புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை : அம்மா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:55 am

சிறுகதை : அம்மா !

பிள்ளையின் வாயிலிருந்து நீர் ஒழுகியபடி இருந்தது. சட்டை நனைந்துவிடாமல் இருக்க ஒரு துண்டை எடுத்துப் போர்த்திவிட்டான் குமார். தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது.

வாய் ஏதோ புலம்பிக் கொண்டே இருந்தது. அதட்டவும் முடியவில்லை. அதட்டினால் சிரித்தாலும், சிரிப்பான். கோபம் வந்து, கத்தி அமர்க்களம் செய்தாலும் செய்வான்.

வந்த இடத்தில் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று நினைத்தான் குமார். பிறந்த ஒரே பிள்ளை இப்படி இருப்பது துக்கத்தைக் கொடுத்தது. சுயபச்சாதாபம் மிகுந்து, கண்களில் நீர் வந்தது.

இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் என்றே தெரியவில்லை. 'அம்மா வருவாங்க. உட்காருங்க' என்றுதான் சொன்னார்கள். இல்லத் தலைவியின் பெயர் கூடத் தெரியவில்லை. யாரைக் கேட்டாலும் அம்மா என்றுதான் சொல்கிறார்கள். அதையேதான் பக்கத்து வீட்டுக் காரரும் சொன்னார்.

'லேடீஸ் இல்லாம உங்களால தனியா உங்க பிள்ளைய பாத்துக்க முடியாது. உள்ள பூட்டி வச்சுட்டு வேலைக்கு போறீங்க. ரொம்ப கத்தி அமர்க்களம் செய்யறான். அம்மாவோட அன்பு இல்லத்துல விட்டுடுங்க. அப்பப்ப போயி பார்த்துக்கலாம்'

'என்னால ரொம்ப பணமெல்லாம் குடுக்க முடியாது சார். உங்களுக்கே தெரியும். இவன் வைத்தியத்துக்காக நெறைய செலவு பண்ணிட்டேன். நானும் பெரிய வேலையெல்லாம் பார்க்கலை. சாப்பாட்டுக்கு வருது. அவ்வளவுதான்'

அன்பு இல்லாம் வெறும் பணத்துக்காக நடக்கறது இல்லை. தைரியமாப் போங்க.
அவர் கொடுத்த தைரியத்தில் கிளம்பி வந்தாகிவிட்டது. அப்பாவை விட்டு விட்டு, வேறு இடத்தில் இருப்பானோ தெரியவில்லை.

'சார், அம்மா வர்றாங்க' பக்கத்தில் வந்த குரல் குமாரின் மௌனத்தை கலைத்தது. பிள்ளையை நேராக உட்கார வைத்தான். வாயைத் துடைத்து விட்டான்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் கம்பீரத்துடன் நடந்து வந்த அவளைப் பார்த்து, கூப்பின கைகள் அப்படியே நின்றன. எங்கேயோ பார்த்த முகம் என்று, மூளை செய்தி சொல்ல, நினைவலைகள் சுற்றி முடிந்தன. கல்யாணியா? என்ற கேள்வியும், பதிலும் ஒன்றாகவே முடிந்தன. இப்படிக் கூட காலம் சுழலுமா என்ன? இதே கல்யாணியை மணம் முடிக்க மறுத்து உதறின தினம் நினைவுக்கு வந்தது.

தன் ஒரே மகன் குமாருக்கு மீனாட்சி பார்த்த பெண்தான் கல்யாணி. எங்கெங்கு தேடியும், சரியான வரம் அமையாததால், அரைமனதுடன் கல்யாணியை மருமகளாக்க முடிவு செய்திருந்தாள்.

கிராமத்தில் பெண் வீட்டில் திருமணம். ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்க, பெண் வீட்டிற்குச் சொந்தம் என்று சொல்லி கொண்டு வந்த பழைய தோழி நீலா, மீனாட்சியை அடையாளம் கண்டு கொண்டு வந்து பேசினாள்.

மீனா, உன் பிள்ளை குமாருக்கு என்ன குறைச்சல்? ஏன் இப்படி ஒரு இடம் முடிவு பண்ணின? பெண்ணோட அப்பா, பள்ளிக்கூட வாத்தியார்தான். இவளுக்குக் கீழே இரண்டு தங்கைகள், பத்தாதுன்னு, ஒரு தம்பி வேற என்று கிசுகிசுத்தாள்.

எங்கெங்கேயோ தேடினேன் நீலு. என் பிள்ளைக்கு சரியா வரன் அமையல. இனிமே என்னடி பண்ண முடியும்? நிச்சயம் வேற முடிஞ்சாச்சு. சரின்ன விட வேண்டியதுதான்.

ஏன் விடணும்? என்னோட நாத்தனார் பொண்ணு இருக்கா. அவளை குமாருக்கு முடிச்சு வைக்க நானாச்சு. ஒரே பொண்ணு பிக்கல் பிடுங்க கெடையாது.

ஆசையில் மனம் தடுமாறியது. ஆனால் திருமணத்தை நிறுத்துவது எப்படி? அதற்கான வழியையும் நீலாவே சொன்னாள்.

தொடரும் ...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:55 am

'இந்த பாரு, கல்யாணிக்கு அந்த மூன்று நாள் பிரச்னை இருக்கு. மாசா மாசம் உட்கார மாட்டா. குழந்தை பிறக்கும்னு என்ன நிச்சயம்? என் ஒரே பிள்ளைக்கு வாரிசு வேண்டாமான்னு?' கேளு, கூட நானும் பேசறேன். கல்யாணத்தை நிறுத்திட்டு, ஊருக்குப் போயிடு. சத்தமெல்லாம் அடங்கினதும் என் நாத்தனார் பொண்ணை முடிச்சுக்கலாம்.

மினாட்சியின் மனம் மாறியதும், பிள்ளையின் மனத்தை மாற்றியதும், திருமணத்தை நிறத்தினதும் நடந்தது. கல்யாணியின் அப்பா எவ்வளவு கெஞ்சினார்.

இது பெரிய பிரச்னை இல்லம்மா. டாக்டர் கிட்ட காண்பிச்சிட்டோம். சில பேருக்கு இப்படித்தான் இருக்குமாம். ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்தாதீங்கம்மா! இவளுக்குப் பின்னால இரண்டு தங்கைகள் வேற இருக்காங்க.... கண்ணில் நீர் வழிய கல்யாணியின் அம்மா கெஞ்சினாள்.

ஆனால் மீனாட்சியின் காதில் எதுவும் ஏறவில்லை. உறவினர் கூட்டத்தை அழைத்துக் கொண்டு வெளியேறினவளைத் தடுத்து நிறுத்தியவன் கல்யாணிதான்.

'இந்தக் கல்யாண ஏற்பாடுகளுக்கு, எங்கப்பா பணம் செலவழிச்சிருக்கா, கல்யாணத்தை நிறுத்தினதுக்கு நஷ்டஈடு கொடுத்துட்டுப் போங்க.' அறைந்தாற்போல் வந்தது கட்டளை.

பணம் நான் தரேன். வீசிப் போட்டுட்டு வந்துடு என்று நீலா கொடுத்த பணத்தை வாங்கி கல்யாணியிடம் கொடுத்தாள் மீனாட்சி. அந்த இடத்தை விட்டு கிளம்பின போது, குமார் கல்யாணியின் கண்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் கண்ணீரும், கலக்கமும், இல்லை. 'நீயெல்லாம் ஒரு மனிதரா?' என்ற கேள்வி இருந்தது. கொஞ்சநாள் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்தது. போகப் போக எல்லாம் மறந்து போனது.
'சார், அம்மா உங்களைக் கூப்பிடறாங்க...'

பையனை அழைத்துக் கொண்டு, இயந்திரம் போல் உள்ளே சென்றேன். பிள்ளையைப் பற்றின விவரம் சொன்னேன். 'இவன் இப்படி ஆயிட்டான்கற துக்கத்துல, என் பெண்டாட்டி, தற்கொலை பண்ணி செத்துட்டா, அம்மாவும் காலமாயாச்சு. இவனையும் பார்த்துக்கிட்டு என்னால வேலைக்கும் போக முடியலை. வேலைக்குப் போனாதான் சாப்பாடுங்கற நிலை.'

கல்யாணி உதவியாளரை அழைத்தாள். பையனைச் சேர்த்துக் கொள்ளும் விதிமுறைகளைச் சொன்னாள். அந்தக் கேள்வியைக் குமாரால் தவிர்க்க முடியவில்லை.

'நான் யாருன்னு அடையாளம் தெரியறதா?'

'கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்துட்டு கேன்சல் பண்ணிட்டுப் போனீங்களே.. நல்லா ஞாபகம் இருக்கு. நானே உங்களைப் பார்த்து நன்றி சொல்லணும்னு நினைப்பேன். இப்ப இப்படி ஒரு சந்தர்ப்பம்.'

நன்றி எதற்கு?

அதையும் அவளே சொன்னாள். 'கல்யாணம் திடீர்னு நின்னு போன அதிர்ச்சியில் எங்கப்பா படுத்த படுக்கையாயிட்டார். உங்ககிட்ட கேட்டு வாங்கின பணத்துல தம்பி, தங்கைகளைக் கரையேற்றினேன். ஏனோ கல்யாணத்துல நாட்டம் வரலை. இரண்டு குழந்தைகளை வச்சு இந்த இல்லம் ஆரம்பிச்சேன். இப்ப 300 குழந்தைகள் இருக்காங்க. அத்தனை குழந்தைகளுக்கும் நான் அம்மா. அதுவும், பெற்றோர்கள் கவனிக்க முடியாமல் உதறின குழந்தைகள்.

அம்மான்னா அன்பு; அக்கறை; கருணை. குறைகளோட அணைச்சுக்கற பெருந்தன்மை இவைதான். இங்க இருக்கற குழந்தைங்க மனவளர்ச்சி குறைந்தவங்க. ஆனால், அன்பை காட்டினா பல மடங்கா திருப்புறதுல, முழு வளர்ச்சி அடைஞ்சவங்க. இவங்க அத்தனை பேரும் என்னை அம்மான்னு கூப்பிடும்போது சிலிர்த்துப் போயிடுது.

ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியுமா?ங்கிற சந்தேகத்துல என்னை நிராகரிச்சீங்க. 300 குழந்தைகளுக்கு அம்மாவாகற பாக்கியம் தந்த உங்களுக்கு நன்றி சொல்லித்தானே ஆகணும்?' கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், குமார் தலைகுனிய கம்பீரமாக நடந்தாள் கல்யாணி.

ர. கிருஷ்ணவேணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 7:41 am

சிறுகதை : அம்மா ! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:32 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக