புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
81 Posts - 67%
heezulia
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
1 Post - 1%
viyasan
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
18 Posts - 3%
prajai
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்டனை..! Poll_c10தண்டனை..! Poll_m10தண்டனை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 26, 2009 12:12 am

தண்டனை
- எஸ்.சாந்தி



மனோவால் நம்பமுடியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அவளை சந்திப்போம் என்று! அதுவும் சென்னையில். அதே குழந்தை முகமும், புன்னகை தவழும் இதழ்களுமாய் வெள்ளையுடுப்பு தேவதையாய் திவ்யா. அவனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றது.
``ஏங்க? டாக்டர் வர லேட்டாகுமான்னு கேளுங்க?'' கண்களில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட சோகத்தோடு மனைவி சீதா தன் கணவன் மனோவிடம் கேட்டாள்.
திருமணமாகி ஏழு வருடமாகியும் குழந்தைப்பேறில்லை. போகாத கோவிலுமில்லை. செய்யாத வைத்தியமுமில்லை. கடைசியாக பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு வந்து இப்போது தான் தாய்மைப்பேறு கிடைத்திருக்கிறது.
காற்றில் தவழ்ந்து வந்த மருந்து நெடியையும், சின்னஞ்சிறு சிசுக்களின் அழுகுரல்களையும் மீறி நினைவுகள் அவர்களை எங்கோ இட்டுச் சென்றது. விடிந்தும் விடியாத இரவு நேரம். ஒற்றைச் சரிகை இழையோடிய அரக்கு நிற பட்டுப்புடவையும், இடைவரை நெளிந்த கூந்தலில் மல்லிச் சரமுமாய் திவ்யா.
``மனோ பயமாயிருக்கு''.
``இங்க பாரு திவ்ய Ö, பத்து வருஷமானாலும் எங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கமாட்டாங்க. நீ தானே கல்யாணம், கல்யாணம்னு நச்சரிச்ச...''
``நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு தான் சொன்னேன். இப்படி யாருமில்லாம கோவில்ல திருட்டுத் தாலி கட்டிக்கலாம்னு சொல்லல.''``என்ன? இப்படி சொல்லிட்ட! உனக்கு புடிச்ச முருகன் சாட்சியாதான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம். தஞ்சாவூர்ல ரூம் எடுத்து தங்குறோம். பிறகு திருச்சி போறோம். முதல்ல எங்க வீட்டுக்கு ஜோடியா..தம்பதியா போய் எங்கப்பா அம்மா கால்ல விழுந்திட்டா நிச்சயம் ஏத்துக்குவாங்க. அப்புறம் ஊரறிய, உறவறிய `ஜாம் ஜாம்'னு ரிசப்ஷன் நடத்த வேண்டியது தான். எப்படி?'' கண் சிமிட்டியபடி சொன்னவனின் வார்த்தைகளில் கிறங்கித்தான் போனாள்.

இரவா, பகலா என அறியாது திகட்டத் திகட்ட இன்பத்தில் ஆழ்ந்திருந்த திவ்யா கண் விழித்ததும் பட்டது மனோவின் கடிதம் தான். ``திவ்யா, இதையொரு (கெட்ட) கனவாய் நினைத்து வீடு போய் சேர். சில விஷயம் கிடைக்கணும்னா அதுக்குத்தகுந்த விலை கொடுத்துத்தான் ஆகணும். அந்த விலைதான் இந்த கல்யாணம். பிரச்சினைகளை சமாளிக்க என்கிட்ட பணமும், ஆள்பலமும் இருக்கு. அதனால்...''
``என்னத்த நம்பி இந்த மாதிரி ஆளுங்களோட ஊரை விட்டு, பெத்தவங்கள விட்டு ஓடிவர்றீங்களோ? படிச்ச பொண்ணாத் தெரியுது. எதுவும் பிரச்சினை பண்ணாம, போலீசு, கேசுன்னு சீரழியாம ஊர் போய்ச் சேர்'' ஓட்டல் மானேஜரின் வார்த்தைகள் நெருப்பாய் சுட்டது.
``என்னங்க டாக்டர் வந்தாச்சு'' சீதாவின் ஸ்பரிசத்தில் சிந்தனை கலைந்தான்.
``என்னை நம்பவச்சு ஏமாத்திட்டியேடா? உன்னை சும்மா விட மாட்டேண்டா.'' என்று ஒருமுறை நடுரோட்டில் திவ்யா ஆக்ரோஷமாய் கத்திக் கதறியது நினைவில் வந்து போனது.
ஒரு வருடம் ஓடிப்போனதே தெரியவில்லை. மருந்துவமனை கட்டிலில் அமர்ந்திருந்த சீதாவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு இழையோடியது. இன்னும் இரண்டொரு நாளில் மகப்பேறு நிகழலாம். டாக்டர் கணித்திருந்தார். ஆனால் இந்த திவ்யாவால் சீதாவுக்கோ, பிறக்கப் போகும் குழந்தைக்கோ ஏதாவது நிகழ்ந்து விட்டால்? அவள் பார்வையில் இன்னும் வன்மம் குடிகொண்டிருப்பது போல் உணர்ந்தான்.
``சொல்லுங்க மிஸ்டர் மனோகர். எனி ப்ராப்ளம்?'' நிமிர்ந்தார் டாக்டர் உமா ரங்கநாத்.
``நர்ஸ் திவ்யாவை என் மனைவிய கவனிச்சுக்க அப்பாயிண்ட்மென்ட் பண்ணியிருக்கீங்க. அவங்களுக்குப் பதிலா வேறு யாராவது...''
``லுக். திவ்யாவோட உடுப்பு மட்டும் வெள்ளையில்லை. அவ மனசும்தான். இங்க வர்ற ஒவ்வொரு பேஷண்டையும் தன் வீட்ல ஒருத்தரா நினைச்சு அன்பு காட்டக் கூடியவ''.
``அதுக்கில்ல. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு பழைய கணக்கு ஒண்ணு பாக்கியிருக்கு. அவ பார்வையிலிருந்து நாங்க விலகியிருக்கணும்னு ஆசைப் படறோம்.''
``ஒரு விஷயம் சொன்னா இப்படி பேசமாட்டீங்க. கரு முட்டை உற்பத்தி சரியா இல்லாத உங்க மனைவிக்கு விரும்பி கருமுட்டை தானம் பண்ணினது திவ்யாதான். அவளைப் போய்... சரி வேற ஏற்பாடு பண்றேன்''
``வேணாம் டாக்டர்'' இடைமறித்த மனோ ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனான்.
`இந்த குழந்தையை பார்க்கிற ஒவ்வொரு நொடியும் என் நினைப்பும், உன் துரோகமும் தாண்டா ஞாபகத்துக்கு வரணும். அதுதான் உனக்கு நான் தர்ற தண்டனை' திரைக்குப் பின்னால் இருந்த திவ்யா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக