Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.
மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.
இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
வெப்துனியா
Last edited by krishnaamma on Fri Jun 10, 2016 2:34 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
சனீஸ்வரபகவான் என்று கூறுவது நல்லது>>>>>>>>>>.ஈஸவரன்....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
மேற்கோள் செய்த பதிவு: 1210396P.S.T.Rajan wrote:சனீஸ்வரபகவான் என்று கூறுவது நல்லது>>>>>>>>>>.ஈஸவரன்....
நீங்கள் சொன்னது போல மாற்றிவிட்டேன் ராஜன் அண்ணா ............நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
சனீச்வரன் என்பது தப்பான சொல் . இன்னும் சிலர் ,கிரகங்களில் ,இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவர்.
வானியல் ரீதியாக பார்க்கும் போது ,மற்ற எல்லா கிரகங்களும் , சனி கிரகத்துடன் ஒப்பிடும் போது சூரியனை சுற்றிவரும் காலங்கள் குறைவே.
உதாரணத்திற்கு குரு கிரகம், சூரியனை சுற்றி வர 12 வருடம் எடுத்துக்கொள்ளும் புதன் 3 மாதம் எடுத்துக் கொள்ளும் . சனி 30 வருடம் எடுத்துக் கொள்ளும் . சுற்றின் ஓட்ட காலம் அதிகம் . அதனாலேயே "மந்தன் "
மெதுவாக நடப்பவன் என்ற அர்த்ததில் சொல்லுவது உண்டு .தேவநாகரியில் , சனை: சர : என்பார்கள்.
சனைஹி சரஹ என்பதின் சுருக்கம் சனைச்சரன் ....விந்திவிந்தி நடப்பவன் .
நாம் காலப்போக்கில் சனீச்வரன் என்றும் ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றும் கூறுகிறோம் .
தற்போதைய உதாரணம் : சென்னையில் Hamilton Bridge --தமிழில் ஆமில்டன் பிரிட்ஜ் என்றும்
அம்பட்டன் வாராவதி என்றும் ,பிறகு அதுவே ஆங்கிலத்தில் பார்பர்'ஸ் பிரிட்ஜ் ஆகிவிட்டது .
ரமணியன்
வானியல் ரீதியாக பார்க்கும் போது ,மற்ற எல்லா கிரகங்களும் , சனி கிரகத்துடன் ஒப்பிடும் போது சூரியனை சுற்றிவரும் காலங்கள் குறைவே.
உதாரணத்திற்கு குரு கிரகம், சூரியனை சுற்றி வர 12 வருடம் எடுத்துக்கொள்ளும் புதன் 3 மாதம் எடுத்துக் கொள்ளும் . சனி 30 வருடம் எடுத்துக் கொள்ளும் . சுற்றின் ஓட்ட காலம் அதிகம் . அதனாலேயே "மந்தன் "
மெதுவாக நடப்பவன் என்ற அர்த்ததில் சொல்லுவது உண்டு .தேவநாகரியில் , சனை: சர : என்பார்கள்.
சனைஹி சரஹ என்பதின் சுருக்கம் சனைச்சரன் ....விந்திவிந்தி நடப்பவன் .
நாம் காலப்போக்கில் சனீச்வரன் என்றும் ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றும் கூறுகிறோம் .
தற்போதைய உதாரணம் : சென்னையில் Hamilton Bridge --தமிழில் ஆமில்டன் பிரிட்ஜ் என்றும்
அம்பட்டன் வாராவதி என்றும் ,பிறகு அதுவே ஆங்கிலத்தில் பார்பர்'ஸ் பிரிட்ஜ் ஆகிவிட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
மேலும் ஒரு விளக்கம் ,சனி கிரகத்தை ,குறை கூறுவதாக நினைக்கவேண்டாம் .அதே சமயத்தில் அதன் பின்னணியில் உள்ள விஷயங்களையும் யாவரும் அறியவேண்டும் என்ற ஆசை. தான் பதிவிற்குக் காரணம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
-
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
மஹான் முத்துஸுவாமி தீக்ஷதரின் சிஷ்யர்களின்
ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம்
கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப்
பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை
தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின்
கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும்
அறிந்துகொண்டார்.
அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி
வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து
சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரக
தேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.
மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல்
அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம்
சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி
ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.
-
------------------------
நன்றி- தி,ரா,.ச
ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம்
கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப்
பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை
தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின்
கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும்
அறிந்துகொண்டார்.
அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி
வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து
சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரக
தேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.
மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல்
அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம்
சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி
ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.
-
------------------------
நன்றி- தி,ரா,.ச
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
சௌராஷ்ட்ரர்களின் வரலாற்றைப் புராண வடிவில்
'ரத சப்தமி விரத் மஹாத்மியம்' என்ற நூலில் பார்க்கலாம்.
அதில் தந்துவர்த்தனன் (தந்து - நூல்) என்ற பிரம்ம குமாரனுக்கு
சூரிய குமாரியை மணம் முடிக்கும் வைபவம் சொல்லப்பட்டிருக்கும்.
அந்த கதையின் படி தந்துவர்த்தனனே சௌராஷ்ட்ரர்களின்
மூதாதை. அந்த திருமணத்தின் போது சூரிய குமாரனான சனீஸ்வரன்
தனக்குச் சொந்தமான சௌராஷ்ட்ர தேசத்தைத் தன் சகோதரிக்கு
சீதனமாகக் கொடுப்பார்.
அந்தத் திருமணத்தின் போது ஒரு நாள் மட்டும், அதாவது ரத சப்தமி
நாளில் மட்டும் சூரியன் தன் மகள் கல்யாணத்தைக் கவனித்துக் கொள்ள,
அருணன் சூரியனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு சூரியனுடைய
கடமையைச் செய்ததாக இந்த நூல் கூறும்.
-
சனைச்சராய சாந்தாய சர்வாபீஷ்ட ப்ரதாயினே
சரண்யாய வரேண்யாய சர்வேஷாய நமோ நம:
-
----------------------
-குமரன்
'ரத சப்தமி விரத் மஹாத்மியம்' என்ற நூலில் பார்க்கலாம்.
அதில் தந்துவர்த்தனன் (தந்து - நூல்) என்ற பிரம்ம குமாரனுக்கு
சூரிய குமாரியை மணம் முடிக்கும் வைபவம் சொல்லப்பட்டிருக்கும்.
அந்த கதையின் படி தந்துவர்த்தனனே சௌராஷ்ட்ரர்களின்
மூதாதை. அந்த திருமணத்தின் போது சூரிய குமாரனான சனீஸ்வரன்
தனக்குச் சொந்தமான சௌராஷ்ட்ர தேசத்தைத் தன் சகோதரிக்கு
சீதனமாகக் கொடுப்பார்.
அந்தத் திருமணத்தின் போது ஒரு நாள் மட்டும், அதாவது ரத சப்தமி
நாளில் மட்டும் சூரியன் தன் மகள் கல்யாணத்தைக் கவனித்துக் கொள்ள,
அருணன் சூரியனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு சூரியனுடைய
கடமையைச் செய்ததாக இந்த நூல் கூறும்.
-
சனைச்சராய சாந்தாய சர்வாபீஷ்ட ப்ரதாயினே
சரண்யாய வரேண்யாய சர்வேஷாய நமோ நம:
-
----------------------
-குமரன்
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
T.N.Balasubramanian wrote:சனீச்வரன் என்பது தப்பான சொல் . இன்னும் சிலர் ,கிரகங்களில் ,இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவர்.
வானியல் ரீதியாக பார்க்கும் போது ,மற்ற எல்லா கிரகங்களும் , சனி கிரகத்துடன் ஒப்பிடும் போது சூரியனை சுற்றிவரும் காலங்கள் குறைவே.
உதாரணத்திற்கு குரு கிரகம், சூரியனை சுற்றி வர 12 வருடம் எடுத்துக்கொள்ளும் புதன் 3 மாதம் எடுத்துக் கொள்ளும் . சனி 30 வருடம் எடுத்துக் கொள்ளும் . சுற்றின் ஓட்ட காலம் அதிகம் . அதனாலேயே "மந்தன் "
மெதுவாக நடப்பவன் என்ற அர்த்ததில் சொல்லுவது உண்டு .தேவநாகரியில் , சனை: சர : என்பார்கள்.
சனைஹி சரஹ என்பதின் சுருக்கம் சனைச்சரன் ....விந்திவிந்தி நடப்பவன் .
நாம் காலப்போக்கில் சனீச்வரன் என்றும் ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றும் கூறுகிறோம் .
தற்போதைய உதாரணம் : சென்னையில் Hamilton Bridge --தமிழில் ஆமில்டன் பிரிட்ஜ் என்றும்
அம்பட்டன் வாராவதி என்றும் ,பிறகு அதுவே ஆங்கிலத்தில் பார்பர்'ஸ் பிரிட்ஜ் ஆகிவிட்டது .
ரமணியன்
மிக அருமையான விளக்கம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சனீஸ்வரபகவானை எவ்வாறு வழிபடுவது?
ayyasamy ram wrote:
-
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லிங்க வடிவில் சிவனை வழிபடுவது ஏன்?
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
» பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
» நட்சத்திரப்படி எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது சிறப்பு என்பதைத் தெரிந்து கொள்வோம்
» குழந்தை எவ்வாறு !!!!!!!!!!!!!!!!!!!!!
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
» பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
» நட்சத்திரப்படி எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது சிறப்பு என்பதைத் தெரிந்து கொள்வோம்
» குழந்தை எவ்வாறு !!!!!!!!!!!!!!!!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|