ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

Go down

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Empty அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

Post by krishnaamma Wed May 25, 2016 11:54 pm

மாரி அம்மா உத்தரவு’ குழு! பெயரைக் கேட்டுவிட்டு ஏதோ இது சித்தர் பீடம் செல்லும் பக்தர் குழு என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளப்போகிறீர்கள். இது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புறப்பட்டிருக்கும் சூழலியல் குழு.

“மாரி என்றால் மழை. மாரியின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததால் “என் இருப்பிடத்தை காலி செய்” என்பதை வெள்ளமாக வந்து உணரத்தி உத்தரவிட்டிருக்கிறது. அதனை மக்களிடமும் மாவட்ட நிர்வாகங்களிடமும் எடுத்துக் கூற பயணப்பட்டிருக்கும் குழு நாங்கள். அதனால் ‘மாரி அம்மா உத்தரவு’ குழு.” என்கிறார்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னை நோக்கி சைக்கிளில் பேரணி சென்று கொண்டிருக்கும் ‘மாரி அம்மா உத்தரவு’ குழுவினர்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! OZbUC9zUSlKBIghRMaXp+mariamma60022

பயணத்திட்டத்தின்படி இன்று வேலுார் வந்த அவர்கள் மூன்று சக்கர சைக்கிளை மிதித்துக்கொண்டு முன்னூறு கிலோமீட்டர் கடந்து வந்து பொதுமக்களிடம் நீர் நிலை ஆக்கிரமிப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அளித்துக்கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தை தொடங்கி நடத்தி வரும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சேலம் மக்கள் குழுவை சேர்ந்தவருமான பியூஷ் மானுஷிடம் பேசினோம் “ சேலத்தில் பல ஏரி, குளங்கள், ஓடைகள் குப்பை மேடுகளாகவும் பட்டா நிலங்களாகவும் ஆக்கிரமிப்பாலும் அழிந்து வருகிறது.

சேலத்தில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரி, அரிசிப்பாளையம் தெப்பகுளம் தர்மபுரி இலக்கியம்பட்டி குளம் போன்றவற்றை எங்கள் குழு சார்பில் சுத்தப்படுத்தி பராமரித்தோம் சமீபத்தில் பெய்த மழையில் இவற்றில் எல்லாம் கரை ததும்ப நீர் உள்ளது. இலக்கியம்பட்டி ஏரி 32 லட்சம் கண அடி தண்ணீர் தேங்கும் அளவுக்கு உள்ளது.

எங்களை போன்ற சிறிய குழுக்களாலேயே இத்தனை நீர் நிலைகளை மீட்டெடுக்கும் போது அரசு மனது வைத்தால் எல்லா ஏரி குளங்களையும் பராமரித்து தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலைக்கு உயர்த்தலாம். ஆனால் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கொஞ்சம் கூட முயற்சிக்க மறுத்து முடங்கிப்போயுள்ளது நிர்வாகம்.” என்றவர், “சேலத்தில் ஏரிக்குள் பட்டா கொடுத்திருக்கிறார்கள்.

thodarum................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Empty Re: அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

Post by krishnaamma Wed May 25, 2016 11:55 pm

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! RTOGunxR3mYNPdQ4csc6+mariammafuse260

ஒரு தனியார் மருத்துவமனை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. தேமுதிக எம்.எல்.ஏவிற்கு 6 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி மூன்று சக்கர சைக்கிளில் பிரசாரம் செய்தேன். கண்டுகொள்ளவே இல்லை.

அனைத்து மக்களிடமும் இது பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும் என்று கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னைக்கு பேரணி புறப்பட்டோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் என்று வரும் வழியில் எல்லாம் பொது மக்கள், இளைஞர்கள் கல்லூரிகள் பள்ளிகளில் நீர் நிலைகளின் நிலைமையையும்…அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியத்தையும் பேசி வருகிறோம். பள்ளி கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக எங்கள் பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! AoJegh0WRvGM824p9Ayx+mariamma6002

சென்னை பெருமழையால் பாதிக்கப்பட்டது. பாதிப்பிற்கு மழை மட்டும் காரணம் அல்ல, ஆக்கிரமிப்புகளால்தான் அதிகம் பாதிப்பு. ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்கள். இவ்வளவு பெரிய அழிவிற்கு பிறகும் இன்னும் பல இடத்தில் ஏரிகளில் கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன. நாங்கள் ஆம்பூர் வரும் போது பாலாற்றை பார்த்தோம். நகராட்சியின் கழிவுகள் எல்லாம் பாலாற்றங்கரையில் தான் கொட்டப்படுகிறது. கழிவு நீர் அதில் தான் கலக்கிறது. இவ்வளவிற்கு பிறகும் நம் அரசு பாடம் கற்கவில்லை. அடுத்து காஞ்சிபுரம் செல்கிறோம். ஆக்கிரமிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர் காஞ்சிபுரம்.

சென்னை முழுக்க சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஏரி குளங்களை பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுவரை எங்கள் பிரச்சாரம் ஓயாது. தூய்மையான நீரினை அடுத்த சந்ததிக்கு அளிப்போம்.” என்றார்.

மாரி அம்மா மனசு வைத்தால் போதுமா மாநிலத்தை ஆளும் அம்மாவும் மனசு வைக்க வேண்டுமே!

அ. அச்சணந்தி,
மா.சுமன் (மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: ச.வெங்கடேசன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Empty Re: அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

Post by krishnaamma Thu May 26, 2016 12:34 am

இவர்களது முயற்சி வெற்றி பெறட்டும் புன்னகை ........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு! Empty Re: அழிவிற்கு பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum