புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
15 Posts - 3%
prajai
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெண் வேசம் I_vote_lcapபெண் வேசம் I_voting_barபெண் வேசம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வேசம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2016 1:25 pm

பெண் வேசம் RhUt3739SzxzVykam22B+kadhir8
-
முப்பத்தி ஐந்து வயது முடிந்திருக்கும். உமாவிற்கு பக்கத்து
வீட்டு கமலம் மூலமாக ஒரு நல்ல வரன் வந்திருக்கிறது.
பெயர் விசுவம். கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாராம்.
வயது நாப்பது ஆகிறதென்று அம்மா வந்து சொன்னதும் உமாவின்
நெஞ்சிற்குள் சின்னதாய் ஒரு சந்தோசம் தலைகாட்டியது.

எல்லாப் பெண்களையும் போல அவளுக்கும் இருபது வயதில்
கல்யாண ஆசைகள் விதவிதமாக வண்ணம் காட்டியபோது,
படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த தம்பி சேகர் தனக்குப் பின்னே
கல்யாணத்திற்காக காத்திருக்கும் தங்கைகளான கௌரி, நீலா.
“சர்க்கரை நோயையும், முட்டி வலியையும்’ தனக்குள் வைத்துக்
கொண்டு இரண்டாயிரம் ரூபாய் மாத்திரைகளில் தன் வாழ்நாளை
கழிக்கும் அம்மா என்று அவளுக்கான கடமைகள் நிறையவே இருந்தன.

அதனால் கல்யாண ஆசையை அவள் பிறருக்குத் தெரியாமல்
தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். இப்போது அத்தை கமலம்
கொண்டு வந்த வரத்தால் இத்தனை நாளும் இதயத்தினடியில் கிடந்த
ஆசையின் விதைகள் இப்போது கிளர்ந்தெழுகிறதோ? என்று
நினைத்தவளுக்கு தன் தம்பியான சேகர் மீதுதான் இரக்கம் பொங்கியது.
அவன்தான் இவளுக்கு கல்யாணம் முடித்து வைக்க வேண்டுமென்று
துடிக்கிறான்.

“எங்கேயாவது ஒரு மாப்பிள்ளை இவள் வயதுக்கு ஏற்ற மாதிரி
இருக்கிறானாம்’ என்று கேள்விப்பட்டால் போதும், உடனே லீவு எடுத்துக்
கொண்டு அந்த இடத்தைப் பற்றி விசாரித்தவாறு ஓடுவான். ஆனால்
வரும்போது ஏதாவது ஒரு பொருத்தமில்லையென்று முகம் கொராவி
வருவான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2016 1:25 pm


உமாவின் செவியோரத்தில் இப்போது நரைகள் கூட விழுந்துவிட்டன.
ஆனாலும் அவன் ஓடிக் கொண்டுதான் இருந்தான். “”இந்த வயசுக்குப்
பிறகு இனிமேல் எதுக்குடா எனக்கு கல்யாணம்?” என்று சொன்னால்,
“பேசாம இருக்கா நீ எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கே, அதுக்கு
பதிலா நாங்க உனக்கு கல்யாணம் செஞ்சி பாக்குறதுதான் அழகு.
என் கடமையும்கூட” என்பான்.

நிஜமாகவே உமாவிற்கு இருபது வயது ஆன போது, ஒரு பெரிய
கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவள் அதிர்ஷ்டமோ, என்னமோ
அப்போதே அவளுக்கு இருபதாயிரம் சம்பளம் கிடைத்தது. தம்பியை
நன்றாகப் படிக்கப் போட்டு வேலைக்குச் சேர்த்தாள்.

இரண்டு தங்கைகளுக்கும் சீர்வரிசை செய்து உத்தியோகத்தில்
இருப்பவர்களைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தாள்.
சிறுக, சிறுகச் சேமித்து ஓர் ஆறு செண்டு நிலம் வாங்கி லோன் போட்டு
மாடியும், கீழ்தளமுமாக வீடு கட்டி முடித்தபோது, எல்லோரும் அவளைத்
தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.

அதிலும் மாடியில் தம்பி, தங்கைகளுக்காக எல்லா வசதிகளோடு மூன்று
அறைகளைக் கட்டி அவர்களை அவள் தன்னுடனே வைத்துக் கொண்ட
போது அவள் அம்மா சிவகாமியின் உடம்பில் இருந்த அத்தனை நோயும்
குறைந்துவிட்டாற் போலிருந்தது. குடுகுடுவென்று மாடிக்கும் கீழேயுமாக
ஏறி இறங்கினாள்.

இதோ இப்போது வரை எல்லோரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் வீட்டிலேயே உமாதான் ஐம்பது ஆயிரம் வரை சம்பளம்
வாங்குகிறாள். தம்பியும், தங்கை புருசன்களும் தங்கள் பங்குக்கென்று வீட்டு
செலவுக்காகப் பணம் கொடுக்க முன் வந்தபோது உமா வாங்க மறுத்துவிட்டாள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2016 1:26 pm

“நான் தனிக்கட்டை. ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்குறேன். அதை சேத்து
வச்சி என்னதான் நான் செய்ய போறேன்? நீங்கள்லாம் ஆணும், பொண்ணுமாக
இரண்டு, இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு சேர்த்து
வையுங்கள். இப்போதைக்கு எல்லா செலவும் என் செலவாயிருக்கட்டும்’ என்று
சொன்னதோடு தனக்கென்று ஒரு வாழ்வு இருப்பதையே உமா மறந்துவிட்டாள்.

இந்த நேரத்தில்தான் இவளைப் போலவே தம்பி, தங்கை, அம்மா, அப்பா என்று
எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இப்போது ஒண்டியாய் நிற்கும் விசுவம்,
தன் வாழ்க்கைத் துணைக்காக உமாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்!

விசுவம் தனக்கு தெரிந்த ஆள் மூலமாக உமாவைப் பெண் கேட்டு அனுப்பிய
போது ஊர், ஊராய் அக்காவிற்கு மாப்பிள்ளை தேடி அலைகிறேன் என்று
சொன்ன சேகர் விசுவத்தை மாப்பிள்ளையாக ஏற்க மறுத்தான்.

மகனின் விடாப்பிடியான மறுப்பை நினைக்கையில், சிவகாமிக்கு
ஆச்சரியமாயிருந்தது. “”ஏன்டா சேகர் அக்காவுக்கு மாப்பிள்ள பாக்குறேன்னு
ராவும், பகலும் தீவிரமா அலஞ்ச நீ இப்ப வீடு தேடி வந்திருக்க மாப்பிள்ளய
ஏன்டா வேண்டான்னு சொல்றே?” என்று அவன் அம்மா கேட்டபோது சேகர்
சிடுசிடுத்தான்.


“போம்மா இத்தன வயசு வரைக்கும் ஒருத்தன் கல்யாணம் முடிக்காம
இருக்கான்னா ஒன்னு அவனுக்கு ஏதாவது நோய் இருக்கணும்; இல்லாட்டி
அவன் மோசமானவனா இருக்கணும்” என்றான்.
“அப்போ உன் அக்கா உமாவுக்கு கூடதான் இத்தனை வயசு வரைக்கும்
கல்யாணம் ஆகலை அப்ப அவளும் மோசமானவளா, இல்ல அவளுக்கும்
ஏதாவது நோயிருக்கா?” என்று சிவகாமி கேட்டதும் சேகருக்கு வந்த
கோபத்தில் அவன் முகம் தீக்கனலாய் கனன்றது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2016 1:26 pm


நீ பேசாம இரு. நானே அதுக்கான முயற்சிய செய்றேன். அதுவுமில்லாம
செஞ்சிக்கிட்டுத்தான இருக்கேன்”.

“ஏன்டா இந்த விசுவத்துக்கு என்ன குறை? கல்லூரியில விரிவுரையாளரா
இருக்கார். மாமியா, அது, இதுன்னு எந்த பிக்கல், பிடுங்கலும் இல்ல உமாவும்
அவர ரொம்ப விரும்புறா”

“விரும்புறான்னு எப்படிச் சொல்றே? அவன உமாவுக்கு தெரியுமா?”

“இரண்டு நாளைக்கு முன்னால விசுவமே உமாவப் பாக்க அவளோட
ஆபிசுக்கு போயி தன்னப் பத்தின எல்லா விவரத்தயும் சொல்லியிருக்காருன்னா
பாத்துக்கோயேன்!”

“”ஓ…… அவ்வளவு தூரத்துக்கு வந்தாச்சா? இந்த ராஸ்கல் எனக்குத் தெரியாம
எப்படி என் அக்காவ சந்திக்கலாம்?”

“”இதிலென்னடா தப்பு இருக்கு? அதான் உமா எல்லா விஷயத்தையும் என்
கிட்ட சொல்லிட்டாளே” என்று சிவகாமி சொல்லவும், “”அப்ப நீயே இந்த
கல்யாணத்த முடிச்சி வச்சிரு என்கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்” என்று
சொல்லிவிட்டு சேகர் மடமடவென்று மாடிக்குப் போக, சிவகாமி மகனை
அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் விசுவம் உமாவைத் தேடி வந்தபோது அவளுக்கும் வெட்கம் பிடுங்கியது.
“ஏதேது கல்யாணத்திற்குள் நிறைய தடவ தேடி வந்திருவார் போலிருக்கே’ என்று
அவள் எண்ணிக் கொண்டிருக்கையில் விசுவம் இவள் எதிரில் வந்து நின்றான்.
அவன் முகம் கனன்று கிடந்தது.

“இதோ பாருங்க மிஸ் உமா… உங்கள நான் கல்யாணத்துக்காக கட்டாயப்படுத்தல.
ஆனா உங்க தம்பி சேகர் நாலு பேர கூட்டிக்கிட்டு நானு சாப்பிடும் மெஸ்சுக்கு
வந்து கன்னாப்பின்னான்னு பேசி ரொம்பவே அசிங்கப்படுத்திட்டுப் போறாரு.

இதெல்லாம் நல்லா இல்ல… சொல்லி வைங்க” என்றவன் விருட்டென்று
வெளியேறினான்.

உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது “தன் தம்பியா இப்படிச் செய்தான்?’ என்று
நினைத்தவளுக்கு அதற்குமேல் ஆபிசில் உட்கார்ந்திருக்க முடியவில்லை.
அப்போதே லீவிற்கு சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டாள்.

அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவைக் காணோம். சேகரின் சத்தம்தான்
வீடு முழுக்க கேட்டுக் கொண்டிருந்தது.

“இந்த உமாவுக்கு கல்யாணம் முடிச்சி வைக்க நானென்ன இளிச்சவாயனா?
அப்படி முடிச்சி வச்சா நாளைக்கே இவ புருசன் வீட்டுக்குப் போயிருவா.
அவ கூடவே அம்பதாயிரம் சம்பளமும் போயிரும். பிறகு இந்த வீட்டு செலவையும்,
நோயோட கிடக்கிற அம்மாவையும் யார் பாக்கிறது? இவளுக்கு நாப்பது வயசு
ஆகிற வரைக்கும் மாப்பிள்ள பாக்குறேன், பாக்குறேன்னு சொல்லிட்டு பிறகு
விட்டுற வேண்டியதுதான். எப்படி இருக்கு என் ஐடியா?” என்று அவன் தன்
தங்கைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 28, 2016 1:26 pm

“”ரொம்ப நல்லா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த உமாவைக்
கண்டதும் அதிர்ச்சியான சேகர் அப்படியே உறைந்து போனான்.

“”சேகர் உன்னோட இந்த நடிப்புத் தெரியாம உன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன்.
அதுமட்டுமா? இந்த வீட்டையே உன் பெயருக்கு எழுதி வச்சுட்டு நானும் உன்கூடவே
இருக்கணுமின்னு முடிவு பண்ணுனேன். ஆனா இனி அது முடியாது.

இன்னும் ஒரு மாசத்தில நீ வீட்ட காலி பண்ணுறே. அம்மா இறப்புக்குக்கூட
நீ இங்க வரக்கூடாது. அப்படியே வந்தாலும் ஒரு “பெண் வேசம்’ போட்டுக்கிட்டுத்தான்
நீ உட்கார்ந்திருக்கணும்.

குடும்பத்துக்கு ஓர் ஆம்பளையா எதுவுமே செய்யாத உனக்கு, இதுதான் தண்டனை”
என்ற உமா தன் வக்கீலுக்கான தொலைபேசி நம்பரை அழுத்தினாள்.

———————————–

–by பாரதி தேவி
தினமணி கதிர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 28, 2016 10:39 pm

சரியான முடிவு.



பெண் வேசம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் வேசம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் வேசம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 1:19 am

நன்றி கேட்ட குடும்பங்கள் இப்படி நிறைய இருக்கின்றன, ....பாவம், அந்த பெண்ணுக்கு இப்பவாவது உண்மை தெரிந்ததே.......சந்தோஷம் தான் புன்னகை ...நல்ல கதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 29, 2016 5:58 am

நல்லவங்களுக்கு காலமில்லை என்று கூறுகிறார்களே >>>>உண்மைதான் என்பதை இக்கதை மூலம் உணர முடிகிறது. அதான் பெரியோர் சொல்கின்றனர் காலம் மாறிப்போச்சுங்க>> என----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 8:22 am

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் ..
குடும்ப வறுமையை விரட்ட, திருமணம் செய்து கொள்ளாமல்
தம்பி தங்கைகளை கரையேற்றினார்...
-
தற்போது பணியிலும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சேமிப்பும் கையிருப்பில் உள்ளது. சொந்தமாக வீடும்
இருக்கிறது.
-
நாற்பதைத் தாண்டி விட்டாலும், திருமணம் செய்து கொள்
என உற்றார் உறவினர் உளப்பூர்வமாக வலியுறுத்தினாலும்
வரப்போகிறவன், தன்னிடம் உள்ள சொத்துக்காகத்தான்
திருமணம் செய்து கொள்வான் என்கிற மனக்கிலேசத்தால்
திருமணம் வேண்டாம் எனகிறாள்..!
-
இப்படியும் சிலரது வாழ்க்கை அமைந்து விடுகிறது...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 29, 2016 9:58 am

P.S.T.Rajan wrote:நல்லவங்களுக்கு  காலமில்லை என்று கூறுகிறார்களே >>>>உண்மைதான் என்பதை  இக்கதை மூலம் உணர முடிகிறது. அதான் பெரியோர்  சொல்கின்றனர் காலம் மாறிப்போச்சுங்க>> என----------

சில அப்பா அம்மாவே இப்படி இருக்கிறாங்க ராஜன் அண்ணா.........அது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கு சோகம் ........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக