புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
3 Posts - 2%
jairam
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 1%
சிவா
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 1%
Manimegala
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
15 Posts - 4%
prajai
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
7 Posts - 2%
jairam
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri May 27, 2016 6:58 pm

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! P32a

கொடுமை:

‘என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்துசெல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா. அவர் இன்று உயிரோடிருந்திருந்தால், ‘ஒரு பெண், தனியாக பேருந்தில் எந்தவித உரசல்களும் இல்லாமல் என்று பயணம் செய்ய முடிகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என மாற்றிச் சொல்லியிருப்பார்.

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண். இன்னும் ஐந்து நிமிடங்களில் இறங்கிவிடுவாள். அதனால் அதற்கு முன்பே அவளைப் பற்றி சொல்ல வேண்டும். திருமணமாகி கணவர் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காக சென்றுவிட, கோவையில் பெண்களுக்கான  ஒரு சுமாரான விடுதியில் தங்கி, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறாள். ஈரோட்டிலிருந்து கோவைக்கு குடும்பத்தைப் பார்க்கவேண்டி வாரம் ஒரு முறை பயணிக் கிறாள். மூன்று மணிநேர பேருந்துப் பயணம்.

கோவைக்குப் பக்கத்து மாவட்டங்கள் எல்லோமே சனிக்கிழமைகளில் தூரமாகிவிடும் என்பார்கள். வார இறுதியில் சொந்த ஊருக்குக் கிளம்புவோரின் எண்ணிக்கைதான் காரணம். காத்திருந்த பஸ் வந்தபின் கூட்டம் கட்டி ஏறும். கால் மாற்றி கால் மாற்றி தவம்செய்வதைப்போல கிடைத்த இடத்தில் மூன்று மணி நேரத்தை நின்றே கடத்துவது என்பது, நிச்சயம் போன ஜென்மத்தில் வாங்கிவந்த ஏதோ ஒரு சாபமாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உட்கார ஸீட் கிடைத்தால் அருகில் ஆண் - பெண் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கால் வலி ஒவ்வொரு முறையும் நரக வேதனையைத் தருவதால் ஸீட் கிடைத்தால் உட்கார்ந்துவிடுவாள். சில நேரங்களில் நல்ல மனிதர்கள் அமைந்துவிடுவார்கள். ஆனால், பலநேரங்களில் மிக மோசமான பயண அனுபவமாக இருக்கும்.

அருகில், பின் இருக்கையில் என அமர்ந்திருக்கும் ஆண் கள் இடுப்பைத் தொடுவது, காலை வருடுவது என பாலியல் சீண்டல்களை ஆரம்பிப்பார்கள். முறைப்பு மட்டும் இவளின் பதிலாக இருக்கும். சில கேடுகெட்ட ஜென்மங்கள் தொடர்ந்து சில்மிஷங்களைத் தொடரவும் செய்யும். இதுபோன்ற கஷ்டங்களை அவளுடைய கடந்த மூன்று வருட பயண வாழ்க்கையில் நிறையவே பட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் தேளின் கொடுக்கைப்போல அவளைக் கொட்டிய அந்த வருடல்கள், போகப்போக கம்பளிப்பூச்சியின் ஊர்தல் போலத்தான் தெரிகிறது.

முதல்முறை கோபப்பட்டு பஸ்ஸில் கூச்சல் போட்டிருக்கிறாள். தனக்கு ஆதரவாக யாரேனும் பேச வருவார்கள் என்ற நினைப்பில் ஒருமுறை பஸ்ஸில் சண்டை போட்டதும், அதற்கான மோசமான எதிர்வினையும் ஞாபகத்தில் வந்து போனது. ‘விடும்மா... அதான் தெரியாமப் பட்ருச்சுனு சொல்றார்ல. இப்ப என்ன கற்பா பறிபோச்சு, இப்படி கூச்சல் போடுற?’ என்ற ஒரு பெருசின் குரலும், ‘சௌகரியம் இல்லைனா கார் வாடகைக்கு எடுத்துப் போகவேண்டியதுதானே... எதுக்கு கவருமென்ட் பஸ்ல வர்றீங்க? உங்க ஒரு ஆளுக்கோசரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட முடியாது’ என்ற கண்டக்டரின் கேலி வார்த்தைகளும் அவளை அதன்பிறகு கையாலாகாதவளாகவே ஆக்கிவிட்டன.

ஒருமுறை தன்னைப் பாலியல் தொந்தரவு செய்தவனைப் பார்த்து, ‘கண்டர்கிட்ட சொல்லவா?’ என மிரட்ட, ‘போடி, கண்டக்டர் உன் புருஷன் பாரு... அப்படியே வந்து என் தலையை சீவிடுவான்’ எனக் கேலி செய்ததையும், அதை அந்தப் பேருந்தில் யாரும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்ததையும் நினைத்துப் பார்த்து ரொம்பவே மனம் வெதும்பிப்போனாள். நாளடைவில் இந்தத் தீண்டல்களுக்கு காந்திய வழியில் எதிர்வினையாற்ற பழகிவிட்டாள். அதாவது, ஒரு முறைப்புடன் தள்ளி உட்கார்வது மட்டுமே இப்போதைய தீர்வாக வைத்திருக்கிறாள்.

சில நேரங்களில் குடிகாரர்களின் பக்கத்தில் உட்காரும் சூழலில், உள்ளுக்குள் கனன்ற நெருப்பை விழுங்கிக்கொண்டு அப்படியே எழுந்து எவ்வளவு நேரம் என்றாலும் மூட்டெலும்பு தேய நின்றபடி பயணம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டாள். சரி, நின்றாலாவது சும்மா இருப்பார்களா? `இடிஅமீன்கள்', `தடவல் தாண்டவராயன்கள்' நிறைய பேர் மூச்சுக்காற்றை கழுத்துவரை பரவவிட்டு நெருங்கி நின்று மரண அவஸ்தையைக் கொடுப்பார்கள். எல்லாவிதமான சீண்டல்களுக்கும் முறைப்பையே பதிலாக வைத்து மனதுக்குள் புழுங்கியபடி இடம் மாற்றி கால் மாற்றி நிற்க எத்தனிப்பாள்.

இதுபோன்ற பாலியல் ரீதியான அத்துமீறல் களை பேருந்தில் அச்சமின்றி நிகழ்த்தும் கேடுகெட்ட ஜென்மங்கள் பல. இந்தப் பெண்ணைப்போல எத்தனையோ பெண்கள் தங்களைச் சுருக்கிக்கொண்டு, கண்டும் காணாமல் மன்னித்து விடுவதால்தான் இதையே சலுகையாக எடுத்துக்கொள்கின்றன அந்த மிருகங்கள்.

See also: பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

ரயில்களில் இருப்பதுபோல பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் பெண்களுக்கான புகார் சேவை எதுவும் பேருந்து பயணத்தின்போது ஒரு பெண்ணுக்குக் கிடைப்பது இல்லை. ‘தகுந்த சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்’, ‘குடித்திருந்தாலோ டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கிவிடப்படுவீர்’ என எழுதப்பட்டிருப்ப தோடு சரி. பயணத்தில் திருக்குறளைவிட, ஒரு பெண்ணின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா?

நாமறிந்த வகையில் தமிழ்நாட்டில் ஓடும் எந்தப் பேருந்திலும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கான புகார் எண்களோ அதற்கான விழிப்பு உணர்வு எச்சரிக்கை வாசகங்களோ இல்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி பேசக்கூட இங்கு யாருக்கும் அக்கறையும் நேரமும் இல்லை. யாரோ சில நடத்துநர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டல்களைக் கண்டிக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஆறுதல். அப்படி என்றால் பேருந்துப் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

இது சமூகத்தின் அசிங்கம்!

‘‘நடவடிக்கை எடுக்கப்படும்!’’

காவல்துறை உயர் அதிகாரியான சிபிசக்ரவர்த்தியின் கவனத்துக்கு, இந்த பேருந்துப் பயண பாலியல் அத்துமீறல்களைக் கொண்டுசென்றோம்.  

‘‘பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகத் தீவிரமான பிரச்னை இது. பெண்களுக்கான பாதுகாப்பை காவல்துறை எப்போதும் உறுதி செய்யும். ஏற்கெனவே பெண்களுக்கான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு வருகிறோம். இனிமேல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை தனி புகார் எண் செயல்படுத்தி அதற்கான தனிப்படை அமைக்கும். பேட்ரோல் வாக னங்கள் மூலம் புகார் பெறப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்பு உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எல்லா மாவட்டங்களிலும் இதை செயல்படுத்த, காவல்துறையின் மேலிடத்துக்கும் பரிந்துரை செய்கிறேன்.

இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அவள் விகடனுக்கு நன்றி!’’ என்றார் சிபிசக்ரவர்த்தி.

பயணங்களின்போது பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும், நம் கோபத்தையும் சமூக வலைதளங்களில் #AriseAgainstAbuse என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளாக பதிவுசெய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

நன்றி- அவள் விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:47 am

ரொம்ப அருமையான பகிர்வு ராஜ்..........மிக்க நன்றி !...........நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
படிக்கவே ரொம்ப கஷ்டமாய் இருக்கு சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக