Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் மரியாதை இல்லையா?
+2
சிவனாசான்
krishnaamma
6 posters
Page 1 of 1
வீட்டில் மரியாதை இல்லையா?
வீட்ல எலி; வெளியில புலி என்று, ஒரு தமிழ்ப் படம் வெளி வந்ததே, நினைவில் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் கதை இதுதான்!
'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர்.
தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... அதை, இங்கே எழுத யோசனையாக இருக்கிறது.
'இப்பத்தான் கொட்டிக்கிட்டு, எங்கோ போயிருக்கு...' என்பது, அவர் கூறியதன் நாகரிக (?) வடிவம்!
பல வீடுகளில் இப்படித்தான்... வெளி உலகம் போற்றும்; துதிபாடும்; தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்; ஆனால், வீட்டில் சரியான மரியாதை இராது.
புகழ் மிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்களை விடுங்கள். பல குடும்பத் தலைவர்களுக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும் கூட வீட்டில் மரியாதை தரப்படுவது இல்லை.
'நான்கு பேர்களுடன், இன்று இரவு சாப்பிட வருகிறேன்; விருந்து பலமாக இருக்கட்டும்...' என்றார் ஒருவர்.
'ஆகட்டுங்க; அழைச்சிட்டு வாங்க...' என்று வந்தது பதில்.
'சாரி... ராங் நம்பர்...' என்று, உடனே போனை வைத்து விட்டார். காரணம், இவரது வீடாக இருந்திருந்தால், என்ன பதில் (எதிர்ப்புக்குரல்) வந்திருக்கும் என்பது, இவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
'என் கண்ணாடி எங்கே எடுத்துக் கொடு...' என்றால், 'எங்கே வச்சீங்க... நீங்களே தேடி எடுத்துக்குங்க...' என்பது, பலர் வீடுகளில் நடக்கும் உரையாடல்!
நான் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு தமிழர் வீட்டில், வீட்டிற்குரியவர், தன் மனைவியிடம், பரிதாபக் குரலில், 'வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் போதாவது, கொஞ்சம் கத்தாமல் பேசு; மானம் போகுது...' என்று கூறினார்.
ஒரு தமிழக பெண் சட்டசபை உறுப்பினர், பொது இடங்களில் கணவரை நடத்தும் விதம் அபாரம். வீட்டிற்குள் நுழைந்ததும் பார்க்க வேண்டுமே... பாவம் அந்த மனுஷன்!
அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'
எந்த வீட்டில், விருந்தினருக்கு இப்படிப்பட்ட மரியாதை தொடர்கிறது? பெரும்பாலும் இல்லை.
விருந்தினருக்கு முதல் நாள் அருகிலிருந்து உணவு பரிமாறுவார் நண்பரின் மனைவி. மூன்று, நான்கு தினங்கள் சென்றதும், 'மேஜையில் எல்லாமே வச்சிருக்கேன்; நீங்களே வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்பிடுங்க...' என்பார்.
விருந்தினர்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல மரியாதை குறைகிற போது, கூடவே வாழ்கிறவர்கள், எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?
'பழகி விட்ட உரிமை' என்று ஒன்று உண்டு. இதுதான், பலர் விஷயங்களில், மரியாதையானது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகக் காரணம்!
ஆண்கள் செய்யும் தவறுகள், அவர்களைப் பற்றி தேங்கிப் போன மன வருத்தங்கள், இழைக்கும் குற்றங்கள், அநீதிகள் மற்றும் இழைத்த கொடுமைகளே மரியாதை கெட காரணம். வீட்டிலிருப்போர் பணம், புகழ் மற்றும் பொதுவாழ்வில் உள்ள அங்கீகாரம் ஆகிய முகமூடிகளையெல்லாம் மானசீகமாகக் கழற்றி விட்டே, தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்க்கின்றனர்; வெளிநபர்கள் அப்படி அல்ல, நடமாடும் கஜானாவாக, புகழ் ஒளி நட்சத்திரமாக பார்க்கின்றனர். மரியாதை வேறுபட, இதுவே காரணம்!
வீட்டினர், வெளிப்பார்வையிலிருந்து மாறு பட்டு பார்ப்பதை, குறையாகச் சொல்லி விட முடியாது; ஒரு மகத்தான உண்மை என்ன தெரியுமா?
நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே நடத்தப்படுகிறோம். நாம் சுமாராக நடத்தப்படுவதை, நாமே ஏற்று, இதனினும் கீழாக இறங்கிப் போய் நடந்து கொள்கிறோம். இதனால் தான், மரியாதை என்பது மேலும் குறைகிறது.
வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!
லேனா தமிழ்வாணன்
'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர்.
தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... அதை, இங்கே எழுத யோசனையாக இருக்கிறது.
'இப்பத்தான் கொட்டிக்கிட்டு, எங்கோ போயிருக்கு...' என்பது, அவர் கூறியதன் நாகரிக (?) வடிவம்!
பல வீடுகளில் இப்படித்தான்... வெளி உலகம் போற்றும்; துதிபாடும்; தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்; ஆனால், வீட்டில் சரியான மரியாதை இராது.
புகழ் மிக்கவர்கள் மற்றும் செல்வந்தர்களை விடுங்கள். பல குடும்பத் தலைவர்களுக்கும், வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும் கூட வீட்டில் மரியாதை தரப்படுவது இல்லை.
'நான்கு பேர்களுடன், இன்று இரவு சாப்பிட வருகிறேன்; விருந்து பலமாக இருக்கட்டும்...' என்றார் ஒருவர்.
'ஆகட்டுங்க; அழைச்சிட்டு வாங்க...' என்று வந்தது பதில்.
'சாரி... ராங் நம்பர்...' என்று, உடனே போனை வைத்து விட்டார். காரணம், இவரது வீடாக இருந்திருந்தால், என்ன பதில் (எதிர்ப்புக்குரல்) வந்திருக்கும் என்பது, இவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
'என் கண்ணாடி எங்கே எடுத்துக் கொடு...' என்றால், 'எங்கே வச்சீங்க... நீங்களே தேடி எடுத்துக்குங்க...' என்பது, பலர் வீடுகளில் நடக்கும் உரையாடல்!
நான் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு தமிழர் வீட்டில், வீட்டிற்குரியவர், தன் மனைவியிடம், பரிதாபக் குரலில், 'வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் போதாவது, கொஞ்சம் கத்தாமல் பேசு; மானம் போகுது...' என்று கூறினார்.
ஒரு தமிழக பெண் சட்டசபை உறுப்பினர், பொது இடங்களில் கணவரை நடத்தும் விதம் அபாரம். வீட்டிற்குள் நுழைந்ததும் பார்க்க வேண்டுமே... பாவம் அந்த மனுஷன்!
அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'
எந்த வீட்டில், விருந்தினருக்கு இப்படிப்பட்ட மரியாதை தொடர்கிறது? பெரும்பாலும் இல்லை.
விருந்தினருக்கு முதல் நாள் அருகிலிருந்து உணவு பரிமாறுவார் நண்பரின் மனைவி. மூன்று, நான்கு தினங்கள் சென்றதும், 'மேஜையில் எல்லாமே வச்சிருக்கேன்; நீங்களே வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்பிடுங்க...' என்பார்.
விருந்தினர்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல மரியாதை குறைகிற போது, கூடவே வாழ்கிறவர்கள், எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?
'பழகி விட்ட உரிமை' என்று ஒன்று உண்டு. இதுதான், பலர் விஷயங்களில், மரியாதையானது, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகக் காரணம்!
ஆண்கள் செய்யும் தவறுகள், அவர்களைப் பற்றி தேங்கிப் போன மன வருத்தங்கள், இழைக்கும் குற்றங்கள், அநீதிகள் மற்றும் இழைத்த கொடுமைகளே மரியாதை கெட காரணம். வீட்டிலிருப்போர் பணம், புகழ் மற்றும் பொதுவாழ்வில் உள்ள அங்கீகாரம் ஆகிய முகமூடிகளையெல்லாம் மானசீகமாகக் கழற்றி விட்டே, தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்க்கின்றனர்; வெளிநபர்கள் அப்படி அல்ல, நடமாடும் கஜானாவாக, புகழ் ஒளி நட்சத்திரமாக பார்க்கின்றனர். மரியாதை வேறுபட, இதுவே காரணம்!
வீட்டினர், வெளிப்பார்வையிலிருந்து மாறு பட்டு பார்ப்பதை, குறையாகச் சொல்லி விட முடியாது; ஒரு மகத்தான உண்மை என்ன தெரியுமா?
நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படியே நடத்தப்படுகிறோம். நாம் சுமாராக நடத்தப்படுவதை, நாமே ஏற்று, இதனினும் கீழாக இறங்கிப் போய் நடந்து கொள்கிறோம். இதனால் தான், மரியாதை என்பது மேலும் குறைகிறது.
வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
100க்கு 100உணமைஅல்ல .தமிழர்களை அப்படி சீக்கிரம் சும்மா எடை போட்டுவிட முடியாது. தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்கள்>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1209361P.S.T.Rajan wrote:100க்கு 100உணமைஅல்ல .தமிழர்களை அப்படி சீக்கிரம் சும்மா எடை போட்டுவிட முடியாது. தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்கள்>>>>>>>>>>>>>>>>>>
தமிழர்கள் தலைகுனிவை மதிப்பவர்களா ? தாங்கள் கூறுவது புரியவில்லையே !
" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! " என்பதுதானே தமிழர்தம் கொள்கை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
சூப்பர்!வீட்டினர் நம் பணத்தையும், பதவியையும், புகழையும் அவ்வளவாக பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், 'நான் அவர்கள் மதிக்கும் வகையில், என் போக்கை மாற்றிக் கொள்வேன்; அவர்களிடம், வெளியுலக பந்தாவை காட்ட மாட்டேன். என் குடும்ப உறுப்பினர் போற்றும்படி அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வேன்...' என்றெல்லாம், எந்த குடும்ப உறுப்பினர் மனம் மாறி நடந்து கொள்கிறாரோ, அவருக்கு தான் வீட்டிலும் தடபுடல் நடக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
பின்னூடங்களுக்கு நன்றி நண்பர்களே!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1209353krishnaamma wrote:!
அவ்வையார், அதியமானின் அருங்குணங்களுள் ஒன்றாக இப்படிப் பாராட்டுவார். 'முதல் நாள் எப்படி வரவேற்று நடத்துவானோ, அதே அன்பை, தங்கியிருக்கும் எல்லா நாட்களிலும் நடத்துவான்...'
லேனா தமிழ்வாணன்
மருந்தும் விருந்தும் மூன்றுநாள் என்று சொல்வார்கள் .
எப்படிப்பட்ட நெருங்கிய உறவாக இருந்தாலும் , அது மகனுடைய வீடாக இருந்தாலும் அல்லது மகளுடைய வீடாக இருந்தாலும் அதிக நாட்கள் தங்கக்கூடாது . அவர்கள் " இருந்துவிட்டு போகலாம் " என்று சொன்னாலும் " ஊரிலே போட்டது போட்டபடி இருக்க வந்துவிட்டேன் ; உடனடியாகப் போகவேண்டும் " என்று சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும் .
சென்னை போன்ற பெருநகரங்களில் , புறாக் கூண்டு போன்ற வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள் . அங்கு அவர்களுக்கு ஏகப்பட்டப் பிரச்சினைகள் இருக்கலாம் . அதில் நாமும் ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது .
ஆனால் சங்ககாலத்தில் வாழ்ந்த அதியமான் , ஔவை என்றும் தன்னோடு இருக்கவேண்டும் என்று பிரியப்பட்டான் . முதல்நாள் பழகியது போலவே எல்லா நாட்களிலும் அவரிடம் அன்பு காட்டினான் . அந்தப்
பாடலைப் பாருங்கள் .
புறநானூறு 101, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன் அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
அருமை அருமை அருமை ஐயா, அது தான் உயர்ந்த நட்பு ! ................உயர்ந்த அன்பு !!...............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் மரியாதை இல்லையா?
நன்றி ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|