Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
3 posters
Page 1 of 1
திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’.
இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான்.
அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம், காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள் போன்றவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கும் இப்படியெல்லாம் அவ்வப்போது பேட்டிகளின் மூலமாக ரசிகர்களின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர்.
சரி.. அப்படி என்னதான் இருக்கு படத்தில்?
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் பெண் பார்க்கிறார். அந்தப் பொண்ணு தான் நயன்தாரா. சிம்புவுக்கு நயன்தாராவைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. (இருக்காதா பின்னே?).
நயன்தாராவும், சிம்புவும் முதல் தடவை சந்தித்துப் பேசும் போதே, சிம்புவின் லீலைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார் நயன்தாரா. அங்கு தான் கதையில் ஆண்ட்ரியா வருகிறார்.
ஆண்ட்ரியாவுடனான காதல் பற்றி சிம்பு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார். அந்தக் காதல் ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனையால் முடிவுக்கு வருகிறது.
இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னர், சிம்பு-நயன்தாரா இடையே ஏற்படும் காதல், கல்யாணத்தில் முடிகிறதா? கட் ஆகிறதா? என்பது தான் மீதிக் கதை.
.......................
இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான்.
அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம், காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள் போன்றவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கும் இப்படியெல்லாம் அவ்வப்போது பேட்டிகளின் மூலமாக ரசிகர்களின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர்.
சரி.. அப்படி என்னதான் இருக்கு படத்தில்?
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் பெண் பார்க்கிறார். அந்தப் பொண்ணு தான் நயன்தாரா. சிம்புவுக்கு நயன்தாராவைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. (இருக்காதா பின்னே?).
நயன்தாராவும், சிம்புவும் முதல் தடவை சந்தித்துப் பேசும் போதே, சிம்புவின் லீலைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார் நயன்தாரா. அங்கு தான் கதையில் ஆண்ட்ரியா வருகிறார்.
ஆண்ட்ரியாவுடனான காதல் பற்றி சிம்பு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார். அந்தக் காதல் ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனையால் முடிவுக்கு வருகிறது.
இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னர், சிம்பு-நயன்தாரா இடையே ஏற்படும் காதல், கல்யாணத்தில் முடிகிறதா? கட் ஆகிறதா? என்பது தான் மீதிக் கதை.
.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
நடிப்பு !
சிம்பு .. மூன்று ஆண்டுகளாக படம் இழுத்துக் கொண்டே சென்றதாலோ என்னவோ.. ஒல்லியாக, சற்று உப்பலாக, ஒரு பாடல் காட்சியில் மிகவும் எடை கூடி என மூன்று விதமாகத் தெரிகிறார்.
ஒரு காலத்தில் விரலை ஆட்டி, தலையை சிலிப்பி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருந்த சிம்புவா இது? என்று எண்ணும் அளவிற்கு இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக அடங்கி ஒடுங்கி நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் கூட சிம்பு முஷ்டி முறுக்கவோ, முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவோ, 10 பேரைப் பந்தாடவோ அவசியம் இருக்காத அளவிற்கு அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.
மயிலா கதாப்பாத்திரத்தில் நயன்தாரா.. அழகாக இருக்கிறார். சிம்புவை அலையவிட்டு பல சோதனைகள் செய்த பிறகே காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் அவரது கதாப்பாத்திரம், பின்னர் “குட்டிம்மா” என்றழைக்கும் படி அன்னியோன்யமாக மாறுவது பெண்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது.
கொஞ்ச நேரம் வந்தாலும் ஆண்ட்ரியா ரசிக்க வைத்துவிட்டு, அப்படியே கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்.
சிம்புவோடு, கடைசி வரை வந்து காமெடியில் கலக்கியிருப்பது சூரி தான். இந்தப் படத்தில் சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு 5 நிமிடக் காட்சிக்காக சந்தானம் வருகிறார். அவ்வளவு தான். மற்றபடி சூரி தான் எல்லாம்.
இவர்களோடு, ஜெயப்பிரகாஷ், உதய் மகேஷ், தீபா, மதுசூதனன் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
.......................
சிம்பு .. மூன்று ஆண்டுகளாக படம் இழுத்துக் கொண்டே சென்றதாலோ என்னவோ.. ஒல்லியாக, சற்று உப்பலாக, ஒரு பாடல் காட்சியில் மிகவும் எடை கூடி என மூன்று விதமாகத் தெரிகிறார்.
ஒரு காலத்தில் விரலை ஆட்டி, தலையை சிலிப்பி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருந்த சிம்புவா இது? என்று எண்ணும் அளவிற்கு இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக அடங்கி ஒடுங்கி நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் கூட சிம்பு முஷ்டி முறுக்கவோ, முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவோ, 10 பேரைப் பந்தாடவோ அவசியம் இருக்காத அளவிற்கு அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.
மயிலா கதாப்பாத்திரத்தில் நயன்தாரா.. அழகாக இருக்கிறார். சிம்புவை அலையவிட்டு பல சோதனைகள் செய்த பிறகே காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் அவரது கதாப்பாத்திரம், பின்னர் “குட்டிம்மா” என்றழைக்கும் படி அன்னியோன்யமாக மாறுவது பெண்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது.
கொஞ்ச நேரம் வந்தாலும் ஆண்ட்ரியா ரசிக்க வைத்துவிட்டு, அப்படியே கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்.
சிம்புவோடு, கடைசி வரை வந்து காமெடியில் கலக்கியிருப்பது சூரி தான். இந்தப் படத்தில் சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு 5 நிமிடக் காட்சிக்காக சந்தானம் வருகிறார். அவ்வளவு தான். மற்றபடி சூரி தான் எல்லாம்.
இவர்களோடு, ஜெயப்பிரகாஷ், உதய் மகேஷ், தீபா, மதுசூதனன் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
திரைக்கதை
ஒரு முழு நீளப் படமாக எடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் கதை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குறுகிய காலத்தில் நடக்கும் உரையாடல்கள், பிரச்சனைகள், கொஞ்சல்கள், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை வைத்து திரைக்கதை அமைத்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
மம்முட்டி, பானுப்பிரியா நடித்த ‘அழகன்’ என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சியில் இரவு பேசத் தொடங்கும் இருவரும், விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு பாடல் காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பாடல் காட்சியே ஒரு மணி நேரம் நீடித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது இந்தப் படத்திலும்.
சிம்பு, நயன்தாரா இடையேயான காதல் வெறும் போன் உரையாடல்களிலேயே செல்வது நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போனாலும் கூட, படம் பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
நல்ல வேளையாக, அந்தக் காட்சிகளில் இடையே சூரியை திணித்து, “இந்த பாரு.. எக்ஸ் லவ்வரு பேராச் சொல்றாங்க”, “நடிங்கடா.. நடிங்கடா.. எமன் கையில லெமன் கெடச்ச மாதிரி.. ஜூஸ் புளியாம விடமாட்டாங்க” இப்படியாகக் காமெடி வசனங்களை பேச வைத்திருப்பதால், தொடர்ந்து நம்மால் படம் பார்க்க முடிகின்றது.
படத்தின் தொடக்கத்தில் வரும் ஐடி நிறுவனங்களின் அறிமுகம் ரசிக்க வைத்தது. ஆனால் அவ்வளவு நீண்ட அறிமுகத்திற்கும், படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிம்பு ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் மேனேஜர் என்பதைத் தவிர.
இப்படியாக கதைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொடக்கம், காரணமே இல்லாமல் பிரியும் ஒரு காதல், அழுத்தமே இல்லாத காட்சிகள் என திரைக்கதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நகர்வதை ரசிக்க முடியவில்லை.
...........................
ஒரு முழு நீளப் படமாக எடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் கதை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குறுகிய காலத்தில் நடக்கும் உரையாடல்கள், பிரச்சனைகள், கொஞ்சல்கள், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை வைத்து திரைக்கதை அமைத்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
மம்முட்டி, பானுப்பிரியா நடித்த ‘அழகன்’ என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சியில் இரவு பேசத் தொடங்கும் இருவரும், விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு பாடல் காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பாடல் காட்சியே ஒரு மணி நேரம் நீடித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது இந்தப் படத்திலும்.
சிம்பு, நயன்தாரா இடையேயான காதல் வெறும் போன் உரையாடல்களிலேயே செல்வது நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போனாலும் கூட, படம் பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
நல்ல வேளையாக, அந்தக் காட்சிகளில் இடையே சூரியை திணித்து, “இந்த பாரு.. எக்ஸ் லவ்வரு பேராச் சொல்றாங்க”, “நடிங்கடா.. நடிங்கடா.. எமன் கையில லெமன் கெடச்ச மாதிரி.. ஜூஸ் புளியாம விடமாட்டாங்க” இப்படியாகக் காமெடி வசனங்களை பேச வைத்திருப்பதால், தொடர்ந்து நம்மால் படம் பார்க்க முடிகின்றது.
படத்தின் தொடக்கத்தில் வரும் ஐடி நிறுவனங்களின் அறிமுகம் ரசிக்க வைத்தது. ஆனால் அவ்வளவு நீண்ட அறிமுகத்திற்கும், படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிம்பு ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் மேனேஜர் என்பதைத் தவிர.
இப்படியாக கதைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொடக்கம், காரணமே இல்லாமல் பிரியும் ஒரு காதல், அழுத்தமே இல்லாத காட்சிகள் என திரைக்கதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நகர்வதை ரசிக்க முடியவில்லை.
...........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
ஒளிப்பதிவு, இசை, வசனம்
பால சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சென்னையில் வளர்ச்சியடைந்த பகுதிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. டாப் ஆங்கிலில் காட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரயில், சாலைகள் ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.
குரளரசன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.. “காத்தாக வந்த பெண்ணே”, “என் இராகம் ஒரு தலராகம்” போன்றவை மனதில் பதியும் அளவிற்கு புதுமை.
படத்தில் காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் எவ்வளவு அலுப்பைத் தருகிறதோ, அதற்கு நேர்மாறாக சிம்பு – சூரி பேசிக் கொள்ளும் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
உதாரணமாக, சிம்பு “நான் அவளை லவ் பண்றேன் டா” என்பார்.. உடனே சூரி.. “எவ்வளவு நாளைக்கு சகோ?” என்று பதிலுக்கு கேள்வி கேட்பார். இப்படியாக படத்தில் ரசிப்பதற்கான இடமும் உள்ளது.
ஆக, படத்தில் வரும் இயல்பான, எதார்த்தமான கதையோட்டம் தான் பலமாகவும், பலவீனமாகவும் தெரிகின்றது.
மொத்தத்தில், இப்படம் நவீன சூழலுக்கு ஏற்ப இளைஞர்களையும், காதலில் இருப்பவர்களையும் கவரும். ஆனால் எல்லா தரப்பினரையும்? என்பது கேள்விக் குறி தான்.
ஃபீனிக்ஸ்தாசன்
நன்றி: செல்லியல்
பால சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சென்னையில் வளர்ச்சியடைந்த பகுதிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. டாப் ஆங்கிலில் காட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரயில், சாலைகள் ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.
குரளரசன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.. “காத்தாக வந்த பெண்ணே”, “என் இராகம் ஒரு தலராகம்” போன்றவை மனதில் பதியும் அளவிற்கு புதுமை.
படத்தில் காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் எவ்வளவு அலுப்பைத் தருகிறதோ, அதற்கு நேர்மாறாக சிம்பு – சூரி பேசிக் கொள்ளும் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
உதாரணமாக, சிம்பு “நான் அவளை லவ் பண்றேன் டா” என்பார்.. உடனே சூரி.. “எவ்வளவு நாளைக்கு சகோ?” என்று பதிலுக்கு கேள்வி கேட்பார். இப்படியாக படத்தில் ரசிப்பதற்கான இடமும் உள்ளது.
ஆக, படத்தில் வரும் இயல்பான, எதார்த்தமான கதையோட்டம் தான் பலமாகவும், பலவீனமாகவும் தெரிகின்றது.
மொத்தத்தில், இப்படம் நவீன சூழலுக்கு ஏற்ப இளைஞர்களையும், காதலில் இருப்பவர்களையும் கவரும். ஆனால் எல்லா தரப்பினரையும்? என்பது கேள்விக் குறி தான்.
ஃபீனிக்ஸ்தாசன்
நன்றி: செல்லியல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
ரொம்ப போர் படம் .......இதுக்கா இத்தனை வருடங்கள் இழுத்தடித்தார்கள்?...................இதுல stay ஆர்டர் வெறியா...........ஒருவேளை இந்தப்படத்தை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் நொந்து போகக்கூடாது / கஷ்டப்படக் கூடாது என்று தான் stay ஆர்டர் வாங்க முயன்றார்களோ?.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
சண்டை இல்லை, பன்ச் இல்லை,
விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை.
அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம்
அடிக்கவில்லை.
எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான
நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு.
-
விரலை ஆட்டும் வித்தைகள் இல்லை.
அட, டான்ஸில்கூட குட்டிக்கரணம்
அடிக்கவில்லை.
எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான
நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் சிம்பு.
-
Re: திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!
மேற்கோள் செய்த பதிவு: 1209048M.Jagadeesan wrote:இந்தக் காலத்துப் படங்களைப் பார்ப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் ! அந்தநேரத்தில் உருப்படியாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்யலாம் .
ஆமாம் ஐயா, இதை வேற 500 , 1000 என்று பணம் கொடுத்து பார்க்கிறார்கள் ................
'
'
'
முன்பெல்லாம் சினிமாவில் ஏதாவது 'மெசேஜ்' இருக்கும், அப்புறம் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் வந்ததன..........இப்போ?????.....எதுக்கு இந்த படம் எடுத்தாங்க?........எடுத்ததும் போட்டு பார்க்க மாட்டாங்களா?..............பணத்தை இப்படி வேஸ்ட் பண்ணறாங்களே ............என்னடா இது?.......... என்று புரிவதற்குள் படமே முடிந்துவிடுகிறது..........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நம்ம காதல்
» நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்
» பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்!
» நம்ம காதல் உங்கப்பாவுக்கு தெரிஞ்சதுக்கா கவலைப்படறே..?
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்
» பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|