Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தலைநகர் சென்னையில் மிகக்குறைந்த அளவு வாக்குப்பதிவு பதிவாகியிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் 74 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதி 26 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 78.02 சதவித வாக்குகள் பதிவானது. அதன்பின் இந்த 5 ஆண்டுகளில் நிச்சயமாக புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். அப்படிப் பார்த்தால் 2011ஆம் ஆண்டை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதுவும் முக்கியமாக சென்னையில் வெறும் 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் 55 சதவீத வாக்குகளும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கோஷத்துடன் களம் இறங்கியது தேர்தல் ஆணையம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்காக ரூ.38 லட்சம் செலவு செய்தது. ஆனாலும் அது பெரிய பலனை தரவில்லை.
எனவே இதுபற்றி தகுந்த விசாரணை நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தற்போது தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிகக்குறைவான வாக்குகள் பதிவானதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.
1. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் கன மழை பெய்து, ஏரிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அவதிப்பட்டதை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களே அதிக அளவில் மக்களுக்கு உதவினர். அது அரசியல் கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
2. சனி,ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால், ஓட்டுப்போடுவதை தவிர்த்து விட்டு ஏராளமானோர் சுற்றுலா சென்று விட்டனர்.
3. வெளியூரிலிருந்து சென்னை வந்து இங்கு செட்டிலானவர்கள்தான் அதிகம். எனவே அவர்கள தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
4. அதிலும் சிலருக்கு சென்னை மற்றும் அவர்களின் சொந்த ஊர் என இரண்டு இடங்களிலும் வாக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அதை சரி செய்யவில்லை. எனவே அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்திருக்கக் கூடும்.
5. மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்த அடையாறு, சைதாப் பேட்டை கூவம் நதியோரம் வசித்த மக்கள், தற்போது சென்னைக்கு வெளிப்புறம் குடி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் இந்த முறை வாக்களிக்கவில்லை.
6. எல்லாவற்றுக்கும் மேல், யாருக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, வாக்களிக்காமல் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர் சென்னையில் மிக மிக அதிகம்.
இப்படி எல்லா காரணங்களும் சேர்ந்து, சென்னையில் வாக்குப்பதிவை பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
வெப்துனியா
தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் 74 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதி 26 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 78.02 சதவித வாக்குகள் பதிவானது. அதன்பின் இந்த 5 ஆண்டுகளில் நிச்சயமாக புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். அப்படிப் பார்த்தால் 2011ஆம் ஆண்டை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
அதுவும் முக்கியமாக சென்னையில் வெறும் 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் 55 சதவீத வாக்குகளும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கோஷத்துடன் களம் இறங்கியது தேர்தல் ஆணையம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்காக ரூ.38 லட்சம் செலவு செய்தது. ஆனாலும் அது பெரிய பலனை தரவில்லை.
எனவே இதுபற்றி தகுந்த விசாரணை நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தற்போது தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிகக்குறைவான வாக்குகள் பதிவானதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.
1. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் கன மழை பெய்து, ஏரிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அவதிப்பட்டதை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களே அதிக அளவில் மக்களுக்கு உதவினர். அது அரசியல் கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
2. சனி,ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால், ஓட்டுப்போடுவதை தவிர்த்து விட்டு ஏராளமானோர் சுற்றுலா சென்று விட்டனர்.
3. வெளியூரிலிருந்து சென்னை வந்து இங்கு செட்டிலானவர்கள்தான் அதிகம். எனவே அவர்கள தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
4. அதிலும் சிலருக்கு சென்னை மற்றும் அவர்களின் சொந்த ஊர் என இரண்டு இடங்களிலும் வாக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அதை சரி செய்யவில்லை. எனவே அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்திருக்கக் கூடும்.
5. மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்த அடையாறு, சைதாப் பேட்டை கூவம் நதியோரம் வசித்த மக்கள், தற்போது சென்னைக்கு வெளிப்புறம் குடி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் இந்த முறை வாக்களிக்கவில்லை.
6. எல்லாவற்றுக்கும் மேல், யாருக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, வாக்களிக்காமல் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர் சென்னையில் மிக மிக அதிகம்.
இப்படி எல்லா காரணங்களும் சேர்ந்து, சென்னையில் வாக்குப்பதிவை பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ட்விட்டர் என
சமூக ஊடகங்களில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்பவர்களில் 90 சதவீதம் வாக்குச் சாவடிக்கு
வந்து ஓட்டளிப்பதில்லை...!!
-
அதே போல் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும்
அரசியல் கட்சி தொண்டர்கள் அடித்தட்டு மக்கள்
வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்...
-
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன...
சமூக ஊடகங்களில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்பவர்களில் 90 சதவீதம் வாக்குச் சாவடிக்கு
வந்து ஓட்டளிப்பதில்லை...!!
-
அதே போல் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும்
அரசியல் கட்சி தொண்டர்கள் அடித்தட்டு மக்கள்
வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்...
-
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன...
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
மேற்கோள் செய்த பதிவு: 1207507ayyasamy ram wrote:வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ட்விட்டர் என
சமூக ஊடகங்களில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்பவர்களில் 90 சதவீதம் வாக்குச் சாவடிக்கு
வந்து ஓட்டளிப்பதில்லை...!!
-
அதே போல் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும்
அரசியல் கட்சி தொண்டர்கள் அடித்தட்டு மக்கள்
வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்...
-
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
வாக்களித்து என்ன ஆகப்போகிறது ? இந்த இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார்கள் !
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? என்ற ஆராய்ச்சி தேவையா ?
ஏதோ ஒரு கொள்ளி வந்துவிட்டுப் போகட்டும் ; நமக்கென்ன என்ற அலட்சியமே சென்னையில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் .
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? என்ற ஆராய்ச்சி தேவையா ?
ஏதோ ஒரு கொள்ளி வந்துவிட்டுப் போகட்டும் ; நமக்கென்ன என்ற அலட்சியமே சென்னையில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
-
சென்னை மக்கள்:
வாத்தியாரே நம்ம தேர்தல்ல ஓட்டு போடலாமா?
-
வேணாம் திமிங்கலம், நம்ம சமூக வலைதளங்களில்
கருத்து சொல்லலாம்
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
மேற்கோள் செய்த பதிவு: 1207562M.Jagadeesan wrote:வாக்களித்து என்ன ஆகப்போகிறது ? இந்த இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார்கள் !
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? என்ற ஆராய்ச்சி தேவையா ?
ஏதோ ஒரு கொள்ளி வந்துவிட்டுப் போகட்டும் ; நமக்கென்ன என்ற அலட்சியமே சென்னையில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் .
சரியா சொன்னீங்க ஐயா, விரக்தி இல் தான் பலரும் போடலை என்றே நானும் நினைக்கிறேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
நெட்டிசன்கள் பகிர்ந்த கருத்துகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
-நன்றி- தமிழ் தி இந்து காம்
------------------------
உங்களிள் ஒருவன் @sabarivignesh2
பூத்தில் செல்ஃபி தடை செய்ய பட்டதால் வாக்கு
செலுத்தவில்லை என்று கூறினார் அந்த சென்னை
போராளி
ரோசாபூ தையல்காரன்:
இனி வாக்களிப்பவருக்கு வருமான வரிச்சலுகை
கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சென்னை
மக்கள் 100% வாக்களிப்பர்.
Prasath Singh Dhoni:
அந்த 57 சதவீதமும் நடிகர் நடிகைகள பாக்க
வந்தவங்களாதான் இருக்கும்.
#சென்னை
Manikandan:
கிராமத்தில் இருக்கும் மணப்பெண் மற்றும்
105 வயது பாட்டிக்கு தெரிந்த கடமை, நன்கு படித்த
சென்னை மக்களுக்கு தெரியவில்லை.
Prasanna:
நியாயமான காரணம் இன்றி, தெரிந்தே ஓட்டுப்
போடுவதைத் தவிர்த்திருந்தால், தயவு செய்து
அந்த சென்னை மகான்களுக்கு, அடுத்த ஐந்து
வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும்
கேள்வி கேட்கும் தகுதி இல்லை என்பதை
யாராவது உரக்கச் சொல்லுங்கள்.
-
--------------------------------
-நன்றி- தமிழ் தி இந்து காம்
------------------------
உங்களிள் ஒருவன் @sabarivignesh2
பூத்தில் செல்ஃபி தடை செய்ய பட்டதால் வாக்கு
செலுத்தவில்லை என்று கூறினார் அந்த சென்னை
போராளி
ரோசாபூ தையல்காரன்:
இனி வாக்களிப்பவருக்கு வருமான வரிச்சலுகை
கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சென்னை
மக்கள் 100% வாக்களிப்பர்.
Prasath Singh Dhoni:
அந்த 57 சதவீதமும் நடிகர் நடிகைகள பாக்க
வந்தவங்களாதான் இருக்கும்.
#சென்னை
Manikandan:
கிராமத்தில் இருக்கும் மணப்பெண் மற்றும்
105 வயது பாட்டிக்கு தெரிந்த கடமை, நன்கு படித்த
சென்னை மக்களுக்கு தெரியவில்லை.
Prasanna:
நியாயமான காரணம் இன்றி, தெரிந்தே ஓட்டுப்
போடுவதைத் தவிர்த்திருந்தால், தயவு செய்து
அந்த சென்னை மகான்களுக்கு, அடுத்த ஐந்து
வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும்
கேள்வி கேட்கும் தகுதி இல்லை என்பதை
யாராவது உரக்கச் சொல்லுங்கள்.
-
--------------------------------
Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!
Kalyanaraman:
படிப்பு, நாகரீகம்னு எல்லாத்துலயும் முதலாவது.
என்ன பிரயோசனம்?
ஓட்டுப்பதிவு 57% தான். #சென்னைவாசிகள்
*
பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து
கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று
நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே
தெரியாமல் நமக்கென்ன என ஓய்வு எடுத்து
இருக்கிறார்கள். அவர்களை என்னவென்று திட்டுவது?
-
-----------------------------------
மறுக்காலத்து கள்ளன்:
ஜனநாயக கடமைய நிறைவேற்றாத சென்னை
வாசிகளே.. தமிழ்நாட்டுல என்ன வேலை...?
பக்கத்து ஸ்டேட் ஆந்திராவில போயி இருக்கலாமே !!!
-
-----------------------------------------
Joe Selva:
சென்னை மக்கள் :
எனக்கு தேர்தல் அன்னைக்கு
நேர்ல போய் ஓட்டு போட மட்டும்தான் பயம்.
மத்தபடி எனக்கு சமுதாய அக்கறை அதிகம்.
-
---------------------------------
படிப்பு, நாகரீகம்னு எல்லாத்துலயும் முதலாவது.
என்ன பிரயோசனம்?
ஓட்டுப்பதிவு 57% தான். #சென்னைவாசிகள்
*
பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து
கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று
நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே
தெரியாமல் நமக்கென்ன என ஓய்வு எடுத்து
இருக்கிறார்கள். அவர்களை என்னவென்று திட்டுவது?
-
-----------------------------------
மறுக்காலத்து கள்ளன்:
ஜனநாயக கடமைய நிறைவேற்றாத சென்னை
வாசிகளே.. தமிழ்நாட்டுல என்ன வேலை...?
பக்கத்து ஸ்டேட் ஆந்திராவில போயி இருக்கலாமே !!!
-
-----------------------------------------
Joe Selva:
சென்னை மக்கள் :
எனக்கு தேர்தல் அன்னைக்கு
நேர்ல போய் ஓட்டு போட மட்டும்தான் பயம்.
மத்தபடி எனக்கு சமுதாய அக்கறை அதிகம்.
-
---------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
» தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு
» இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
» தமிழகத்தில் 65 சதவீத வாக்குப்பதிவு
» இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|