Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம்: இறைவி
2 posters
Page 1 of 1
திரை விமர்சனம்: இறைவி
-
ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும்
பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’.
அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர்.
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம்
வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக
மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி)
துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா)
அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி).
இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார்,
ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
-
Re: திரை விமர்சனம்: இறைவி
-
திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த சினிமாத்தனமான
கனவுகள் கொண்டவர் பொன்னி (அஞ்சலி). பொன்னிக்கும்
மைக்கேலுக்கும் திருமணமாகிறது.
பட வெளியீடு தொடர்பான தகராறு உச்சத்தை எட்ட,
பல குளறுபடிகளும் விபரீ தங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்வைக்
கலைத்துப் போடுகின்றன. இவற்றின் முடிவு என்ன என்பதைச்
சொல்கிறது இந்த நீண்ட படத்தின் கதை.
பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ அற்ற ஆண்களின்
போக்கு பெண்களின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைப்
படம் அழுத்தமாகக் காட்டுகிறது.
விசுவாசத்தின் அதீத எல்லைக்குள் பிரவேசிக்கும் மைக்கேல்
, அதனால் பெற்ற பாதிப்பைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே
எல்லைக்குள் பிரவேசிக்கிறான். மது அடிமை மையத்தில் சிகிச்சை
பெற்றுத் திரும்பிய அருள் மீண்டும் தடாலடி முடிவை எடுக்கிறான்.
தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு
செயல்படும் ஜகனின் செயல்பாடு, பிறரது வாழ்வைச் சிதைக்கிறது.
மனைவி மீதான தொடர் அலட்சியம் அருளின் தந்தையின் மீதான
பெரும் குற்ற உணர்வாய்க் கவிகிறது.
உணர்ச்சி சமநிலையோ, பொறுமையோ, நுண்உணர்வோ அற்ற
ஆண்கள் திரும்பத் திரும்பச் சறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மழையைச் சுதந்திரத்தின் குறியீடாகக் காட்டியிருக்கும் விதம்
கவித்துவமானது.
வசனங்கள் கூர்மையாகவும் வலுவாக வும் உள்ளன.
எனினும், பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத்
திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது.
பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளுக்கு அளிக்கும்
முக்கியத்துவம் சில இடங்களில் சமநிலை தவறுகிறது. ஆண் பெண்
உறவு சார்ந்த சித்தரிப்பில் ஆழம் இல்லை.
Re: திரை விமர்சனம்: இறைவி
-
ஆண்கள் அனைவருமே நிதானமற்றவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பு
எதார்த்தத்துக்குப் புறம்பானது. கோவலன் கண்ணகி கதையாடலைச்
சமகாலத்தில் பொருத்திக்காட்டும் முயற்சி முழுமை பெறவில்லை.
சிலைத் திருட்டுக் காட்சிகள் படத்தின் ஆதார நோக்கத்தில் இருந்து
கவனத்தை விலக்குகின்றன.
இறுதிக் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் நாடகத்தன்மை தூக்கலாக
உள்ளது. பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பு பலவீனம்.
தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம்
வலுவானது. ஆனால், இந்தப் பாத்திரம் புனிதமாக்கப்படுவதைத்
தவிர்த்திருக்கலாம்.
எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரங்களை உணர்ந்து இயல்பாக
நடித்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். எஸ்.ஜே.சூர்யா,
விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி, பூஜா தேவாரியா, ராதா ரவி, பாபி சிம்ஹா,
சீனுமோகன் ஆகியோரின் நடிப்பு அவர்களைக் கதாபாத்திரங்களாக
மட்டும் காண வைக்கிறது.
கிளைமாக்ஸில் சூர்யாவின் நடிப்பு அவரைத் தேர்ந்த நடிகராக அடையாளம்
காட்டுகிறது. தன் பாத்திரத்தை உணர்ந்து ஆழமான நடிப்பைத் தந்துள்ளார்
அஞ்சலி.
மழைக் காட்சியில் தொடங்கி மழைக்காட் சியில் முடியும் படத்தில் சிவகுமார்
விஜயனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிக்குமான ஒளியமைப்பு (லைட்டிங்)
கதைக்குப் பெருந் துணை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார்.
பின்னணி இசை கதை யோட் டத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
படத்தொகுப் பில் விவேக் ஹர்சன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தப் படமும் உபரிக் காட்சிகளுடன் மூச்சுமுட்ட வைக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல
முயன்றதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இது
போன்ற தீவிரமான கதையைக் கட்டுக்கோப்பான கால அளவில், ஈர்க்கக்கூடிய
படமாகத் தந்திருந்தால் இறைவி அருமையான தரிசனமாக அமைந்திருக்கும்.
–
——————————
தமிழ் தி இந்து காம்
Re: திரை விமர்சனம்: இறைவி
பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத்
திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல
முயன்றதற்காக .............. .ஆமாம் முயன்று தான் இருக்கிறார், விளம்பரத்தில் வந்தது போல பெண்களின் வலிகளை எடுத்துசொல்லும் படம் இல்லை இது..........மஹா போர்.........நல்ல தமிழ் படம் பார்க்க ஆசை இருந்தாலும் முடியலை ...
.
.
.களம் நல்லா இருந்தது , மனிதன் ரீமேக் பிலிம்...........
திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல
முயன்றதற்காக .............. .ஆமாம் முயன்று தான் இருக்கிறார், விளம்பரத்தில் வந்தது போல பெண்களின் வலிகளை எடுத்துசொல்லும் படம் இல்லை இது..........மஹா போர்.........நல்ல தமிழ் படம் பார்க்க ஆசை இருந்தாலும் முடியலை ...
.
.
.களம் நல்லா இருந்தது , மனிதன் ரீமேக் பிலிம்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்: ஜோ
» திரை விமர்சனம்- ஆடை
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜோ
» திரை விமர்சனம்- ஆடை
» திரை விமர்சனம்: ஜோ
» மஹா திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|