப்பிட்டு வாதிட முடியாது.கரு என்ன சொல்கிறது எதைச் சொல்ல வருகிறது என்பதை மட்டும் எடுத்து, கருவை எடுத்து மற்ற புனைவுகளை இரசிக்கலாம் என்பது என் கருத்தாகும்.
இலக்கியங்கள் கருவை வைத்து புனைந்து உருவாக்கப்படுகிறது.அவற்றில் அனைத்துமே உண்மையாக இருக்க வாயிப்பில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by T.N.Balasubramanian Sun Jun 12, 2016 9:31 am

murthy wrote:திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 அகவை.இந்த வயதில் கோவலனால் சுகத்தைப் பெற முடியாதிருந்திருக்கலாம்.(இன்றைய காலத்துடன் அன்றைய காலத்தை ஒப்பிடலாகாது)
8 வயதில் /10 வயதில் தாயானவர்களை பற்றி அறிந்துள்ளோம் .
அகவை 12 அடைந்த கண்ணகி மூலம் சுகம் அடைந்திருக்க முடியாதா ?
இன்றைய காலமோ அன்றைய காலமோ ,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும் வெட்பதட்ப நிலைகள் , குடும்ப ராசிகள் ,முதலியவையும் முக்கியமான அளவுகோல் .
மாதவியை கோவலன் விரும்பியதற்கு காரணம் ,மாதவி ,கண்ணகியை விட வயதானவரா ?.
ஈர்ப்பிற்கு காரணம் கலை ஆர்வம் என்றே எண்ணுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by M.Jagadeesan Sun Jun 12, 2016 9:50 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!

மேற்கோள் செய்த பதிவு: 1210677

" கோவலன் ஊர் மேய்ந்தான் " என்ற கருத்து தவறானது . அவன் மாதவியைத் தவிர பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளவில்லை . கோவலன் ஒரு கலை ஆர்வலன் . மாதவி ஆடல்கலையில் வல்லவள் . முதலில் அவளது கலையை நேசித்தவன் , பிறகு காதல் வயப்படுகிறான் .அவ்வளவுதான் .

கண்ணகி கோவலனைக் கண்டிக்கவில்லை என்ற கூற்று தவறானது . மதுரைக் காண்டத்தில் மனையறம் படுத்த காதையில் , கோவலனைப் பார்த்து


" போற்றா ஒழுக்கம் புரிந்தீர் " என்று நயமாகச் சாடுகிறாள் .

கண்ணகி பெண்ணடிமையின் சின்னமல்ல . புகார்க் காண்டத்திலே சாதுவாகக் காட்சியளிக்கும் கண்ணகி
மதுரைக் காண்டத்திலே சண்ட மாருதமாகக் காட்சியளிக்கிறாள் .

பரத்தையர் தொடர்பு தவறல்ல என்ற கருதப்பட்ட காலத்தில் கண்ணகி வாழ்ந்தாள். எனவே அவள் கணவனைக் கண்டிக்கவில்லை . அது காலத்தின் தவறு ; கண்ணகியின் தவறல்ல .
மேற்கோள் செய்த பதிவு: 1210691

ஒரு சிறு தவறு நடந்துவிட்டது. மதுரைக்காண்டம் ,மனையறம்படுத்த காதை என்பதற்குப் பதிலாக , மதுரைக் காண்டம் , கொலைக்களக் காதை என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by M.Jagadeesan Sun Jun 12, 2016 10:24 am

T.N.Balasubramanian wrote:
murthy wrote:திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 அகவை.இந்த வயதில் கோவலனால் சுகத்தைப் பெற முடியாதிருந்திருக்கலாம்.(இன்றைய காலத்துடன் அன்றைய காலத்தை ஒப்பிடலாகாது)
8 வயதில் /10 வயதில் தாயானவர்களை பற்றி அறிந்துள்ளோம் .
அகவை 12 அடைந்த கண்ணகி மூலம் சுகம் அடைந்திருக்க முடியாதா ?
இன்றைய காலமோ அன்றைய காலமோ ,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும் வெட்பதட்ப நிலைகள் , குடும்ப ராசிகள் ,முதலியவையும் முக்கியமான அளவுகோல் .
மாதவியை கோவலன் விரும்பியதற்கு காரணம் ,மாதவி ,கண்ணகியை விட வயதானவரா ?.
ஈர்ப்பிற்கு காரணம் கலை ஆர்வம் என்றே எண்ணுகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210823

கோவலன் , கண்ணகியுடன் இன்பம் துய்த்தான் என்பது " மனையறம் படுத்த காதையின் " இறுதியில் வருகின்ற வெண்பா மூலம் அறிகிறோம் .

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று .

பணிகள் = பாம்புகள்

இரண்டு பாம்புகள் பின்னிக் கிடந்ததுபோலவும் , காமனும் ரதியும் போலவும் பிரியாது இருந்தனராம் .
தொலையாத இன்பமெலாம் துன்னினார் என்றால் வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் இடையறாது அனுபவித்தனர் என்பது பொருளாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by M.Jagadeesan Sun Jun 12, 2016 10:36 am

மூர்த்தி wrote:அனைவருக்கும் முதலில் நன்றி பலவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்,கேள்விகளை தொடுத்துக் கொண்டே இரு.அவை அறிவினாவாக இருந்தாலும் அறியாவினாவாக இருந்தாலும் கூட. அப்போதுதான் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள முடியும் என்பார்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள் கொலை-படுகொலை செய்தாள் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணால் அப்படி எல்லாம் செய்ய முடியாது.தீக்கடவுள் வந்தார் என்பதெல்லாம் புனைவு.இடமுலை திருகி எறிந்தாள் என்பது எப்படிப் பொருந்தும். யாராலும் செய்ய முடியாத ஒன்று.இப்படிப் பல , கருவை மெருகூட்ட எழுதுப்பட்டுள்ளது.அன்று வாழ்ந்த மற்றக் கண்ணகியின் கதையும் மெருகேற்ற புகுத்தப்பட்டிருக்கலாமே?

திருமணத்தின் போது கண்ணகிக்கு 12 அகவை.இந்த வயதில் கோவலனால் சுகத்தைப் பெற முடியாதிருந்திருக்கலாம்.(இன்றைய காலத்துடன் அன்றைய காலத்தை ஒப்பிடலாகாது)

ஞானி சொல்வது ஏற்புடையதாகாது. ஓராண்டிலோ ஓரிரு ஆண்டிலோ மாதவி குழந்தை பெறுகிறாள்.அதன் பின் மாதவி துறவு வாழ்க்கை வாழ்கிறாள்.கோவலன் பிரிகிறான். இப்போது கண்ணகிக்கு வேறு வைக்கும் சடங்கு நடக்கிறது.அவள் அழகு அவனை ஈர்க்க மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் வந்திருக்கலாம். ஆக ஒன்று முதல் ஓரிரு ஆண்டுகள் தான் மாதவியுடன் கோவலன் வாழ்ந்திருக்க முடியும்.

என் பார்வையில் கண்ணகியின் ஒரு சிலம்பு போனபின் இருந்த மற்றொரு இடது கால் சிலம்பை அவள் விட்டெறிந்திருக்கலாம்.அவள் கோபம் கண்ட மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதிருக்கலாம்.அதனால் மதுரை அழிந்திருக்கலாம்.இன்றைய போராட்டங்களில் சில சமயம் வன்முறை வெடித்து பொதுச் சொத்துகள் அழிக்கப்படுவதைப் போல.

ஆக இலக்கியத்தை விவாதிக்கலாமே தவிர நம் வாழ்க்கை-சமூகவியலுடன் ஒப்பிட்டு வாதிட முடியாது.கரு என்ன சொல்கிறது எதைச் சொல்ல வருகிறது என்பதை மட்டும் எடுத்து, கருவை எடுத்து மற்ற புனைவுகளை இரசிக்கலாம் என்பது என் கருத்தாகும்.
இலக்கியங்கள் கருவை வைத்து புனைந்து உருவாக்கப்படுகிறது.அவற்றில் அனைத்துமே உண்மையாக இருக்க வாயிப்பில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1210766

ஐயா !

இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்த்தால் எந்த இலக்கியத்தையும் ரசிக்கமுடியாது .

அறிவியல் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ; ஆனால் இலக்கியங்கள் நம் மனதைப் பண்படுத்தும் .

மேலும் சிலப்பதிகாரக் கதை நடந்த நிகழ்வா அன்றிப் புனைவா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் அதை மாற்றும் உரிமை நமக்கு இல்லை . மதுரை மக்கள் கோபம்கொண்டு , மதுரையை அழித்திருக்கலாம்
என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by Guest Sun Jun 12, 2016 11:40 am

அண்ணா! சிலப்பதிகாரம் மட்டுமல்ல அனைத்து இலக்கியங்களும் ஒரு நிகழ்ந்த கதையை சம்பவத்தை கருவாக வைத்து அழகுபடுத்தி எழுதப்படுபவைதான். கடவுள் என்றும் அவதாரமாக வந்தது கிடையாது. இந்த நிலையில் தீக்கடவுள் வந்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.மக்களை பண்படுத்த வழிகாட்ட இப்படி எல்லாம் எழுதி இருக்கலாம். சிலப்பதிகாரத்திற்கு முந்தைய இயேசுவின் இறுதிக் காலத்தில் மக்களே போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

கூடவே பல நூறு ஆண்டுகளான இலக்கியங்கள் ஒவ்வொரு 400-500 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைச்சுவடிகள் புதுப்பிக்கப்பட்டு எழுதப்படுகிறது.இப்படி எழுதப்படும் போது சில-பல மாற்றங்கள் ,சேர்க்கைகள் ஏற்பட்டிருக்கலாம். வட்டெழுத்து-பிராமி மாற்றத்தினால் மாறிக் கூட இருக்கலாம்.தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை இரண்டுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புடன் ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.சரியாகப் படிக்க முடியவில்லை.

ஏன்,நம்மில் பலர் படிக்கும் கேட்கும் 17 ஆம் நூற்றாண்டு கந்த சஸ்டிக் கவசம் இன்று பிழைகளுடன் தவறாகப் பாடப்படும் போது காப்பியங்கள்,இலக்கியங்கள் மாறுபட நீக்கம் பெற சேர்க்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் உண்டு. வரலாற்றையே மாற்றிவிடும் போது இலக்கியங்கள் எம்மாத்திரம்.
avatar
Guest
Guest


Back to top Go down

கொலையும் செய்வாள் பத்தினி - Page 4 Empty Re: கொலையும் செய்வாள் பத்தினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum