புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_m10கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 1


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon May 23, 2016 11:17 pm



திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
பசுஏது பாசம்ஏது
பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
பாவபுண் யங்கள்ஏது
வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
மனம்விரும் புணவுண்டுநல்
வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடிமேல்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்றசுகமே
கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாதருள்
தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே
மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்கஇந்தப்
படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
படிஎன்ன அறியாதுநின்
படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
படிஎன்னும் என்செய்குவேன்
தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.


வள்ளல் பெருமான் உலகம் உய்ய அடித்தளம் அமைக்க பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்டவர் . முற்பிறவியிலேயே எலிஜா என்ற யூதராக மவுன்ட் கர்மேல் பர்வதத்தில் தபோவனம் அமைத்து ஆன்மீக சாதனை செய்தவர் . அப்பிறவியிலேயே அவர் முதன்முதலாக ஒளி சரீரம் அடைந்து ஏஞ்சல் சாண்டல்பான் என்ற தேவராக பரலோகம் ஏகி சப்த ரிஷி மண்டலத்தின் கால் பகுதியில் இடம் பெற்றவர்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து சமரச வேதம் வெளியரங்கமாகவும் அடித்தளம் அமைக்கவும் ; சைவ மரபில் வளர்ந்த அடியவர்கள் பலர் அதிதேவர் சிவனை மட்டும் வழிபடுகிறவர்கள் என்ற நிலையிலிருந்து அருவ ஏக இறைவனை அருட்பெருஞ்சோதி என்ற அடைமொழியால் வழிபடுகிறவர்களாக தரம் உயர்த்தவும் இறைவனால் பூமிக்கு அனுப்பபட்டார் .

கந்தர் கோட்டத்தில் ஒன்பது வயது சிறுவனாக அவர் பாடிய முதல் பாடலிலேயே அவர் சமுதாய சிந்தனையை வெளிப்படுத்துகிறார்

அன்பர்கள் நிறைவான இன்பம் அடையவேண்டுமானால் என்னென்ன வேண்டுமாம் ? ஆன்மீக செறிவும் அறிவும் ஞானமும் தரம் உயர்ந்தால் மட்டுமே இறைவனால் போஷிக்கப்படும் செல்வம் ஆசிர்வாதமாக நிறையும் திரு ஓங்கும் செல்வம் என்பது இறைவனை சரணடைய சரணடைய புன்னியங்களாக பூமியில் நிறையும் அது இறைவனின் பேரருளால் வரப்போகும் சத்திய யுகத்தில் சாத்தியமாகும்

மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பூமிக்கும் இந்த ஆசிர்வாதம் அருளப்படும் ஏசாயா 43 :
19. இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

20. நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

21. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்


வள்ளல்பிரானும் செங்கமல மலர் ஓங்கும் வனம் ஒங்க அருள்கிடைக்கும் என்கிறார் , தாமரை தடாகம் என்பது குளிர்ந்த நீரோடும் தாமரையின் தண்டுகளும் வேர்களும் பின்னிப்பிணைத்து அமைதியாக தண்ணென்று இருக்கும் . அதில் அவ்வளவு எளிதாக யாரும் இறங்கி விடமுடியாது கால்கள் பின்னி மலரை பறிக்க விடாமல் தடுத்து கொன்று விடும் ஆகவேதான் மரு ஓங்கும் செங்கமலம் என்கிறார் பகையை வெல்லும் அருள் பாதுகாப்பு அது . வளர்கருணை மற்றும் அமுதம் ஆனந்தம் ஞானம் உள்விளைந்த ஒளி வடிவமானவன் முருகன் அவனே வரப்போகிற கல்கி ; சத்திய யுகத்தை நிறுவப்போகிறவன் அவனால் பறவுகிற மகிழ்ச்சியால் எல்லா உயிரினங்களும் நல்லிணக்கமாக மாறிவிடுமாம் .


சத்திய யுகத்தை பற்றிய பல முன்னறிவிப்புகள் எல்லா மதங்களிலும் வந்துள்ளன .

ஏசாயா 11 :

1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

3. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

4. நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

5. நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

7. பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

8. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,

9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரைஅறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

வரப்போகிற ஆண்டவரான முருகனின் பாதம் என் உள்ளம் ஓங்குகிற நாள் எந்த நாள் ?

ஆனால் அஞ்ஞானிகள் நாத்தீகர்கள் கடவுள் இல்லை பாவபுண்ணியங்கள் இல்லை பகுத்தறிவால் பூமியில் சம்பாதித்து அதன் இன்பங்களை விஞ்ஞான முறைப்படி பழுதில்லாமல் அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்கிறார்கள் அத்தகைய கயவர்களை நான் கூடி அவர்களைப்போல மாறாத படி அருள்செய்வாயாக

பெண்கள் உடலின் இயல்பு வனப்புள்ளது . ஆனால் ஆதியில் படைக்கப்படும் போது பெண்மை அன்பிற்கும் ஆதரவிற்கும் மதிப்பிற்கும் உரித்தானதாகவே இருந்தது காமம் என்பது அப்போது இல்லை . மதிப்பிற்குரிய நேயத்தை கீழான காமம் கொச்சைப்படுத்தி விட்டது

அந்த மயக்கத்தை கொடுக்கும் மனம் என்னும் பாவி மாளட்டும் நான் நித்திய ஜீவனோடு வாழ உன் உபதேசம் என்னை ஆட்கொள்ளட்டும்


உலகில் வழங்கும் ஆறு மார்க்கங்களான வேதங்களை ஆறு முகம் ஒரு முகமாக்கும் ஞான சற்குருநாதா ; சலத்தையும் சமரசப்படுத்தும் சாந்த சொருபியே ; கந்தர்கோட்டத்தில் வளரும் ஞான மணியே
ஞான சற்குருநாதா உன்னையன்றி எனக்கு வேறு போக்கிடம் இல்லை . வேறு சாதாரண தேவர்கள் என் முன் தோன்றி சில சித்துக்களை கொடுப்பதாக இருந்தாலும் நான் அவற்றை  நாடேன் . மேமையான சமரச சுத்த சன்மார்க்கத்தை எனக்கு அருள்வாயாக

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக