புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_lcapஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_voting_barஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sun May 15, 2016 7:01 pm

கதாநாயக துதிபாடல்,நம் சமூகத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறது. படிப்பறிவு சதவீதம் எவ்வளவோ உயர்ந்து விட்டதாக சொல்கிறோம். ஆனால் அந்த படிப்பறிவு அதிகரிப்பு சமூக அளவிலோ , அரசியலிலோ எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ; தனிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவே பயன்பட்டிருக்கிறது. "பயன்படுத்து , தூக்கியெறி " என்ற உலகவணிகமயமாக்கல் கோட்பாட்டை மேலும் வலுப்படுத்தவே இந்தக் கல்வியறிவு உதவியிருக்கிறது. சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கவோ , குறைந்தபட்சம் அநீதி குறித்து விவாதிக்கவோ செய்யமால் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்ளவே கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். படித்து , பணம் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்று அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற மனநிலையையே இன்றைய கல்வி உருவாக்குகிறது.

கதாநாயக துதிபாடல்களின் விளைவுகளை அறியாமலேயே கதாநாயக துதிபாடல் இங்கே வளர்க்கப்படுகிறது. சினிமாக்காரர்களும் , அரசியல்வாதிகளும் , மதவாதிகளும் சராசரி மனிதர்கள் தான் என்பதை மறந்து கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தெரியாமலேயே இருக்கிறோம். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் பிடித்திருந்து அவருக்கு ஓட்டுப்போடுவதில் தவறில்லை. ஆனால் யார் எப்படி ஆட்சி செய்தாலும் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சின்னமான இரட்டை இலைக்குத்தான் சாகும்வரை ஓட்டுப் போடுவேன் என்பது அறிவீனம். இன்னொரு பிரிவினர் , தி.மு.க. ஆட்சியில் தான் எங்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் தி.மு.க. வின் செயல்பாடு எப்படியிருந்தாலும் நாங்கள் தி.மு.க.விற்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்கிறார்கள்.

தொகுதியில், தங்களுக்குப் பிடித்த இயக்கத்தின் சார்பாக கடைந்தெடுத்த அயோக்கியனே நின்றாலும் நாங்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. இந்த நிலை மாற வேண்டும். கதாநாயக துதிபாடல் ஒழிய வேண்டும். முதல்வர் வேட்பாளரை முன்வைத்தோ , கட்சியை முன்வைத்தோ , சாதி, மதம் , இனம் உள்ளிட்டவையை முன்வைத்தோ வாக்களிக்கக் கூடாது. தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் சிறந்தவரோ , தேர்தலுக்குப் பிறகும் எளிதாக அணுகக்கூடியவரோ அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குதான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு நல்ல வேட்பாளரை நமது தொகுதிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் நமது முதல் கடமை. நமக்குப் பிடித்தவர் முதல்வராக வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் இரண்டாம்பட்சம் தான். நாம் முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. நாம் நமது தொகுதிகளில் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் சேர்ந்து தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரும் நல்லவராகவே இருப்பார். இன்றைய சூழலில் இது பெருங்கனவு என்றாலும் இப்போதாவது தொடங்க வேண்டும். முன்பெல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முதல்வரையை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது, கட்சி ஆரம்பித்த உடனேயே முதல்வர் கனவில் மிதக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றமல் , தேர்தலின் போது மட்டும் மக்களைச் சந்திப்பதையே எல்லாக் கட்சிகளும் கடைபிடிக்கின்றன. இதில் பழைய கட்சிகள் , புதிய கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் தமிழக அளவில் சரிவர பணியாற்றவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடம் இருந்தும் , இரு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புகள் இருந்த போதும் இந்த வெற்றிடத்தை நிரப்ப கம்யூனிஸ்டுகள் தான் சரியான தீர்வாக இருந்தும் அதை அவர்கள் முன்னெடுக்கவில்லை.

தங்களை மாற்றத்துக்கான கட்சி என்று அறிவித்து கொண்ட தேமுதிக கூட இதுவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்தித்திருக்கிறது. அந்த கட்சி வளராமல் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். மக்களோடு மக்களாக, மக்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் வளர முடியும். ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் முன்நிறுத்தப்படாமல் அடுத்த கட்டத்தலைவர்களையும் உருவாக்க வேண்டும் . இதை எந்தக்கட்சியும் முறையாக கடைபிடிப்பதில்லை. ஜனநாயக சர்வாதிகாரம் தான் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறது .

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டதற்கு காரணம் மாற்றி மாற்றி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான். இந்த இரு கட்சிகளின் மீதிலும் கடுமையான வெறுப்பு இருந்தாலும் , இந்த இரு கட்சிகளைத் தவிர்த்து வேறு ஒருவருக்கு வாக்களிக்க பெருவாரியான மக்கள் தயங்குகிறார்கள். ஏன் என்று தான் தெரியவில்லை. புதிய கட்சிகளும் போதிய நம்பிக்கையைப் பெறவில்லை. மக்கள் நலக்கூட்டணி ஒரு மாற்றாக இருந்தாலும் , அவர்கள் ஒருங்கிணைந்து மக்களைக் கவரவில்லை. எத்தனை பேர் சேர்ந்திருந்தாலும் கூட்டணியின் பெயரை மாற்றியிருக்கக் கூடாது. " தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி - தாமாக கூட்டணி " வாசிக்கவே நன்றாக இல்லை. எல்லாக் கட்சிகளும் மக்களின் நலனுக்காகத்தானே ஆட்சிக்கு வருவதாக சொல்கின்றன. அப்புறம் கூட்டணி பேர் வைப்பதில் ஏன் இத்தனை பேதங்கள். வைகோ வின் தான்தோன்றித்தனமான பேச்சுகளும், செயல்பாடுகளும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவையே தருகின்றன.

இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. சீமான் முன்வைக்கும் வாதங்கள் சிறப்பானதாக இருந்தாலும் , இனம் இனம் என்று இனத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்தியாவில் யாரும் எங்கேயும் வாழ்வதற்குதான் சுதந்திரமே பெற்றோம்.ஜனநாயகத்தின் தேவையும் அது தான். நாம் தமிழர் கட்சி இன்னொரு சிவசேனாவாக மாறாமல் இருக்க வேண்டும்.

முதலில் தற்போது நடைமுறையில் இருக்கும் சின்னங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் குலுக்கல் முறையில் தனித்தனி சின்னம் ஒதுக்க வேண்டும். ஓரே கட்சிக்கு ஒரே சின்னத்தை தொடர்ந்து ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். குழப்பங்கள் நிகழும் என்று சொல்லப்படலாம். 75% மேல் படிப்பறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலத்தில் குழப்பம் எதற்கு வருகிறது. இதை மீறியும் தேர்தலை முன்வைத்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்களிடத்தில் உள்ளன. ஓட்டுப் போடுவதைத் தாண்டியும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வரலாம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசப்படும் விசயம் ஓட்டு வங்கி. கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீததை வைத்தே தற்போதைய தேர்தலில் அக்கட்சிகளின் வெற்றி, தோல்வி மட்டுமல்லாமல் , மற்ற கட்சிகளுடன் பேரங்களும் பேசப்படுகின்றன. நாம் கட்சிகளை பார்த்து ஓட்டுப்போட்டதன் விளைவு இது. கட்சிகளைப் பார்த்து ஓட்டுப் போடாமல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட்டால் இந்த ஓட்டு வங்கி சதவீதம் சினானாபின்னமாகிவிடும். இந்த தேர்தலில் எப்படி மதுவிலக்கையும் ,பெரும்பாலும் இலவசமில்லா தேர்தல் அறிக்கைகளை வெளியிட வைத்தோமோ , அதே போல நல்லவர்களை மட்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக நிறுத்தும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். எல்லாம் நாம் போடப்போகிற ஓட்டில் இருக்கிறது.

நம் வாக்கு! நம் மாற்றம் !

ஜெ.செல்வராஜ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக