புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_m10ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:35 am

ஆதிரா முல்லை - பேராசிரியர் / எழுத்தாளர்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 11

நான்...
உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு அம்மாவாக இருப்பதில் தொடங்கு கிறது என் மனிதப் பிறவிக்கான பயன்.  இந்தத் தாய்மை தவமிருந்தாலும் பலருக்கும் கிடைக்காதது. தாய்மைக்கு அடுத்து அக்கா என்பது அழகான உறவு. அக்காவாகவே என் வலைத்தள உறவுகளுக்கு அறியப்பட்டிருப்பதில் ஆனந்தம். வெகு சிலருக்குத் தோழியாகவும் இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.



பள்ளியும் ஆசிரியர்களும்
ஐந்தாம் வகுப்பு வரை கிராமத்தில் ஈராசிரியர் பள்ளி. ஆண்-பெண் வேறுபாடு அறியாமல் புளிய மரத்தடியில் விளையாடியதும் புளியம்பழம் பொறுக்கி உப்பு, வெல்லம் வைத்து இடித்து நட்புகளுடன் சேர்ந்து சுவைத்தது நினைவில் இன்றும் இனிக்கிறது. அதன் பின் விராலிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில். 8 முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை ஊஞ்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில். பள்ளி இறுதி வகுப்பு தேர்வுக் கட்டணம்கூட கட்ட முடியாத நிலை. வரலாற்று ஆசிரியர் விசுவநாதன் கட்டணத்தைக் கட்டி என்னை உற்சாகமூட்டியது பசுமையான பதிவாக உள்ளது.

சென்னை
அஞ்சறைப் பெட்டிக்குள் வாசம் புரிந்த என் விரல்கள் அகிலத்தை நோக்கி நீளக் காரணமானது சென்னை வாழ்க்கை. நினைத்தே பார்க்காத இந்தப் பெருமித வாழ்க்கையை வசமாக்கியது சென்னைதான். கற்றுக் கொண்டது... ஆர்வமும் ஊக்கமும் உழைப்பும் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் என்பதை.

புத்தகங்கள்
வால்காவிலிருந்து கங்கை வரை, கலைஞரின் சங்கத்தமிழ், கவிப்பேரரசுவின் கருவாச்சி காவியம், நாஞ்சில் நாடனின் திகம்பரம், கொங்குதேர் வாழ்க்கை, இறையன்புவின் ரெளத்திரம் பழகு, பிரபஞ்சனின் வானம் வசப்படும், பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி, தமிழன்பனின் திராவகக் கவிதைகள், கவிக்கோவின் ஹைக்கூக்கள் என்று பிடித்த புத்தகங்களின் பட்டியல் மிக நீளமானது. கல்வி கரையில... கற்பவர் நாள் சில. என்ன செய்ய?

சொந்தங்கள்
சொந்தங்கள்  நீர்ப்பறவைகள். குளத்தில் நீர் இருக்கும்போது கூடுவதும் வற்றிய போது ஓடுவதுமான குளத்து நீர்ப்பறவைகள் சொந்தங்கள்.. வறுமையையும் கவலைகளையும்  ஒருபோதும் சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சொந்த பந்தங்களுடன் கூடி இருக்க வேண்டுமானால் நாம் வளமாகவும் நலமாகவும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

கடந்து வந்த பாதை
கலைஞர் பாணியில், ‘நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டி யிருக்கிறேன்’ என்று கூறலாம். கரடு முரடான பாதைக்குப் பழக்கப்பட்டுப் போன பாதங்கள் எப்பேர்பட்ட வழி(லி)யையும் எளிதாகக் கடக்கும் வலிமையையும் உரத்தையும் பெற்று விடுகின்றன. துன்பம் நேர்கையில் யாழ் போல இன்பம் சேர்க்கும் தோழமைகள் இப்போது என் வசம். துன்ப வேளையில் ‘எதுவும் நம் கையில் இல்லை’ என்று கூற மாட்டேன். ‘இதுவும் கடந்து போகும்... எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பார்க்க மாட்டோமா’ என்னும் சொல்லாடல்கள் எனக்கு வலிமை தருவதாக உணர்வேன்.

சினிமா
எனக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிவு, எப்போதும் கண்ணீர் சிந்தக் கூடாது என்னும் உறுதி ஆகியவற்றுக்கு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ திரைப்படம் காரணமாக இருந்தது என்றால் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகி எந்தச் சூழலிலும் அழமாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பாள். இப்போதும் என் மாணவர்கள் யாராவது அழுதால் இதைத்தான் கூறுவேன்.  கே.பி.யின் ஆளுமை நிறைந்த பெண் கதை மாந்தர்கள் மனதில் நிறைந்தவர்கள். பாலுமகேந்திராவின் கேமரா கண்களைப் பார்க்கப் பிடிக்கும். பாரதிராஜாவோடு கிராமங்களை வலம் வர பிடிக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வழக்கு எண்...’ போன்ற படங்களையும் பிடிக்கும்.

எழுதியதில் பிடித்தவை
என் படைப்புகள்... ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ - கவிதைத் தொகுப்பு, ‘உச்சிதனை முகர்ந்தால்’ - கட்டுரைத் தொகுப்பு, ‘பேராசிரியர் அ.மு.ப.’ - வாழ்க்கை வரலாற்று நூல். ‘எங்க அப்பா ரொம்ப அழகு’ சிறுகதை என் மனதுக்கு மிகவும் அணுக்கமானது. கவிதைகளில் பெரியாருக்காக நான் எழுதியது ‘திராவிட விருட்சம்’. இது எனக்கும் பிடித்தது. படித்த அனைவரது பாராட்டையும் பெற்றது.

இசை  
இளையராஜாவின் இசை இல்லாமல் வாழ்க்கையைக் கடப்பது இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்ல... எந்த ஒரு சாமானியருக்கும் இயலாத செயல். என் இன்ப, துன்ப தருணங்கள் இரண்டும் இசைராஜாவின் எண்பதுகளின் இசையில் கரைந்து போகும். கர்நாடக இசைக்கும் நான் ரசிகை. கே.ஜே.ஏசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, உண்ணி கிருஷ்ணன் மூவரும் உருகி உருகிப் பாடி என்னைக் கரைத்து விடுவார்கள்.

‘கருணா செய்வாய்’ என்று ஏசுதாஸும், ஜெயதேவரின் அஷ்டபதியை பாலமுரளி கிருஷ்ணாவும், ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்று உண்ணி கிருஷ்ணனும் பாடினால் கண்களில் பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர். ‘ஏசுதாஸ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்யக் கூடத் தயார்’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அல்லவா?

பிடித்த ஆளுமைகள்
1. என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர். காரணங்கள் கூறுதல் வேண்டுமோ!!! வயது ஏற ஏற (அவருக்கு) அவர் மீதான என் காதல் ஏறிக்கொண்டே போகிறது.
2. அடுத்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும் கர்நாடக ஆளுநருமான ச.மோகன். ஆங்கில - தமிழ் இலக்கியப் புலமை, திராவிட இயக்கக் கொள்கை, தொடர்ந்து வாசிப்பது, எல்லோரையும் பாரபட்சம் பார்க்காது நேசிப்பது, சமுதாய அவலங்களைக் கண்டு ரெளத்திரம் கொள்வது, அவற்றை எழுத்தாக்கி ஊடகங்களில் பரிமாறுவது என்று என்னை அசர வைத்தவர்.

பிடித்த பெண்கள்
எத்தனை சோதனைகள் வந்தாலும் பதற்றப்படாமல் எளிதாகவும் அமைதியாகவும் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையால் குடும்பத்தில் என்னைக் கவர்ந்தவர் என் மாமியார். படிப்பறிவே சிறிதும் இல்லாத அந்த மூளையில் ஐந்தடி கூட இல்லாத அந்த உடலில் எங்கு ஒளிந்திருக்கின்றன அத்தனை தைரியமும் அத்தனை நுட்பமான அறிவும் என்று இன்றும் வியந்து கொண்டே இருக்கிறேன். என் தோழி ராஜி. அவளின் எதிர் பார்ப்புகள் சூழியம். அவளது உதவிகள் 100 என்னும் விகிதத்தில் பழகுபவள். அவளோடு பழகும் எவர்க்கும் பிடிக்கும் அவளை.

அழகென்பது...
அகமும் புறமும் நிறைந்திருக்கும் உண்மையும் அறிவும் நேர்மையும் அன்பும் தியாகமுமே அழகு!

வாழ்க்கை
வாழ்க்கை நாம் அஞ்சும் போது மிரட்டும்... மிஞ்சும் போது அது அஞ்சும்... இலக்கியத்தின் கரம் பிடித்த இனிய நட்புகளோடு எந்தச் சூழலையும் இன்பமாகக் கடந்து விடலாம். வாழ்தல் இனிது!

சமையல்
பாரம்பரிய உணவுகளை சமைப்பதில் நான் கில்லாடி. நவீன உணவு வகைகளை சமைக்கச் சொன்னால் அல்லாடிப் போவேன். இப்போதெல்லாம் என் விருப்பம் கிச்சன் இல்லாத வீடு வேண்டும்!


நன்றி - குங்குமம் தோழி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:37 am

"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன் சிரி அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 10:46 am

ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

நன்றி அருமையான பகிர்வு .
இதை இதைத்தான் எதிர்ப் பார்த்தேன் ,ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 10:49 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

நன்றி அருமையான பகிர்வு .
இதை இதைத்தான் எதிர்ப் பார்த்தேன் ,ராஜா !

ரமணியன்
ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 1571444738 ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 02, 2016 10:51 am

குங்குமம் தோழி மூலம்
எங்கள் தோழியின் எண்ணங்கள் ,
வானவில்லின் வண்ணங்களாக
தீட்டப்பட்டுள்ளன .

வாழ்த்துகள் ஆதிரா ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 02, 2016 11:16 am

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 3838410834 ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 8:39 pm

ராஜா wrote:"ஆதிரா பக்கங்கள்" தான் என்றாலும் ,சின்ன வயதில் நம்ம அக்காவோட நோட்டு/புத்தகத்துல கிறுக்குவோம்ல அதுபோல தான் இங்கு பதிவிட்டு விட்டேன்   சிரி அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1205651

இந்த ஒன்று போதும் ராஜா.  ஐ லவ் யூ  ஐ லவ் யூ  ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ என் பிறப்பயன் முடிந்து விட்டது.

:



ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 9:04 pm

T.N.Balasubramanian wrote:குங்குமம் தோழி மூலம்
எங்கள் தோழியின் எண்ணங்கள் ,
வானவில்லின் வண்ணங்களாக
தீட்டப்பட்டுள்ளன .

வாழ்த்துகள் ஆதிரா ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1205655
நன்றி ரமணீயன் சார். என் முன்னேற்றம் எல்லாம் உங்கள் அனைவரது அன்பு  மயம்தான்.
அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்



ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 02, 2016 9:47 pm

Engallukku vambu mayam thaan




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 02, 2016 9:49 pm

யினியவன் wrote:Engallukku vambu mayam thaan
மேற்கோள் செய்த பதிவு: 1205718
எங்கல்லாம் வம்பு மயமோ அங்கெல்லாம் நாங்களும் வம்பு மயம்தான்.....
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி



ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக