ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 20 மே - நரசிம்ஹ ஜெயந்தி !

Go down

நாளை 20 மே -  நரசிம்ஹ ஜெயந்தி !   Empty நாளை 20 மே - நரசிம்ஹ ஜெயந்தி !

Post by krishnaamma Sun May 15, 2016 10:34 pm

நாளை 20 மே -  நரசிம்ஹ ஜெயந்தி !   HSGDqBzpRrKx6Nx7zNO1+E_1463126835

வலது காலை மடித்து அமர்ந்துள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்; சில அம்மன் கோவில்களில், இந்த தரிசனத்தைக் காண முடியும். நரசிம்ம விக்ரகங்கள் பெரும்பாலும் இடது காலை மடித்து, அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில், வலது காலை மடித்து அமர்ந்து அருள்பாலிக்கிறார், நரசிம்மர்.

நரசிம்மர் என்ற சொல்லிலுள்ள, நரன் என்பது மனிதனையும், சிம்மம் என்பது சிங்கத்தையும் குறிக்கும். இவர் மனித உடலும், சிங்க முகமும் கொண்டவர். அசுர குணங்களுடன் நடப்பவர்களை அடக்க தெய்வம் நினைத்து விட்டால், அதன் உக்கிரத்தை தாங்க இயலாது என்பதை நரசிம்ம அவதாரம் எடுத்துரைக்கிறது. அதே நேரம், தெய்வத்தின் மீது பக்தி செலுத்தினால், சாந்தமாக, லட்சுமி நரசிம்மராய் மாறி, வேண்டியதை அள்ளித் தருவார்.

நரசிம்மரின் தரிசனம் வேண்டி, இத்தலத்தில் கடும் தவம் இருந்தார், ஜாபாலி மகரிஷி. இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், பிரதோஷ வேளையில், மகரிஷிக்கு தரிசனம் தந்தார்.

இதன் அடிப்படையில், இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். மூலவரை, பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைப்பர். 'பாடலம்' என்றால், சிவப்பு; 'அத்ரி' என்றால், மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால், இவ்வூருக்கு, பாடலாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

நரசிம்மருக்கு ஆயுதம் அவரது நகங்கள் தான். இதைக் கொண்டே அவர் இரண்யனை வதம் செய்தார். ஆனால், இங்குள்ள நரசிம்மர், பெருமாளின் அம்சமாக சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். அது மட்டுமல்லாமல், இவருக்கு கண்கள் மூன்று; உற்சவர், பிரகலாத வரதன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அருளுகிறார்.

இங்குள்ள நரசிம்மர், குகையில் இருப்பதால், அச்சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர வேண்டும். லட்சுமியின் அம்சமான தாயார் அஹோபிலவல்லியை, செல்வ வளம் வேண்டி வணங்குவர். இங்கு, 12 ஆழ்வார்களும் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.

வைகாசி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர், நரசிம்மர். அன்று, அவரது ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கிறது; மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில், அவரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. செவ்வாய், ராகு தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை விலக, இங்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, ஏழரை மற்றும் அஷ்டமச்சனியால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வணங்கி வரலாம்.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு-செல்லும் வழியில், 8 கி.மீ., முன் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
தொலைபேசி: 044-2746 4325.

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளை 20 மே -  நரசிம்ஹ ஜெயந்தி !   Empty Re: நாளை 20 மே - நரசிம்ஹ ஜெயந்தி !

Post by krishnaamma Sun May 15, 2016 10:54 pm

இங்கு பெருமாள் மட்டும் இல்லை தாயார் அஹோபிலவல்லி யும் ரொம்ப அழகாய் இருப்பார்கள் புன்னகை...சேவிக்க கண் கோடி வேண்டும் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
கோவிலை பிரதக்ஷணம் செய்யணும் என்றாலே மலைமேல் ஏறித்தான் வரமுடியும் புன்னகை .பிரசாதங்கள் அருமையாக இருக்கும்! குகைக்குள் இருக்கும் மூலவர் புடைப்பு சிற்பமாய் இருக்கிறார் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum