Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையும் செய்வாள் பத்தினி
+5
யினியவன்
சசி
krishnaamma
M.Jagadeesan
T.N.Balasubramanian
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கொலையும் செய்வாள் பத்தினி
First topic message reminder :
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்
கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?
சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .
படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .
இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
ரமணியன்
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்
கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?
சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .
படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .
இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கொலையும் செய்வாள் பத்தினி
உண்மைதான்.தொலைக்காட்சி நாடகங்கள் இன்றைய மனிதர்களை வழி நடத்தி செல்லும் போது, மக்கள் அந்த வழியில் செல்வதும், மேலும் மோசமாக மாறுவதற்குமே வழி உண்டு. முக்கியமாக தொலைக்காட்சி இணையம்,சினிமா போன்றவை சமூகப் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் தவிர மாற மாற்ற வழி இருப்பதாக தெரியவில்லை.
உண்மையில் சொல்லப்போனால் இந்தத் தளத்தில் -பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்- என்ற தலைப்பிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களைப் பார்த்த பின்னரே உள்ளே நுழைந்தேன்.
ஆனால் கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
பத்தினி எனச் சொல்லிவிட்டு எதிர்மறையாக கொலையை செய்வாள் என்பது பொருந்தாது.தன்னை பலாத்காரம் செய்ய முனைந்தால் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்கிறது இன்றைய சட்டம். தன் மானத்தைக் காப்பாற்ற கொலை செய்யவும் துணிவாள் எனவும் கொள்ளலாம்.
ஆனால் உண்மையான அர்த்தம் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் வரும் எந்தத் துயரையும் அழித்து செயல்படுவாள் எனவும்,வறுமை,துயரம், கல்லாமை,இல்லாமை அனைத்தையும் கொன்று குடும்பத்தை உயர்த்தி நல்ல மனைவியாக இருப்பாள் எனவும் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். பத்தினி என்ற சொல்லாடலை பயன்படுத்தாமல் வேறு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் உயிர்கொலை செய்வாள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
உண்மையில் சொல்லப்போனால் இந்தத் தளத்தில் -பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்- என்ற தலைப்பிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களைப் பார்த்த பின்னரே உள்ளே நுழைந்தேன்.
ஆனால் கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
பத்தினி எனச் சொல்லிவிட்டு எதிர்மறையாக கொலையை செய்வாள் என்பது பொருந்தாது.தன்னை பலாத்காரம் செய்ய முனைந்தால் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்கிறது இன்றைய சட்டம். தன் மானத்தைக் காப்பாற்ற கொலை செய்யவும் துணிவாள் எனவும் கொள்ளலாம்.
ஆனால் உண்மையான அர்த்தம் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் வரும் எந்தத் துயரையும் அழித்து செயல்படுவாள் எனவும்,வறுமை,துயரம், கல்லாமை,இல்லாமை அனைத்தையும் கொன்று குடும்பத்தை உயர்த்தி நல்ல மனைவியாக இருப்பாள் எனவும் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். பத்தினி என்ற சொல்லாடலை பயன்படுத்தாமல் வேறு சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் உயிர்கொலை செய்வாள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
Guest- Guest
Re: கொலையும் செய்வாள் பத்தினி
நன்றி முர்த்தி . நல்ல அலசல் .
பதி --பத்தினி ----கணவன் --மனைவி என கொள்க .
பத்தினி --பதிவிரதை ,கற்புக்கரசி என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் .
எழுதிய பதிவு , சமீபத்தில் ,தினசரியில் வந்த செய்தியை பின்னணியாகக் கொண்டது .
கல்யாணம் ஆகி ,இரு குழந்தைகளின் தாய் , தன்னுடைய +12 வகுப்பு காதலனை , 12 வருடங்களுக்கு பிறகு பார்த்து ,தொடர்பு உண்டாக்கிக் கொண்டு , வக்கீல் கணவனை , கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்தவள்.
இன்னொரு செய்தியில் , TV நடிகை , ஏற்கனவே மணம் முடித்து , அதை மறைத்து இன்னொரு திருமணம் முடித்து , பணம் பறிக்க முயல , முதல் கணவரும் இரெண்டாம் கணவரும் கோர்டில் நடிகை மீது கேஸ் போட்டு உள்ளனர் .இரு கணவன்மார்களும் , தங்களுடைய சொத்தையும் பணத்தையும் பறிப்பதிலேயே அவள் குறியாக இருந்தால் என்று குறிப்பிட்டுள்ளனர் .
இன்றைய TV களில் வரும் சீரியல்களில் பெண்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் அமைப்புகள் கண் மூடி இருப்பதேன் எனத் தெரியவில்லை .
உங்கள் விவரிப்புகள் கற்புக்கரசி களுக்கும் பதிவ்ரதைகளுக்கும் பொருந்தும் .
கற்புக்கரசிகள் ,பதிவ்ரதைகள் யாவரும் பத்தினிகளே.
ஆனால் பத்தினிகள் யாவரும் கற்புக்கரசிகள் /பதிவிரதைகள் இல்லை
விளக்கம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .
ரமணியன்
பதி --பத்தினி ----கணவன் --மனைவி என கொள்க .
பத்தினி --பதிவிரதை ,கற்புக்கரசி என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் .
எழுதிய பதிவு , சமீபத்தில் ,தினசரியில் வந்த செய்தியை பின்னணியாகக் கொண்டது .
கல்யாணம் ஆகி ,இரு குழந்தைகளின் தாய் , தன்னுடைய +12 வகுப்பு காதலனை , 12 வருடங்களுக்கு பிறகு பார்த்து ,தொடர்பு உண்டாக்கிக் கொண்டு , வக்கீல் கணவனை , கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்தவள்.
இன்னொரு செய்தியில் , TV நடிகை , ஏற்கனவே மணம் முடித்து , அதை மறைத்து இன்னொரு திருமணம் முடித்து , பணம் பறிக்க முயல , முதல் கணவரும் இரெண்டாம் கணவரும் கோர்டில் நடிகை மீது கேஸ் போட்டு உள்ளனர் .இரு கணவன்மார்களும் , தங்களுடைய சொத்தையும் பணத்தையும் பறிப்பதிலேயே அவள் குறியாக இருந்தால் என்று குறிப்பிட்டுள்ளனர் .
இன்றைய TV களில் வரும் சீரியல்களில் பெண்களை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறார்கள் . பெண்கள் அமைப்புகள் கண் மூடி இருப்பதேன் எனத் தெரியவில்லை .
உங்கள் விவரிப்புகள் கற்புக்கரசி களுக்கும் பதிவ்ரதைகளுக்கும் பொருந்தும் .
கற்புக்கரசிகள் ,பதிவ்ரதைகள் யாவரும் பத்தினிகளே.
ஆனால் பத்தினிகள் யாவரும் கற்புக்கரசிகள் /பதிவிரதைகள் இல்லை
விளக்கம் புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கொலையும் செய்வாள் பத்தினி
நல்ல விளக்கம் அய்யா.
எதிர் மறை பொருள் தருவதாகவும் எடுத்துக் கொண்டால் தலைப்பு சரியே.
எதிர் மறை பொருள் தருவதாகவும் எடுத்துக் கொண்டால் தலைப்பு சரியே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஐயா! உங்கள் எழுத்தை அப்படியே வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன்.எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.
நான் சொன்னது கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி பற்றியது. அந்தப் பழமொழி எந்த உயிர்கொலையும் செய்வாள் -மனைவி-பத்தினி -எந்த சொல்லாக இருப்பினும்- என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பது மட்டுமே.நன்றி..
நான் சொன்னது கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி பற்றியது. அந்தப் பழமொழி எந்த உயிர்கொலையும் செய்வாள் -மனைவி-பத்தினி -எந்த சொல்லாக இருப்பினும்- என்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்பது மட்டுமே.நன்றி..
Guest- Guest
Re: கொலையும் செய்வாள் பத்தினி
@மூர்த்தி கொலையும் செய்வாள் பத்தினி என்பது இந்தப் பொருளில் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் விளக்கம் தரலாம்.
என்னைப் பொருத்தவரை, தன்னுடைய காதல் கணவனுக்காக கொலையும் செய்யத் துணிவாள் பத்தினி/மனைவி என்று தான் பொருள் கொள்வேன் மூர்த்தி .............கணவன் மேல் கொண்ட அன்பால் , கொலை பழியையும் ஏற்பாள் என்றும் கொள்ளலாம்
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
நான் மேலே கூறிய கருத்தைப் பார்த்தால், அதில் பத்தினிக்காக சொல்லப்பட்டதும் நல்லது தானே ?
என்னைப் பொருத்தவரை, தன்னுடைய காதல் கணவனுக்காக கொலையும் செய்யத் துணிவாள் பத்தினி/மனைவி என்று தான் பொருள் கொள்வேன் மூர்த்தி .............கணவன் மேல் கொண்ட அன்பால் , கொலை பழியையும் ஏற்பாள் என்றும் கொள்ளலாம்
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டு வந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்
இங்கே அனைத்தையும் நல்லதாக சொல்லி விட்டு பத்தினி என்ற சொல்லையும் பாவித்து விட்டு கொலையும் -உயிர் கொலையையும்- செய்வாள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
நான் மேலே கூறிய கருத்தைப் பார்த்தால், அதில் பத்தினிக்காக சொல்லப்பட்டதும் நல்லது தானே ?
Last edited by krishnaamma on Sat Jun 11, 2016 10:04 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலையும் செய்வாள் பத்தினி
ஒழுக்கம் என்றால் என்ன. எங்கே கிடைக்கும் என்று கேட்கும் காலமுங்க. தன் இஷ்டப்படி ஆடை உடுத்த சுதந்திரம் என்றும்., எதிரில் வருபவர்தான் கண்ணை மூடிக்கனு போகனும் சொல்ரகாலமாய் போச்சுங்க>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கொலையும் செய்வாள் பத்தினி
இதற்குப் பொருத்தமான பதில் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
" கொலையும் செய்வாள் பத்தினி " என்ற வாக்கியத்தில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மை என்றாலும் அது பத்தினிப் பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது .
பாண்டியன் நெடுஞ்செழியனும் , அவனது மனைவி கோப்பெருந்தேவியும் உயிர் துறந்த பின்னும் , கண்ணகியின் சீற்றம் தணியவில்லை . கோவலன் கொலையுண்ட மதுரை நகரையே அவள் வெறுத்தாள்.
" கோநகர் சீறினேன் " என்ற சொற்கள் அவள் மதுரை மண்ணையே வெறுத்தாள் என்பதைக் காட்டுகின்றன.
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ -
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-
தீக் கடவுள் கண்ணகி முன்பு தோன்றி " யாரையெல்லாம் எரிப்பது எனக் கேட்க
‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’
என்று கண்ணகி பதில் உரைக்கின்றாள் .
இப்போது சொல்லுங்கள் !
கண்ணகி செய்தது கொலைதானே ?
" கொலையும் செய்வாள் பத்தினி " என்ற வாக்கியத்தில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மை என்றாலும் அது பத்தினிப் பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது .
பாண்டியன் நெடுஞ்செழியனும் , அவனது மனைவி கோப்பெருந்தேவியும் உயிர் துறந்த பின்னும் , கண்ணகியின் சீற்றம் தணியவில்லை . கோவலன் கொலையுண்ட மதுரை நகரையே அவள் வெறுத்தாள்.
" கோநகர் சீறினேன் " என்ற சொற்கள் அவள் மதுரை மண்ணையே வெறுத்தாள் என்பதைக் காட்டுகின்றன.
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ -
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-
தீக் கடவுள் கண்ணகி முன்பு தோன்றி " யாரையெல்லாம் எரிப்பது எனக் கேட்க
‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’
என்று கண்ணகி பதில் உரைக்கின்றாள் .
இப்போது சொல்லுங்கள் !
கண்ணகி செய்தது கொலைதானே ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொலையும் செய்வாள் பத்தினி
கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: கொலையும் செய்வாள் பத்தினி
-
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தான்.
அதனைப் பொறுத்து, அவன் நினைவாகவே வாழ்ந்தாள் கண்ணகி...!
-
பின், வீடு திரும்பும் அக்கணவனை, அவள் கண்டிக்கவுமில்லை...
மனமுவந்து ஏற்கிறாள்...!!
-
அப்படி இருந்தால்தான் அவள் பத்தினி, அப்படிப்பட்ட பெண்
பெய் என்று சொன்னால், மழை பெய்யும்...!!
-
ஞானி அவர்கள், கண்ணகி சிலை நிறுவியது தொடர்பான கட்டுரையில்
[color=#CC0000]தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை [/color
என எழுதியிருந்தார்...
-
சில ஆய்வர்கள், அப்படியெல்லாம் பத்தாண்டு பிரிவு இல்லை,
ஓராண்டுதான் என ஆராய்ச்சி செய்து முடிவு தெரிவித்துள்ளனர்...
-
எப்படி இருப்பினும் கண்ணகி என்பவள் பெண்ணடிமையின்
சின்னமாகத்தான் சிலப்பதிகாரத்தில் உருவகப்படுத்தப்
பட்டிருக்கிறாள் என சொல்பவரும் உண்டு....
-
இலக்கியம் என்ற வகையில் சிலப்பதிகாரத்தை
போற்றலாம்....
-
பெண்ணிய நோக்கு என வரும்போது விமர்சனத்துக்கு
உட்பட்டவளாகிறாள் கண்ணகி...!!
Re: கொலையும் செய்வாள் பத்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1210669T.N.Balasubramanian wrote:கொலை இல்லை ,படுகொலை ,அய்யா .
ரமணியன்
கும்பல் கும்பலாகக் கொல்லப்படுவதை ஆங்கிலத்தில் MASSACRE என்று சொல்வார்கள் .
jalianwala Bagh Massacre நம் விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு . தமிழில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்பார்கள் . இங்கு கண்ணகியின் கோபம் ஒரு படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கொலையும் செய்வாள் காதலி
» படி தாண்டா பத்தினி
» வெங்காயம் . . . தர்ம பத்தினி
» காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!
» பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி
» படி தாண்டா பத்தினி
» வெங்காயம் . . . தர்ம பத்தினி
» காதலனுக்காக கணவனை கொன்ற நவீன பத்தினி மனைவி !!!!
» பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|