ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சொத்து கடவுளுக்கே...

+4
விமந்தனி
M.Jagadeesan
ராஜா
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by ayyasamy ram Sun May 29, 2016 7:36 pm

ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை

கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.

பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.

சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.

அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.

அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.

'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.

'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.

'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.

பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.

'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.

'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.

அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.

இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------

- தி.செல்லப்பா
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by ராஜா Sun May 29, 2016 8:18 pm

"சிவன் சொத்து குலநாசம் " என்று சொல்லுவார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by M.Jagadeesan Sun May 29, 2016 10:00 pm

பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by விமந்தனி Mon May 30, 2016 12:05 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
அதானே?


கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடவுள் சொத்து கடவுளுக்கே... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடவுள் சொத்து கடவுளுக்கே... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by krishnaamma Mon May 30, 2016 9:43 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.


கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் ! ...........அருமையான பகிர்வு ராம் அண்ணா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by krishnaamma Mon May 30, 2016 9:47 am

M.Jagadeesan wrote:பூவை முகர்ந்ததற்கே மூக்கை வெட்டினால், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளுக்கு என்ன தண்டனை கொடுப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1209200

என்ன ஐயா இது ? ஸ்வாமிக்கு பூ தொடுக்கும்போது முகர்ந்து பார்க்கலாமா? தான் ராணி என்பதாலேயே அல்லவா அவங்க அங்கு போய் கை வைத்து எடுக்க முடிந்தது.......நாம் யாராவது அப்படி செய்வோமா?.............அந்த ஆணவத்திர்க்கான பதில் தான் அவர் தந்த தண்டனை.............
.
.
.
ஆண்டாள் கதையே வேறு, சிறு குழந்தை , அறியாமல் செய்தாள், அன்பால் செய்தாள், அதுவும் தான் ரங்கனுக்கு ஈடா என்று பார்க்க செய்தாள் புன்னகை........இரண்டையும் ஒன்றாக்கி விட்டீங்களே? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by M.Jagadeesan Mon May 30, 2016 11:03 am

அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by krishnaamma Tue May 31, 2016 12:21 am

M.Jagadeesan wrote:அவள் குழந்தை என்பது பெரியாழ்வார்க்குத் தெரியாதா ? பிறகு ஏன் ஆண்டாளை அவர் கண்டித்தார் ? அங்கு பெரியாழ்வார் செய்ததும் தவறுதானே ?

நான் சொல்ல வருவது என்னவென்றால் ராணி செய்ததும் தவறல்ல; ஆண்டாள் செய்ததும் தவறல்ல !
தவறெல்லாம் நாம் பார்க்கின்ற கோணத்தில்தான் இருக்கிறது .

தான் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றிக் கறியைத் , தான் சுவைத்துப் பார்த்த பின்னரே , சுவை மிகுந்த கறித் துண்டுகளை இறைவனுக்குக் கண்ணப்பர் படைத்தார் . அது தவறென்று இறைவனே சொல்லவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1209273

அவள் குழந்தை என்று தெரிந்து தான் அவளுக்கு , 'இப்படி செய்யக் கூடாது ' என்று பெரியாழ்வார் சொல்லிக்கொடுத்தார்.............தண்டிக்கலை...........கண்டிக்க மட்டுமே செய்தார்.............

ஆனால் , ஒரு நாட்டின் ராணி அடக்கமின்றி, ஆணவமாய்  அப்படி செய்தது தவறு அதனால் தண்டிக்கப்பட்டாள்.....

அடுத்தது,   கண்ணப்பர் ..............இவர் போல  சபரி போல  நிறைய பேர் இருக்கிறார்கள் ............ஆண்டவனிடம்  அன்பு வயப்பட்டவர்கள்............ அவர்களின் செயல்களில் இருந்து அவர்களின் தீவிர அன்பைத்தான் பார்க்கிறோமே தவிர அந்த ராணி போல ஆணவமாய் யாருமே நடக்கலை ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by சிவனாசான் Tue May 31, 2016 6:15 am

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------தற்காலத்தவர் செய்ய நினைப்பாவது வருமா? சொத்தையே அபகரிக்க அல்லவோசட்டம் கொண்டு வருவேன் என்றனர். நல்ல பக்தி பதிவுங்க .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by M.Jagadeesan Tue May 31, 2016 8:48 am

இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .

பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கடவுள் சொத்து கடவுளுக்கே... Empty Re: கடவுள் சொத்து கடவுளுக்கே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» கடவுளுக்கே லஞ்சமா /
»  உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum